Pages

Monday, April 26, 2010

அடிக்குது புயல். அணையப் போகுது மெழுகுவர்த்தி.

அடிக்குது புயல். அணையப் போகுது மெழுகுவர்த்தி. இந்த நேரத்தில் இரண்டு கைகள் ஓடிவந்து காற்றை தடுத்து சுடரை காப்பாற்றினால் அந்த கைக்கு என்ன கொடுப்பீர்கள். ஒரு முத்தம்? முதலில் அதை சேரனுக்கு கொடுங்கள்.
சென்னையை சேர்ந்த மாணவி நிவேதிதா மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றிருந்தார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை தவறுதலாக முடிய, சுய நினைவிழந்த நிலையிலிருக்கிறார் நிவேதிதா. சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அந்த மாணவிக்கு தங்களால் இயன்ற மருத்துவத்தை அளித்திருக்கிறார்கள் பெற்றோர். ஆனால் அதை தொடர முடியாதபடி ஏழ்மை அவர்களுக்கு. இந்த சோக கதையை சொல்லியிருந்தது ஒரு முன்னணி நாளிதழ். இதை படித்த சேரன் அந்த மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு தன்னால் இயன்ற உதவியை செய்ய முன்வந்ததாக தகவல் கிடைத்தது. நாம் சேரனிடமே பேசினோம்.
இப்படி ஒரு செய்திய படிச்சதும் அதிர்ச்சியானேன். தொலைபேசி மூலமா அவங்க பெற்றோரிடம் பேசினேன். அப்போது அவங்க டெல்லியில் இருந்தாங்க. நிவேதிதாவை அங்குள்ள பெரிய டாக்டர் ஒருவரிடம் காட்டுவதற்காக போயிருந்தாங்க, நான் அந்த செய்தியை படிச்சதும் எனக்கு தெரிஞ்ச சில மருத்துவ நண்பர்களிடம் பேசியிருந்தேன். அலோபதியை விட இங்குள்ள ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவத்தில் இதை சரி செய்யலாம் என்று அவங்க சொன்னதை நான் நிவேதிதாவின் பெற்றோர்களுக்கு சொன்னதுடன், "தைரியமா இருங்க. என்னாலான உதவியை செய்யறேன்" என்று சொன்னேன். நமது பாரம்பரிய மருத்துவத்தில் இல்லாத வைத்தியங்களே கிடையாது. ஆனால் அதை புரிஞ்சுக்காம எல்லாரும் அலோபதியை நாடி போறாங்க"
இந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருக்கிற என்னோட மருத்துவ நண்பர் ஒருத்தரை சென்னைக்கு வரச் சொல்லியிருக்கேன். அவரும், நிவேதிதாவும் சென்னைக்கு வந்ததும்தான் என்ன செய்வது என்பதை பற்றி முடிவெடுக்கப் போகிறோம். அந்த பெண் மீண்டும் பழைய நிலைக்கு வர என்னென்ன செய்யணுமோ, அதை செய்வோம். அதற்குள் நான் பண உதவி செய்ததாக வந்த செய்தி தவறானது. அதே நேரத்தில் அதற்கும் நான் தயாரா இருக்கேன் என்றார் சேரன்.
Read More

சிவப்பு மழை படத்திற்கு இலங்கையில் தடை!

சுரேஷ் ஜோகிம்-மீராஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த கின்னஸ் படம் சிவப்பு மழை. 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் இது. ஒருபுறம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டாலும், மறுபுறம் ஈழ விடுதலை போராட்டத்தின் வலி¬யையும் சொல்லிய படம் அது. (அதை முழுமையாக சொல்லியிருக்கிறார்களா என்பது வேறு விஷயம்) படத்தின் நாயகன் சுரேஷ் ஜோகிம் ஒரு ஈழத்தமிழர் என்பதும் இப்படி ஒரு படம் அமைய காரணமாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இலங்கையில் வெளியிட தடை விதித்துள்ளது ராஜபக்சேவின் அரசு.
தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிற அதே நேரத்தில் கொழும்பு போன்ற நகரங்களிலும் அப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். தமிழகத்தில் எடுக்கப்படுகிற படங்களுக்கே இந்த வரவேற்பு என்றால் இலங்கையில் நடந்த ஒரு முக்கிய பிரச்சனையை காட்டுகிற படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்க வேண்டும்? ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் முதலிலேயே இந்த படத்தை வெளியிட முட்டுக்கட்டை போட்டிருக்கிறது அந்த அரசு.
இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை என்பதால், இலங்கை தவிர பிற இடங்களில் தொடர்ந்து திரையிடும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார் சுரேஷ் ஜோகிம்.

Read More

எத்தனை பேரை காதலிப்பது : ப்ரியாமணி கேள்வி




ப்ரியாமணி தமிழ் படங்களில் நடித்த போது அவர் யாருடன் எல்லாம் ஜோடி சேர்ந்தாரோ அந்தந்த நடிகர்களுடன் எல்லாம் சேர்த்து ஏராளமான கிசுகிசுக்கள் உலா வந்தன.
அவர் தெலுங்கு மலையாளம் என மற்ற மொழி படங்களில் ஒரு ரவுண்டு வந்த போதிலும் ஆங்காங்கே கிசுகிசுவைக் கொளுத்திப் போட்டுவிடுகிறார்களாம்.
‘எந்த நடிகருடன் நடிக்கிறேனோ அவருடன் காதல் என்று கதை கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். நான் ஒருத்தி எத்தனை பேரைத்தான் காதலிப்பேனாம்... அட போங்கப்பா நீங்களும் உங்க கிசுகிசுவும்...’ என்று ரொம்பவே அலுத்துக் கொள்கிறார் ப்ரியாமணி.
Read More

விஜய் எனக்குப் பிடித்த நடிகர் தமன்னா பேட்டி


 
WD
தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.

கே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா?

படத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...?

பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை.

WD
இப்போது நடித்துவரும் படங்கள்?

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ீமேக்தான் இது. ஜெயம் ராஜஇயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.

இதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்?

சிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பையா படத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே?

எனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.

நாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி?

தமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒருவேளை வாய்ப்பு வந்தால்...?

கதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.
Read More

காலி மதுப் புட்டிகளுடன் மேக்னா நாயுடு.


வாய்ப்பில்லாத நடிகைகளுக்கு வாய்ப்பை தரும் பொறுப்பை கையிலெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது இயக்குநர் பி வாசுவும் நடிகர் ஆர்கேயும்.

வைத்தீஸ்வரன், வீராசாமி என சில தமிழ்ப் படங்களில் தலைகாட்டியவர் பாலிவுட் கவர்ச்சிப் புயல் மேக்னா நாயுடு. ஆனால் ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இனி கதாநாயகி வாய்ப்புக்காக காத்திருந்தால் வயசு கரைவதுதான் மிச்சம் என்பதை உணர்ந்து, குட்டி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார்.

அடுத்து புலிவேஷம் படத்தில் ஆடுகிறாராம். இதில் முன்னாள் ரொமான்டிக் ஹீரோ கார்த்தியும் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதா நடிக்கிறார்.

மேக்னாவின் ஆட்டத்துக்காக ஏவிஎம்மில் ஒரு பிரமாண்ட செட் போட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க காலி மதுப் புட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செட், பார்ப்பவர்களை ஒரு கணம் சுண்டி இழுக்கவே செய்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து குத்துப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப் போகிறாராம்
Read More

ஜலதோசமா நல்ல நித்திரை கொள்ளுங்க

குடித்து வரும் வழக்கமான தண்ணீர் மாறுபட்டாலோ, சீதோஷ்ன நிலை சற்று மாறினாலே எளிதில் ஒட்டிக்கொள்வது ஜலதோஷம்தான். மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது, `ஆவி' பிடிப்பது என்று இதை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம்.

அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்களோ, இது சாதாரண விஷயம் என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதும். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த நிவாரணமும் பெறலாம் என்கிறார்கள் அவர்கள்.

அதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவோருக்கு ஜலதோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்
Read More

புதிய தனிமம் கண்டுபிடிப்பு



இதுவரை 116 வேதியியல் தனிமங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தற் போது 117-வது தனிமத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.தனிமங்கள் பொதுவாக அவற்றின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கொண்டு வகைப் படுத்தப்படுகிறது. புதிதாக உருவாக் கப்பட்டுள்ள தனிமம், கால்சியம் மற்றும் பெர்கிலியம் தனிமங்களை மோதச் செய்து தயாரிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக `அன்அன்செப்டியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் இணைந்து இந்த தனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தனிமம் இதுவரை உள்ள தனிமங்களை விட உறுதியானதாகவும், எடை கூடியதாகவும் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இந்த தனிமத்தைக் கொண்டு தனித்திறன்மிக்க பொருட்களை தயாரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்த ஆய்வு கட்டுரை வேதியியல் தலைமை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் இந்த தனிமம் புதிய பெயருடன், ஆவர்த்தன தனிம அட்டவணையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

அசின் வீட்டில் தோனி

கிரிக்கெட் கேப்டன் தோனி ஏற்கனவே பல்வேறு நடிகைகளுடனும், அழகிகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறார். நடிகை லட்சுமிராய் அடிக்கடி தோனியை சந்திப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது நடிகை அசின் தோனியிடம் நெருக்கமாக உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அசின் இந்தி படங்களில் நடிப்பதுடன், ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கு வசதியாக மும்பையில் தனியாக வீடு வாங்கி தங்கியுள்ளார். இந்நிலையில் அவரும், தோனியும் இணைந்து 2 விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இரண்டு பேரும் நண்பர்களாகிவிட்டனர். கடந்த ஓராண்டாக இந்த நட்பு வளர்ந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் ராஜஸ்தான் ராயல் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய அரையிறுதி ஆட்டத்தைப் பார்க்க தோனி விரும்பினார். எனவே கடந்த 21ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள லோகண்டவாளா பகுதியில் உள்ள அசின் வீட்டிற்குச் சென்றார். போட்டி முடியும் வரை அந்த வீட்டில் தங்கியிருந்து பெரிய தொலைக்காட்சியில் விளையாட்டை ரசித்தார்.

அசின் வீட்டுக்கு தோனி வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் அவரைப் பார்க்க கூடிவிட்டனர். இருந்தாலும் போட்டி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் அசின் வீட்டிலிருந்து நழுவினார் தோனி.
Read More

ஷில்பாவின் தூக்கத்தை கெடுத்தீர்கள்?

22 மணிநேர இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக நடிகை ஷில்பா ஷெட்டி தனது தூக்கத்தை இழந்தார். ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான ‘ஜரா நாச் கே திக்கா’வின் நடுவராக உள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. ஏராளமான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இருந்து சிறப்பாக நடனம் ஆடுபவர்களை தேர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஷில்பா ஷெட்டி இடைவிடாது 22 மணி நேரம் நடந்த படப்பிடிப்பு காரணமாக தனது தூக்கத்தை இழக்க நேரிட்டது. இது பற்றி ஷில்பா தனது இணையதள பிளாக்கில் எழுதியிருப்பதாவது:
‘ஜரா நாச் கே திக்கா’ ஷூட்டிங் தொடங்கியது. அனைத்து கலைஞர் களையும் திரும்பவும் ஒருங்கிணைக்க முடியாது என்பதாலும் இரண்டு எபி சோடுகளை ஷூட் செய்ய வேண்டி யிருந்ததால் தொடர்ந்து 22 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது.எங்கள் வாழ்க்கை மற்றவர்கள் திரையில் பார்ப்பது போல் நன்றாக இருப்பது இல்லை.ஆனால் தூக்கமின்றி பணியாற்றியது பற்றி நான் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. போட்டியாளர்களின் திறமைகளை பார்த்த போது இதற்காக தூக்கத்தை தொலைத்தது பரவாயில்லை என்று நான் நினைத்தேன். இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.
Read More

இலங்கையில் விழா நடக்குமா?



ஜுன் மாதம் கொழும்பில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவுக்கு குள்ளமணி, வையாபுரி கூட போக மாட்டார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள் இங்குள்ள தமிழ் இன உணர்வாளர்கள். வைகோ, திருமா, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த திரைப்பட விழாவுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
ரஜினி, கமல் மட்டுமல்ல, விஜய், அஜீத், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த அழைப்பிதழை கையால் கூட வாங்க முன்வரவில்லையாம். கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று கொழும்புக்கு எந்த கலைஞர்களும் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்த அரசியல் தலைவர்களுக்கு பெரும் வெற்றி. அதே நேரத்தில் மும்பையில் இருக்கும் அமிதாப் என்ன செய்வார்?
ராஜபக்சேவிடம் இந்த விழா குறித்து நேரில் விவாதித்துவிட்டு வந்திருக்கும் அவர், கடைசி நேரத்தில் கழன்று கொள்ள இயலுமா? ஆனால் அதற்கெல்லாம் யோசனை வைக்காமல் தனது தொண்டர்களை மும்பைக்கே அனுப்பி முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் சீமான். இவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள் அமிதாப் வீட்டின் முன் கூடி கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். போகாதே... போகாதே இலங்கைக்கு போகாதே என்பதுதான் அங்கே எழுப்பப்பட்ட முக்கிய கோஷம். அவர்களை உள்ளே அழைத்த அமிதாப் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தாகவும் தகவல்.
போகிற போக்கை பார்த்தால் இலங்கையில் விழா நடக்குமா என்பதே கேள்விக்குறியாக கிடக்கிறது.

Read More

நம்ம நயன் நம்மள விட்டு போகப்போறா

எத்தனை நாள்தான் தமிழ்ப் படங்களுக்காக காத்திருப்பது? என்ற விரக்தியில் மீண்டும் மலையாளத்துக்கே திரும்பினார் நயன்தாரா. அஜீத், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நயன் தமிழில் நடித்து வந்த ஒரே படம் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் மட்டுமே. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் கூட முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை வேறு புதுப்படங்கள் எதுவும் தமிழில் அவருக்கு ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் மீண்டும் மலையாளத்துக்கே திரும்ப முடிவு செய்தவர், சென்னையில் தான் தங்கியிருந்த ஹோட்டலையும் காலி செய்துவிட்டார். மலையாளத்தில் இயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கும் எலக்ட்ரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்
Read More

வடிவேலுவுக்கு ஐஸ் வைக்கும் தயாரிப்பாளர்


இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தின் மூலம், வடிவேலுவையும் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணனையும் ஒரே நேரத்தில் டக் அவுட் ஆக்கியவர் தம்பி ராமையா. முன்பெல்லாம் வடிவேலுவுக்கு காமெடி டிராக் எழுதிக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். வடிவேலுவை வாய் நிறைய பங்காளி என்று அழைக்கும் பாசக்காரர். அவ்வளவும் இந்திரலோகத்திற்கு முன்புதான். அப்படம் வெளிவந்த பின், "தம்பி... தப்பி தவறி கூட ஆபிஸ் பக்கம் வந்திராதே" என்று கூறிவிட்டார் வடிவேலு.
இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை பிரித்து பிரித்து கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கி சிங்க, தங்க முத்து கோஷ்டிகளிடம் இன்னும் கூட ஏமாந்திருக்கலாம்.
தற்போது ஒரு கூடை முத்தம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தாலும் வடிவேலுவுடன் பழைய உறவை புதுப்பித்துக் கொள்ள துடியாக துடித்துக் கொண்டிருக்கிறாராம் தம்பி ராமைய்யா. யாரு வீட்டு கொல்லையிலோ தேங்காய் விழுந்தால் நமக்கென்ன என்று போகாமல், அது இளசா, பழசா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். எப்படி?
"சிங்கமுத்து வடிவேலுவுக்கு செஞ்ச துரோகத்தை கண்டிக்கணும். இதனால் வடிவேலு மனசு என்ன பாடு பட்டிருக்கும். அவரு உழைப்பை சுரண்டினவங்களை சும்மாவிடக் கூடாது" என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார். அண்ணே வடிவேலு, சப்போர்ட் பண்ணிய சந்தோஷத்துல இன்னொரு முறை கால்ஷீட் கொடுப்பீங்க...

Read More

தமிழ்பேசும் ஜாக்கிசான்..



ஜாக்கிசான் படங்களை பார்த்து நரம்பெல்லாம் முறுக்கேறி திரியும் இளசுகளுக்கு அவரை சென்னைக்கே வரவழைத்து சிலிர்ப்பூட்டினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கியை வைத்து அவர் படமெடுக்கப் போகிறார் என்ற பேச்சு காட்டு தீ போல பரவி வரும் வேளையில் இந்த முரட்டு வீரனை தமிழ் பேச வைத்து வெளிவருகிறது ஒரு (தமிழ்)படம்.
அதுதான் தி கராத்தே கிட்! பிரபல ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித், தனது மகன் ஜேடனை நடிக்க வைத்து தயாரிக்கும் படம் இது. முக்கிய வேடத்தில் ஜேடன் நடிக்க அவருக்கு சப்போர்ட் பண்ணுகிற வேடத்தில் நம்ம ஜாக்கிசான் நடிக்கிறார்.
தன் தாயுடன் சீனாவுக்கு இடம் பெயரும் ஒரு சிறுவன் போன புது இடத்தில் அவனது வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப் படுகிறான். மிகவும் பலவீனமான இவன் அவர்களின் கொடுமையை ஒரு மாணவியின் முன் அனுபவிக்கிறான். இதனால் அவனுக்குள் வலி ஒரு புறமும், அவமானமும் மறுபுறமும் தாக்குகிறது. அந்த நேரத்தில்தான் அவனது குங்ஃப்பூ மாஸ்டருக்கு எல்லா உண்மைகளும் தெரிகிறது. போராடி ஜெயிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கிறார். சிறுவன் தன்னை துன்பப்படுத்தியவர்களை அடித்து பின்னி எடுப்பதுதான் இந்த தி கராத்தே கிட்.
அந்த குங்ஃப்பூ மாஸ்டர்தான் ஜாக்கிசான் என்பது உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும்? சம்மர் லீவுக்கு பசங்களை மகிழ்விக்க வந்து கொண்டேயிருக்கிறார்கள் ஜேடனும், ஜாக்கியும்....

Read More

ஆணுறைக்கான விளம்பரத்தில் அங்கிதா.

தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சி யாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

லண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஆனாலும் இரு மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை.

தமிழ் பட தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களுக்கு தூது அனுப்பி சான்ஸ் கேட்டார். தெலுங்கில் பார்ட்டி கூட கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.

லெஸ்பியன் கேரக்டர்கள், அரை நிர்வாணக் காட்சிகள் என வேறு திசையில் பயணிக்கத் துவங்கியுள்ளது தென்னிந்திய திரையுலகமும். இனியும் காத்திருந்தால், வேலைக்கு ஆகாது என்பது புரிந்ததால், இப்போது விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில் காமசூத்ரா விளம்பரமும் ஒன்று. ஆணுறைக்கான இந்த விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் அங்கிதா.

இந்த விளம்பரங்களுக்குப் பிறகு ஐட்டம் டான்ஸ், கேரக்டர் ரோல் என்றாலும் பரவாயில்லை, ஒப்புக் கொள்கிறேன் என்றும் தனது பிஆர்வுக்கு சொல்லி வாய்ப்பு தேடுகிறாராம் அம்மணி.
Read More

சீனியர்களை ஓரங்கட்டும் இளைய நட்சத்திரங்கள்


விளம்பர உலகில் ஷாரூக், ஆமீர்கான், பிரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் போன்ற சீனியர் நட்சத்திரங்களை இளம் நட்சத்திரங்கள் ஓரங்கட்டி வருகின்றனர். சீனியர்கள் நடித்த விளம்பர படங்களில் இப்போது தீபிகா படுகோனே, கேத்ரினா கைப், ஜெனிலியா ஆகியோர்தான் வருகிறார்கள். இளைஞர்களைக் கவர இளமை தேவைப்படுவதாக விளம்பர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பிஎஸ்என்எல் நிறுவன விளம்பரங்களில் முதலில் பிரீத்தி ஜிந்தா வலம் வந்தார். இப்போது தீபிகா படுகோனேதான் அசத்துகிறார். சோனி கேமரா, பியாமா 1397904493 விலிஸ் ஷாம்பூ விளம்பரங்களிலும் தீபிகா நடிக்கிறார். அதேபோல், நடிகை ராணி முகர்ஜி நடித்த பேன்டா குளிர்பான விளம்பரம் மற்றும் வாட்டிகா ஹேர் ஆயில் விளம்பரத்தில் இப்போது ஜெனிலியா நடிக்கிறார். அதோடு காட்பரி பெர்க் விளம்பரத்தில் பிரீத்தியை நகர்த்திவிட்டு இவர்தான் நடிக்கிறார். சினிமா துறையில் இளம் கலைஞர்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த ரசிகர்கள் கூட்டத்தைக் கவர இளமையான நடிகைகளைத்தான் நடிக்க வைக்க வேண்டியிருக்கிறது என விளம்பர படங்கள் எடுத்து வரும் கிரியேட்டிவ் டைரக்டர் ஷிவானந்த் மகான்டி தெரிவித்துள்ளார். கோக கோலா விளம்பரத்தில் முதலில் நடித்தது ஆமிர் கான். இப்போது நடிப்பது இம்ரான்கான். உறவினரான ஆமிர் கானை நகர்த்திவிட்டார் இம்ரான். கோக கோலா குளிர்பானம் இளமையோடு தொடர்புடையது என்ற உணர்வை ஏற்படுத்த இதுபோல் சீனியர்களை மாற்றிவிட்டு ஜூனியர்களை போடுகிறார்கள். பெப்சி நிறுவனமும் முதலில் ஷாரூக் கானை தனது விளம்பர மாடலாக வைத்திருந்தது. அவருக்கு 40 பிளஸ் வயது ஆகிவிட்டதால், இப்போது இளம் ஹீரோவான ரன்பீர் கபூரை தனது புதிய விளம்பரங்களில் நடிக்க வைத்து வருகிறது.

லோரியல் அழகு சாதன விளம்பர படத்தில் முதலில் தோன்றியது ஐஸ்வர்யா ராய். இப்போது அந்த இடத்தில் சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேத்ரினா கைபும் ஐஸ்வர்யாவிடமிருந்து நட்சத்ரா ஜூவல்லரி ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளார். சுஷ்மிதா சென் தோன்றிய பான்டீன் விளம்பரத்திலும் இப்போது காத்ரீனாதான் நடிக்கிறார். இளம் நடிகர்களிடம் திறமை இருக்கிறது. விளம்பர துறையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதோடு, சீனியர்களுக்கு தர வேண்டிய பணத்தில் பாதி கொடுத்தால் போதும். இதெல்லாம்தான் ஜூனியர் நடிகைகளுக்கு விளம்பர வாய்ப்பு குவிய முக்கியக் காரணம் என்கிறார் டென்ஸு மீடியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாய் நாகேஷ்.
Read More

கண் கலங்கினார் சானியா:சோயிப்மாலிக் ஆத்திரம்



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கிற்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் சமீபத்தில் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பாகிஸ்தான் சென்றனர். சோயிப் மாலிக் கின் சொந்த ஊரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்தியாவில் இருந்து வந்துள்ள உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சோயிப் மாலிக் நாளை (27-ந் தேதி) சிறப்பு விருந்து கொடுக்கிறார். லாகூரில் உள்ள பியர்ல் காண்டி நெண்டல் நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஓட்டலில் தங்குவதற்காக நேற்று மாலை சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் வந்தனர். அப்போது நிருபர்கள், போட்டோ கிராபர்களால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சானியா மிர்சா தள்ளி விடப்பட்டார். இதனால் அவர் கண் கலங்கினார். இந்த சம்பவத்தால் சோயிப் மாலிக் கடும் ஆத்திரம் அடைந்தார்.

தொலைக்காட்சி காமிரா மேன்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், எல்லா தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள், போட்டோ கிராபர்களை வெளியேற்றியது.

திருமண வரவேற்பை படம் பிடிக்க விரும்பினால் ரூ.3 1/2 கோடி தர வேண்டும் என்று சோயிப் மாலிக் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்த தொலைக்காட்சி சானலும் சோயிப் மாலிக் விதித்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள வில்லை.
Read More

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே நான் செக்ஸ் வைத்துக்கொண்டேன்: நித்யானந்தா



 நித்யானந்தா இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது இளம் பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனை ஒரு ஆராய்ச்சியாக செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசில் நித்யானந்தா அளித்துள்ள வாக்கு மூலத்தில், ’’ஆசிரமத்துக்கு வரும் பெண்களில் என்னை முழுமையாக நம்பியவர்களிடம் நான் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளேன்.

ஆராய்ச்சிக்காக தேவைப்படும் போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அதனை பெண்கள் வெளியில் சொல்லக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே, நான் செக்ஸ் வைத்துக்கொண்டேன். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’’ என்று கூறியுள்ளார்.

ஆனால் ஒரு சில பெண்களிடம் நித்யானந்தா வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கி இருப்பதாக தெரிகிறது. இது குறித்தும் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read More

பறக்கற வேலையை விட்டுட்டு ஹீரோவா வந்திருக்கிறார்


இருக்கறத விட்டுட்டு பறக்க நினைக்காதே என்பது பழமொழி. பறக்கற வேலையை விட்டுட்டு கோடம்பாக்கத்துல ஒரு ஹீரோவா இருக்கிற வேலையை செய்ய வந்திருக்கிறார் ஈஸ்வர். விருந்தாளி படத்தின் ஹீரோ! எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் முக்கிய பணியிலிருந்த இந்த இளைஞர் இந்த விமானத்தில் பயணம் செய்த தயாரிப்பாளர் கண்ணில் பட, 70 எம்எம் ஸ்கிரீனில் டூயட் பாடுகிற வாய்ப்பை வழங்கிவிட்டார் அவர்.
எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை நிறைய இருந்திச்சு. அதுக்கேற்ற மாதிரி அவரு கேட்டதும் உடனே வேலையை விட்டுட்டே வந்திட்டேன் என்று சிரிக்கிறார் ஈஸ்வர். ஆள் பார்ப்பதற்கு ஆக்ஷன் ஹீரோ மாதிரி இருந்தாலும், முதல் படத்திலேயே காமெடியாக நடித்திருக்கிறாராம். நானும் சிங்கமுத்துவும் அடிக்கிற காமெடி செம லு£ட்டியா இருக்கும் என்றார். இவருக்கு ஜோடி தியானா. மலையாளத்திலிருந்து வந்திருக்கும் மற்றுமொரு மல்கோவா. அவள் பெயர் தமிழரசி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் விருந்தாளியில் ஃபுல் ஹீரோயின்!
கொட்டி கிடக்குற அழகை, வெட்டி எடுக்கிற ஆசை யாருக்குதான் இருக்காது. கிளாமரா நடிப்பீங்களா என்று ஒரு கேள்வியை கேட்டு, ஆர்வத்தோடு காதை தீட்டினால், ம்ஹ¨க்க்கும் என்று பதில் வருகிறது கோபமாக. நிச்சயமா கிளாமரா நடிக்க மாட்டேன் என்றார். இப்படிதான் நடிக்க வந்த புதுசில் நயன்தாராவும் சொன்னார் என்று மேலும் திரி கொளுத்தினால், அது நயன்தாரா. இது தியானா என்றார் பட்டிமன்ற ஸ்டைலில்.
படத்தின் டைரக்டர் வாட்டர்மேன், லோகிததாசிடம் இணை இயக்குனராக இருந்தவர். அதென்ன வாட்டர்மேன்? பேனாவை கண்டு பிடிச்ச விஞ்ஞானியின் பெயராம்! மத்தவங்கள்ளாம் மையை ஊற்றி எழுதினால், இவர் மனசையே ஊற்றி எழுதியிருப்பாரு போலிருக்கு!

Read More