சானியாமிர்சா- சோயிக் மாலிக் திருமணம் ஐதராபாத் தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இரு குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sunday, April 11, 2010
பிற்பகல் 1 மணிக்கு சானியா திருமணம்....
சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்!
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் மூன்றாவது பன்னாட்டு பாலியல் கருத்தரங்கை நடத்துகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இத்துறை மருத்துவர், தொடர்ந்து புகைப் பிடிப்பவர்களுக்கு தாம்பத்திய உறவு கொள்ளும் போது செயல்படாத் தன்மை உள்ளிட்ட பாலியல் குறைபாடுகள் அதிக அளவில் ஏற்படும் என்று தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேர்ந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார். புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார். பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார். இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார். உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது. தற்போதைய வேலை கலாச்சாரம் பாலியல் தொடர்பான மனிதர்களின் எண்ணத்தை மாற்றுவதுடன் தரம் தாழ்ந்து செல்லவும், பாலியல் சீர்குலைவுக்கும் காரணியாக அமைந்து உள்ளது எனவும் மருத்துவர் காமராஜ் தெரிவித்து உள்ளார். துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர். இந்த வகையானவர்கள் 20 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 15 விழுக்காட்டினர் விவாகரத்து பெற்றதால் என்று மருத்துவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனைகளில் உள்ள உண்மை நிலைத் தொடர்பாகவும், சமுதாயத்தில் உள்ள தவறான எண்ணத்தையும், நம்பிக்கைகள் தொடர்பாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் இரண்டு நாட்கள் விரிவான அளவில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். |
கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதன் பற்றிய ஆராய்ச்சிகள்
கூகிள் அல்லது கூகிளிங்க் என்பதே தேடுதல் என்ற பொருள் படும்படியாக உருவாகி வருவது அறிந்ததே. தற்போது கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதனின் உடற் சுவட்டு ஆதாரங்கள் இருந்த இடத்தைக் கண்டுகொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தில் ஆப்பிரிக்க நிலப்பகுதியில் தோன்றிய ஆதிமனிதனை ஒத்த உயிரினம் என அறியப்படுகிறது. படிப்படியான இன்றைய நாகரீக மனிதனின் வளர்ச்சியின் தொடர்பை இட்டு நிரப்பக்கூடிய கண்டுபிடிப்பாக இது இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1.9 மில்லியன் வருடத்துக்கு முற்பட்ட இரண்டு எலும்பு படிமங்கள் (ஆஸ்ட்ரோப்லிதெக்ஸ் செடிபா )ஒரே இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவை ஒரு தாய் (20 அல்லது 30 வயது) மற்றும் ஒரு மகனுடையதாக (8) இருக்கலாம் என அறிவியலார்கள் தெரிவிக்கிறார்கள். தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திச் சென்ற லீ பெர்கர் , 2008 லிருந்து கூகிள் எர்த்தை மிக்கேல் ஜோன்ஸ் , கூகிள் எர்த்தின் தொழில்நுட்பத் தொடர்பாளர் , தங்கள் கூகிள் எர்த்தின் மிகச்சீரிய தேடுதல் முறையாலும் சிறந்த வழிகாட்டுதல் முறையாலும் பெர்க்கர் இதற்கு முன்பே அறியப்படாத கிட்டத்தட்ட 500 குகைப் பிரதேசங்களை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார் |
அல்லல் படுத்தும் ஆஸ்துமா...
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கியமாகவே வாழ விரும்புகின்றன. நோயின் தாக்கத்தை அனுபவிக்க அவை விரும்புவதில்லை.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.
நோய் வரும்முன் காத்துக்கொள்வதே சிறந்தது. இன்றைய நாகரீக வளர்ச்சியின்வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பது போல் நோயின் தாக்கமும் இதேவேகத்தில் உயிர்களை தாக்கி வருகிறது. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுடன்ஒன்று சார்ந்திருப்பதால் நோயின் தாக்கம் அனைத்து உயிர்களையும் பாதிக்கவைக்கிறது. உதாரணமாக பன்றி, பறவை, எலி போன்றவற்றின் மூலம் பரவும்நோய்கள் பற்றி அண்மையில் நாம் அறிவோம்.
நோயின் தாக்கத்தை தவிர்க்க முறையான உணவு பழக்க வழக்கங்களையும், சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப வாழும் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையைமாசுபடுத்தியதன் விளைவால் பல கிருமிகள் தோன்றி பலவிதமான நோய்களைஉண்டாக்குகின்றன. அவ்வாறு உண்டாகும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. புறச்சூழ்நிலையின் மாறுபாட்டால் காற்றில் கிருமிகள் கலந்து சுவாசத்தின் மூலம்உட்புகுந்து அலர்ஜியை ஏற்படுத்தி ஆஸ்துமாவாக மாறுகிறது.
மனிதர்களை அச்சுறுத்தித் துயரப்படுத்தும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று.ஆஸ்துமா என்பது கிரேக்கச் சொல். மூச்சுத்திணறல் என்பது இதன் பொருள்.மூச்சுத்திணறலை ஆங்கிலத்தில் Wheezing அல்லது Pantingஎன்றழைக்கிறார்கள். “மூச்சுக் காற்றுக்காக ஏங்கித் ஏங்கித் திணறுவதுதான்ஆஸ்துமா” என்கிறார் ஹிப்போகிரேட்ஸ் மூச்சை உள் இழுக்கவோ, வெளியிடவோசிரமப்படும். இயல்புக்கு மாறான திணறல் நிலைமைகளே இந்நோயின் முக்கியஅறிகுறிகள்.
ஆஸ்துமா நோயோடு தொடர்புள்ள முக்கிய உடலுறுப்பு நுரையீரல். நுரையீரல்கள்மார்புக்குழியை (Thorasic cavity) பெருமளவு நிறைத்துள்ளது.நுரையீரலின் மேல்பகுதியில் மூச்சுப் பெருங்குழாய் (Trachea)எனப்படும் காற்றுக் குழாய் சுமார் 12 செ.மீ. நீளம் 2.5 செ.மீ. அகலத்தில்அமைந்துள்ளது. இது குருத்தெலும்பால் ஆனது. இக்காற்றுக் குழாய் இரண்டாகப்பிரிகின்றன.
இடதுபக்க கிளைக் காற்றுக்குழாய்க்கு Left Bronchus என்றும்வலதுபக்கக் கிளைக் காற்றுக்குழாய்க்கு Right Bronchus என்றும்பெயர். இவ்விரண்டு கிளைகளும் நுரையீரலுக்கு உள்ளே நுழைந்ததும் பல்வேறுதுணைக்கிளைக் காற்றுக் குழாய்களாகப் பிரிகின்றன. இவை Bronchioles எனப்படும். இக்குழாய்களும் குருத்தெலும்பால் ஆனவை. இவற்றின் முடிவில்எண்ணற்ற சின்னஞ்சிறு காற்றுப்பைகள் (Air Sacs) இவற்றுக்குஅடூதிஞுணிடூடி என்று பெயர். இவற்றின் எண்ணிக்கை சுமார் 300 கோடி நுண்ணியகாற்று அறைகள் நுரை போன்ற வடிவத்தில் காணப்படுவதால்தான் நுரையீரல்எனப்படுகிறது. இந்தக் காற்றுப் பைகளைச் சுற்றிலும் அருகிலேயே தந்துகிகள்எனப்படும் மெல்லிய ரத்தக் குழாய்கள் ஓடுகின்றன.
சுவாசிப்பதற்கு முக்கியமாகப் பயன்படக்கூடியது மூக்கு அல்லது நுரையீரல்என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால் நுரையீரலின் கீழ் அமைந்துள்ள,வயிற்றையும் மார்பையும் பிரிக்கக்கூடிய ‘உதரவிதானம்’ (Diaphragm)எனப்படும். அடிச்சவ்வு சுருங்கி விரிவதால்தான் நுரையீரலுக்குள் காற்றுப்போக்குவரத்து நடைபெற முடியும். நுரையீரலிலுள்ள காற்றுக்குழாய் பகுதிகள்சுருக்கமடைந்து ஆஸ்துமா திணறலைத் தோற்றுவிக்கின்றன.
ஆஸ்துமா நோய்த்துயருக்கு அடிப்படைக் காரணங்கள் ஒவ்வாமை (Allergy)பாரம்பரியம், உடலமைப்பு மற்றும் உணர்ச்சிகள். ஒவ்வாதபொருட்கள் (Allergens) என்றும் அவற்றை உடலுக்குள் எதிர்க்கஉருவாகும் எதிர்ப்பொருள்கள் (Antibodies) என்றும்இரண்டுக்குமிடையில் நிகழும் செயல்பாட்டை Allergen - Antibody Reaction என்றும் அழைக்கப்படும். இந்நிகழ்வின்போதுதிசுக்களிலிருந்து ஹிஸ்டமின், பிராடிகைனின், கைனின் போன்ற சில ரசாயனப்பொருட்கள் அதிகளவு வெளியேறி ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலில்ஒவ்வாமைக் குறிகள் தும்மல், நீர் ஒழுக்கு, மூக்கடைப்பு, சுவாசக் குழாய்கள்சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை வகைப்படுத்துகின்றனர்.
1. உணவில் ஒவ்வாத பொருட்கள்... பால், நெய், எண்ணெய், மீன், முட்டை, கீரை, கோதுமை... போன்றவை.
2. வெளியுலக ஒவ்வாத பொருட்கள் தூசு, புகை, குளிர்காற்று, மகரந்தம்,பிராணிகளின் முடி, உமிழ்நீர், கழிவுகள், பெயிண்ட், பெட்ரோல்... போன்றவை.
3.அலோபதி மருத்துவ உலக ஒவ்வாத பொருட்கள் டார்ட்ராசின், சல்போனமைடு,ஆஸ்பிரின், பென்சிலின் மேலும் ஏராளமான மருந்துகள் மற்றும் செயற்கை உணவுப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள்... போன்றவை.
ஒவ்வாமைப் பொருட்களால் ஏற்படும் ஆஸ்துமா ‘Extrinsic Asthma’ எனப்படும். இத்தகைய ஆஸ்துமாவிற்கான காரணங்கள் புறஉலகில் நிறைந்துள்ளன.வீடுகளிலுள்ள ஒட்டடை, தூசிகள் மற்றும் அவற்றில் நிறைந்துள்ள கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் (House Dust Mite) ஆஸ்துமாவைத் தூண்டும்வெளிக்காரணிகளின் முக்கியமானவையாகக் கூறப்பட்டன. தற்போது தொடர்ஆராய்ச்சிகள் மூலம் தூசிகளிலுள்ள நுண்ணுயிர்களின் கழிவுகளால் தான் ஆஸ்துமாதூண்டப்படுகிறது என அறிவித்துள்ளனர். எனவே திரைச் சீலைகள், மேஜைவிரிப்பான்கள், போர்வைகள், தலையணை உறைகள் போன்றவற்றை வாரம்ஒருமுறையேனும் துவைத்து வெயிலில் உலர வைப்பது அவசியம் என்றுஅறிவுறுத்துகின்றனர்.
ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளால் நுரையீரல் இயக்கம் 20 சதவிதத்திற்கும்மேல் குறைவதால் ஆஸ்துமா தூண்டப்படுகிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும்‘கேக்’கிற்கு நிறமளிப்பதற்குப் பயன்படும் Tartrazine ஆஸ்துமாவைத்தூண்டுகிறது. ஒரு பகுதியினருக்கு கடலுணவுகள் (இரால், நண்டு, மீன்) சேராது.இவற்றில் உப்புத்தன்மை அதிகம். சாப்பிடுவோர் உடலிலும் இது அதிகரித்துவெளிக்காற்றின் ஈரப்பதத்தை ஈர்க்கும். இதனால் ஆஸ்துமா ஏற்படும். சிலருக்குசுண்டல், அடை, காளான் வகை சேராது. இவற்றிலுள்ள அதிக புரோட்டீன் எளிதில்ஜீரணமாகாமல் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
அகக்காரணங்களால் மன உணர்ச்சிகளால் உண்டாகும் ஆஸ்துமா ‘Intrinsic Asthma’ எனப்படும். 75% ஆஸ்துமா நோயாளிகளுக்கு மன உணர்ச்சிகளே காரணம்என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. பயம், பதட்டம், அதிர்ச்சி,எரிச்சல், கோபம், தோல்வி, ஏமாற்றம், வேதனை, அன்பிற்கான ஏக்கம்,மனஇறுக்கம் (Tension), மன அழுத்தம் (Stress) எனப் பல்வேறுவகையான மிகை உணர்ச்சிகள் மன பாதிப்புகள் ஆஸ்துமாவைத் தூண்டுகின்றன.
பாரம்பரியக் காரணங்கள், அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என எந்தஅடிப்படையில் ஆஸ்துமா ஏற்பட்டாலும், எப்போது ஏற்பட்டாலும் ஆங்கிலமருத்துவம் ஒரே மருந்தைப் பயன்படுத்துகிறது. மனம், உடல் தொடர்பான அனைத்துவிவரங்களும் விசாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு சித்த மருத்துவசிகிச்சை மூலம் முழுநலம் பெற முடிகிறது.
சித்த மருத்துவ முறைகள்
· ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும்.
· தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை வேர், வீலி இவைகளை சம அளவு எடுத்து நான்குபங்கு நீர்விட்டு எட்டில் 1 பங்காக நன்கு காய்ச்சி தேன் கலந்துஉட்கொண்டால் இரைப்பு, இருமல் நோய்கள் நீங்கும்.
· ஆடாதோடை இலைச் சாற்றில் தாளிச பத்திரி இலைத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் நீங்கும்.
· நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ஆடாதோடை வேர்ப்பட்டை, கோஷ்டம்,சிற்றரத்தை, வசம்பு, மிளகு இவற்றை வாங்கி சம அளவு எடுத்து முறைப்படிசுத்தம் செய்து சூரணமாக்கி, 15 கிராம் அளவு சூரணத்திற்கு 400 மில்லிகிராம் தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து தினமும் மூன்று வேளைக்குபங்கிட்டு அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் ஆச்சர்யம் படும் வகையில்குணமாகும்.
· திப்பிலி லேகியம்
திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர்,வாய்விடங்கம், கடுக்காய், மிளகு இவற்றை வகைக்கு 8 1/2 கிராம் அளவு எடுத்துஇளம் வறுப்பாக வறுத்து, பொடியாக்கி, தேன், சர்க்கரை சேர்த்து காய்ச்சிபாகு பதத்தில் இறக்கி நன்றாக கடைந்து 1 ஸ்பூன் அளவு தினமும் இருவேளை என 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் ஈளை நீங்கும்.
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள்
மச்சாசனம், புயங்காசனம், பிராணயாமம்.
பிராணயாமம் செய்யும் போது சுவாசத்தை நன்கு உள்வாங்கி வெளிவிடுவதால்உடலுக்கு அனைத்து பகுதிகளுக்கும் பிராண வாயு சீராக கிடைக்கும் இதனால்உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
ஆஸ்துமா நோய் தாக்காமல் நம்மை தற்காத்துக் கொள்ள சில மருத்துவ ஆலோசனைகள்
· கபத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
· ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வாசனை திரவியங்களில் உள்ளமணம் சில சமயங்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அதனை ஒதுக்குதல் நல்லது.
· மாசு, தூசு நிறைந்த பகுதிகளிலும் மண், புழுதி உள்ள பகுதிகளில் செல்லும் போது மூக்கை துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
· வளர்ப்பு பிராணிகளுடன் அதிகமாக ஒட்டி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
· அடிக்கடி கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும்.
· நன்கு காய்ச்சிய நீரையே அருந்த வேண்டும். வெந்நீரிலேயே குளிக்க வேண்டும்.
· இரவு உணவில் நீர்த்துவமான கஞ்சி வகைகளை உண்ண வேண்டும். அதுவும் இரவு 7 மணிக்குள் உண்பது நல்லது.
· மது, புகை, போதை வஸ்துக்களை அறவே தொடக் கூடாது.
· மிகக் குளிர்ச்சியான உணவுகளை தவிருங்கள்.
மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்தால் அல்லல் படுத்தும் ஆத்துமாவின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
நடிகை ஆஷிமா உயிர் தப்பினார்
தம்பி அர்ஜூனா என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நாவலூர் கிராமத்தில் நடந்தது.
ரமணா, பெரோஸ்கான், பிரவின்ராஜ் ஆகிய மூன்று பேரும் கதாநாயகர்களாகவும், ஆஷிமா கதாநாயகியாகவும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியில், ஆஷிமா எரியும் நெருப்புக்குள் சிக்கிக்கொள்வது போலவும், அதில் இருந்து அவரை ரமணா காப்பாற்றுவது போலவும் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இதற்காக ஆஷிமாவை சுற்றி மண் எண்ணையை ஊற்றி தீவைத்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஆஷிமாவின் உடையில் தீப்பற்றிக்கொண்டது. அவர் சத்தம்போட்டு கதறி அழ ஆரம்பித்தார்.
நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்ட கதாநாயகன் ரமணா, டைரக்டர் விஜய் ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல் மிராக்கிள் ஆகியோர் பாய்ந்து சென்று ஆஷிமாவை சாக்குப்பையினால் போர்த்தி வெளியே இழுத்து வந்தார்கள். என்றாலும் ஆஷிமாவின் இரண்டு கால்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
உடனடியாக ஆஷிமா அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மயானத்தில் புதைக்கப்பட்ட குழந்தை மாயம்
தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்ட நல்லூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி அன்புக்கரசி. பாக்கியராஜ் பல்லடம் அருகே உள்ள கொசவம் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கிறார்.
இவருக்கு ஏற்கனவே 2 மகன், 2 மகள் உள்ளனர். இந்த நிலையில் அன்புக்கரசிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறக்கும் போது உடல் ஊனத்துடன் பிறந்தது.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது.
குழந்தையின் உடல் பல்லடம் மயானத்தில் புதைக்கப்பட்டது. மயான தொழிலாளி செல்வன் குழந்தையின் உடலை குழிதோண்டி புதைத்தார்.அதன் பிறகு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் முதியவர் ஒருவர் பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அதே மயானத்துக்கு பாக்கியராஜ் கொண்டு வந்தார்.
அப்போது தனது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மயான தொழிலாளி குழி வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக மயான தொழிலாளி செல்வமணி கேட்டார். அதற்கு அவர் குழந்தையின் பிணத்தை வேறு இடத்தில் புதைத்தோம் என்றார். ஆனால் பாக்கியராஜ் தொடர்ந்து கேட்டுப் பார்த்தார். சரியான பதில் வரவில்லை. ஆழமாக வெட்டிய குழியில் இறங்கி பார்த்தார். குழந்தையின் பிணத்தை காணவில்லை.
இதனை தொடர்ந்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் இன்று குழந்தையின் பிணத்தை தேடும் பணி நடக்கிறது.
பட்டமெல்லாம் கொடுத்திராதீங்க ஃபிரண்ட்ஸ்
நடிச்சு மூணே படம்தான் வந்திருக்கு. இந்த மூணாவது படத்திலேயே ஐம்பது பேரை அடிச்சு துவைக்கிறீங்க. அந்தளவுக்கு வளர்ந்திட்டதா நினைக்கிறீங்களா? இந்த கேள்வி யாரை நோக்கி கேட்கப்பட்டது என்று புரியாத சின்ன 'பையா'வாக வாசகர்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நேரடியாக மேட்டருக்கு போய் விடலாம்.
அட நீங்க வேற சார். இது ஒரு பொழுதுபோக்கு படம். யதார்த்த படத்திலே இப்படி ஒரு ஃபைட் இருந்தா கேளுங்க. பதில் சொல்றேன். அடுத்து நான் நடிச்சு வெளிவரப்போற நான் மகான் அல்ல படம் ஒரு யதார்த்தமான படம். அதில ஃபைட் இல்ல. அந்த படத்துக்கு அப்புறம் ஒரு படம் பண்றேன். தெலுங்குல வந்த விக்ரமார்க்குடு படத்தோட தமிழ் ரீமேக். அதுல வில்லன்களை அடிச்சு துவைச்சு போடுவேன். இப்பவே சொல்லிட்டேன். அதையெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் என்றார் கார்த்தி.
ரசிகர் மன்ற விஷயத்தில் ரொம்பவே தாராளம் காட்டுகிற கார்த்தி, பட்டமெல்லாம் கொடுத்திராதீங்க ஃபிரண்ட்ஸ் என்கிறார்களாம் அவர்களிடம். ஆனால், புரட்சி, போர் என்று என்னென்னவோ அடைமொழிகளுடன் அங்கங்கே போஸ்டர்கள் தென்படதான் செய்கிறது.
நதி அதுவழியே போனாலும், பூவை து£வி புகழ் பாடாம விடமாட்டாங்க போலிருக்கு!
பேட்டி கொடுப்பதை தட்டிக்கழிச்ச கவுண்டமணி
வீட்டுக்கே வந்திட்டாரு கவுண்டரு! வேட்டும் வாணவேடிக்கையும் போட்டு கொண்டாட வேண்டிய விஷயம். சவுண்டு |
இதயத்துக்கு நல்லது இல்லங்கறதால சைலண்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாங்களாம் அவரது குடும்பத்தினர். வந்து சில தினங்களிலேயே ஒரு முன்னணி சேனல் நிறுவனம் கவுண்டரை தொடர்பு கொண்டு பேட்டி ஒன்ணு கொடுங்களேன் என்றதாம். இந்த விஷயத்தில் கவுண்டர் எப்போதும் கறார். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் பிரஸ்மீட்டோ, தனி பேட்டியோ அவர் கொடுத்ததே இல்லை. இதுதான் அவர் பாலிஸி என்றாலும், தனிப்பட்ட முறையில் பிரஸ்சை அழைத்து அன்போடு பேசி அரட்டையடிப்பது வழக்கம். நம்ம பாலிஸிக்கு இதெல்லாம் ஒத்து வராது. விட்ருங்க என்று போனை வைத்தாராம். அதன்பின் முக்கிய தலைகள் தலையிட்டும் கவுண்டர் பிடிவாதம் கடுகளவு கூட சிறுக்கவில்லையாம்! மாடு இளைச்சாலும் மடி பலம்தான்! |
தேசிய தலைவர் பிரபாகரனை பின்பற்றும் விஐய்
அரசியல் கட்சி துவங்குகிற விஷயத்தில் விஜய் நடத்துவது 'ஸ்லோ சைக்கிள் ரேஸ்' என்கிற அளவுக்கு சின்னதாக எடை போட்டுவிட்டது ஒரு முன்னணி பத்திரிகை. |
அவ்வளவுதான்... பாய்ந்தடித்துக் கொண்டு விளக்கம் சொல்லியிருக்கிறார் இளையதளபதி. "நிச்சயம் அரசியலுக்கு வருவேன். அதற்கான பேஸ்மென்ட் வேலைகள் நடந்திட்டு இருக்கு" என்பதுதான் அவரது ஸ்டிராங்கான விளக்கம். (கனவை கலைச்சிடாதீங்க ரசிகருங்களா) அதற்கு முன் அவருக்கு சொல்லப்பட்டிருக்கும் ஒரு அட்வைஸ் ரொம்பவே மரியாதைக்குரியது! மக்கள் மன்றத்தில் பேசும்போதும், எழுதும்போதும், (உடன்பிறப்புக்கு கடிதமெல்லாம் எழுதுவாரோ) 'என் உயிரினும் மேலான தமிழ் மக்களே' என்ற வார்த்தையை பயன்படுத்த சொல்லியிருக்கிறாராம் அவரது அப்பா. இந்த வார்த்தை விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் கர்னல் பிரபாகரன் பயன்படுத்தி வந்த மந்திர வார்த்தை. இனிமேல் எங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தாலும், இந்த வார்த்தை ஞாபகம் இருக்கட்டும். பெரும் போராளி ஒருவர் உபயோகப்படுத்திய இந்த வார்த்தைக்கே ஒரு ஈர்ப்பு உள்ளது என்றெல்லாம் லெக்சர் எடுத்தாராம் அப்பா. இதையடுத்து எல்லா மேடைகளிலும் இதை பயன்படுத்த துவங்கியிருக்கிறார் விஜய். |
திருட்டு சி.டி.யில் சினிமா பார்க்க கூடாது ; சேலத்தில் இந்தி நடிகர் விவேக்ஓபராய் பேட்டி
இந்த நிலை வராமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் திருட்டு சிடியில் படம் பார்க்க கூடாது. தியேட்டருக்கு சென்று படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.
வடிவேலு தான் என்னை மிரட்டுகிறார்; நடிகர் சிங்கமுத்து பேட்டி..
நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை என் டைரியில் எழுதி வைத்துள்ளேன்.
காதலித்த போது சோயிப் மாலிக்குக்கு ரூ.10 கோடி கொடுத்தேன்; முதல் மனைவி ஆயிஷா பேட்டி
அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழக அரசு : கமல்ஹாசன் புகழாரம்
சென்னை, ஏப்.9, 2010 : உயிர் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசு, அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக மலையாளிகள் சங்கமும், சென்னை மருத்துவ கழகமும் இணைந்து, 'ஹிருதயராகம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் நல்லெண்ண தூதராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
இந்த இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டில் 60 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 2008-ம் ஆண்டில் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சென்னையில் விடுதி கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கு நிதி திரட்டுவதற்காக, தமிழ் - மலையாள நடிகர் - நடிகைகளுக்கு விருது வழங்குவது உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி, வருகிற 18 ஆம் தேதி மாலை 5-30 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில், தமிழ் - மலையாள படவுலகை சேர்ந்த நடிகர் - நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த அமைப்பு சார்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், " இதுபோன்ற நற்காரியங்களை மக்களுக்கு முன்னெடுத்துச் செல்வதில் மீடியாக்களின் பங்குதான் அதிகம். அமெரிக்காவில் உயிர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர பல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அதுபோன்ற நல்லதொரு உயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்பவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி மனதாராப் பாராட்ட வேண்டும். நமக்காகப் பணி செய்ய, நாம் நியமித்தவர்கள், அந்தப் பணியை நல்ல முறையில் செய்கிறார்கள் எனில் அதைப் பாராட்டுவதில் தவறில்லை. யாருக்கும் வியாதி இல்லை என்றால் டாக்டர்களுக்கு வேலையே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சூழல் வருவதைத்தான் உண்மையான டாக்டர்கள் விரும்புவார்கள்.
இந்த நற்காரியத்துக்காக நடத்தப்படும் கலை விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் மட்டும்தான் கலைஞர்களுக்கு. ஆனால் அதன் மூலம் பயன் அடையப்போவது எண்ணற்ற எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளே," என்றார் நடிகர் கமல்ஹாசன்.
இரவு முழுவதும் ஊர் சுற்றும் சானியா-சோயிப்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் ஐதராபாத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
சோயிப் மாலிக் சில நாட்களுக்கு முன்பே ஐதராபாத் வந்து சானியா வீட்டில் தங்கி இருக்கிறார். அவர் ஐதராபாத் வந்தது முத லில் ரகசியமாக இருந்தது. ஆயிஷா விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டி இருந்ததால் சோயிப் மாலிக் வெளியே வந்தார். நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பகலில் சோயிப் மாலிக், சானியா வீட்டில் பொழுது போக்குவதற்காக மாமியாருடன் செஸ் விளையாடுகிறார்.
இரவில் சானியாவுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார். இரவு 11 மணிக்கு சானியாவும், சோயிப் மாலிக்கும் காரில் வெளியில் கிளம்புகிறார்கள். விடிய விடிய ஐதராபாத் நகரை சுற்றி வந்து ஜாலியாக பொழுது போக்குகிறார்கள்.
ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களை தனது வருங்கால கணவருக்கு சானியா சுற்றிக் காண்பிக்கிறார்.
சானியா வீட்டில் அனுமதி இல்லாமல் கண்காணிப்பு கேமரா
ஐதராபாத்தில் இருக்கும் சானியாவின் வீட்டு வாசலில் திடீரென கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருமண சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப், ஐதராபாத் இளம் பெண் ஆயிஷாவை விவகாரத்து செய்த பின்னரும் கூட சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.
இன்று நாளை என தள்ளிக் கொண்டு போகும் திருமணம், 15ம் தேதி உறுதியாக நடக்கும் என சானியா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
. இந்நிலையில் , ஆயிஷா விவகாரத்துக்குப் பிறகு வெளியில் வராத சானியா - சோயப் ஜோடியை போட்டோ எடுக்கவும், அவர்களிடம் பேட்டி காணவும் பத்திரிகையாளர்கள் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அவர்களை கண்காணிக்க சானியா வீட்டு வாசலில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அப்படி அனுமதி ஏதும் பெறப்படாமலேயே கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சானியா வீட்டாரிடம் விசாரணை நடத்தப்படும் என ஐதராபாத் துணை கமிஷனர் தெரிவித்தார்.