Pages

Thursday, April 1, 2010

விருபமில்லாட்டா இப்படியா?....



ஸ்ரே நடிகை ஒரு பாடலுக்கு நடனம் ஆட மட்டும் ரூ.25 லட்சம்கேட்கிறார் அதை கேட்டதும் தயாரிப்பாளர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிகின்ற்றனர் இதே நிலை தொடருமானால் ஸ்ரே கைவசம் ஒரு படமும் தங்காது அனா மூத்த தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். விருபமில்லாட்டா இப்படியா?....
Read More

EÛU N•TY• TPUÖf\‰">50 Y£PjLºeh ˜Á“ SP‹R
EÛU N•TY• TPUÖf\‰
EÛU N•TY• TPUÖf\‰">

fÚcÖŸ p BŸyÍ NÖŸ‘¥, UÛXeÚLÖ›¥ GÁ\ “‡V TP• RVÖWÖf\‰. 50 Y£PjLºeh ˜Á“ WÖ^TÖÛ[V†‡¥ SP‹R J£ EÛU N•TY†ÛR AzTÛPVÖL ÛY†‰ C‹R TP†‡Á LÛR AÛUeLTy| C£ef\‰.

‡|ef|• ‡£TjLº•, UŸUjLº• ŒÛ\‹R ‡f¥ TP• C‰. 40 TPjL¸¥ hZ‹ÛR SyN†‡WUÖL°•, 2 ÙR¨jh TPjL¸¥ LRÖSÖVL]ÖL°•, `Ù^V•' TP†‡¥ «¥X]ÖL°• Sz†R ‡§, C‹R TP†‡¥ LRÖSÖVL]ÖL Szef\ÖŸ. `UÖR«' TP†‡¥ LRÖSÖVfVÖL Sz†R AtN¦, LRÖSÖVfVÖL Szef\ÖŸ. LtNÖ L£“, rUÁ Ùcyz BfÚVÖ£PÁ TP†‡Á RVÖ¡TÖ[Ÿ ˜£ÚLNÁ, ˜efV ÚYP†‡¥ Szef\ÖŸ.

U‰ A•TÖyzÁ ER«VÖ[Ÿ H.BŸ.˜†‰WÖ^Ö J¸T‡YÖ[WÖL A½˜L• Bf\ÖŸ. ‡]Ö, CÛNVÛUef\ÖŸ. LÛR-‡ÛWeLÛR-YN]• Gµ‡ ÛPWe| ÙNšf\ÖŸ, LÖ¸˜†‰. TP‘z“ A|†R UÖR• (HW¥) ˜R¥ YÖW†‡¥ ÙRÖPjf WÖ^TÖÛ[V•, pYLÖp, «£‰SLŸ, ÙNjÚLÖyÛP, h¼\ÖX• BfV CPjL¸¥ SÛPÙT\ C£ef\‰.

Read More

நயன நடிகை தற்போது கேமராமேனுடன்.....

பலபேருடன் கிசு கிசுக்கப்பட்ட நயன நடிகை தற்போது தில்லான ஷா கேமராமேனுடன் அடிக்கடி தென்படுகிறார்.

தளபதி தனது வீட்டில் செயற்கை தோட்டம் அமைத்துள்ளார். தோட்டக்காரர்களை அடிமைப்போல் நடத்தியதால் யாரும் வேலைக்கு வருவதில்லையாம். அதனால்தான் செயற்கை தோட்டத்தை உருவாக்கியிரு்ககிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ஷ்ன் கட் சொல்கிறவர்களின் சங்கம் நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் முன்னணியில் நின்ற பெல் இயக்குனரை, அவர் படம் இயக்கி பல வருடங்கள் ஆனபோதிலும் ரொம்பவே மதிக்கிறார்கள். வெளியில் கிடைக்கும் இந்த மரியாதை அவருக்கு வீட்டில் இல்லையாம். காதலித்து மணந்த பூ நடிகை பெல்லை மதிப்பதில்லை என்பதுடன், ஏதேனும் கேட்டால் நான் அக்கட தேசத்தில் பவர்ஃபுல் அரசியல்வாதி என பெல்லை அடக்கிவிடுகிறாராம் பாவம் பெல்.

யானைகள் படத்தை வாங்கிய சங்கம் வளர்த்த நகரின் அதிகார வாரிசு படம் சரியில்லை என தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என அனைவரிடமும் நஷ்ட ஈடாக லம்பாக ஒரு தொகை வாங்கியிருக்கிறார். விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் நஷ்டமடைந்தவர்கள்.

பலபேருடன் கிசு கிசுக்கப்பட்ட நயன நடிகை தற்போது தில்லான ஷா கேமராமேனுடன் அடிக்கடி தென்படுகிறார். வசந்தமாக போய்க கொண்டிருந்த இயக்குனரின் வாழ்க்கையில் புகுந்து அவரது கண்மணியை கவர்ந்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறவர் இந்த கேமராமேன். அவரிடம் எப்படி நயனம் விழுந்தது என்பதுதான் ஆச்சரியமும்.

பொருளாதார நெருக்கடியால் பயந்துபோன செயற்கை மனிதன் படத்தயாரிப்பாளர், பைனான்ஸை இறுக்கிப்பிடிக்கத் தொடங்கினார். கடுப்பான பிரமாண்ட இயக்குனர் படப்பிடிப்பை தள்ளிப்போட, உச்ச நடிகர் பேசி இருவரையும் சமாதான்படுத்தியிருக்கிறார். தற்போது பணம் தங்கு தடையில்லாமல் வருவதால் உற்சாகமாக படப்பிடிப்பை நட்த்திக் கொண்டிருக்கிறார் பிரமாண்டம்.
Read More

உன்னோட ரேஞ்சுக்கு வேற ஆளை பாரு என..... ‘

குட்டையாக இருக்கும் முட்டமுழி நடிகருக்கு சீல் பட ஹீரோயின் எல்லோரி மீது ஆசை

எட்டுக்கு அடுத்த நம்பர் நடிகைக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.

டான்ஸ் நடிகருடன் சேர்த்துவரும் செய்திகளால் கலவரமடைந்த பெற்றோர், மனம்போன போக்கில் போகும் மகளை கட்டுப்படுத்தி கரைசேர்க்க, நடிகை எங்கு சென்றாலும் கூடவே கொக்கிபோட்டு ஃபாலோ செய்கின்றனராம்.

குட்டையாக இருக்கும் முட்டமுழி நடிகருக்கு சீல் பட ஹீரோயின் எல்லோரி மீது ஆசையோ ஆசையாம். படப்பிடிப்பெல்லாம் முடிந்தபிறகு, ஒருநாள், ”பார்ட்டி இருக்கு வர்றீங்களா?” என்றாராம் நடிகர். நட்பு எண்ணத்தில் அழைப்பதாக நினைத்துப்போன நடிகைக்கு அங்கு போன பிறகுதான் நடிகரின் தப்பு எண்ணம் புரிந்ததாம். அதாவது அந்த இடத்தில் இருவரையும் தவிர வேறு யாருமில்லையாம். அவ்வளவுதான் கடுப்பான நடிகை உன்னோட ரேஞ்சுக்கு வேற ஆளை பாரு என ‘அர்ச்சனை செய்தபடி இடத்தை காலி செய்தாராம்.

கிங் படம் மூலம் சிதம்பர இயக்குனருக்கு 1சி அளவுக்கு கையை சுட்டுவிட்டதாம்.

இதையெல்லாம் வெளியே காட்டிக்கொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிடும் என சைலண்ட் காட்டிவருகிறார். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பைனான்சியர் ஒருவரை சந்தித்து அடுத்த படத்திற்கு பணம் கேட்டுள்ளது பார்ட்டி. சிதம்பரம் பஞ்சரான விஷயம் தெரிந்த பைனான்சியர், நான் உனக்கு பணம் கொடுத்து நடுத்தெருவுல நிக்கமாட்டேன் என்று திருப்பி அனுப்ப, மேஜையில் வைத்திருந்த கூல்டிரிங்சைகூட குடிக்காமல் திரும்பினாராம்.

வீக்லி பத்ரிகை தயாரித்த முதல் படத்துல நடித்த, தயாரிப்பாளர் மகனுக்கு 20 சி மட்டுமே சம்பளமாக தரபட்டதாம்.

தனது மார்க்கெட்டுக்கு 70சி சம்பளம் என்றாலும் பத்ரிகை தயாரிப்பு என்பதற்காக அப்போதைக்கு ஒத்துக்கொண்டாராம் நடிகர். தனது அடுத்த படத்திற்காக நடிகரை பத்திரிகை நிறுவனம் அனுகியதாம். நடிகரோ எழுபது சி இருந்தா வாங்க இல்லைன்னா போங்க என கடுப்படித்துவிட்டாராம்.
Read More

ரஜனியின் நிர்வாணப்படம்......

சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்
எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறாராம். இது கிளைமாக்சா? அல்லது படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காட்சியா? எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் இப்படியொரு காட்சி எடுக்க முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறார் ரஜினி.

கடந்த வாரத்தில் ஒருநாள்... எந்திரன் யூனிட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றி விட்டு ரகசியமாக ஒரு காட்சியை படம் பிடித்தார் ஷங்கர்.

வெளியேற்றப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லைட்மேன்கள் மட்டுமல்ல... முக்கிய அசிஸ்ட்டென்ட் டைரக்டர்களும், தொழில் நுட்ப உதவியாளர்களும் கூட அடக்கம் என்கிறார்கள். ஏதாவது படுக்கையறை காட்சிகள் என்றால் தான் இப்படி வெளியேறச் சொல்வார்கள் இந்தப்படத்தில் அப்படியா இருந்திருக்கும்? அதுதான் இல்லை.

எங்காவது ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்தால் விஷயம் கசிந்துவிடும் என்பதால் சன் டி.வி ஸ்டுடியோவிலேயே இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் அவர் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. ஆச்சர்யம்தான்!
Read More

தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார்.

லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.

இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.

தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும். இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும், ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​ இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.

Read More

சினேகாவும், பிரசன்னாவும்.........


எனக்கும் சினேகாவுக்கும் திருமணம் நடக்கப்போகுதா?மறுக்கிறார் நடிகர் பிரசன்னா

சினேகாவும், பிரசன்னாவும் `அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் அமெரிக்காவில் நடந்தது. அப்போது இருவரும் நெருங்கிப் பழகியதாகவும், அதைத்தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே காதல் முளைத்ததாகவும் தகவல் பரவியது.

இந்த தகவலை இரண்டு பேருமே மறுத்தார்கள். ``எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. அது, காதல் அல்ல'' என்று கூறினார்கள். `கிசுகிசு'க்களுக்கு பயப்படும் மற்ற ஜோடிகளைப்போல் இல்லாமல், சினேகாவும், பிரசன்னாவும் இன்று வரை நெருக்கமான நட்புடன் இருந்து வருகிறார்கள்.

இரண்டு பேரும் ஒரே காரில் சுற்றுவதாகவும், ஜோடியாக தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

சினேகாவின் அக்கா பிறந்தநாள் `பார்ட்டி'க்கு வந்தவர்களை சினேகாவும், பிரசன்னாவும் ஜோடியாக வரவேற்றதாகவும், இதன் மூலம் பிரசன்னாவுடனான நட்பை சினேகா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் வரை நெருங்கிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.

இது குறித்து பிரசன்னா, ’’எனக்கு திருமணம் நிச்சயமானால், அதை ஒளித்து மறைக்காமல் திறந்த மனதுடன் வெளியில் சொல்வேன். என்னையும், சினேகாவையும் இணைத்து சமீபகாலமாக கிசுகிசுக்கள் பரவுவது எனக்கு தெரியும். சினேகாவுக்கும் இது தெரியும்.

நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்க போய் இருக்கிறோம். நாங்கள் இருவர் மட்டுமல்ல. மற்ற நண்பர்களும் எங்களுடன் வந்து இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் டைரக்டர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஜெய் ஆகியோரும் உண்டு. இந்த மூன்று பேருடனும் அமர்ந்து நானும், சினேகாவும் `கோவா' படம் பார்த்தது உண்மை.

மற்றபடி, நாங்கள் இருவரும் ஒரே காரில் சுற்றவில்லை. அப்படி சுற்றினால், எங்களை விட்டுவிடுவீர்களா என்ன?

`அச்சமுண்டு அச்சமுண்டு' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதுமே எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இல்லை என்று சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். எங்களுக்குள் காதல் இல்லை.

எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள், சினேகிதிகள் இருக்கிறார்கள். அவர்களில், சினேகாவும் ஒருவர். அவர், என்னுடைய நல்ல சினேகிதி’’என்று தெரிவித்துள்ளார்
Read More

அசினைப் பற்றி இன்னொரு காதல் கிசுகிசு....

அசினின் காதலன் நீல் நிதின் முகேஷ்


அமீர் கான், சல்மான் கான் கிசுகிசுக்கள் முடிந்து இப்போது புதிய காதல் சுகிசுவில் மாட்டியுள்ளார் அசின்.

கஜினி மூலம் இந்தியில் பரபரப்பானதுமே, அமீர்கானுடன் இணைத்துப் பேசப்பட்டார் நடிகை அசின். ஆனால் அதை இருவரும் மறுத்தனர்.

பின்னர் லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கான் ஜோடியானார். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கப்பட்டது. காதல் பரிசாக சல்மான்கான் மும்பையில் பங்களா ஒன்றை அசினுக்கு வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் பரவின. குறுகிய நாட்களிலேயே சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு அவர்களை காதல் வலையிலும் வீழ்த்தியதாகவும் எப்போதும் மீடியாவின் பரபரப்பு பக்கத்தில் அசின் பெயர் இடம்பெறுவதாகவும் மும்பை நடிகைகளே பொறாமைப்படும் அளவு படு வேகமான வளர்ச்சியைச் சந்தித்தார் அசின்.

ஆனால் லண்டன் டீரிம்ஸ் படம் தோல்வி அடைந்ததால் இந்தியில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது அவருக்கு.

இந்த நிலையில் அசினைப் பற்றி இன்னொரு காதல் கிசுகிசு பரவிவருகிறது. சூப்பர் ஸ்டார் நடிகர்களை விட்டு விட்டு, இந்தி நடிகர் நீல் நிதின் முகேசை அசின் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி ஓட்டல்களில் ஜோடியாகக் காணப்படுவதாகவும், பின்னிரவு நேரம் வரை பார்ட்டிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தீபிகா படுகோனேவுடன் நீல் நிதின் முகேசை இணைத்து பேசினர். இப்போது தீபிகாவை உதறிவிட்டு அசின் பக்கம் தாவி உள்ளாராம் நீல்.

ஆனால் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் இதை, வெறும் நட்பு என்கிறார்கள். உண்மை என்னவோ…!

Read More

ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.

ரீஸ்டோரஷன் என்றால் என்ன?

கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.

இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).

அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு.

இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?

கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.
வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.

விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.

டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.

மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும்.

விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம்.

இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.

நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.

நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).

இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.

இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது.

Drive Image XML இன் குறைபாடு

இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.

அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம்.

புதுவை,சென்னை

Read More

யம்மா… யம்மா…பாடல் மூலம் பூகம்பமும், சுனாமியும்...


பேரரசு தனது குருவாக குறிப்பிடுகிறவர் விஜய டி.ராஜேந்தர். அவரது திரை நுணுக்கங்களை தானும் பின்பற்றுவதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார் பேரரசு.

வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி பாடலை பேரரசு எழுத, டி.ஆர். பாட சிம்பு ஆடிய ச‌ரித்திர நிகழ்வை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதேபோலொரு ச‌ரித்திர சம்பவம் சமீபத்தில் நடந்தது.

பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் திருத்தணி படத்தில் யம்மா… யம்மா… என்றொரு பாடல் இடம்பெறுகிறது. பாடலை எழுதியிருப்பதுடன் அதற்கு இசையும் அமைத்திருக்கிறார் பேரரசு. இந்தப் பாடலை பாடியிருப்பவர் டி.ஆர்.

பூகம்பமும், சுனாமியும் சேர்ந்து வந்தது போலிருக்கும் இந்தப் பாடலை பரத், சுனேனாவை ஆடவிட்டு படமாக்கியிருக்கிறார் பேரரசு. ம்… ஸ்கி‌‌ரீன் கிழியப் போகுது.

Read More

மேல் மாகாண சபையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஆசனங்களை இழக்கக் கூடிய அபாயம்?



மேல் மாகாணசபையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஆசனங்களை இழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எட்டு மாகாணசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் இவ்வாறு பதவியை இழக்க நேரிடலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.

மாகாணசபைக்கு அறிவிக்காமல் கடந்த மூன்று மாதங்களாக குறித்த மாகாணசபை உறுப்பினர்கள் அவை அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 19ம் திகதி மேல்மாகாணசபை கூடும் போது குறித்த 12 மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
Read More

பூகம்பத்தை முன்கூட்டியே அறியும் தேரைகள்

இனவிருத்தியில் ஈடுபடும் தேரைகள்
இனவிருத்தியில் ஈடுபடும் தேரைகள்
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.

பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன என்பதாகத் தெரியும் இந்த விஷயத்தை முதன்முதலாக ஆவணப்படுத்திய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

இனிமேல் நடிக்க மாட்டேன் என்றார் ராஜஸ்ரீ...


கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தனது உறவுக்காரரும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருமான புஜங்கராவ் என்பவரை விஜயவாடாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், ராஜஸ்ரீ. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஜிம் மாஸ்டர் அன்சாரியை ரகசிய திருமணம் செய்தார்.

திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் ராஜஸ்ரீ, ஹைதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் புஜங்கராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ராஜஸ்ரீக்கு நெருங்கிய உறவினர் இந்த புஜங்கராவ். விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். ராஜஸ்ரீ-புஜங்கராவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸில், வருகிற 4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராஜஸ்ரீ, ஆந்திராவை சேர்ந்தவர். பெரிய மருது, அசோகவனம், நந்தா உள்பட பல படங்களில் நடித்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, அய்யனார் என்ற படத்தில் நடித்து முடித்தார்.

"இனிமேல் சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க வேண்டாம் என்று என் கணவர் புஜங்கராவ் கூறிவிட்டதால், நடிப்புக்கு இதோடு முழுக்குப் போட்டுவிட்டேன்" என்றார் ராஜஸ்ரீ

Read More

ஸ்ருதி சூர்யா ஜோடியாக.......

சூர்யாவோடு ஜோடி சேரும் ஸ்ருதி
Read More

யாழில் சிறிலங்கா சுதந்திர கட்சியினரின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்‐

யாழில் சிறிலங்கா சுதந்திர கட்சியினரின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்‐
Read More

இலங்கை தமிழ் அரசியலிலே சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல அரசியல் கட்சிகள் உருவாகின. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையில் அக்காலப் பகுதியில் 50ற்கு 50 கேட்டு வாதாடியவர். பின் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து ஓர் மந்திரிப்பதவி எடுத்து தமிழ் சனத்தொகையின் 40வீதமான மலையக மக்களின் வாக்குரிமை, பிரசாஉரிமை ஆகியவை பறிக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவளித்தார். இதை எதிர்த்த தந்தை செல்வா அவர்கள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து வந்து 1949இல் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார்.

அதில் இருந்து தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, பின் ஆயுத ரீதியிலான ஈழப் போராட்டம் (அதில் பல அமைப்புக்கள் பங்கு பற்றின) இப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆயுதப் போராட்டம் நடைபெறும் போதே தமிழ் அரசியல் கட்சிகளான

TULF, TELO, EPRLF, ACTE ஆகியன இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இவ் அமைப்பு பதிவு செய்யப்படாவிட்டாலும் 09 வருடங்களாக ஓர் அமைப்பாக ஜனநாயக முறையில் செயற்படுகின்றது.

இப்போ இவ்வமைப்பில் இருந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரசைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைபினுள் பிளவு என பலரும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பது சரியானதல்ல ஏனெனில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டாக உடைந்து அதன் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருக்க செயலாளர் கஜேந்திரகுமார் மட்டும் தனது கட்சியின் பெயரில் தேர்தலில் நின்கின்றார். எனவே இதில் கூட்டமைப்பு பிளவுபட்டது என்பதை விட கூட்டமைப்பின் ஓர் அங்கமாகிய அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பிளவுபட்டது என்பதே மிகச் சரியானதாக இருக்கும்.

ஓர் அரசியல் கட்சியில் சிலர் சில சில காரணங்கட்காக கட்சியை விட்டு விலகலாம், சில சில காரணங்கட்காக விலக்கப்படலாம். அந்த இடங்கட்கு புதியவர்களைக் கொண்டுவரலாம். இது சாதாரண ஜனநாயக மரப்pல் ஓர் கட்சிக்குள்ளான நடவடிக்கையாகும்.

இதில் கஜேந்திரகுமார் பிரிந்ததும் தனது கட்சியின் பெயரில் தேர்தலுக்கு நிற்பதும், தனது கட்சியோடு சிலரைச் சேர்த்து புதிய கட்சி அமைப்பதும் அவரது ஜனநாயக உரிமையாகும்.

அவரது தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களான நிலையில் இக்கட்சி தான் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவிரவும், இவ் அறிக்கை கூறும் சில விடயங்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

1.தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்ற கொள்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டு விட்டதென்றும் தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்றவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தை ஜாலங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டுக்கு அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லை மாறாக இதே வார்த்தைப் பிரயோகங்களையே பயன்படுத்தியுள்ள தமிழ் தேசியத்திற்கான விடுதலை மன்னணி மட்டுமே உண்மையாக தமிழ்த் தேசியத்தை பற்றி நிற்கின்றது என்கின்ற இவ் அறிக்கை எந்த அடிப்படையில் இப் புதிய குழுவின் அதே கலைச் சொற்கள் மட்டும் நேர்மையானது என்பதையும் விளக்கவில்லை. இப் புதிய குழு கூறும் தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்பதும் புதிய விடயமல்ல இலங்கைத் தமிழ் மக்களின் சிங்களவர்களது தனித்துவமான இரு தேசங்கள் என்பதை கூட்டமைப்பு தெளிவாகக் கூறியே வருகின்றது.

அதேவேளை தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அவர்களது கொள்கை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதோடு தனித்துவமான தேசம் தனித்துவமான இறைமை என்றும் கூறியுள்ளனர்.

அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தனித்துவமான இறைமை என்றோர் விடயம் இல்லை. நாட்டின் இறைமை என்பது மக்களிடமே உள்ளது. தமிழ் மக்களிடமும் சேர்ந்து, தமிழ் மக்களின் இறைமை சிங்கள அரசுகளால் மறுக்கப்படுதல் அல்லது உதாசீனப்படுத்தப்படுதல் எனப்தே தமிழ் மக்களின் பிரச்சினையாகும். எனவே தனித்துவமான இறைமை என்பது அர்த்தமற்ற வார்த்தை பிரயோகமாகவே நோக்கப்படவேண்டியுள்ளது.

அப்படியானால் பின் ஏன் இரண்டு தேசம் ஒரு நாடு என்கின்றார்கள். இரண்டு தேசங்கள் எவை? ஈழதேசம், சிங்கள தேசம் என்பன இலங்கையில் இருக்கின்ற என்று ஏற்றுக் கொள்ளலாமா?

அப்படியானால், இறைமை தேசத்துக்கா? நாட்டுக்கா? உள்ளது. தேசத்திற்கு இருக்குமானால் முழுமையான இறைமையாக இருக்குமா? அல்லது எப்படியான இறைமை இரண்டு தேசங்கட்கும் இருக்கும்.

இரண்டு தேசமும் சேர்ந்தது நாடானால் அந்த நாட்டின் இறைமை முழுமையாக இருக்கும் இல்லையா? அப்படிப் பார்க்கும் போது நாம் இலங்கையின் இறைமையுள்ள இலங்கையுள் இருக்கின்றோம் இல்லையா?

அத்தோடு தனிநாட்டுக்கான குணாம்சங்களை நாம் எமது கோரிக்கையாக வைப்போமானால் பின் ஏன் ஆறாவது திருத்தச் சட்டத்தை அனுசரித்து சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம் செல்ல முயல வேண்டும். யார் சிறீலங்காவின் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார்களோ, அவர்கள் தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தி தமது அரசியலை நடாத்த முடியாது, என்பதுதான் யதார்த்தம். பிரிவினைக்கு நாம் எந்தவிதத்திலும் துணை போகமாட்டோம் என்று தான் அந்த ஆறாவது திருத்தச் சட்டம் கூறுகின்றது. இதை வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தில் இருந்து பாராளுமன்றத்துள் சபாநாயகர் முன் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.

எனவே நீங்கள் மக்கட்கு உண்மை நிலைமையை விளங்கப்படுத்தாது, உங்கள் கொள்கை - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை விட நல்லது எனக் கூறப்பார்க்கின்றீர்கள். உங்கள் கொள்கையை நீங்கள் அடைய வேண்டமானால் பாராளுமன்றத்திற்கு வெளியான அரசியலே நடாத்த வேண்டும். உதாரணமாக மகாத்மா காந்தி, ஈ.வே.ரா பெரியார், மாட்டின் லூதர் கிங் போன்றோர் போல் அரசியலை மக்கட்குள் கொண்டு செல்ல வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என விரும்பிய நீங்கள் ஏன் பாராளுமன்றம் போய் தமிழர் பிரச்சினை தீர்க்கலாம் என நினைக்கிறீர்கள்.

சிறீலங்கா அரசுக்கான ஜனாதிபதிக்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்றால், சிறீலங்கா பாராளுமன்றத்தில் என்ன தொடர்பு உண்டு. அது பற்றிய அனுபவம் போதாதா? எனவே உங்கள் உண்மை நிலையை விளக்குவீர்களாக.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் வார்த்தை ஜாலங்கள் என்றால், உங்களை எப்படி நம்பவது? நீங்கள் கூறுவது வார்த்தை ஜாலங்கள் என மற்றவர்கள் கூறுவது பற்றி எனன் கூறவிரும்புகின்றீர்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இங்கு எந்த வார்த்தை ஜாலங்களையும் காணவில்லை.

2. அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 'இலட்சியத்தில் பற்றும், உறுதியும், நம்பிக்கையும், செயற்றிறனும் இல்லாதவர்கள் என்கிறீர்கள். நல்லது உங்களுக்கு இருக்கின்றதா? கடந்த பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் விலகியவர்கள், விலத்தப்பட்டவர்கள் இவர்களில் யார் நீங்கள் கூறும் மேற்கூறிய குணாம்சங்களை உடையவர்கள்? அல்லது வெளி நாடுகளில் யார் அத்தகைய குணாம்சங்களை உடையவர்கள்? நாம் களத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு கதைத்து, அங்கத்தேய நிலைமைக்கேற்ப உதவவேண்டும். அவர்களோடு தொடர்ந்த கலந்துரையாடலை வைத்திருக்கலாம். உங்கள் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத் தலைமையை ஓர் பொம்மைகளாகப் பார்ப்பதாகவே நான் பார்க்கிறேன். அதில் மாற்றம் தேவை.

3. 'மேற்குலகம் எமக்காக சாயும் வேளையில் - புத்த சாதுரியம், இராஜதந்திரம், நேர்மை, துணிவு, உறுதி' என்பன கொண்ட தலைமை வேண்டும் என்று கூறும் போது அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லாதது போலவும் பிரிந்து சென்ற தமிழ்க் காங்கிரசுக்கு இருப்பது போலவும் தெரிகிறது. இதுவரை உங்களுக்கு நல்லதாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போ கசப்பதன் காரணம் தான் என்னவோ?

4. மே மாதம் 19ம் திகதிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் நடக்கவில்லை எனக் கூறுகின்றீர்கள். அவை எவை? இலங்கையில் 19ம் திகதிக்குப் பின் முள்ளிவாய்க்கால் அழிவுடன் தமிழ் மக்களின் வளர்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் பின் தள்ளப்பட்டுவிட்டது. தற்போதைய நிலைமை நான் கூறி நீங்கள் தெரிய வேண்டும் என்பதல்ல. உங்கள் பார்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிலர் இப் புதிய வேட்பாளர் பட்டியலில் வராததால் அங்கு ஜனநாயகம் இருக்கவில்லைல என்கிறீர்கள். அக்கட்சியில் பெரும்பான்மையினரின் விருப்பத்தோடு தான் ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதேபோல் பெரும்பான்மையினரின் விருப்பத்தோடு தான் தீர்வுத்திட்டம் எழுதப்பட்டது. காங்கிரஸ் தலைவர் அதை ஏற்க்கவில்லை என்பதால் அங்கு ஜனநாயகம் இருக்கவில்லையா?

5. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலரின் சொந்த முடிவுடன் தான் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது என்பது அதன் வரலாற்றைப் பார்க்கும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பல வாரங்களாக இரண்டு வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையினரின் ஆதரவுடனேயே சம்பந்தர் தமது முடிவை வெளிப்படுத்தினார். அது ஓர் ஜனநாயக முடிவே. அது மட்டுமல்ல அம் முடிவு எம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் முடிவு அத் தேர்தல் முடிவில் இருந்து அறிய முடியும். கஜேந்திரன், வாக்களிக்கப் போகாத வீதத்தினரைக் காட்டி தமக்கு வெற்றி எனக் கூறியதாகப் பார்த்தேன். ஓர் தேர்தலில் வாக்களித்தவர்களைத் தான் பார்ப்பார்கள். வாக்களிக்காதவர்கள் பற்றிப் பார்ப்பதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்யச் சொல்லி சொல்லாததால் கஜேந்திரனின் வாதம் பிழையானது.

6. நீங்கள் கூறும் மாவை, சுரேஷ், சம்பந்தர் ஆகியோர் எதுவும் செய்யாது 2008 - 2009 வரை விடுதலைப் புலிகளை அழியவிட்டு தலைமையை கைப்பற்றக் காத்திருந்தனர் என்று கூறுகின்றீர்கள்.

உண்மையில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களை விடுதலைப்புலிகள் ஆரம்பத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடுத்தவில்லை. காலப்போக்கில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த கடைசி இரண்டு வருடத்துக்கு மேலாக இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நிலைமைய விளங்கப்படுத்தினார்கள். தொடர்ந்து ஊடகவியலாளர்கட்கு நிலைமைகளை விளங்கப்படுத்தினார்கள். பாராளுமன்றத்தில் நிலைமையை விவாதித்தார்கள். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் எல்லாம் பல தடைவைகள் சென்று விடயங்களை விளங்கப்படுத்தினார்கள். தமிழ் நாட்டில் தொடர்ந்த போராட்டங்கள் நடப்பதற்கான அத்திவாரங்களையிட்டு அங்கு நின்று அவர்களோடு திட்டமிட்டு விடயங்களைக் கவனித்தார்கள். பலதடவை இது சம்பந்தமாக புது டெல்கி சென்று சண்டையை நிற்பாட்டும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் மக்கள் எதிர்பார்த்தளவு உதவி கிடைக்கவில்லை என்பது உண்மையே.

புலம்பெயர் உலக நாடுகளில் தொடர்ந்த போராட்டம் நடத்தினார்கள். எதிர்பார்த்த விளைவு எதுவும் கிடைக்கவில்லை. மாறாக சிறீலங்காவின் பிரச்சாரம் தான் இந் நாடுகளில் உள்வாங்கப்பட்டுள்ளது.

7. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் மக்களை ஏன் பலமாகப் பார்க்கவில்லை? என்று கூறுவதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புலம் பெயர் தமிழ்த் தலைவர்கள் பல நாடுகளில் இருந்து இக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பாக இருக்கிறார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் கள நிலைமைக்கேற்ப அவர்கட்கு உதவி செய்து ஜனநாயக வழியில் அங்கு செய்யக் கூடிய விடயங்களை முன்னெடுக்க உதவ வேண்டியது அவசியமாகும்.

புலம் பெயர் மக்கள் ஈழ மக்களுக்காக நன்கு உதவ வேண்டுமென்பதை தமது தேர்தல் அறிக்கையில் கேட்டுள்ளார்கள். இது ஈழத்தவர்களுடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் தொடர்புடையவர்களாக இருப்பதன் மூலம் எம் ஈழ தேசத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும். தற்போதைய நிலையில் எம் தேசம் 100 வருடங்களுக்கு மேல் பின்நோக்கிப் போய்விட்டது.

இதை புலம்பெயர் தமிழர்கள் பெரிய அமைப்புக்களை உருவாக்கி ஈழ தேச விடிவுக்கு தொடர்ந்து உதவ முன்வரவேண்டும். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கேட்கிறது. குறிப்பாக சம்பந்தர், சுரேஸ், மாவை ஆகியோர் புலம்பெயர் தமிழ் மக்களை மதிக்கவில்லை என்பது எந்தவித ஆதாரமும் அற்றதாகும்.

8. எப்படியான தீர்வை நாம் கோருகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விபரமாக தமது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அவர்கள் தற்போதைய நிலையை மனதிற் கொண்டு ஓர் சமஷ்டி ஆட்சியை கோருகின்றார்கள். இது அதிகமான மேற்கு நாடுகளிலும், அமெரிக்கா, இந்திய முறைகளை ஒத்ததாகும்.

புலம் பெயர் மக்கள் நீண்ட கால திட்டமாக தனிநாடு பற்றி முயற்சிக்கலாம். ஆனால் ஈழத்தில் குறுகிய கால, இடைக்கால தீர்வுகள் தற்சமயம் அவசியமாகும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூர நோக்கற்றது என யாரும் கூறினால் அது அவர்களது தூர நோக்கின்மையே காட்டுகின்றது.

9. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் பல துறைகளைச் சார்ந்தவர்களும் களத்திலும் புலத்திலும் இருந்து பங்கேற்கின்றார்கள் என பத்திரிகைகள் கூறுகின்றன. இது ஈழ நிலைமைக்கேற்ப தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தினால் கவனமாக தெரிவு செய்யப்பட்டதாகவே அறிகிறேன்.

10. கடைசியாக கூட்டமைப்பு இடம்பெயர்ந்தோரை அவர்களது முகாம்களில் போய் பார்க்கவில்லை என்பதாகும். அவர்களில் சிலர் போய்ப்பார்ப்பதைப் பற்றி சில செய்திகள் மூலம் அறிந்தோம். ஆனால் பலர் பார்க்கப் போக அனுமதி கொடுக்கப்படவில்லை. இது தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் முக்கிய கட்சி உறுப்பினர்கள் எவரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

பல விடயங்களை தெரிந்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுந்தரம் தனது கட்டுரை முடிவில் 'சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சரியாகக் கலந்து பேசாமல், தாயக மக்களின் கருத்தறியாமல், புலத்தில் உள்ள மக்கள் கட்டமைப்புக்களோடு சேர்ந்தியங்காமல், அடி மட்டங்களோடு உறவு பேணாமல், பேரழிவை சந்தித்த மக்களுக்காக துயர்துடைப்புப் பணிகளைச் செய்து கொடுக்காமல், தாயக மக்களின் உண்மையான விடுதலையை உளமார நேசிக்காமல், இலட்சியத்தில் உறுதியானவர்களை ஓரம் கட்டும் இந்தத் தலைமையை ஓரம் கட்டுவோம்' என்று கூறுவதைப் பார்த்தால் விலகியவர்கள் மகிந்தவின் கட்சியில் சேர்ந்துள்ளனர், மற்றவர்கள் அடுத்த சிங்கள இடதுசாரியோடு இணைந்துள்ளனர். பிரிந்து புதுக்கட்சி அமைத்த கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி (K.K.P) ஆகியோர் எல்லாம் நீங்கள் மேலே கூறிய வட்டத்துள் வரவில்லையா? 'விடுதலை என்ற பெயரில் மக்களையும் விடுதலையையும் பிரித்து சின்னாபின்னமாக்கும் இந்த SMS அணியினரைத் தோற்கடித்து பலமான ஒரு புது அணியைக் கட்டமைப்போம்' என்று முடிப்பதைப் பார்த்தால் உங்களைப் போன்றவர்களின் உந்துதலால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டதும், புதிய கட்சி உருவானது எனக் கூறினால் அது மிகையாகாது.

உங்கள் கட்டுரை முடிவுக்கும் மேலான வடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துள்ளது. தாயகத்தில் இராது வெளியே இருந்து எதையும் எழுதலாம். களத்தில் இருந்து எழுதினால் நிலைமை மாறலாம். வாக்காளப் பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை தோற்கப் போகும் வேட்பாளர்கட்கு அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைத்துவிடாதீர்கள் இப்போ எமக்கான பலம் அவர்கள் தான் நன்றி.

Read More