Pages

Wednesday, April 28, 2010

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்…

பொதுவான ஆலோசனைகள் :

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
Read More

அழகில் புது விதம்...!


அழகில் புது விதம்...!``இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.
 
இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகி றார்கள். எனவே அதற் கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள் வது மிக முக்கியம். பணிபுரி வோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக் கும் தகுந்தாற் போல் கூந் தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்' சமூகத்தில் அவர் களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.'' என்கிறார், பிரபல அழகுக் கலை நிபுணர் மகாலெட்சுமி கமலக்கண்ணன்.
 
இவர் மறைந்த முன்னாள் தமிழக துணை அமைச்சர் ஐசரிவேலனின் மகள். கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி. மகாலெட்சுமி தமிழக அரசு மகளிர் அழகு கலைப்பிரிவின் தேர்வாளர். மைலாப்பூரில் இயங்கும் மகா அழகுக்கலை பயிற்சி அகாடமியின் முதல்வர். பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அழகுக் கலை தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர். மலேசிய அரசு அனுமதியுடன் அங்கும் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது வளர்ச்சியில் கணவருக்கு பெரும் பங்குண்டு.
 
``அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.'' என்கிறார், மகாலெட்சுமி.
 
தற்போதைய கூந்தல் கலாசாரத்தைப் பற்றி அவர் விளக்குகிறார்:
 
``கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்' மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை `ஸ்ட்ரைட்டனிங் தெரபி' என்பார்கள்.
 
சுருள் சுருளாகவும், அலை அலையாகவும் இருக்கும் முடியை நேராக்குவதே ஸ்ட்ரைட்டனிங் தெரபி ஆகும். இவ்வாறு ஸ்ட்ரைட்டனிங் செய்த கூந்தல் நவீனமாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்புடனும் தோற்றமளிக்கும். கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து கொள்ளும் கல்லூரி மாணவிகள் ரிவர்ஸ் லாங்ஸ் டெப் கட், கேஸ்கட் கட், காஸ்மோபாலிடன் கட், ரிவர்ஸ் க்ராஜீவேஜன் கட் ஆகிய முறைகளில் கூந்தலை வெட்டிக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பார்கள்.
 
முன்பெல்லாம் பிரபலங்களும், வசதி படைத்த வர்களும் தான் கூந்தலை கலரிங் செய் வார்கள். தற்போது இந்த மோகம் அனைவரிடமும் காணப் படுகிறது. தங்களை நாகரிக தோற்றம் கொண்டவர் களாகவும், அழகிய சாதாரண மற்றும் குடும்பப் பாங்கான தோற்ற முடையவர்களாகவும் தயாராக்கிக் கொள்வதற்கு இந்த ஹேர்கலரிங் முறையை பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
 
இதில் 3 விதம் உள்ளது. அவை:
 
கிரே ஹேர் கவரேஜ் அதாவது நரைமுடியை நிறம் மாற்றுதல். குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்து வண்ணங்கள் பூசுவது.
 
இதுபோன்ற முறைகளில் கூந்தலுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது. இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஒளி முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள் பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
 
வீட்டில் உள்ள பெண்மணிகள் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால், உடனடியாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரிஜி னல் அட்டாச்சுடு ஹேர் பீஸை நிமிடத்தில் கிளிப் மாதிரி பொருத்திக் கொள்ளலாம். இது அழகு நிலையங் களுக்குச் சென்று செய்து கொண்ட கூந்தல் அலங்காரத்துக்கு இணையாக இருக்கும். நிகழ்ச்சிக்கு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் போது, அது எந்த மாதிரியான நிகழ்ச்சி அது காலை நேரமா அல்லது மாலை நேரமா அவரவர் வயது மற்றும் உறவு முறை ஆகியவற்றிற்கு ஏற்ப விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்ளலாம்.
Read More

ஐஸ்வர்யாராய் படத்துக்கு சிக்கல்


இலங்கையில் வருகிற ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது.
 
இவ்விழாவை துவக்கி வைக்க இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அழைக்கப்பட்டு உள்ளார். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் போன்றோரும் பங்கேற்பதாக உள்ளது. தமிழ் நடிகர் நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.
 
இவ்விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டைரக்டர் சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அமிதாப்பச்சன் வீட்டையும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
தமிழ் நடிகர் நடிகைகள் இலங்கை பட விழாவை புறக்கணித்துவிட்டனர். அமிதாப்பச்சனோ ஐஸ்வர்யாராயோ இலங்கைக்கு சென்றால் ராவணன் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க சீமான் இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இப்படம் தமிழிலும் ரிலீசாகிறது. அந்த படத்தை புறக்கணிக்கவும், திரையிட விடாமல் தடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
 
இலங்கை சர்வதேச படவிழாவில் “ராவணன்” படத்தை திரையிடவும் திட்டமிடப்பட்டது. அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More

ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? - அபிஷேக் விளக்கம்

தனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி. இப்படத்தை தமிழில் ராவணன் என்ற பெயரில் அவர் வெளியிடவுள்ளார்.

தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ், பிரியா மணி, கார்த்திக், ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் தமிழிலும் அபிஷேக் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்கிறார்.

அபிஷேக் ஏன் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது:

மணிரத்தினம் ராவண் படத்தை இயக்க முடிவு செய்தபோது இந்தியில் மட்டுமே இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் தமிழிலும் இதைக் கொண்டுவர தீர்மைனித்தார். இந்தியில் நான் நடித்த பீரா கதாபாத்திரத்தை தமிழில் தேவ் என்ற பெயரில் செய்ய கேட்டுக் கொண்டார். நானும் ஏற்றுக் கொண்டேன்.

ஒத்துக் கொண்டாலும் கூட என்னால் தமிழில் அதைச் செய்ய முடியாது என்று இப்போது தோன்றியது. காரணம் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாத ஒரு மொழியில் நடிப்பது என்பது சரியாக இருக்காது.

எனவே தமிழில் நடிக்க விரும்பவில்லை என்று மணிரத்தினத்திடம் கூறிவிட்டேன். ஒரு நடிகருக்கு நடிக்கும் படத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதேசமயம், ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் நடிக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் அபிஷேக்.

அபிஷேக் மறுத்ததால்தான் பிருத்விராஜை நடிக்க வைத்தாராம் மணிரத்னம்.

இப்போது வேகமாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார் அபிஷேக் பச்சன் என்பது கூடுதல் தகவல்.
 
Read More

இளைஞன் படப்பிடிப்பை துவக்கி வைத்தார் கலைஞர்

முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகவிருக்கும் புதிய படமான இளைஞன் படத்தின் சூட்டிங் இன்று தொடங்கியது. முதல்வர் கருணாநிதி ஆக்ஷன் சொல்லி சூட்டிங்கை தொடங்கி வைத்தார்.

இதுவரை 74 படங்களுக்கு கதை  வசனம் எழுதியிருக்கும் முதல்வர் 75வதாக இளைஞன் படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார். பா.விஜய் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், மீனாட்சி நடிக்கின்றனர். மேலும், வடிவேலு, சுமன், நாசர், குஷ்பு, மணிவண்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பி.சி ஸ்ரீராமின் உதவியாளர் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். இணை தயாரிப்பு பெஞ்சமின்.
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் 50வது படமான இளைஞன் படப்பிடிப்பை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். உற்சாகத்துடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல்வர் கருணாநிதி மைக்கில் ஆக் ஷன் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். பா.விஜய், மணிவண்ணன், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்கள் முதல் காட்சியில் நடித்தனர்.
நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன், தயாரிப்பாளர் ராம.நாராயணன், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சூட்டிங்கை தொடங்கி வைத்த பின்னர் நடிகர் நடிகைககள் முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து நின்றபடி உற்சாகமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
Read More

ஐஸ்வர்யாராய் எதிர்ப்பு:மணிரத்னம் எச்சரிக்கை



 இதிகாச காவியமான ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களில் மாற்றம் செய்து இந்த நவீன காலத்திற்கேற்ற முறையில் படமாக எடுக்கிறார், பிரபல டைரக்டர் மணிரத்னம்.
தமிழ் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்திற்கு இந்தியில் ராவண் என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரும், துணை வேடங்களில் கோவிந்தா, ரவி கிஷண், நிகில் திவேதி, தேஜஸ்வினி கோல்காபூர், பிரியாமணி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படம் வரும் ஜுன் மாதம் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் டப்பிங் செய்யப்பட இருக்கிறது.
படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டது.
படத்தின் கதைப்படி, 90 அடி உயரத்தில் இருந்து கீழே சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றில் அபிஷேக்பச்சன் குதிப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சியில் அபிஷேக்பச்சனுக்கு பதில், `டூப்' நடிகரை வைத்து படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அந்த காட்சியில், நான்தான் நடிப்பேன் என்று அபிஷேக்பச்சன் பிடிவாதம் செய்தார். ஆற்றுக்குள் மிகப்பெரிய பாறைகள் இருக்கக்கூடும். அதில் மோதினால், உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மணிரத்னம் எச்சரித்தார். என்றாலும், அபிஷேக்பச்சன் பயப்படாமல், அந்த காட்சியில் தானே நடிப்பதாக கூறினார்.
படப்பிடிப்பில் உடன் இருந்த ஐஸ்வர்யாராயும், கணவர் அபிஷேக்பச்சனிடம் அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவரை அபிஷேக்பச்சன் சமாதானப்படுத்தினார்.
ஒகேனக்கல்லை சேர்ந்த குழந்தைகள் கூட இந்த உயரத்தில் இருந்து குதித்து விளையாடுகிறார்கள். அந்த குழந்தைகளுக்கு உள்ள துணிச்சல் என்னிடம் இல்லையா?என்று கேட்டு மனைவியை அடக்கினார். பின்னர், அந்த காட்சியில் நடிப்பதற்காக 90 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறினார்.
படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் `என்ன ஆகுமோ?'' என்று பயந்து கொண்டிருக்க, அபிஷேக்பச்சன் வெற்றிகரமாக அந்த காட்சியில் நடித்து முடித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.
Read More

வருவாரா, மாட்டாரா?

அண்டை வீட்டு நெய்யே, அத்தனையும் பொய்யேங்கிற மாதிரிதான் இருக்குதாம் அந்த விஷயம். ஒட்டுமொத்த யூனிட்டும், திட்டி தீர்க்குது. வருவாரா, மாட்டாரா?
உள்ளூர் மிக்சியிலே ஒரு பிளேடும் ஷார்ப் இல்லன்னு அண்டை மாநிலத்திலேர்ந்துதான் கதாநாயகிகளை கூட்டிட்டு வர்றாங்க. வளர்ற வரைக்கும் நல்லா ஒத்துழைப்பு கொடுக்கிற இந்த நடிகைங்க வளர்ந்த பிறகு செய்யறதென்ன? ஒரே கால்ஷீட் சொதப்பல். ஜீவா நடிக்கிற சிங்கம் புலி படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருத்தர் ஹனிரோஸ் என்கிற சவுந்தர்யா. மற்றொருவர் திவ்யா. அதாவது குத்து ரம்யா. இருவருக்குமே பூர்வாசிரமத்தில் வெவ்வேறு பெயர் என்ற ஒரு ஒற்றுமை தவிர வேறு எந்த விஷயத்திலேயும் ஒற்றுமை இல்லையாம்.
டாண் என்று வந்து நிற்கிறார் சவுந்தர்யா. ஆனால் திவ்யாதான் சொன்ன நேரத்தில் வருவதில்லை. சொன்ன தேதியையும் தருவதில்லை என்று புகார் வாசிக்கிறார்கள் யூனிட்டில். கடைசியாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார் திவ்யா. அதன்பின் சூர்யா மார்க்கெட்டும் டாப்பில் போய்விட்டது. திவ்யாவுக்கும் அப்படி தமிழில் பெயர் வாங்க வேண்டுமென்ற ஆசை. ஆனால் விஜய், அஜீத், விக்ரம் வகையறாக்களில் இவரது போட்டோவை காட்டினாலே முகம் சுளிக்கிறார்களாம். ஆஹா... என்று ஆனந்தப்பட்டவர் ஜீவா மட்டுமே. ரேஞ்ச் கொஞ்சம் கம்மி என்பதால்தான் இப்படி அலட்சியம் காட்டுகிறாராம் திவ்யா.
எலி வேறிடத்தில் இருந்தாலும் குழியில் புகை போட்டு பிடிக்கிற மாதிரி இங்குள்ள அவரது மேனஜருக்கு புகை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம் சிங்கம் புலி யூனிட்டில்!
Read More

நம்ம செல்லத்துக்கு கல்யாணமாம்


ssடான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். இந்தி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுபவர் போனி வர்மா. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்களில் இவர் பணியாற்றினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ் ராஜ்.
இதுபற்றி பிரகாஷ் ராஜ் கூறியதாவது:
சென்னை, ஐதராபாத்தில் நான் வீடு கட்டுவதாகவும் அதை பிரமாண்டமாக வடிவமைப்பதாகவும் சொல்கிறார்கள். நான் கட்டிடக் கலை படித்தவன். எனது வீடு எந்த விதத்தில் அலங்கரிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து, வடிவமைத்து வருகிறேன். கன்னடத்தில் நான் இயக்கியுள்ள ‘நானு நன்னா கனசு’ இரு வாரங்களில் திரைக்கு வரும். இது ‘அபியும் நானும்’ படத்தின் ரீமேக். தொடர்ந்து பல மொழிகளில் நடிக்கிறேன். எனது மகள்களுக்காக பல படங்களில் நடிக்கிறேன். அவர்களுக்கு தேவையான அளவுக்கு நான் சம்பாதிக்க விரும்புகிறேன். அதே நேரம், எனது வாழ்க்கை பற்றியும் நான் சில முடிவுகள் எடுக்கும் நேரம் வந்திருக்கிறது. நான் காதலிப்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன். இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.
Read More

'சுறாவின் காதலி நான்' : தமன்னா!

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’, 30&ம் தேதி ரிலீசாகிறது. யூனிட்டை போலவே பரபரப்பாக இருக்கிறார் தமன்னா. ‘ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கேன். தியேட்டர்ல ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்கணும். ‘நான் நடந்தால் அதிரடி’ பாட்டுக்கு தியேட்டர்ல டான்ஸ் ஆடணும் போலிருக்கு’
என குதூகலம் அடைகிறார்.

விஜய்யுடன் நடித்த அனுபவம்?

முதல் முறையா நாங்க ஜோடி சேர்ந்திருக்கோம். விளம்பரம் பார்த்தவங்க எங்க ஜோடி சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. குறிப்பா ‘நான் நடந்தால் அதிரடி’ பாடல்ல, ரெண்டு பேருமே ரொம்ப ஸ்டைலிஷா இருக்கோம்னு பாராட்டுறாங்க. இதுக்கு டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார், கேமராமேன் ஏகாம¢பரத்துக்குதான் நன்றி சொல்லணும். விஜய் ரொம்ப எளிமையான டைப். காட்சிகள்ல வசனத்தை புரிஞ்சிட்டு நடிக்க நான் நேரம் எடுத்துக்குவேன். அதுவரைக்கும் பொறுமையா இருந்து, அவர் ஒத்துழைப்பு கொடுப்பார்.

காமெடி?

அதை பத்தி சொல்லியே ஆகணும். விஜய் படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அவரே நல்லா காமெடி பண்ணுவார். கூட வடிவேலும் இருக்கார். சொல்லவா வேணும்? இவங்களுக்கு நடுவில நானும் காமெடி பண்ணணும்னு ராஜகுமார் சொன்னார். பயந்துபோனேன். காரணம், இவங்களுக்கு இணையா நான் காமெடி பண்ண முடியாதுன்னுதான். கடைசியா விஜய் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். அந்த காட்சிகள் ரொம்ப என்டர்டெயின்மென்டா வந்திருக்குன்னு டைரக்டர் பாராட்டினார்.

ஆக்ஷன் படமிது. உங்களுக்கு முக்கியத்துவம் எப்படி?

‘அயன்’, ‘படிக்காதவன்’கூட ஆக்ஷன் படங்கள்தானே. அதுல என்னோட பார்ட் ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. அதே மாதிரிதான் ‘சுறா’வும். மீனவ குடும்பங்களை சுத்தி நடக்கிற கதையிது. சுறாவின் காதலி நான். அந்த குப்பத்துக்கு நான் வர்றதும் விஜய்யை விரும்புறதும் அதுக்கு பிறகு நடக்கிற சம்பவங்களும் விறுவிறுப்பா இருக்கும்.

யூனிட் பற்றி?

தமிழ் படங்கள்ல எப்போவுமே எனக்கு பெஸ்ட் யூனிட்தான் கிடைச்சிருக்கு. அந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்வேன். வெளியில நமக்கு எத்தனையோ கவலைகள் இருக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, அதையெல்லாம் மறந்து கேரக்டரோடு ஒன்றிப்போகணும். அதுக்கு ரொம்பவே ஹெல்ப்பா இருக்கிறது பட யூனிட்தான். யூனிட்ல டைரக்டர்லேருந்து லைட்பாய் வரைக்கும் சுறுசுறுப்பா சிரிச்ச முகத்தோடு இருக்கும்போது, நம்ம வேலை ஈஸி ஆயிடும். ‘சுறா’ படத்தை நாம திட்டமிட்டபடி முடிக்க யூனிட் முக்கிய காரணம்.
Read More

தமன்னா டூர்

விஜய்யுடன் ‘சுறா’, ஜெயம் ரவியுடன் ‘தில்லாலங்கடி’ படங்களில் நடித்து முடித்த தமன்னா, அடுத்து கார்த்தி ஜோடியாக தெலுங்கு ‘விக்ரமார்குடு’ ரீமேக்கில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், 20 நாட்கள் ஹாலிடே கொண்டாட
அமெரிக்கா செல்கிறார். அங்கு அவரது உறவினர்கள் இருக்கிறார்களாம். மே 10ம் தேதி பயணமாகும் தமன்னா, மே இறுதியில் சென்னை திரும்புகிறார்.
Read More

நல்லாயிருக்கு விஜய் ஜாதகம்!

ரீமேக் உரிமைக்காக கோடம்பாக்கத்தில் வெட்டு குத்துகளும் ஆசிட் வீச்சுகளும்தான் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய அத்தனை ஸ்டண்ட் மீறல்களும் அங்கே நடந்து வந்திருக்கிறது. ஒரு படத்தை இயக்குகிற டைரக்டர் கதை என்று தனது பெயரை போட்டுக் கொள்ள தவியாக தவிப்பார். காரணம் அந்த படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும் போது, விற்றதில் 40 சதவீத பணம் அவருக்கு போய் சேர வேண்டும் என்பது டிரேட் விதி!
பாடிகாட் என்ற மலையாள படத்தின் ரிமேக் உரிமை அப்படத்தின் தயாரிப்பாளர் ஜானி சகாரியா வசம் இருந்ததாகவும், ரிலீஸ் நேரத்தில் அந்த உரிமையை கோகுலம் நிறுவனத்திற்கு அவர் எழுதி கொடுத்துவிட்டதாகவும் புலம்பல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய சித்திக், அதே படத்தை காவல்காரன் என்ற பெயரில் விஜய்யை வைத்து தமிழில் எடுத்து வருகிறார். ரீமேக் உரிமையே அவரிடம் இல்லை. பிறகெப்படி இப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சித்திக்கின் பதில்? அந்த உரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் ஜானி சொல்வதிலும் உண்மையில்லை என்கிறார். பொதுவா நிக்கும்போதும் பிரச்சனை. பிலிமா விக்கும்போதும் பிரச்சனை. நல்லாயிருக்கு விஜய் ஜாதகம்!

Read More