Pages

Tuesday, March 30, 2010

ஏப்ரல் 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடியவர்கள்....


ஏப்ரல் 1-ம் தேதி எப்படி முட்டாள் தினம் ஆனது?

ஏப்ரல்-1 முட்டாள் தினம். இந்த தினம் நாளை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் எப்படி வந்தது இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.

பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய தேதிகளை புத்தாண்டாக கொண்டாடினார்கள்.


அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களை குறிப்பிட ஜுலியன் காலண்டர் என்ற பழங்கால காலண்டரை பயன்படுத்தி வந்தனர். அதிலும் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதியாக இருந்தது.

1582-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13-ம் கிரிகோரி ஜார்ஜியின் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1-ந்தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இனி மக்கள் இந்த காலண்டரை தான் பின்பற்ற வேண்டும் என்றும் போப் ஆண்டவர் உத்தரவிட்டார்.

இதை பிரான்ஸ் நாடு உடனே ஏற்றுக்கொண்டது. பிரான்சு மன்னர் அந்த நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினார்கள்.

வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன.


இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரை பின் பற்றவில்லை. சில பகுதி மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்டு இருக்கும் தகவலே சென்றடைய வில்லை. எனவே அவர்கள் முன்பு போல ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருந்தனர்.

விவரம் தெரியாமல் இவர்கள் இன்னும் ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் என்று புதிய காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள்.

எனவே எப்ரல் 1-ந்தேதி புத்தாண்டு கொண்டாடியவர்களை அவர்கள் முட்டாள்களாக கருதினார்கள். கேலி செய்து ஏராளமாக பேசினார்கள்.

கால போக்கில் ஏப்ரல் 1-ந்தேதி என்றாளே முட்டாள்கள் தினம் என்று ஆனது. அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும் மாற்றி கொண்டனர்.

ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் ஆனது.

Read More

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மற்...



மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மற்றுமொரு லீக் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 4 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 போட்டித் தொடரின் 27 ஆவது லீக் சுற்றுப் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தியாவின் மும்பை பார்பரோன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ஷோன் மார்ஷ் 57 ஓட்டங்களையும், பியுஷ் சவ்லா 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லசித் மாலிங்க 19 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுகளையும், சஹிர் கான் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில், ஷிக்கர் தவான் 50 ஓட்டங்களையும், சப்ரூ திவாரி 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில், ரவி புபாரா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மிகச் சிறந்த பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற லசித் மாலிங்க போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

சானியாவும், மலிக்கும் விரைவில்........


இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஷாவும், பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சொஹெப் மலிக்கும் விரைவில் திருமண பந்தத்தில் விரைவில்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது மகள் சானியா, பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் மலிக்கை கரம் பிடிக்க உள்ளதாக சானியாவின் பெற்றோர் இந்திய ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளனர்.

திருமணத்தின் பின்னர் சானியாவும், சொஹெப் மலிக்கும் டுபாயில் வாழத் தீர்மானித்துள்ளதாக, சானியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கையில் ஏற்பட்டுள்ள உபாதை பூரணமாக குணமாகும் வரையில் சானியா டென்னிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

ஹைதரபாத்தில் திருமணமும், பாகிஸ்தானின் லாகூரில் திருமண வரவேற்பு வைபவமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சானிய மிர்ஷாவிற்கு ஏற்கனவே குடும்ப நண்பர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More

34-வது மாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குதித்தாராம் விவேக் ஒபராய்,

பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் நடித்த `பிரின்ஸ்` என்ற இந்தி படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி சென்னை வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“பிரின்ஸ், அதிநவீன தொழில்நுட்பங்களுடன், `ஹாலிவுட்` படங்களுக்கு நிகராக தயாராகி இருக்கிறது. இது, ஞாபகசக்தியை இழந்த ஒரு இளைஞனின் கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும்படி இருக்கும். படத்தில் 3 கதாநாயகிகள் இருக்கிறார்கள். கதைப்படி, மூன்று பேருமே என்னை காதலிக்கிறார்கள்.

இந்த படத்தின் சண்டை காட்சிகளில், `டூப்` போடவில்லை. நானேதான் நடித்தேன். 34-வது மாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குதிக்கிற காட்சியில், நானே துணிச்சலுடன் நடித்தேன்`` என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “நிஜவாழ்க்கையில் நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயார் சென்னையில்தான் வசிக்கிறார். நான் சென்னையில்தான் பிறந்தேன். எனக்கு இதுவரை ஒரு `கேர்ள் ப்ரெண்ட்`கூட இல்லை. என் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு வரப் போகிற பெண்ணுக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு சமூக சேவையில் ஈடுபாடு இருக்கிறது. அந்த ஈடுபாடு, என்னை திருமணம் செய்துகொள்கிற பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.

நான் சமூக சேவைக்காக அமைப்பொன்றைத் துவக்கியுள்ளேன். அந்த அமைப்பின் பெயர், `தேவி.` பெண் சிசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிரான அமைப்பு இது. இந்த இயக்கம் சார்பில் 1200 பெண் குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறேன். அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது போல், இலவசமாக கல்வியும் கற்றுத்தரப்படுகிறது. இந்த அமைப்பை நடத்தி வருவதற்காக பெருமைப்படுகிறேன்..” என்றார்.

விவேக் ஓபராய் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா சுவாமிகளின் தீவிர பக்தர் என்பதால் சாமியார் பற்றிய கேள்விகள் நிருபர்களிடம் இருந்து சராமரியாக பறந்தது. அனைத்திற்கும் பொறுமையாகவே பதில் அளித்தார் விவேக்.

“நான் நித்யானந்தா சாமிகளின் ஆசிரமத்துக்கு சென்றது உண்மை. கோவிலுக்கோ, அல்லது கிறிஸ்தவ தேவாலயத்துக்கோ, அல்லது மசூதிக்கோ செல்வது மன அமைதிக்காகத்தான். அப்படித்தான் நான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றேன். சமீபத்தில் அங்கு எழுந்த பிரச்சினை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அப்படி சொன்னால், அதை அரசியல் ஆக்கிவிடுவார்கள்” என்றார்.

“போலி சாமியார்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று நிருபர்கள் கேட்க.. “ஒருவர் போலியா, இல்லையா? என்பது கடவுளுக்குத்தான் தெரியும். எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. நாம் ஒருவரை குற்றம்சாட்டுவதற்கு முன், அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன் நாம் தூய்மையானவர்தானா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்” என்றார் விவேக்.

“பொதுசேவையில் அதிகமாக ஈடுபடும் நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடாது?” என்று நிருபர்கள் கேட்க.. “அரசியல் எனக்கு தெரியாது. அதில் எனக்கு ஆர்வம் இல்லை. அரசியலில் சேர்ந்துதான் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதில் சேராமலும் சேவை செய்ய முடியும்” என்று தெளிவாகவே பதில் சொன்னார்.

“நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இங்கே உள்ள மணிரத்னம், பாலா, கவுதம் மேனன், செல்வராகவன் போன்ற டைரக்டர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர்களின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது” என்றார் விவேக்.

“உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகை யார்?” என்ற மிக முக்கியமான கேள்விக்கு, “திரிஷா” என்று பட்டென்று பதில் வந்தது. “ஆயுத எழுத்து` படத்தை பார்த்து அசந்துபோனேன். திரிஷா இப்போது இந்தி பட உலகுக்கு வந்து இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு இந்தி படத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

“பிரின்ஸ்` படத்தில் ஒரு முத்த காட்சியை படமாக்கியபோது, 18 `டேக்` எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?” என்று நிருபர்கள் கேட்க.. “சுற்றிலும் படப்பிடிப்பு குழுவினர் 300 பேர் இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணை காமிரா கோணத்துக்கு ஏற்ப முத்தமிடுவது என்றால், அது கஷ்டமான விஷயம்தானே... அந்த முத்தக் காட்சியில் நடித்தபோது கதாநாயகிதான் எனக்கு தைரியம் சொன்னார். அவர் சந்தோஷப்படுகிற மாதிரி அந்த காட்சியில் நான் நடித்து முடித்தேன்`` என்று முத்தாய்ப்பாக பதில் சொல்லி முடித்தார் விவேக் ஓபராய்.
Read More

என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்..”என்கிறார் நயன்தாரா

“சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள்...." என்கிறார் நயன்தாரா.

தன்னைச் சுற்றிய வதந்திகள், பிரபுதேவாவுடனான காதல் பற்றி சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”2003-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தோடு எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனால் காலம் என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்திடுச்சி. ஏகப்பட்ட பெயர், புகழ், பணம் கூடவே வதந்தியும்தான்!

என் படம் வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவேன். தோல்வியடைந்தால் ரொம்பவே வருத்தப்படுவேன். இடைப்பட்ட காலத்தில் அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.

தமிழில் நான் நடித்த ‘ஆதவன்’, மலையாளத்தில் ‘பாடிகார்ட்’, தெலுங்கில் ‘அடூர்’ ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வெற்றிப் படமாக அமைந்தன. இதைவிட ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு, அதுவும் ஹீரோயினுக்கு பெரிய சந்தோஷம் வேறென்ன வேணும்..? இந்த படங்களில் நடிக்கும்போதே அவை ஜெயிக்கும் என்று நம்பினேன். என் கணிப்பு பலித்துவிட்டது.

என் திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு என்னிடத்தில் இப்போது பதில் இல்லை. திருமணம் முக்கியமானது. அது நடக்கும்போது நடக்கும். ஒரு வேளை அது காதல் திருமணமாக இருந்தாலும் என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணனின் சம்மதத்துடன்தான் நடக்கும்.

சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்கூத்தி அணிந்ததை கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கிவிட்டார்கள். மூக்குத்தி போட்டால் என் முகத்திற்கு நன்றாக இருக்கும் என்று பலரும் சொன்னதால்தான் போட்டேன்.

குறிப்பிட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்றும் நான் சொல்வதில்லை. கதையும் கேரக்டரும் நல்லாயிருந்தால், எனக்கு ஸ்கோப் இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். எனக்கு எந்த பேதமும் இல்லை.

என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் இந்த வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்..” என்று அந்தப் பேட்டியில் மனம் திறந்து சொல்லியிருக்கிறார் நயன்ஸ்..!

நம்புவோமாக..!
Read More

சச்சின் "பேட்டை` பயன்படுத்தி ரன் வேட்டை நடத்தியுள்ளார் ஹர்பஜன்.....

டெக்கான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சச்சின் "பேட்டை` பயன்படுத்தி ரன் வேட்டை நடத்தியுள்ளார் ஹர்பஜன்.

மும்பை இந்தியன், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி, நேற்று முன் தினம் மும்பையில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, முதல் 17 ஓவர்களுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதற்குப் பின் களமிறங்கிய ஹர்பஜன், 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களும் அடங்கும். ஹர்பஜன் அதிரடியால் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இது குறித்து ஹர்பஜன் பேசும்போது, டெக்கான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன் குவித்தது மகிழ்ச்சி அளித்தது. இப்போட்டியில் சச்சினின் "பேட்டை` பயன்படுத்தி ஆடினேன். இதற்கு அனுமதி அளித்த சச்சினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.பி.எல்., அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அசத்தி வருகிறார். கிரிக்கெட்டின் எந்த பரிமாணமாக இருந்தாலும், சச்சின் சிறப்பாக விளையாடும் திறமை பெற்றவர். அவர் "டுவென்டி-20` உலககோப்பை தொடரிலிருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது. சர்வதேச அளவில் இவ்வகை போட்டிகளில் சச்சின் மீண்டும் பங்கேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜனுக்கு அபராதம்

மும்பையில் நடந்த போட்டியில், ஹர்பஜனுக்கு, ஐ.பி.எல்., நிர்வாகம் ரூ. 6.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இப்போட்டியில் சுமனை "கேட்ச்` செய்து அவுட்டாக்கிய ஹர்பஜன், அவர் மனம் புண்படும் வகையில் திட்டியுள்ளார். இது விதிமுறைப்படி குற்றமாகும். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

டேவிட் வோர்னரின் அபார சதம்.........



இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டித் தொடரின் மற்றுமொரு லீக் சுற்றில் கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணியை 40 ஓட்டங்களினால் வீழ்த்தி, டெல்லி டெயார்டெவில்ஸ் இலகு வெற்றியீட்டியுள்ளது.

டெல்லி அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரின் அபார சதம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் காம்பீர், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய டெல்லி டெயார்வில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 177 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் டேவிட் வோர்னர் அட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும், போல் கொலிங்வுட் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சார்ல் லெங்வெட் இரண்டு விக்கட்டுகளையும், கிறிஸ் கேயில் மற்றும் இசாத் சர்மா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதில், கிறிஸ் கேய்ல் 30 ஓட்டங்களையும், டேவிட் ஹாசீ 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அன்ட்றூ மெக்டொனால்ட் மற்றும் உமேஸ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வோர்னர் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

டேவிட் வோர்னரின் அபார சதம்.........




இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டித் தொடரின் மற்றுமொரு லீக் சுற்றில் கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணியை 40 ஓட்டங்களினால் வீழ்த்தி, டெல்லி டெயார்டெவில்ஸ் இலகு வெற்றியீட்டியுள்ளது.

டெல்லி அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரின் அபார சதம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் காம்பீர், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய டெல்லி டெயார்வில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 177 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் டேவிட் வோர்னர் அட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும், போல் கொலிங்வுட் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சார்ல் லெங்வெட் இரண்டு விக்கட்டுகளையும், கிறிஸ் கேயில் மற்றும் இசாத் சர்மா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதில், கிறிஸ் கேய்ல் 30 ஓட்டங்களையும், டேவிட் ஹாசீ 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அன்ட்றூ மெக்டொனால்ட் மற்றும் உமேஸ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வோர்னர் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வியாழக்கிழமையன்று யாழ்ப்பாணம் செல்ல உள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக தனது விஜயத்தை ஒத்திவைத்திருந்தார். எனவே யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்றும் ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More