Pages

Friday, April 16, 2010

சுற்றிலும் 50 பேர் நிற்கிறார்கள். அவர்கள் முன்னால் முத்தம்.


kollywood news, latest kollywood news, tamil kollywood news,  kollywood latest news, kollywood masala, cinema news
ரீமாவுக்கு முத்தம் 30 டேக் எடுத்தார் புதுமுகம்


ரீமா சென்னுக்கு முத்தம் தரும் காட்சியில் 30 டேக்குகளை எடுத்தார் புதுமுக ஹீரோ. ‘சொஸைட்டி’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் ரீமா சென். அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராஜ்வீர் சிங் நடிக்கிறார். காட்சிப்படி ரீமாவின் கன்னத்தில் ராஜ்வீர் முத்தம் தருவது போல படமாக்க வேண்டும். கேமரா ஓடத் தொடங்கியதும், ராஜ்வீருக்கு படபடப்பு ஏற்பட்டது. வசனம் பேசியபடியே ரீமாவை நெருங்கி வந்து முத்தம் தர வேண்டும். ஆனால் அவர் வசனத்தை தவறாக பேச ஆரம்பித்தார். இது போல பலமுறை செய்து, பல டேக்குகளை வாங்கினார். பின் வசனம் சரியாக பேசினால், முத்தம் சரியாக தராமல் ரீடேக் எடுத்தார். இது போல 30 டேக்குகளை அவர் எடுத்ததாக பட யூனிட்டார் தெரிவித்தனர். இதுபற்றி ரீமா சென் கூறும்போது, ‘ராஜ்வீர் பல டேக்குகள் எடுத்தது உண்மைதான். அவர் புதுமுகம். சுற்றிலும் 50 பேர் நிற்கிறார்கள். அவர்கள் முன்னால் முத்தக் காட்சியில் புதுமுகம் நடிப்பது கஷ்டம்தான். அது எனக்கும் புரிந்தது. அதனால் அவர் ரீடேக் எடுக்கும்போது கோபப்படவில்லை’ என்றார்.

Read More

அஜித் படத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி....


சினிமாவில் நடிக்கும் முன்னாள் முதல்வர்!


முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும், சினிமாத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் அரசியலுக்கு வரும் முன்பு சினிமா துறையில் இருந்தார். பல படங்களை அவர் தயாரித்துள்ளார்.


ஆனால் அவர் வெள்ளித்திரையில் தோற்றியது இல்லை. இந்த நிலையில் முதல் தடவையாக முன்னாள் முதல்வர் குமாரசாமி வெள்ளித்திரையில் தோன்றி தொண்டர்களை ரசிக்க வைக்க போகிறார். அந்த சினிமா படத்தின் பெயர் சிவகாசி. காவிரி பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் இது.

அஜித்- மானசி ஆகியோர் நாயகன்- நாயகியாக நடிக்கும் இந்த படப்பிடிப்பு 85 சதவீதம் முடிவடைந்து விட்டது. குமாரசாமியின் கால்சீட்டுக்காக படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் காத்திருக்கிறார். குமாரசாமி ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார்.

அந்த காட்சியின் படப்பிடிப்பு வருகிற 25-ந் தேதி மைசூர் அல்லது மண்டியாவில் தொடங்க உள்ளது.

Read More

வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் : இந்தியர் சாதனை



புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி...



கிருஸ்துவராக இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.


’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார். விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார். நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.


சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது. இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது. இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.


விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.


ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.


பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.


இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன்,


’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.


அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.


கண்ணன் போட்ட இந்த பிள்ளையார் சுழிதான் இப்போது விஸ்வரூபம் எடுக்கிறது.
Read More

நடிகர் வடிவேலுவுக்கு கோர்ட் போட்ட உத்தரவு




நடிகர் வடிவேலு உதவியாளர் சங்கர் என்பவர் விருகம்பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் நடிகர் சிங்கமுத்து, தயாரிப்பாளர் கண்ணன் ஆதரவாளர்கள் வடிவேலு அலுவலகத்துக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிங்கமுத்து, கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் வக்கீல் அறிவழகன் மூலம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வக்கீல் அறிவழகன் வாதாடும் போது வடிவேலு மீது தான் முதன்முதலாக தயாரிப்பாளர் கண்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகு தான் வடிவேலு தரப்பில் புகார் செய்யப்பட்டது. இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே வடிவேலு தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் சிங்கமுத்துவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது என்றார்.

நடிகர் வடிவேலுவின் வக்கீல் பால்கனகராஜ் வாதாடும் போது கொலை மிரட்டல் விடுவது மோசமான குற்றம். வடிவேலு தரப்பில் சிலவிளக்கங்களை தெரிவிக்க வேண்டி இருக்கிறது என்றார்.

இதை பொறுத்து வடிவேலுவும், வக்கீலும் தங்கள் பதிலை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி தேவதாஸ் உத்தர விட்டார்.
Read More