Pages

Tuesday, April 13, 2010

நான் விட மாட்டேனா ராக்கெட்...




பத்திரிகை வாசிப்பாளர்கள் பத்மாவை மறந்திருக்க முடியாது. 'அழகி' பத்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். வீராசாமி படத்தில் வில்லியாக அறிமுகமான பத்மா, தொழிலதிபர் ஒருவரை ஆபாச படம் எடுத்து மிரட்டினார் என்று புகார் எழுப்பப்பட்டு கோர்டுக்கும் ஜெயிலுக்கும் நடையாய் நடந்தார். ஒருவழியாக இது பொய் கேஸ் என்று விடுதலையும் செய்யப்பட்டார்.
ஆனாலும் விடமாட்டேன். நீதி கேட்பேன் என்றெல்லாம் ஆவேசப்பட்டவர், இப்போது நடிப்பில் தனது கவனத்தை திருப்பி விட்டாராம். மறுபடியும் டி.ராஜேந்தர் படத்தில் நடிக்கிறாரோ என்று அதிர்ச்சியடைய வேண்டாம். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் புழல். (என்னவொரு பொருத்தம்?)

இந்த படத்திலும் இவரை வில்லியாகதான் காட்டுகிறார்களாம். முழுக்க கெட்ட பெயர் சம்பாதிச்சாச்சு. இனிமே காவியுடுத்தி கமண்டலம் உருட்டி ஆகப் போறதென்ன என்கிறார் பத்மா. ஷகிலா, மாளவிகா போன பின்னாடி சும்மாதான கிடக்கு மார்க்கெட். நான் விட மாட்டேனா ராக்கெட் என்கிறார் குருநாதர் பாணியிலேயே!
Read More

எல்லா பாடலும் எனக்கே.... ஸ்ருதி கமல்



ஊருக்கு ஒரு புளிய மரமா இருந்தாலும், கிளைக்கு ஒரு புளியம் பழமாவது இருந்தாதானே மரியாதை? கமல்ஹாசனோட பொண்ணுக்கு முதல் படம் ஹிட் ஆகலேன்னா என்ன, அடுத்தடுத்து அவரது திறமைகள் வெளிப்படாமலா போய்விடும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு காதார ஒரு செய்தி.
தமிழில் சுமார் நான்கு படங்களில் நடிக்க சைன் பண்ணியிருக்கிறாராம் ஸ்ருதி. அப்படியே மும்பையில் ஒன்று, தெலுங்கில் ஒன்று என்று பேச்சு வார்த்தைகளும் பின்னி எடுக்கிறது. இந்த நிலையில் கூடுதலாக வரும் இன்னொரு தகவல் இனிப்போ இனிப்பு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சேரும் ஸ்ருதி, படத்தில் தான் ஆடவிருக்கும் எல்லா பாடல்களையும் தானே பாட முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கு இயக்குனர் தரப்பில் எக்கச்சக்க வரவேற்பு.

மகள் விஷயத்தில் அப்பா அதிக அக்கறை காட்டுவார் என்றாலும், கதை விஷயத்தில் என் பொண்ணுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரிதான் என்று ஒதுங்கிக் கொண்டாராம். முருகதாஸ் கதை பிடிக்காம போகுமா என்ன?
Read More

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் புற்றுநோய் தடுப்புத் திறன் 5 மடங்கு அதிகரிக்கும்




பிரஸ்ஸல்ஸ்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போலந்து விஞ்ஞானிகளின் ஆய்வினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் விளக்கும் கட்டுரை “கான்சர் பிரிவென்சன்Ó இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரை விவரம் வருமாறு:
ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் பேட்டி கண்டு போலந்து விஞ்ஞானிகள் பேசினர்.
அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். மருத்துவ மனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய¢ பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் கண்டு பேசினார்கள்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 9.5 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.
புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.
இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளன. எனவே ஆப்பிள் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் தரும் கான்சர் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Read More

கவனப்பா ஆஸ்திரேலியா பாடசாலைக்கு போறது


ஆஸ்திரேலிய பள்ளிகளில் ஆசிரியர்களின் செக்ஸ் லீலைகள்

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் விவகாரம் மாகாண அரசுக்கு பெரும் தலைவலியைத் தந்துள்ளது. மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருகிறது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒரு பள்ளியில் மாணவ, மாணவியர் தங்கள் உடலில் வர்ணம் பூசிக் கொண்ட‌தை ஒரு ஆசிரியை ‌காமிராவில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு சம்பவத்தில் ஒரு ஆசிரியை, தனது இரு மாணவர்களுடன் ஒரு காரில் செக்ஸ் உறவு கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதேபோல் வகுப்பறையில் ஒரு மாணவியை தலைகீழாக நிற்கச் சொல்லி, 12 வயது மாணவனை அந்த மாணவியுடன் உறவு கொள்ளுமாறு ஒரு ஆசிரியை கூறியுள்ளார். பின்னர் அதே மாணவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுளளான்.

இதுபோல் 300க்கும் மேற்பட்ட புகார்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மீது எழுந்துள்ளன. இதுவரை சுமார் 70 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்‌ளி நிர்வாகங்கள் கடும் நடவடிக்கை எடுக்காததே இத்தகைய நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது போன்று ஒழுங்கீனமாக செயல்படும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குயின்ஸ்லாந்து கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Read More

பிரீத்தி ஜிந்தாவும், பிரட்லீயும் காதலர்களா?

பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுக்கும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீக்கும் காதல் என்று வெளியான செய்தியை பிரட்லீயின் மேனேஜர் மறுத்துளளார்.


இதுகுறித்து பிரட்லீயின் மேனேஜர் நீல் மேக்ஸ்வெல், ‘’கடந்த சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடந்த சினிமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரட்லீக்கு பிரீத்தி ஜிந்தா அறிமுகமானார்.

அது முதல் இன்று வரை இருவரும் நண்பர்களாக மட்டும் இருந்து வருகிறார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.
Read More

‘ஹீரோவே சொல்லிட்டாரு...


விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான ‘பாடிகார்ட்’ படத்தை வாங்கி தமிழில் அதுவும் விஜய்க்கு ஏற்ற மாதிரி உருவாக்க உள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்கு இரண்டு பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டது. ஒருவர் விஜய் ஆன்டனி. மற்றொருவர் மணிசர்மா. ஆனால் இந்த இருவரையும் விட்டுவிட்டு வித்யாசாகருக்கு டிக் அடித்திருக்கிறார் விஜய்.

‘ஹீரோவே சொல்லிட்டாரு... அப்புறம் மறுபேச்சு பேசுறதுக்கு என்ன இருக்கு...?’ இயக்குனர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வித்யாசாகர் இசையமைப்பார் எனும் செய்தி தயாரிப்பு நிறுவனத்தாராலேயே வெளியிடப்படும்
Read More

ஒரு பாடல் இருபது பாடகர்கள்!....


பல படங்களுக்கு விளம்பர டிசைன்கள் வடிவமைத்துக் கொடுத்து வந்த டிசைனர் சித்தார்த் இப்போது இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கி வரும் படம் ‘பலே பாண்டியா’.

இதில் ‘வெண்ணிலா கபடிக் குழு’ விஷ்ணு மற்றும் பியா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு சுமார் 20 பின்னணிப் பாடகர்களைப் பாடவைத்து சாதனை படைத்திருக்கிறார் சித்தார்த்.

இதற்கு முன்பு ‘கோவா’ படத்தில் ஐந்து பாடகர்கள் சேர்ந்து பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் சித்தார்த்.

இந்தப் பாடலை பாடிய குழுவில் விஜய் ஜேசுதாஸ், காத்திக், சுசித்ரா, வேல்முருகன், அனுராதா ஸ்ரீராம் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர். ‘எந்திரன்’ படத்தில் வரும் பாடல் ஒன்றை மும்பையைச் சேர்ந்த எட்டு பாடகர்கள் பாடுகிறார்களாம்.

Read More

அரிசி கிச்சடி





தேவையான பொருட்கள்

2 ஆழாக்கு அரிசி
1/2 ஆழாக்கு பச்சைப்ருப்பு
2 பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது
10 பல்லு பூண்டு
10 பச்சைமிளகாய் நீளமாக கீறியது
1 மூடி தேங்காய் துறுவியது
1குழிக்கரண்டி எண்ணை
1/2குழிக்கரண்டி நெய்
4 லவங்கம்,2 பட்டை, 4 ஏலக்காய்
உப்பு.

செய்முறை

1.இதை செய்வது மிகவும் எளிமை மிக சீக்கிரமாகவும் செய்யலாம்

2.முதலில் அரிசி மற்றும் பச்சைபருப்பை 1/2 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும் இதை குக்கரிலேயே செய்யலாம், அடுப்பில் குக்கரை வைத்து எண்ணை, நெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும் சிறிது வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும் அடுத்து தேங்காய் துறுவலை போட்டு வதக்கவும் 5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைபருப்பு போட்டு வேகவைக்கவும். இதை சூடாக மாங்காய்தொக்கு ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
Read More

குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் வழிமுறைகள்


குழந்தைகள் இரண்டு வயது முதற்கொண்டு நாம் சொல்வதை புரிந்து கொள்ளவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. அழுகின்ற போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு கிடைக்கும் என தெரிந்தால் கீழே விட்டவுடனே அழும். அழட்டும் என்று சில நிமிடங்கள் விட்டு விட்டால், அழுகையை நிறுத்திவிட்டு தான்பாட்டுக்கு விளையாட ஆரம்பித்துவிடும். அதேபோல குழந்தைக் காப்பகங்களில் விடும் போது அழும் குழந்தை நீங்கள் நகர்ந்ததும் விளையாடி மகிழ்ச்சி அடையும்.

குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நேரடியாக பலன்களை சொல்ல வேண்டும். உதாரணமாய் வேலை செய்ய விடாமல் தொணதொணக்கும் குழந்தையிடம், அம்மா வேலை முடிக்கும்வரை அமைதியாய் இருந்தால் நாம் இருவரும் 1 மணி விளையாடலாம். இப்படி பண்ணினால் வேலையும் முடியாது, விளையாடவும் முடியாது என்று சொல்லி பாருங்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, எல்லா அன்பும் தனது தம்பி/தங்கைக்கே கிடைக்கிறது என்று உணரும் குழந்தை, தனது தம்பியை தொல்லை படுத்த ஆரம்பிக்கிறான்/ள். அப்போது தொடாதே என்று நீங்கள் கூறினால் அது நேர்மறையான வினையை துவக்குகிறது. கடிந்து கொண்டாலும் கவனிப்பு கிடைப்பதால் அதை மேலும் மேலும் செய்ய, உங்கள் கோபம் அதிகமாகி அடித்து வருத்தத்தை விளைவிக்கிறீர்கள். இதற்கு மாறாக, தங்கை/தம்பி பிறக்கும் முன்னேயே மூத்த குழந்தையையும் ஈடுபடுத்தினால், அதன் பின்னும் துணைக்கு அழைத்து பேசினால் அன்பும் வளரும், மனமும் அமைதியுறும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தானாகவே வீட்டு பாடம் செய்ய, நேரத்தில் கிளம்ப, முந்தைய இரவே எல்லாவற்றையும் எடுத்துவைத்துக் கொள்ளும் போது மனநிலையை பாதிக்காது என்பதை சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். சின்ன சின்ன கைவேலைகளும் செய்து பழக்க வேண்டும். தனது துணிமணிகளை மடித்து வைத்தல், தனது அறையை சுத்தம் செய்தல், சமையலறையை தூசி துடைத்தல் போன்று வயதுக்கு ஏற்ற வேலைகள்பெண், ஆண் என்று இருபாலாருக்கும் நாம் வேலை செய்யும் போது கூடவே செய்யச் சொன்னால் பின்னாளில் எந்த வேலையையும் செய்ய முடியும். தன்னைவிட சிறிய குழந்தைகளுக்கு உதவி செய்தல், பணிவாக இருத்தல், பெரியோரிடம் அன்புடன் இருத்தல் போன்றவை எந்த வயதுக்கும் ஏற்ற கல்வியே ஆகும்.

சமீபத்தில் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவளுடைய 3 வயது மகன் திடீரென வந்து, mommy, I am upset, என்றவுடன் என்ன விஷயம் என்று விசாரித்து பார்த்ததில் இன்னொரு குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான் என்றான். வயதென்னவோ 3தான். ஆனாலும் நினைத்தை கோர்வையாக, வருந்துகிறேன் என்பதையும் எதனால் வருந்துகிறேன் என்பதையும் சொல்ல அறிந்திருக்கிறது. இந்த பழக்கம் இல்லாமல் போனால், பின்னாளில் அலுவலகக் கோபத்தை அடுத்தவரிடம் காண்பிக்கும் பழக்கம் வரும். கோபம் கொள்வதில் தவறே இல்லை, அதை சரியாக சொல்லவும் செய்யவும் கற்றுத்தர வேண்டும். மனநிலை பயிற்சியாளர்கள் குழந்தைகள் வருந்தும் போது அதை ஒரு காகிதத்தில் எழுதவோ, படம் வரையவோ அல்லது க்ரேயானால் கிறுக்கவோ சொல்கிறார்கள். இது அவர்களுடைய மனநிலையை அறிய உதவும்.

இரண்டு வருடம் முன்பு என் மகனின் பள்ளியில் ஒரு சிறுவன் கையில் மீனுடன் இவனை துரத்த, மீன் வாசம் பிடிக்காத என் மகன் கத்திக்கொண்டே ஒடியிருக்கிறான். அவனின் பயம் ஒரு விளையாட்டாக மாற, அந்த சிறுவன் இன்னும் துரத்தியிருக்கிறான். பள்ளி கவுன்சிலர் இருவரையும் அழைத்து இதை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்பதை இருவரையும் யோசிக்க சொல்லியிருக்கிறார். என் மகன் அவனிடம் தெளிவாக மீன் எனக்கு பிடிக்காது, ஆகையால் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்று எழுதித்தர, அந்த மாணவன் தான் செய்தது தவறு, ஏன் தவறு என்பதையும், அடுத்தவரின் உணர்ச்சிகளை, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளல் வேண்டும் என்றும் உணர்ந்து எழுதித்தந்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள இருவரும் கைகுலுக்கி நண்பர்களாக பிரிந்தனர். இன்னமும் என் மகன் அதை சொல்வது உண்டு. சரி தவறு என்பதை நாமே சொல்வதைவிட, அவர்களை சிந்திக்க சொல்லி ஒரு காகிதத்தில் எழுதவும் சொல்லிப்பாருங்கள். பிறகு உங்கள் கருத்தை சொன்னால் மனதில் நன்கு படியும்.

திடீரென்று பேசாமல் அமைதியாகும் பதின்ம வயதினரை அவர்கள் உணர்வை மதிக்கவும் பழக வேண்டும். பள்ளியில் உள்ள சக வயதினருடன் ஏதேனும் மனத்தாங்கல்கள் வந்திருக்கலாம், இல்லையெனில் தன் தோற்றம் பற்றிய கருத்தும் கவலையும் வந்திருக்கலாம். பெற்றோரிடம் சொன்னால் தவறாக நினைப்பார்களோ என்ற ஏக்கத்தால் பேசாமல் இருக்கலாம். குழந்தைகள் சொல்வதை கவனமாககேட்பதே முதல் படியாகும். எங்கள் காலத்தில் என்று ஆரம்பித்து கதை சொல்லாமல் அவனுடைய உணர்வுகளை அறிந்து அதற்கேற்றார்போல அரவணைத்து நடக்க வேண்டும்.

சின்ன வயதில் மனதில் வரும் குழப்பமும், காயமும் பின்னாளில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும். சக மாணவனுக்கு உடல் நிலை குறைவு என்றாலும் அளவுக்கு மீறி வருந்துகிற குழந்தைகள் உண்டு. பதின்ம வயதினருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் கழிப்பதுபற்றி நிறைய கையேடுகள் உண்டு. (How to Enjoy Life with a Preadolescent HELP) என்ற கையேடில் பல அற்புதமான நடைமுறைக்கு உட்பட்ட கருத்துக்கள் உண்டு. இவை peer pressure போன்றவையை சமாளிக்கும் வழிகள் பற்றியும் சொல்கின்றன. குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்.
Read More

பில் கேட்ஸ்..




வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

சிறு வயது வாழ்க்கை

வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாயிந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்தாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

வாழ்க்கை

இளமை
பில்கேட்ஸ் தனது பள்ளி படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால், தனது 13ம் வயதிலெயே ப்ரோகிராம் எழுத தொடங்கினார். பிறகு 1973ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது இதனால் அவர்கள் கணிப்பொறிகு தேவாயான மென்பொருள்களை எழுத ஆனார்கள். அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தாரலானது. இவருடைய தலைமயில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.



|
Read More

பேரவையில் தரையில் உட்கார்ந்த எம்.எல்.ஏ.

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் முன்பு தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பை ஏற்படுத்தினார்.

சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பாண்டுரங்கன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டு பேச அனுமதி கேட்டார்.

அமைச்சர் பேசிய பிறகு வாய்ப்பு அளிப்பதாக சபாநாயகர் கூறினார். அமைச்சர் பேசி முடித்த பிறகும் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாண்டுரங்கன் சபாநயாகர் முன்பு வந்து தரையில் உட்கார்ந்தார்.

சபாநாயகர், நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்ததால் அங்கிருந்து எழுந்து சென்றார். ஓ.பன்னீர் செல்வமும் அவரை சமாதானப்படுத்தினார்.
Read More

சில்க் ஸ்மிதா வாழ்க்கை திரைப்படமாகிறது!


எழுதுபதுகளின் இறுதியில் வண்டிச் சக்கரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற சொல்லுக்கான இலக்கணத்தையே அடியோடு மாற்றிய பெருமை சில்க் ஸ்மிதாவுக்கு உண்டு. ஒரு ஹீரோயினுக்கும் மேலான அந்தஸ்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவைக் கலக்கினார் ஸ்மிதா. ரஜினி, கமல், சிவாஜி என யார் நடித்த படமாக இருந்தாலும் அதில் சில்க்கின் ஒரு கவர்ச்சிப் பாடலும், சில சிணுங்கல் காட்சிகளும் இருந்தே தீர வேண்டும் என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார்கள் தமிழ் விநியோகஸ்தர்கள்.

திரை வாழ்க்கை வண்ணமயமாக இருந்தாலும், சில்கின் நிஜ வாழ்க்கை எத்தனை சோகமானது என்பதை அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாள், ராயப்பேட்டை மருத்துவமனை பிணக் கிடங்கில் தேடி வந்து பார்த்து அழக் கூட யாருமற்ற நிலையில் அவர் சடலம் கிடந்தபோதுதான் உணர முடிந்தது.

சூப்பர் ஸ்டாரிலிருந்து சும்மா ஸ்டார் வரை யாருமே எட்டிப் பார்க்கவில்லை அவரது இறுதிச் சடங்கின்போது. அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த், வடிவுக்கரசி, மனோரமா, கங்கை அமரன் என வெகு சிலர் மட்டும்தான் அவரது சடலம் சுடுகாடு வரை செல்ல துணை போனவர்கள்.

திரையில் கவர்ச்சி ராணியாகவும் நிஜத்தில் சோக நாயகியாகவும் திகழ்ந்த சில்க்கின் வாழ்க்கைதான் இப்போது தமிழ் – இந்தியில் சினிமாவாக வருகிறது.

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஏக்தா கபூர் தயாரிக்கிறார். இன்னும் இறுதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Read More
  • Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie  review, cinema in tamil, tamil cinema news

    தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றம் பிசி

    கேட்டோங்க:
    காதலில் விழுந்தேன் படம் வந்தபோதே ரசிகர் மன்றம் சார்பில், சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டினோம். இப்ப வரைக்கும் 100 கிளைகள் தொடங்கியிருக்கிறோம். என்ன பட்டம் கொடுக்கலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார் மன்றத்து கண்மணி ஒருவர்.

  • Read More

    வாசிம் அக்ரமுடன் திருமணமா? சுஷ்மிதா


    bollywood news, latest bollywood news, tamil bollywood news,  bollywood latest news, bollywood masala, cinema news



    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை திருமணம் செய்யப்போவதாக வெளியான செய்தியை நடிகை சுஷ்மிதா சென் மறுத்துள்ளார்.
    வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா கடந்த அக்டோபர் மாதம் இறந்து விட்டார். அக்ரம் தற்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

    இரண்டு ஆண்டு களுக்கு முன்பு அக்ரமும் நடிகை சுஷ்மிதா சென்னும் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினர்.
    அதில் இருந்து இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. மும்பை புறநகரில் உள்ள பிரபல மான இரவு நேர விடுதியில் அக்ரம்& சுஷ்மிதா இருவரும் சமீபத்தில் இணைந்து காணப்பட்டதாக செய்தி வெளியானது.

    மும்பையில் உள்ள பிரபலமான ரெஸ் டாரண்டுகளில் இருவரும் மாலை நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசியதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி யுள்ளது ஆனால் சுஷ்மிதா சென் இதை மறுத்துள் ளார். அவர் இது பற்றி நேற்று கூறு கையில், “இந்த தகவல் உண்மையா னது அல்ல. வாசிம் அக்ரம் ஒரு நல்ல மனி தர். அவரை நான் திரு மணம் செய்ய வில் லை” என்றார்.

    Read More

    ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் அசின்


    kollywood news, latest kollywood news, tamil kollywood news,  kollywood latest news, kollywood masala, cinema news



    சூர்யா-ஜோதிகா நடித்த படம் ‘காக்க காக்க‘. இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ஜான் ஆப்ரகாம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி பல்வேறு யூகங்கள் வந்துக்கொண்டிருந்தது. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா.

    “கதாநாயகியாக அசின் நடிக்கிறார். தமிழ் ‘காக்க காக்க‘ படத்தில் நடித்த ஜோதிகா ஆசிரியையாக வேடம் ஏற்றிருந்தார். அந்த வேடத்தில்தான் அசின் நடிக்க உள்ளார். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஜான் ஆப்ரகாம் நடிப்பதால் அதற்கேற்ப உடற்கட்டை மாற்றிக்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தை ‘மும்பை மேரி ஜான்‘ படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் இயக்குகிறார்“ என்றார். நிஷிகாந்த் தமிழில், மாதவன் நடித்த ‘எவனோ ஒருவன்‘ படத்தை இயக்கியவர்.

    Read More

    பியூன் வேலைக்கு லாயக்கில்லாதவன் : வசந்தபாலன்



    ஆல்பம் படம் சரியாகப் போகாவிட்டாலும் அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து வெயில் படத்தை இயக்கினார் வசந்தபாலன்.

    படம் சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொர்ந்து இப்போது இவர் இயக்கி வெளியான அங்காடித் தெரு படமும் அழிக்க இயலாத இடத்தைப் பிடித்திருக்கிறது.

    வசந்தபாலன் +2 படித்துக் கொண்டிருந்த போது அவரது மார்க் ஷீட்டை வாங்கிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வசந்தபாலனின் அப்பாவிடம் ‘பையன் ப்யூன் வேலைக்குக் கூட தேற மாட்டான் போலிருக்கிறதே...’ என்றாராம். அந்தப் பையன்தான் நல்ல படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறான் என்பது இப்போது அந்த பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரியாமலா இருக்கும்!

    Read More

    இளையராஜா புகார் மீது...

    இளையராஜா புகார் மீது என்னை கைது செய்ய கூடாது என்று எக்கோ நிறுவன இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இசை அமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது புகார் அளித்தார்.

    அதில் தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் இது சம்பந்தமாக ஒப்பந்தமும் போடப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

    குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஒப்பந்தபடி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்றும் புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் எக்கோ நிறுவன இயக்குனர் ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:

    எங்களுக்கும் இளையராஜாவுக்கும் இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே சிவில் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையாக இருக்கும்போது இளையராஜா புகார் அளித்து இருப்பது தவறானது. இதை சட்டப்படி அணுகிக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
    Read More

    இந்த கொசுக்களை கோடம்பாக்கத்தை விட்டே அடிச்சு விரட்டுங்களேம்ப்பா"

    அடித்துக் கொள்ளும் காமெடி நடிகர்களை மீண்டும் இணைத்துவிடலாம் என்று முயற்சித்த சில பெரிய மனுஷங்களுக்கு, இவர்களின் திடீர் உறுமல் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். இவங்க பிரச்சனையில தலையை கொடுத்து இடுப்பை புண்ணாக்கிக்கிட்டமே என்று வருந்துகிறார்களாம் இப்போது.

    வடிவேலு ஆபிசுக்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது கண்ணன் என்ற தயாரிப்பாளரின் வீடு. இந்த வீட்டில் நடந்த ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வந்த சிங்கமுத்து, வடிவேலு குறித்து நையாண்டி செய்ததாகவும், பட்டாசு வெடித்து வெறுப்பேற்றியதாகவும் குமுறுகிறது வடிவேலு தரப்பு. இதையடுத்து மாறி மாறி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றமும் சாட்டிக் கொண்டார்கள் இருவரும்.

    இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த சிலர் மீது வழக்கு போட்டிருக்கிறது போலீஸ். சிலரை விசாரணைக்காகவும் அழைத்து சென்றிருக்கிறது. ஆரம்பத்தில் மக்களால் அதிர்ச்சியோடும் ஆர்வத்தோடும் கவனிக்கப்பட்ட இந்த பிரச்சனை, இப்போது ஒருவித அலுப்பை ஏற்படுத்தியிருப்பதால், "இந்த கொசுக்களை கோடம்பாக்கத்தை விட்டே அடிச்சு விரட்டுங்களேம்ப்பா" என்று குமுற ஆரம்பித்திருக்கிறார்கள். மக்களுக்கு முழு வெறுப்பு வருவதற்கு முன் விழித்துக் கொள்ளுங்களேன் நண்பர்களே....

    Read More

    பாவனாவுக்கு நல்ல கதை வேணுமாம்



    பல படங்களின் வாய்ப்பு ஏன் பறிபோனது என்பதை புரிந்துகொண்ட நடிகை பாவனா தினம் ஒரு மணி நேரம் ஜிம்முக்கு சென்று உடல் எடையைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்.

    மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்து மூன்று கிலோ வரைக்கும் குறைத்திருக்கிறார்.

    அசல் எதிர்பார்த்த வெற்றி பெறாத காரணத்தால் வருத்தமானவர், இனி பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் கதை கேட்டுவிட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.

    ஆனால், தற்போது கன்னடத்தில் ஜாக்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், கதை பிடிக்காததால் இரண்டு தமிழ்ப் படங்களுக்கு நோ சொல்லிவிட்டார்.

    Read More

    எப்படி பேசிய விவேக் இப்படி மாறிவிட்டார்




    டிகை குறித்து நாளிதழில் வெளியான செய்திக்கு அப்படி எல்லாம் எழுதக்கூடாது என்று நடிகர்,நடிகைகள் போட்ட கண்டனக்கூட்டத்தில் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் விவேக்.

    விவேக்கின் இந்த ஆபாசமான பேச்சுக்கு திரையுலகத்தினரே கண்டனம் தெரிவித்தனர்.

    பத்திரிக்கை உலகம் விவேக்கையும், அவர் சம்பந்தப்பட்ட செய்திகளையும்,விழாக்களையும் புறக்கணித்தது. இதையடுத்து சக திரையுலகினர் மூலமாகவும், தனது சாதி சங்கத்தினர் மூலமாகவும் சமாதான தூது விட்டு பார்த்தார்.

    இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிந்துகொண்ட அவர் நேரிடையாக தானே பத்திரிக்கையாளர்களிடம் பேசி, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு சமாதானமாகிவிட்டார்.


    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக், ‘’ 6 மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில், நான் குறிப்பிட்ட ஒரு செய்தி குறித்தான கண்டனத்தை தெரிவித்தபோது, அது சிதறி எல்லோர் மீதும் தெளித்துவிட்டதை சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.

    என் நலம் விரும்பிகள் பலர் என்னிடம் இதை தெரிவித்தபோது மிகுந்த வருத்தமடைந்தேன். அதன்பின்னரே என் தன்னிலை விளக்கத்தையும், வருத்தத்தையும், மன்னிப்பு கோரலையும் தெரிவித்தேன்.

    சமீபத்தில் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில்(விஜய் டிவி காபி வித் அனு) கூட நான் பேட்டி அளித்தபோது, நான் நன்றி சொல்ல விரும்புவதும், வருத்தத்தை தெரிவிக்க விரும்புவதும் பத்திரிகையாளர்களுக்குத்தான் என்று கூறினேன்.

    இனி எக்காரணம்
    கொண்டும் யார் மனதும் புண்படும்படி பேசவோ, எழுதவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.

    எப்படி பேசிய விவேக் இப்படி மாறிவிட்டார்!
    Read More

    பக்கா சைஸ் பர்கரையெல்லாம் பார்த்த அசினுக்கு..


    பக்கா சைஸ் பர்கரையெல்லாம் பார்த்த அசினுக்கு சுக்கா ரொட்டி சைசுக்கு இருக்கும் லாட்ஜ் என்றால் எப்படியிருக்கும்? உதட்டை பிதுக்கி ம்ஹ§ம் என்று சொல்ல முடியாத இக்கட்டில் இருக்கிறார். என்னாத்துக்கு இத்தன இழுப்பு?

    காவல்காரன் படப்பிடிப்புக்காக காரைக்குடியில் தங்குகிற விஷயத்தில்தான் இத்தனை குழப்பம். மும்பையில் பெரிய பெரிய ஹோட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். அதுவும் சரிபட்டு வரவில்லை என்று மும்பையில் வீடே வாங்கியிருக்கிறார் அசின். அப்படியாப்பட்ட அசினுக்கு காரைக்குடியில் இருக்கிற தம்மாத்துண்டு லாட்ஜ் சரிப்படுமா? ஆனாலும் அசினின் வருகைக்காக தன்னையே புதுப்பித்து கொண்டு தயாராகி வருகிறது அங்குள்ள மலர் லாட்ஜ்.

    பாத்ரூமுக்கே பல லட்சம் செலவு செய்திருக்கிறார்களாம். அதுமட்டுமா, இந்த பாத்ரூமுக்கு அசினையை அழைத்து சென்று காட்டி, "பிடிச்சிருக்குங்களாம்மா" என்றெல்லாம் பேசி கரைத்திருக்கிறார்கள். லாட்ஜ், ஓட்டல்களில் கேமிரா தொல்லை இருக்கும் என்பதால், இந்த பாத்ரூமை இஞ்ச் பை இஞ்ச்சாக அலசி ஆராய்ந்த அசின், பிடிச்சுருக்குன்னு சொன்னதும்தான் பூ மலர்ந்ததாம் லாட்ஜ் அதிபரின் முகத்தில்.

    இங்கதான தங்குறாரு இளைய தளபதியும்?

    Read More