பத்திரிகை வாசிப்பாளர்கள் பத்மாவை மறந்திருக்க முடியாது. 'அழகி' பத்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். வீராசாமி படத்தில் வில்லியாக அறிமுகமான பத்மா, தொழிலதிபர் ஒருவரை ஆபாச படம் எடுத்து மிரட்டினார் என்று புகார் எழுப்பப்பட்டு கோர்டுக்கும் ஜெயிலுக்கும் நடையாய் நடந்தார். ஒருவழியாக இது பொய் கேஸ் என்று விடுதலையும் செய்யப்பட்டார்.
ஆனாலும் விடமாட்டேன். நீதி கேட்பேன் என்றெல்லாம் ஆவேசப்பட்டவர், இப்போது நடிப்பில் தனது கவனத்தை திருப்பி விட்டாராம். மறுபடியும் டி.ராஜேந்தர் படத்தில் நடிக்கிறாரோ என்று அதிர்ச்சியடைய வேண்டாம். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் புழல். (என்னவொரு பொருத்தம்?)
இந்த படத்திலும் இவரை வில்லியாகதான் காட்டுகிறார்களாம். முழுக்க கெட்ட பெயர் சம்பாதிச்சாச்சு. இனிமே காவியுடுத்தி கமண்டலம் உருட்டி ஆகப் போறதென்ன என்கிறார் பத்மா. ஷகிலா, மாளவிகா போன பின்னாடி சும்மாதான கிடக்கு மார்க்கெட். நான் விட மாட்டேனா ராக்கெட் என்கிறார் குருநாதர் பாணியிலேயே!