புது தில்லி, ஏப். 2: இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்று வந்த தகவல்களால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் யுவராஜ் சிங் கோபம் அடைந்துள்ளார்.
÷பஞ்சாப் லெவன் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தினால்தான், இந்தியன் பிரீமியர் போட்டிகளில் யுவராஜ் வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை என்று புகார் எழுந்தது. மேலும் பஞ்சாப் அணியில் ஆட விரும்பம் இல்லாததால் வேறு அணிக்கு மாற - மும்பை இண்டியன்ஸ் - விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
÷இவ்வாறு செய்தி வெளியானது குறித்து கோபம் அடைந்த யுவராஜ், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இரண்டு பக்க அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: பத்திரிகைகளில் வந்த செய்திகள் ஒருபக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவை எனது மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. திட்டமிட்டு என்னை குறிவைத்து வீணாக பரப்பப்படும் செய்திகள்.
அண்மைக்காலங்களில் போட்டிகளில் ஏற்பட்ட காயங்களால் நான் மிகவும் அவதியுற்று வந்துள்ளேன். சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாகும். வேண்டுமென்றே திட்டமிட்டு நான் சரியாக விளையாடவில்லை என்று கூறுவது அபத்தமானது.
÷காயங்களிலிருந்து முழு உடற்தகுதி அடைந்து அதன்பிறகு வந்து விளையாடுவது அவ்வளவு எளிதானதல்ல. எனக்கு மட்டுமல்ல. எல்லா வீரர்களுக்கும் இதே நிலைதான். எனினும் எனது ஆக்ரோஷமான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவேன் என்றார்.
÷யுவராஜ் குறித்து எந்த புகாரும் வரவில்லை - பிசிசிஐ: பஞ்சாப் அணியிலிருந்து யுவராஜ் சிங் வெளியேறப் போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) எந்த புகாரும் வரவில்லை என்று பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
÷யுவராஜ் விலகுவது தொடர்பாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. யுவராஜ் சிறந்த ஆல்-ரவுண்டர். காயம் காரணமாக அவர் முழு உடற்தகுதி இன்னும் பெறவில்லை. இது எல்லா வீரர்களுக்கும் ஏற்படுவதுதான். அதற்காக யுவராஜ் விஷயத்தை இவ்வளவு பெரிதாக ஆக்க வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை என்றார்.
Friday, April 2, 2010
வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை......
மடக்கிய போட்டோகிராபர்களுக்கு.....
செல்வராகவன் - சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து ....
செல்வராகவன் - சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்!
சென்னை, மார்ச் 12,2010 : திரைப்பட இயக்குனர் செல்வராகவன் - நடிகை சோனியா அகர்வால் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை சோனியா அகர்வால். அப்போது, அந்தப் படத்தை இயக்கிய செல்வராகவனுக்கும் சோனியாவுக்கும் இடையே நட்பு வலுவானது.
பின்னர், சோனியா அகர்வாலுக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின்னர் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ்ந்தனர்.
பிரிந்து வாழ முடிவு செய்த அவர்கள் பரஸ்பரம் புரிதலின் அடிப்படையில் விவாகரத்து கோர முடிவு செய்து, 6 மாதங்களுக்கு முன்பு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்என்னால் அதிரடியாக விளையாட முடியும்.....
"மகிழ்ச்சி" திரைப்படத்தில் பூமி அதிர்ச்சி,சுனாமி
மனைவி - 3 குழந்தைகள் பிணம்..........
இப்படியே போனால்.......
நயன்தாரா பிரபுதேவா காதல் பற்றிய கிசு கிசு எல்லாரும் அறிந்ததே, இது இவ்வாறிருக்க இபோது இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருகின்றனர் அல்லவா? இப்போதெல்லாம் பிரபுதேவாவை நயன் "ஏங்க" "என்னங்க" அன்று செல்லமாக அழைக்கிறார். தற்போது பிரபுதேவா காதல் பரிசாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒரு ஆடம்பர பங்களாவை வாங்கி கொடுத்து இருக்கிறார். எப்போதும் கைவிரலில் இருக்குமாறு ஒரு வைர மோதிரமும் கொடுத்திருக்கிறாராம. |