Pages

Friday, April 2, 2010

வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை......


புது தில்லி, ஏப். 2: இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்று வந்த தகவல்களால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் யுவராஜ் சிங் கோபம் அடைந்துள்ளார்.
÷பஞ்சாப் லெவன் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தினால்தான், இந்தியன் பிரீமியர் போட்டிகளில் யுவராஜ் வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை என்று புகார் எழுந்தது. மேலும் பஞ்சாப் அணியில் ஆட விரும்பம் இல்லாததால் வேறு அணிக்கு மாற - மும்பை இண்டியன்ஸ் - விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
÷இவ்வாறு செய்தி வெளியானது குறித்து கோபம் அடைந்த யுவராஜ், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இரண்டு பக்க அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: பத்திரிகைகளில் வந்த செய்திகள் ஒருபக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவை எனது மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. திட்டமிட்டு என்னை குறிவைத்து வீணாக பரப்பப்படும் செய்திகள்.
அண்மைக்காலங்களில் போட்டிகளில் ஏற்பட்ட காயங்களால் நான் மிகவும் அவதியுற்று வந்துள்ளேன். சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாகும். வேண்டுமென்றே திட்டமிட்டு நான் சரியாக விளையாடவில்லை என்று கூறுவது அபத்தமானது.
÷காயங்களிலிருந்து முழு உடற்தகுதி அடைந்து அதன்பிறகு வந்து விளையாடுவது அவ்வளவு எளிதானதல்ல. எனக்கு மட்டுமல்ல. எல்லா வீரர்களுக்கும் இதே நிலைதான். எனினும் எனது ஆக்ரோஷமான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவேன் என்றார்.
÷யுவராஜ் குறித்து எந்த புகாரும் வரவில்லை - பிசிசிஐ: பஞ்சாப் அணியிலிருந்து யுவராஜ் சிங் வெளியேறப் போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) எந்த புகாரும் வரவில்லை என்று பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
÷யுவராஜ் விலகுவது தொடர்பாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. யுவராஜ் சிறந்த ஆல்-ரவுண்டர். காயம் காரணமாக அவர் முழு உடற்தகுதி இன்னும் பெறவில்லை. இது எல்லா வீரர்களுக்கும் ஏற்படுவதுதான். அதற்காக யுவராஜ் விஷயத்தை இவ்வளவு பெரிதாக ஆக்க வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை என்றார்.

Read More

மடக்கிய போட்டோகிராபர்களுக்கு.....

பொதுவாக கருப்பு கலர் விரும்பி நயன்தாரா. அநேக இடங்களில் அவரை Nayantharaகருப்பு உடையுடன்தான் பார்த்திருக்கிறோம் நாம்.. ஆனால் சில மாதங்களாக வெள்ளைக்கு மாறியிருக்கிறார் நயன். ('அவருக்கு' பிடிச்ச நிறமோ என்னவோ?) ஆதவன் படத்தின் 100 வது நாள் விழாவுக்கு வெள்ளை கலர் சுரிதார், அதே கலர் டாப்ஸ், கழுத்தை ஒட்டிய துப்பட்டாவுடன் வந்திருந்தார். (துப்பட்டா ஒட்டியிருக்க வேண்டிய இடம் அதுதானுங்களா?) மீடியாக்காரர்களிடம் ஒதுங்கியே இருக்கிற நயன், என்ன நினைத்தாரோ... உள்ளே நுழையும்போதே மடக்கிய போட்டோகிராபர்களுக்கு ஒரு சில போஸ்களை கொடுத்துவிட்டு போதுமா என்று கேட்டார். விழா முடிந்தபின் லிப்டுக்கு காத்திருக்கிற நேரத்தில் சற்றே ஒரு காலை மடக்கியபடி பக்கத்திலிருந்த சரோஜாதேவியின் தோள்களை பற்றிக் கொண்டு நின்றாரே, அப்பப்பா அழகோ அழகு!
Read More

bala

Read More

செல்வராகவன் - சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து ....


செல்வராகவன் - சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்!

சென்னை, மார்ச் 12,2010 : திரைப்பட இயக்குனர் செல்வராகவன் - நடிகை சோனியா அகர்வால் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை சோனியா அகர்வால். அப்போது, அந்தப் படத்தை இயக்கிய செல்வராகவனுக்கும் சோனியாவுக்கும் இடையே நட்பு வலுவானது.

பின்னர், சோனியா அகர்வாலுக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்துக்குப் பின்னர் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ்ந்தனர்.

பிரிந்து வாழ முடிவு செய்த அவர்கள் பரஸ்பரம் புரிதலின் அடிப்படையில் விவாகரத்து கோர முடிவு செய்து, 6 மாதங்களுக்கு முன்பு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
Read More

என்னால் அதிரடியாக விளையாட முடியும்.....


கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் டைர்ஸ் அணி நேற்று 4-வது வெற்றியை பெற்றது. அந்த அணி 24 ரன்னில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. முன்னாள் கேப்டனான கங்குலி நேற்று அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். அவர் 54 பந்தில் 88 ரன் குவித்தார். இதில் 5 சிக்சர்களும், 9 பவுண்டரியும் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருதை பெற்ற கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது ஆட்டம் பற்றி எழுப்பப்படும் விமர்சனம் பற்றி நான் எப்போதும் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் என்னால் அதிரடியாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நெருக்கடி என்பது எல்லா வீரர்களுக்கும் ஏற்படக்கூடியது தான். ஆட்டத்திறன் தொடர்பாக தெண்டுல்கருக்கு கூட நெருக்கடி ஏற்பட்டு இருந்தது.
இதனால் வெளியில் இருந்து வரும் விமர்சனம் பற்றி கவலைப்படக் கூடாது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் அதிரடியாக விளையாடி ரன் குவித்ததை விட அணியின் வெற்றியே முக்கியம். கடைசி நேரத்தில் ஹஸ்சி ரன்களை சேர்த்ததும் முக்கியமானதாகும்.
கொல்கத்தா அணியின் வெற்றி தொடரும். தொடர்ந்து வெற்றிகளை பெறுவது முக்கியம். அரை இறுதிக்கு முன்னேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கங்குலி கூறி யுள்ளார்.
ஆடு களத்தில் கங்குலியும், டெக்கான் வீரர் சைமண்ட்சும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இது குறித்து கங்குலி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வருகிற 4-ந் தேதி எதிர் கொள்கிறது.
டெக்கான் சார்ஜர்ஸ் 8-வது ஆட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை (3-ந் தேதி) எதிர் கொள்கிறது
Read More

"மகிழ்ச்சி" திரைப்படத்தில் பூமி அதிர்ச்சி,சுனாமி


நீல பத்மனாபன் எழுதிய `தலைமுறை' நாவல், `மகிழ்ச்சி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த படத்தில் டைரக்டர்கள் கவுதமன்-சீமான் இணைந்து நடிக்கிறார்கள்.
அண்ணன்-தம்பி பாசம், நண்பர்களின் நட்பு, காதல், நகைச்சுவை கலந்த கதை இது. கதையின் நாயகிகளாக அஞ்சலி, கார்த்திகா நடிக்கிறார்கள். படப்பிடிப்பு நாகர்கோவில், இரணியல் பகுதிகளில் 45 நாட்கள் நடைபெற்றது. பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கேயே முடிவடைந்தது.
இந்த கதையில், 13-ம் நூற்றாண்டில் பூமி அதிர்ச்சியாலும், சுனாமியாலும் காவிரிப்பூம்பட்டினம் அழிவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. உயர் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் இந்த காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்வதுடன், கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். கவுதமன். கவிஞர் வைரமுத்து, அறிவுமதி, பச்சையப்பன் ஆகியோர் பாடல்களை எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார். த.மணிவண்ணனின் அதிர்வு திரைப்பட்டறை தயாரிக்கிறது.
Read More

மனைவி - 3 குழந்தைகள் பிணம்..........


தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டை அடுத்த கருக்காடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(30). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா(26). இவர்களுக்கு அனு (3 1/2), ஆர்த்தி(2) என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆறுமுகமும், உமாவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் உமாவின் தங்கை வானதியை 2-வதாக திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஆறுமுகம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகன் மணிகண்டன் பிறந்த பின்னர் வரதட்சணை கேட்டு உமாவை ஆறுமுகம், கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் தினமும் ஆறுமுகத்தின் சித்ரவதையை உமா சந்தித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை உமா, வீட்டுக்குள்ளேயே தனது மூன்று குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உமாவின் தம்பி புண்ணியமூர்த்தி, தனது அக்காள் மற்றும் 3 குழந்தைகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உமாவின் தாய் பிச்சையம்மாள், ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி, ஏட்டு குமரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஒரத்தநாடு போலீசார் உமா, மற்றும் 3 குழந்தைகளின் பிணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது ஆறுமுகத்திற்கு வேறொரு பெண் எழுதிய ஏராளமான காதல் கடிதங்கள் சிக்கியது.
மேலும் ஆறுமுகம் காலை 10 மணிக்கு வீட்டை விட்டு சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மனைவி- 3 குழந்தைகளை கொன்று தூக்கில் போட்டு விட்டு தப்பி சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்துக்கு ஆறுமுகம் சென்றுள்ளார். அங்கு தனது சைக்கிள், செல்போன், ஆடைகளை கழற்றி விட்டு புது வேட்டி- சட்டை அணிந்துள்ளார். அதன் பின்னர் அங்குள்ள உரக்கடைக்கு சென்று பூச்சிமருத்தை (விஷம்) வாங்கி சென்றுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் மனைவி- 3 குழந்தைகளை கொன்று விட்டோமே என்று பயந்து தற்கொலை செய்ய விஷத்தை வாங்கினாரா அல்லது வேறு எங்காவது தற்கொலை செய்து ஆறுமுகம் உடல் கிடக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே தாய்- 3 குழந்தைகள் இறந்துள்ளதால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

இப்படியே போனால்.......




நயன்தாரா பிரபுதேவா காதல் பற்றிய கிசு கிசு எல்லாரும் அறிந்ததே, இது இவ்வாறிருக்க இபோது இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருகின்றனர் அல்லவா? இப்போதெல்லாம் பிரபுதேவாவை நயன் "ஏங்க" "என்னங்க" அன்று செல்லமாக அழைக்கிறார்.
தற்போது பிரபுதேவா காதல் பரிசாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒரு ஆடம்பர பங்களாவை வாங்கி கொடுத்து இருக்கிறார். எப்போதும் கைவிரலில் இருக்குமாறு ஒரு வைர மோதிரமும் கொடுத்திருக்கிறாராம.
Read More