Pages

Thursday, April 29, 2010

குனிந்து பார்க்க முடியுமா அவரால்?

Actress Kushboo
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை ஆகிய இரண்டு படங்களை அடுத்து கண்ணன் இயக்கும் புதிய படம் 'வந்தான் வென்றான்'. இதிலும் பரத் நடிப்பதாக இருந்தது. கடைசிநேர சறுக்கலில் பரத் இடத்திற்கு வந்திருக்கிறார் ஜீவா.
ரேஸ் குதிரையில் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவா, மெள்ள மெள்ள ஒவ்வொரு குதிரையாக முந்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அதற்கும் விதியும் கொஞ்சம் கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோ படத்திலிருந்து சிம்பு விலகியதுதான் ஜீவாவின் பாய்ச்சலுக்கு இன்னொரு காரணம். கே.வி.ஆனந்த் படத்திலேயே நடிக்க வந்திட்டோம். ஜோடி விஷயத்தில் கொஞ்சம் எட்டித் தாவலாமே என்று நினைத்த ஜீவா, வந்தான் வென்றான் படத்திற்கு த்ரிஷாவை ஜோடியாக கேட்டாராம்.
தங்க விசிட்டிங் கார்டில் பெயர் பொறித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. குனிந்து பார்க்க முடியுமா அவரால்? "போயும் போயும் ஜீவாவுடன் ஜோடி சேர்வதா, ம்ஹ§ம்" என்று கூறிவிட்டாராம். மயிலு போனா என்ன, மரிக்கொழுந்து நான் இருக்கேன் என்று இப்போது கால்ஷீட் கொடுத்திருப்பவர்...? அழகு, மெழுகு அற்புத சிற்பம் தமன்னாவாம்!
மனுசனுக்கு மச்சமே குதிரையாயிருக்குப்பா...
Read More

குஷ்பு காங்கிரஸ் அணியில்


Actress Kushboo
இனி பயந்து பயந்து மியாவ்...னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை சுரீர்ன்னு சொல்ல ஒரு பேக் ரவுண்டை அமைத்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு. அநாதை குழந்தைக்குதான் அங்கங்கே அடிவிழும். அரசியலில் சேர்ந்திட்டா?
காங்கிரசில் சேரப்போகிறாராம்! தற்போது லண்டனில் இருக்கிற குஷ்பு அங்கிருந்தபடியே ஒரு அஸ்திரத்தை ஏவியிருக்கிறார். "எனக்கு காங்கிரஸ் கட்சி மேல பெரிய அபிமானம் உண்டு. அதனால் சென்னை வந்ததும் கலந்து பேசி காங்கிரஸ்ல சேரலாம்னு இருக்கேன்" இதுதான் குஷ்பு போட்ட புதுக்கோலம். குது£கலம்தான் தொண்டர்களுக்கு.
"அன்னை சோனியாவின் தலைமையை ஏற்க யார் முன்வந்தாலும் அவங்களை முழு மனசோடு வரவேற்போம்" என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும். தமிழகத்தில் மேல்சபை வருவததாக அறிவிப்பு வந்த நாளில் இருந்தே குஷ்புவுக்கும் அதில் இடம் உண்டு என்ற வதந்திகள் உலவ துவங்கின. இப்போது வதந்தி உண்மையாகும் நிலை வந்திருக்கிறது.
ஆக, சத்தியமூர்த்தி பவனுக்குள் மேலும் ஒரு கோஷ்டி!
Read More

அசின் கொடுத்த 'பூ பார்ட்டி'!


காவல்காரன் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார் அசின்.

விஜய்யின் காவல்காரன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அசின். இந்தியில் நடிக்கப் போன அவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் இது.

கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாததால் ரொம்பவே போரடித்ததாம் அசினுக்கு. எனவே பார்ட்டி வைப்போமா என்று நாயகன் விஜய்யிடம் கேட்க, அவரும் சம்மதித்ததால், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு பூ பார்ட்டி என்று பெயர் வைத்தாராம்.

அது என்ன பூ பார்ட்டி... ? விருந்துக்கு வரும் எல்லோரும்... அதாவது ஹீரோ விஜய், இயக்குநர் சித்திக் உள்பட, காதில் ஒரு வெள்ளைப் பூவை வைத்துக் கொண்டு வரவேண்டும். ஆண்கள் இடது காதிலும் பெண்கள் வலது காதிலும் பூவை சொருகிக் கொண்டு வரவேண்டும் என்பது பார்ட்டி விதி.

அசின் போட்ட கண்டிஷனாச்சே... மீற முடியுமா... அத்தனை பேரும் காதில் பூவோடு அசின் பங்களாவுக்குப் போனார்கள். விதவிதமான உணவுகள், உற்சாக சமாச்சாரங்கள் பரிமாறப்பட, இரவு முழுக்க நடந்ததாம் பார்ட்டி.

இரு தினங்களுக்குப் பிறகு, காவல்காரன் யூனிட் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இடம்பெயர்ந்தது. ஆனால் இன்னும் பூ பார்ட்டி பற்றி பேச்சு ஓயவில்லையாம் யூனிட்டில்!
Read More

ரஜினி விளக்கியதால் தான் அமிதாப் போகவில்லை !

Rajini and Amitabஇலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.

அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.

இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.

இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
Read More

கிளாமருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் : நயன்தாரா கவலை



ssஇந்தி சினிமாவுக்கு செல்லும் ஆசை இல்லை என்றார் நயன்தாரா. இது பற்றி அவர் கூறியதாவது: கிளாமர் வேடங்களில் அதிகம் நடித்துவிட்டேன். நடிப்பை வெளிப்படுத்தும் படத்துக்காக காத்திருந்தேன். அப்போதுதான் மலையாள படமான ‘எல்க்ட்ரா’வில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலான படங்களில் நடிக்கும்போது மரத்தை சுற்றி நடனம் ஆட மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. பட விளம்பரத்துக்கும் கிளாமருக்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய படங்களிலும் ஹீரோயின்களுக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நல்ல கேரக்டர் கொண்ட சிறு படங்களில் நடிக்கலாம்.

எந்த நடிகையுடனும் எனக்கு போட்டி இல்லை. அவரவருக்கு தகுந்த இடம் திரையுலகில் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது கன்னட படத்திலும் நடிக்கிறேன். ‘இந்தி படங்களில் நடிப்பீர்களா?’ என கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கிறேன். இந்தியில் புதுமுக நடிகையாக பணியாற்ற விரும்பவில்லை. பிரபு தேவாவுடன் தொடர்பு பற்றி கேட்கிறார்கள். வதந்திகள் இப்போது என்னை பாதிப்பதில்லை. அதை பற்றி கவலைப்படுவதும் இல்லை. பிரபலமாக இருப்பதற்காக கொடுக்கும் விலைதான் இது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Read More