Wednesday, March 24, 2010
சௌந்தர்யா திருமணம் எதிர்வரும் செப்ரம்பர் மாதம்
ரஞ்சிதாவின் பாலியல் சர்ச்சையால் இவன் படத்தில் நடிக்க முடியாத நிலை.
ராவண் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கப்பட்டுள்ளார்: மணிரத்தினம்
|
குதிரையிலிருந்து விழுந்த சரத்குமார் |
[ 2010-03-24 18:12:29 ] |
சாரதி படத்தின் ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக குதிரையிலிருந்து விழுந்தார் சரத்குமார். இதில் அவரது இடுப்புப் பகுதி எலும்பு உடைந்தது. |
நித்தியனந்தரின் திருவிளையாடல் அமெரிக்கவிலுமா?
நித்தியானந்தாவின் அமெரிக்க விஜயங்களில் நடிகைகளின் நிர்வாண நடனம்?
சாமியார் நித்தியானந்தா அமெரிக்காவில் உள்ள தனது ஆசிரமத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவருடன் 2 நடிகைகள் தவறாமல் செல்வார்களாம். அப்போது அங்கு நிர்வாண நடனமும் தவறாமல் நடக்கும் என்று புதிய தகவல் கசிந்துள்ளது. நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் நீண்டு கொண்டே போகின்றன. அந்த வகையில் தற்போது புதிய செய்தி ஒன்று கசியத் தொடங்கியுள்ளது. அது நித்தியானந்தாவின் அமெரிக்க பயணங்கள் குறித்தது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நித்தியானந்தாவுக்கு ஒரு ஆசிரமம் உளளது. இந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் நித்தியானந்தா. அப்போதெல்லாம் இரு நடிகைகள் அவருடன் செல்வார்களாம். ஆசிரமத்தில் நடைபெறும் பார்ட்டிகளின்போது இந்த இரு நடிகைகளும் நிர்வாண நடனம் ஆடுவது வழக்கம் என்று அந்த செய்தி கூறுகிறது. இந்த இரு நடிகைகளும் பல்வேறு தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளனர். இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளனர். அமெரிக்காவுக்குப் போய் விட்டால் டிரஸ்ஸையும் மாற்றி விடுவாராம் நித்தியானந்தா. டெனிம் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் மட்டுமே அவர் அணிவாராம்.
கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமல்ல, இணைந்து வாழ்வதும் குற்றமல்ல என்று நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்த கருத்துக்களை கிட்டத்தட்ட 5 மணி நேரம் முன்வரிசையில் உட்கார்ந்து மகிழ்ச்சி பொங்க கேட்டாராம் நடிகை குஷ்பு. தன் மீது தமிழக கோர்ட்களில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி குஷ்பு தொடர்ந்த சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டது.
இந்த விசாரணையையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு கோர்ட்டுக்கு வந்து இருந்தார். சல்வார் கமீஸ், துப்பட்டா அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.
கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இங்கு மனுதாரர்கள் அமர வைக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு காரணமாக இங்கு யாரையும் அமர வைக்க மாட்டார்கள். ஆனால் குஷ்புவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.
அங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கருத்து தெரிவித்த போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்ததாம்.
நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாராம் குஷ்பு.
புன்னகை
புன்னகை
நீ புன்னகைத்தாய்
உன் முகத்தில்
பல வர்ணப்
பட்டாம்பூச்சிகள்
சிறகடித்தன -அதில்
என் மனம் சிறைப்பட்டது
பதிலுக்கு புன்னகைத்தேன்
பச்சை கொடி காட்டினாய்
என் புன்னகைக்கு
பவளக் கொடியை
பதம் பார்க்க எத்தனித்தேன்
முடியவில்லை -ஏன்
மெளனித்து போனது
அவள் மெளன அலைகள்
மனமுடைந்து போனேன்
என் மனச் சிறையில்
ரோஜாவில் முள்ளிருப்பது
உண்மை -அதிலும்
பெண் ரோஜாவில்
புன்னகைத்தான் முள் என்று
இன்று நான் தெரிந்து கொண்டேன்
என் இதயத்தை காயப்படுத்திய
பின்புதான் நான் உன்னையே
புரிந்துகொண்டேன்