Pages

Thursday, May 13, 2010

நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’


சென்னை விமான நிலைய பாதுகாப்பு சோதனையில், நடிகை நமீதாவுக்கு முன்னுரிமை அளித்த வீரர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.
பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சைகை மூலம் அருகில் அழைத்து, ‘நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர்.
இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேர மாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத் தில் விதி வகுக்கப்பட்டுள்ளது?’’ என்று வாக்குவாதம் செய்தனர்.
உடனே “இந்த பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பாதுகாப்பு வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Read More

சென்னை வந்தார் விஜய்

திடீர் பயணமா, திட்டமிட்ட பயணமா தெரியாது. ஆனால் விஜய்யின் வெளிநாட்டு பயணம், வெறும் வாயில் சூயிங்கமாகிப் போனது பலருக்கு! சுறா டென்ஷனிலிருந்து விடுபடதான் இந்த ட்ரிப் என்றார்கள். இல்லையில்லை, சித்திக்கின் மகள் திருமணத்தை தவிர்க்கும் பொருட்டுதான் இந்த பயணம் என்றார்கள் சிலர். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சுற ஆள் நானில்லை என்பது போலவே பயணத்தை ஃபாஸ்ட்டாக முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பிவிட்டார் விஜய்.
நேற்றிரவு சென்னை திரும்பிய விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதாவும், மகன் சஞ்சய்யும் வந்திருந்தார்களாம். ஆக இந்த பயணம் மாமனார் வீட்டிலிருந்துதான் என்பது உறுதியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, சித்திக்கின் மகள் திருமணத்திற்கு சென்னையில் இருந்து விஜய்யின் சார்பாக ஸ்பெஷல் பொக்கே ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல். பிறகென்ன செய்வது? இன்னும் முப்பது நாளைக்காவது டைரக்டர் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாகணுமே!

Read More

நடிப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்!

மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

கார் ரேஸில் பிஸியாக உள்ள அஜீத், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.

படங்கள் ஓடாததால்தான் ரேஸுக்குப் போய்விட்டீர்களா என்ற கேள்விக்கு அஜீத் பதிலளிக்கையில், "நான் இதுவரை நடிச்ச அத்தனை படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை.

அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!" என்றார்.

அஜீத் குமார் அரசியல் வாதி ஆவாரா என்ற கேள்விக்கு, "இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான்.

கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் சர்வைவ் பண்ணணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன் பாஸ்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?'' என்று கூறியுள்ளார் அஜீத்.
Read More

புதுமண தம்பதிபோல் நயன்தாராவும் பிரபுதேவாவும்

திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதிபோல் நயன்தாராவும் பிரபுதேவாவும் பங்கேற்றனர். பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
 
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கி கைகோர்த்தபடி வந்தார்கள். மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
 
இருவரையும் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர். குணசித்திரநடிகர் ஒருவர் கூறும் போது பிரபுதேவா, நயன்தாரா நடவடிக்கைகள் ஒரு புதுமண தம்பதியைபோல் இருந்தது என்றார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண கூட்டத்தினர். கிசுகிசுத்தனர். கேரளாவில் பொது நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கேற்பது இதுவே முதல்முறை.
 
ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர். நயன்தாராவை அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் மிரட்டி இருந்தார். அதனால் சில மாதங்கள் ரகசியமாக சந்தித்த அவர்கள் சென்னை விழாவில் ஒன்றாக ஆடியது பரபரப்பை எற்படுத்தியது.
 
பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அமெரிக்கா, பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றி பார்த்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். இரு வீட்டாரையும் சமரசப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
நயன்தாரா படிப்படியாக சினிமாவில் நடிப்பதை குறைக்கிறார். நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஒப்புக்கொள்ளவில்லை
 
தமிழில் நடித்த ஆதவன் படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் எலக்ட்ரா என்ற படத்தில் நடிக்கிறார். மனிஷா கொய்ராலாவும் பிரகாஷ்ராஜும் அவருக்கு தாய் தந்தையாக நடிக்கின்றனர். வேறு படங்கள் இல்லை. இவற்றை முடித்து விட்டு முழு நேர குடும்பவாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம். தனி குடித்தனம் நடத்த புதிதாக வீடு பார்க்கிறார்கள்.
 
Read More

பக்கத்துல வராம பார்த்துங்க.... -அலறும் ஐஸ்வர்யாராய்!



கன்னுக்குட்டிக்கு தெரியுமா, கவணையோட உயரம்ங்கிற மாதிரி கூட்டத்தில சிக்கிக்கிட்டு கொத்து பரோட்டாவானர் ஐஸ்வர்யாராய். அது நடந்து, அப்படி ஒன்ணும் நாளாயிருக்காது. ரெட்டச்சுழி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்தவரைதான் இப்படி ஓட ஓட படமெடுத்து ஒரேயடியா எரிச்சலு£ட்டினார்கள் செல்போன் ஒளிப்பதிவாளர்களும்(?) பத்திரிகை புகைப்படக்காரர்களும். உட்கார இடமில்லாமல் தவித்தவருக்கு சராசரி ரசிகனின் முன்வரிசை சீட் ஒதுக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இத்தனைக்கும் ஐஸ்சை சுற்றி 'பெரிய்ய்ய்ய சைஸ்' செக்யூரிடிகளும் இருந்தார்கள் அப்போது.
உலக அழகிக்கு இப்படி ஒரு உபத்திரவமா என்று கண்களில் உதிரம் வருகிற அளவுக்கு கவலைப்பட்டார்கள் ரசிகர்களும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் தனது அடுத்த நிகழ்ச்சிக்கு ஆயிரம் கட்டளைகள் போட்டிருக்கிறார் ஐஸ். "பிரஸ் போட்டோகிராபர்ஸ் மேலே விழுந்து நசுக்காத மாதிரி பார்த்துக்கோங்க ப்ளீஸ்" என்பது அதில் ரொம்ப முக்கியமான கட்டளை.
ராவணா பிரஸ்மீட்டுக்கு வரப்போகும் ஐஸ்சுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தில், பிரஸ் போட்டோகிராபர்களுக்கு 55 அடி து£ரம் தள்ளிதான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வரும்போதே அதற்கு தோதான லென்சோடு வாருங்கள் என்று குறிப்பு அனுப்பியிருக்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிகில் முருகன்.

Read More