Pages

Thursday, April 15, 2010

கர்ப்ப காலத்திலும் ‘கலகலப்பாக’ இருக்கலாம்!


கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.

கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.

கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.

கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.

கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக உல்டா முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.

தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும், போஷிக்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.

பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.

Read More

பயிற்சியின் போது பிரெட்லீ காயம்..

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ (ஆஸ்திரேலியா) பயிற்சியின் போது நேற்று காயமடைந்தார். அவருக்கு வலது கைபெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எஞ்சிய இரு ஐ.பி.எல். ஆட்டத்திலும் அவர் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் சங்கக்கரா தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பிரெட்லீ உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். காயம் காரணமாக வருகிற 30 ந் தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பிரெட்லீ பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

இது குறித்து அடுத்த 4 அல்லது 5 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டிம் நீல்சன் கூறியுள்ளார்.

Read More

ஓஷோ வேடத்தில் கமல்?



செக்ஸ் குற்றச்சாற்றுகளில் இன்று சாமியார்கள் நிலைகுலைந்து போகும்போது, செக்ஸின் மூலம் கடவுளை அடைய முடியும் என்று பல வருடகள் முன்பே அறிவித்தவர் ஓஷோ.

அவரது புத்தககள் இன்றும் மிகப் பரவலாக வாசிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள். பக்தர்கள் என்பதைவிட அவரை‌ப் பின்பற்றுகிறவர்கள் என்பது ச‌ரியாக இருக்கும்.

ஓஷோவின் வாழ்க்கையை திரைப்படமாக்க பலரும் முயன்றனர். ஆனால் பல காரணகளால் முயற்சி திருவினையாகவில்லை.

இந்நிலையில் இத்தாலியின் பிரபல இயக்குனர் Antonino Lakshen Sugameli ஓஷோவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறகியுள்ளார்.

தற்போது இந்தியா வந்திருக்கும் அவர், ஓஷோ கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய்தத், கமல்ஹாசன் இருவரும் பொருத்தமானவர்கள் என்று தெ‌ரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் சந்தித்து பேசும் திட்டமும் அவருக்கு இருக்கிறது.

ஓஷோ கதாபாத்திரத்துக்கும், தோற்றத்துக்கும் சஞ்சய் தத்தைவிட கமல்ஹாசனே நூறு சதவீதம் பொருத்தமானவர். இண்டர்நேஷனல் சப்ஜெக்ட், மனம் இளகுவாரா கமல்?

Read More