Pages

Thursday, April 22, 2010

இளைஞர்களே வாருங்க குஷ்புவுடன் என்ஜாய் பண்ண

என்ஜாய் வித் குஷ்பு!


நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வித்தியாசங்களை செய்து வரும் விஜய் டிவி அடுத்து ‘அழகிய தமிழ் மகன்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை துவங்க உள்ளது.
இதில் பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே அனுமதி. இளம் இளைஞர்களை போட்டியில் கலந்து கொள்ள வைத்து அவர்களில் அழகிய தமிழ் மகன் ஒருவருக்கு மகுடம் சூட்ட போகிறது விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக பொறுப்பேற்றிருப்பவர் குஷ்பு. இளைஞர் நிகழ்ச்சியில் குஷ்பு... அட ஒரு குட் காம்பினேஷன்தாங்க!
‘இந்தப் போட்டியில் பங்கு பெறும் தமிழ் மகன்கள் அழகுக்கு இலக்கணமாக இருக்கவேண்டுமாம். விஜய் டிவி & குஷ்பு பணியில் அழகின் இலக்கணம் என்னவோ..
Read More

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள்

  இதோ

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.
1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.
2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.
4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.
6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.
7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.
8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது
9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.
10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.
11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.
13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.
14. நேரத்திற்கு தூங்குங்கள்.
15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.
17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.
18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.
19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.
20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.
21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில்
வைத்திருங்கள்.
22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்
நன்றி
Read More

சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்

‘சிவப்பதிகாரம் படத்தின் மூலம் மம்தா மோகன்தாஸை தமிழுக்கு அழைத்து வந்தார் கருபழனியப்பன்.
அந்தப் படம் புஸ்ஸாகிவிட அதன்பிறகு, எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மறுபடியும் தெலுங்க்குப் போனார் மம்தா. அங்கே இவரது ஹாட் கவர்ச்சி ரசிகர்கள் மனதில் ஒரு நிரந்த இடத்தைப் பெற்றுத்தந்துவிட, நாகர்ஜுனாவுடன் இரண்டு படங்கள் நடித்தார்.
இப்போதும மலையாளத்தில் தலைகாட்டி வரும் மம்தா மீண்டும் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்திருக்கிறார். (இங்கதான் கொட்டித் தர்றாங்களாக்கும்) ஆனால் அவரைக் கேட்டால், தமிழ்சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்டிப்பா இங்கே சாதிப்பேன் என்கிறார்.
இவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஹீரோ சூர்யாதானம். அவர் என்ன பண்ணிலும் மம்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
அட... சினிமாவிலதாங்க...
Read More

கிசுகிசு கிங்கரர்கள் பிடியில் மறுபடியும் ஒரு மான் குட்டி

. நேற்றெல்லாம் ஒரே அழுகை என்கிறார்கள் நடிகைக்கு நெருக்கமானவர்கள். தமிழ்ல பேசுற நடிகைகளை பார்க்கறதே அத்தி பூத்தார் போல அபூர்வம். இதுல அவங்க இமேஜ்ல சுத்தியால அடிச்ச மாதிரி சுள்ளுன்னு வந்திருக்கே இந்த செய்தி என்று மொழிவாரி தோழர்களும் உச் கொட்டுகிறார்கள் நடிகைக்கு ஆதரவாக. அப்படியென்ன செய்தி அது.
வேறொன்றுமில்லை. நடிகை வாந்தி எடுத்துவிட்டாராம். அதற்கு காரணம் யாரு என்று அவருக்கே தெரியவில்லையாம். ஊரு பேரில் படம் எடுக்கிற அந்த பிரண்ட்ஸ் வட்டாரத்துக்கு போன் பண்ணி யாருப்பா என் வாந்திக்கு காரணம் என்றாராம். இதுதான் அந்த கிசுகிசு. குடும்ப பாங்கான நடிகை என்று ஒருவார்த்தை எழுதி நடிகை யாருன்னு பளிச்சுன்னு புரியுற மாதிரியும் சொல்லிவிட்டதுதான் இந்த அழுகைக்கு காரணம்.
நான் எல்லாரிடமும் நல்லாதான் பழகுறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அவர் அழுததை இப்போ நினைச்சாலும் மனசெல்லாம் பதறுது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அன்பா பழகுனாலும், அம்பா பாயுற கிசுகிசுவை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கணுமா என்ன?
Read More

ஆட்டோவில் போகும் பூஜாவை அதிர வைத்த செய்தி

தூங்கும்போது கூட காலாட்டிக்கிட்டே தூங்கணும். இல்லேன்னா என்னாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் நம்ம பூஜா. நான் கடவுள் படத்துக்கு பிறகு ஒரு படத்துக்கும் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கவில்லை. கால்ஷீட் கேட்பவர்களுக்கும் சரியான பதில் சொல்வதில்லை. ஒருவேளை காதலாக இருக்குமோ என்று குழம்பிப் போன கோடம்பாக்கம், அவருக்கு கல்யாணம்ப்பா என்று கதை பரப்ப ஆரம்பித்தது. சினிமாவுக்கே முழுக்கு என்று மேலும் கொஞ்சம் அதிர்ச்சியை தடவி, அச்சிலும் ஏற்றினார்கள். அச்சச்சோ... என்று அதன்பின்தான் விழித்துக் கொண்டார் பூஜா.
அவசரம் அவசரமாக ஒரு விளக்கம் வந்திருக்கிறது அவரிடமிருந்து. என்னை வளர்த்த பாட்டிக்கு 90 வயசு. அவங்களை பக்கத்தில இருந்து பார்த்துக்கணும் இல்லையா? வயதான காலத்தில் நாமதானே அவங்களுக்கு எல்லாம் செய்யணும். அப்பாவும் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தினார். அவரு விருப்பத்துக்கு சரி சொன்னதும் நிஜம்தான். ஆனால் நான் போட்ட கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டு தாலிகட்ட யாராவது வருவது சந்தேகம்தான். அந்தளவுக்கு நிபந்தனைகள் போட்டிருக்கேன். (கண்டிஷனை அப்படியே டென்டர் மாதிரி அறிவிச்சிருந்தா ரொம்ப பேரு அப்ளிகேஷன் போட்டோம்ங்கிற ஆறுதலிலேயே வாழ்ந்திருப்பாங்களே பூஜா) இந்த கடமைகள் ஒருபக்கம் இருந்தாலும் நல்ல கதைகளுக்காக காத்திருக்கேன் என்பதுதான் உண்மை. அதுக்காக நான் சினிமாவுக்கு முழுக்கு என்று செய்தி போடுறதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார் பூஜா.
யாருப்பா அப்படி ஒரு செய்தியை போட்டு பூஜா மனசுல பூகம்பத்தை கிளப்புனது?
பெங்களுருவில் இருக்கும் பூஜா, தனது வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட கூட தானே போகிறார். அதுவும் ஆட்டோவில். ரிட்டையர் ஆன நடிகைகளே பல்லு செட்டை கழற்றி வைக்க அஞ்சுற காலத்திலே அபபடியெல்லாம் இமேஜ் பார்க்காத பூஜாவுக்கு இம்சையை கொடுக்காதீங்கப்பு....
Read More

ஷாருக்கான் அலுவலகத்தில் வருமானவரி சோதனை



மும்பையில் லலித்மோடியின் அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை
நடத்தினர்.

 ஐ.பி.எல். அணிகள் பற்றிய ஆவணங்களை அமலாக்க பிரிவு அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். பின்னர், நிர்லான் ஹவுஸ்
அலுவலகத்துக்கு சென்று லலித்மோடியிடமும் விசாரணை நடத்தினர்.
 மும்பை இந்தியன் அணி உரிமையாளரான முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கும் லலித்மோடியை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
 இதற்கிடையே, ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களின் அலுவலகங்களிலும் ஆங்காங்கே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் பிரச்சினையின் எதிரொலியாக இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளருமான சாருக்கான் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அவரது அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
Read More

தமன்னாவுக்கு 1 கோடி வேணுமாம் இப்படியே போனால்?

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, 
Bollywood cinema gossip, Hollywood cinema gossip


அயன் படத்துக்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் நல்ல உச்சத்தில் உள்ளது, சின்ன ஹீரோ முதல் பெரிய ஹீரோ வரை தமன்னா ரெம்ப பிசி. இதனையடுத்து தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் தமன்னா. அவர் தப்போது ஒரு படத்திற்கு 1 சி (ஒரு கோடி) சம்பளம் கேட்கிறாராம். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் கிசு.. கிசு.. இனி தமன்னா காட்டில் மழை தான்!
Read More

திருமணம் என்பது வதந்தி -பூஜா

 
விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதனால் தான் நடிக்காமல் இருக்கிறேன் என்றும் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. "நான் சினிமாவில் நடிக்க மாட்டேன். நடிப்புக்கு முழுக்குப் போடுகிறேன்" என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிக்கிறேன்.
 
“நான் கடவுள்” படத்துக்குப் பிறகு நல்ல படங்கள், நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும் என்று முடிவு செய்து விட்டேன். 15-க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். கல்யாணமும் இல்லை... குடித்தனமும் இல்லை.. தொடர்ந்து நடிப்பேன். வருகிற ஜூன் மாதத்திலிருந்து புதிய படங்களில் நடிக்கிறேன்.
 
என் பெற்றோருக்கு வயதாகி விட்டது. என்னோட பாட்டிக்கு 90 வயது. நான்தான் அவர்களை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைக்காரர்கள் முகம் சுளிக்கும் வேலைகளை நாம்தான் செய்ய வேண்டும் என்பதால் தற்காலிக ஓய்வு தந்து விட்டு, அவர்களை கவனித்துக் கொள்கிறேன். என்னதான் பிரபலம் ஆனாலும் நம்மை வளர்த்தவர்கள் முக்கியம். அவர்கள் நம்மை வளர்க்க எப்படி கடமைப்பட்டிருந்தார்களோ... அதே போல் அவர்களை பாதுகாக்க எனக்கு கடமை இருக்கிறது.
 
நான் இன்னும் பெங்களூரில் வரிசையில் நின்றுதான் எலெக்ட்ரிக்பில், வீட்டு வரியெல்லாம் கட்டுகிறேன். ஆட்டோவில் தான் போகிறேன். எனக்கென சில நடைமுறைகள் வைத்திருக்கிறேன். அதை கடைப்பிடித்து வாழ்கிறேன். அதேபோல் எனது பெற்றோருக்கு கட்டுப்படுவதும், என் பாட்டிக்கு அருகிலிருப்பதும் என் கடமை.
 
என் தந்தை எனக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பியது உண்மை. அவரின் ஆசை அது. ஜூன் மாதம் வரை மாப்பிள்ளை பார்க்க அவர்களுக்கு சில கண்டிஷன்களோடு மதிப்பளித்து ஒப்புக்கொண்டேன். அல்லது நான் நடிக்க எந்த தடையும் சொல்லக்கூடாது என கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு உடன்பட்டார்.
 
ஆனால் எனக்கு தெரியும் என் கண்டிஷன்களுக்குள் அவரால் மாப்பிள்ளை தேட முடியாது என்று. இதை சமீபத்தில் அவரே ஒப்புக்கொண்டார். இருந்தும் அவருக்கு கொடுத்த காலத்திற்காக காத்திருக்கிறேன். ஜூனுக்குப் பிறகு நடிப்பைத் தொடரப்போகிறேன்.
 
முழுமையாக புரிந்து கொள்ளாமல், நான் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை இது என் வாழ்க்கையோடு விளையாடுவதற்குச் சமம். எனவே, நான் சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாக வந்த செய்தியை நம்ப வேண்டாம். தற்போது சுதா இயக்கும் துரோக் படத்தில் நட்புக்காக நடித்திருக்கிறேன். விரைவில் புதிய படத்தில் நடிக்கிறேன்.
 
Read More

ஐபிஎல் இறுதிநாளில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி


‘ராவணன்’ படத்தின் பாடல் வெளியீடு மற்றும் ஐபில் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் மும்பையில் நடக்க இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், பிரியாமணி நடித்துள்ள படம் ‘ராவணன்’. இந்தி, தமிழ், தெலுங்கில் ரிலீசாகும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் 24&ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த படத்துக்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் இந்நிகழ்ச்சியில், மணிரத்னம் படங்களில் அவர் இசை அமைத்த பாடல்களை மேடையில் பாட இருக்கிறார். இதில், மீடியா மற்றும் குறிப்பிட்ட அழைப்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான ஏப். 25&ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. மும்பை படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான பாடகர்களோடு, ரகுமானும் பாடுகிறார்.



Read More

ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்




4/22/2010 9:54:08 AM நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் மே 6ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இது ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி, இவரது கணவர் போனி கபூர் கூறுகையில், ‘‘ஸ்ரீதேவி சிறந்த ஓவியர். அவரது படைப்புகள், கிறிஸ்டி நிறுவனத்தால் ஏலம் விடப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் துவக்க விலை ரூ.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.22 லட்சத்துக்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

தனது படைப்புகள் சர்வதேச ஏலத்தில் பங்கு பெறுவது பதற்றமாக உள்ளது என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்த அறக்கட்டளைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், டிவி நட்சத்திரம் ஓபரா வின்ப்ரே உள்ளிட்ட உலக பிரபலங்கள் உதவி வருகிறார்கள்.
Read More

பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன்.தப்பா?சமீரா ரெட்டி.

“வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. “அசல்” படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தார்.

போலீசாருக்கும், சமீரா ரெட்டிக்கும் சண்டை மூள்வது தொடர்கதையாகிறது. எற்கனவே மலேசியா போலீசாருடன் மோதி லிப்டில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இப்போது மும்பை போலீசார் மீது தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறியுள்ளார். இதுபற்றி சமீராரெட்டி அளித்த பேட்டி வருமாறு:-

மும்பையில் இருந்து சாந்தா குரூஸ் போலீஸ் நிலையத்துக்கு காரில் சென்று கொண்டு இருந் தேன். விமான நிலையம் அருகில் எனது காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். நான் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தினர். ஆனால் உண்மையில் நான் செல்போனில் பேச வில்லை. செல்போனில் இருந்து வந்த பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன். தப்பாக நினைத்து என்னை பிடித்து விட்டனர். அவர் களிடம் செல்போனில் பேசவில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அபராதத்தை கட்டி ரசீது வாங்க தயாரானேன். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. என்னிடம் லஞ்சம் கேட்டனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நான் நடிகை என்பதை கண்டு பிடித்து என் காரை சூழ்ந்து கொண்டனர். இதனால் போலீசாரால் லஞ்சம் வாங்க முடியவில்லை. வேறு வழியின்றி என்னை போக விட்டனர்.
Read More