Pages

Monday, May 3, 2010

புற்று செல்களை கொல்லும் தாய்ப்பால்!





தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறியாததில்லை. தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட தாதுக்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை உடையவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குழந்தைக்கு தாய்ப்பால் சத்துமிக்க ஆகாரம் என்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மை உடையது என்பதும் நாம் அறிந்ததே. தாய்ப்பாலில் இருக்கும் ஆல்பா லாக்டால்புமின் என்ற தாதுப்பொருள் புற்றுக்கட்டி களையும், புற்று செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. இதற்கு காம்லெட் என்று பெயரிட்டுள்ளனர். `ஹியூமன் ஆல்பாலேக்டால்புமின் மேடு லெத்தல் டூ டியூமர்’ என்பதன் சுருக்கம்தான் `காம்லெட்’.
ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் புற்று செல்கள் அழிக்கப்பட்டு சிறுநீருடன் வெளித்தள்ளப்படுகிறது. இதனால் புற்றுநோய் தீவிரம் குறைகிறது. ஆனால் புதிதாக புற்றுநோய் தாக்குதல் ஏற்படும்போது இந்த தாதுக்கள் உடலை பாதுகாப்பது இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தற்காலிகமாக நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும். தாய்ப்பாலில் பாக்டீரியா எதிர்ப்பொருள் இருக்கிறதா என்ற நோக்கில்தான் ஆய்வு நடத்தப்பட்டது. இடையில் 40 வகையான புற்று செல்களை அழிக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
Read More

சென்னையில் நாய்களுக்கான ரத்த வங்கி

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில், நாய்களுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் தங்கராஜு கூறுகையில், நாட்டிலேயே முதல்முறையாக அதி நவீனமான நாய்களுக்கான ரத்த வங்கியைத் தொடங்கியுள்ளோம்.

இந்த ரத்த வங்கியில் 28 நன்கொடையாளர்களை பதிவு செய்துள்ளோம். ரத்த வங்கி தொடங்கி ஒரு வாரத்தில் 10 நாய்களுக்கு ரத்த மாற்ற சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை வழங்கியுள்ளோம்.

எர்லிசியா கேனிஸ் என்ற நோய்த் தொற்று நாய்களுக்கு வரும்போது அவற்றின் ரத்த சிவப்பணுக்குள் அழிந்து போய் விடும். இதனால் கருதிமாற்று சிகிச்சை தரப்பட வேண்டியது அவசியம்.

நாய்களுக்கு மொத்தம் எட்டுவகை ரத்தங்கள் உள்ளன. இதில், டிஇஏ1.1 நெகட்டிவ்என்கற ரத்தம்தான் மிக முக்கியமானது. இந்த ரத்த்த்தை எந்த நாய்க்கு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்றார் தங்கராஜு.
Read More

சத்யம் அழகுப்பெண்களும்,சாமியார் கதையும்



த்யம் தியேட்டரில் நடந்த ராமர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வாசலில் இரண்டு அழகான பெண்கள் எல்லோருக்கும்
வணக்கம் வைத்து வரவேற்றனர்.
பின்னர் விழாவில் அபிராமி ராமநாதன் பேசும்போது,  ‘’வாசலில் வரவேற்ற பெண்கள் நல்ல அழகு.  அவர்கள் வணக்கம் வைத்த விதமும் அழகு என்று குறிப்பிட்டார்.
இவரின் பேச்சுக்கு கமெண்ட் அடிப்பது போல் ஆர். பார்த்திபன் பேசினார்.
‘’சாமியாரும் சீடர்களும் ஆற்றை கடக்க முற்பட்டனர்.   அப்போது ஒரு பெண்  தான் ஆற்றை கடக்க உதவும்படி கேட்டுக்கொண்டாள்.  உடனே சாமியார் அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு ஆற்றைக்கடந்தார்.
கரை வந்ததும் அப்பெண்ணை இறக்கிவிட்டு சாமியார் நடந்தார்.  சீடர்கள் சாமியாரை பின் தொடர்ந்தனர்.
ஐந்து கிலோமீட்டர் கடந்து வந்தபிறகு சீடர்கள் சாமியாரிடம்,   ‘’சாமி...நீங்கள் எப்படி ஒரு பெண்ணைத்தூக்கலாம்...என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த சாமியார்,  நான் அந்த பெண்ணை எப்போதோ இறக்கிவிட்டுவிட்டேன்.  ஆனால் நீங்கள் இன்னமும் அவளை சுமந்துகொண்டிருக்கிறீர்கள்’’என்று சொன்னார்.
அதுமாதிரி வாசலில் வரவேற்ற அந்த பெண்களை எல்லோரும் அப்போதே மறந்துவிட்டார்கள். அபிராமிராமநாதன் இன்னும் நினைத்துகொண்டிருக்கிறார்’’என்று சொன்னதும்,  விழாவில் பலத்த சிரிப்பலை.
‘’நானும் அந்த பெண்களை ரொம்ப ரசிச்சேன்.   மொம்மையா உண்மையா என்றுகூட ஆச்சரியப்பட்டேன்.  அவுங்களை பார்ப்பதற்காகவே இரண்டு முறை அப்படியே வந்தேன்.   இரண்டு முறையும் வணக்கம் வைத்தார்கள்’’என்று பார்த்திபன் சொன்னதும் மீண்டும் எழுந்த பலத்த சிரிப்பலை அடங்க நெடுநேரமானது.
Read More

கிடாவெட்டி விருந்து




நாடோடிகள் ஹிட் படத்தை கொடுத்த மைக்கேல் தயாரித்துள்ள படம் கோரிப்பாளையம் ராசு மதுரவன் இயக்கியுள்ளார். வருகிற 7-ந்தேதி இப்படம், ரிலீசாகிறது.
கோரிப்பாளையம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கிடாவெட்டி விருந்து கொடுக்கப்பட்டது. வளசரவாக்கத்தில் உள்ள கார்டனில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
கோரிப்பாளையம் பட கதாநாயகர்கள் ஹரீஸ், ராமகிருஷ்ணன், விக்ராந்த், ரகுவண்ணன் மற்றும் பிரகாஷ் சிங்கம்புலி, மயில்சாமி, இளவரசு, அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் படத்தில் நடித்த கதாநாயகிகள் பூங்கோடி, சுவாசிகா, ஜாகர்த்தி, இயக்குனர்கள் ஜெகன் நாத், ரவிமரியா, நந்தா பெரியசாமி, மனோபாலா, ராஜ்கபூர் ஆகியோரும் விருந்தில் பங்கேற்றனர்.
விருந்துக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டைரக்டர் ராசுமதுரவன், வரவேற்றனர்.
கோரிப்பாளையம் பட இசையமைப்பாளர் சபேஷ் முரளி, ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுரேஷ், அர்ஸ் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டனர்.
திரையுலகில் படம் ரிலீசையொட்டி நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கிடாவெட்டி விருந்து கொடுப்பது இதுவே முதல் முறை என்றனர்.
கோரிப்பாளையம் படத்துக்கு பெரிய பட்ஜெட் படங்கள் போல 200 பிரிண்ட்கள் போடப்பட்டு இருப்பதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
Read More

குஷ்புவுக்கு வலைவீசும் கட்சிகள்!



Actress Kushboo
நடிச்ச வரைக்கும் போதும். பிடிச்ச கட்சியில இணைஞ்சிரலாம்ங்கிற முடிவுக்கு வந்த குஷ்புவுக்கு எந்த பக்கம் போறதுன்னு திக்கு முக்காடுற அளவுக்கு அழைபபுகள் வருதாம். ஆனாலும் இந்த நேரத்திலதான் பொறுமையா இருந்து பொருத்தமா முடிவெடுக்கணும் என்று நிதானம் காக்கிறாராம்.
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த வேகத்தில் தனது அரசியல் பிரவேசம் இப்போது இல்லை என்று அறிவித்துவிட்டார் குஷ். நேரம் வரும்போது கட்சியில சேருவேன். அது எந்த கட்சின்னு இன்னும் முடிவெடுக்கல. ஆனால் எங்க குடும்பமே காங்கிரஸ் குடும்பம்னு ஒரு பதிலை சொல்லி, சத்யமூர்த்தி பவனுக்கு புது ரத்தம் பாய்ச்சிவிட்டார்.
இவ்வளவு சொன்ன பிறகும், எங்க கட்சிக்கு வாங்கன்னு ஆளு மேல ஆளு தூது வர்றாங்களாம். முன்பு அரசாண்ட கட்சியிலேர்ந்து 'வெயிட்'டான அழைப்பும் வந்திருக்கிறதாம். ஒரு காலத்துல அந்த கட்சிக்கு அனுதாபியா இருந்தாலும், இப்போது எஸ் சொல்ல முடியாதபடி எல்லா கட்சியிடத்தும் அன்பு செலுத்தி வருகிறார் குஷ். (இதுல திருமா கட்சிய சேர்த்திராதீங்க மக்களே..) இந்த நேரத்தில அந்த வெயிட் அழைப்பை அன்போடு தவிர்த்தாராம்.
மாநாட்ட கூட்டி மணியாட்டாம விடமாட்டாங்க போலிருக்கு!
Read More

அஜீத் கார் கடைசியாக(?) வந்ததால்தான் தப்பித்தார்.



Pacchai
காரும் சாரும் நலம் என்கிறார்கள் அஜீத்தின் அலுவலகத்தில்! அதுக்கு முன்னாடி நடந்ததென்ன? கடந்த ஞாயிற்றுக் கிழமை மொராக்கோவில் நடந்த கார் ரேசில் ஆக்சிடென்ட்! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாராம் அஜீத். இவர் கார் கடைசியாக(?) வந்ததால்தான் தப்பித்தார். இல்லையென்றால் பெரும் விபத்தை சந்தித்திருப்பார் என்கிறார்கள் இந்த ரேசை தொடர்ந்து கவனித்து வருகிற ஆர்வலர்கள்.
இப்ப தெரியுதா? எங்க தல ஏன் எப்போதும் கடைசியா வருதுன்னு என்று அஜீத் ரசிகர்களும் ஆனந்தப்படுகிறார்கள்! போகட்டும்... ஆக்சிடென்ட் தந்த அதிர்ச்சியெல்லாம் இல்லை. முன்பே திட்டமிட்டபடி சென்னைக்கு இரண்டு நாள் பயணமாக வரப்போகிறாராம் அஜீத். இவரை சந்தித்து பேசுவதற்காகவே அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறாராம் கவுதம்.
கவுதம் இயக்கும் படத்தில் நடிக்க, அட்வான்ஸ் வாங்கிய கையோடு ரேசுக்கு போய்விட்ட அஜீத், அங்கிருந்து வெற்றி மாறனை தொடர்பு கொண்டு பேசியதெல்லாம் தெரிந்த கதைதான். இந்த நிலையில் கவுதம் பிராஜக்ட் தொடருமா என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். எல்லாவற்றும் முற்றுப்புள்ளி வைக்கதான் இந்த ட்ரிப்!
Read More

காமெடி இமேஜை கோ மாற்றும் : பியா!


sss‘பலே பாண்டியா’ படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்துள்ளார் பியா. அவர் கூறியதாவது: ‘ஏகன்’ தவிர நான் நடித்த ‘பொய் சொல¢லப் போறோம்’, ‘கோவா’, இப்போது ‘பலே பாண்டியா’ என மூன்று படங்களுமே காமெடி கதை. இது நானாக தேர்வு செய்தது அல்ல. தானாக அமைந்தது. இது உங்களுக்கு பிளஸ்ஸா, இல்லையா எனக் கேட்கிறார்கள். ஒரு படத்தின் பின்னணி காமெடியாகவோ ஆக்ஷனாகவோ எதுவாகவும் இருக்கலாம். அது சொல்லப்படும் விதம், அதில் நமது வேடம்தான் முக்கியம்.
அந்த விதத்தில் இந்த மூன்று படங்களும் வெவ்வேறு கதை களம். அதே போல, காமெடி படமாக இருந்தாலும் எனது வேடம் சீரியஸாகவே இந்த படங்களில் இருந்தது. ‘பலே பாண்டியா’விலும் அப்படித்தான். வெளிநாட்டிலிருந்து பாட்டியை சந்திக்க வரும் கேரக்டர். விஷ்ணுவை பார்த்தபின் எனது வாழ்க்கை மாறுகிறது. ஜூலையில் இப்படம் ரிலீசாகும். அடுத்து நான் நடிக்கும் ‘கோ’ படம், ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது. அதனால் என் மீதான காமெடி பட நாயகி இமேஜை அது மாற்றும். இவ்வாறு பியா கூறினார்.

Read More

அம்பானியின் கனவு


‘திண்டுக்கல் சாரதி’ வெற்றிக்குப் பிறகு கருணாஸ் நாயகனாக நடிக்கும் படம் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’. கருணாஸ் நடித்த பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதிய ராம்நாத் இதில் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம். ‘‘அம்பாசமுத்திரத்தில் சாதாரண எழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு அம்பானி போல் மிகப் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறான். தன்னுடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வருகிறான். கனவு நனவாகும் வேளையில் திடீரென ஒரு பிரச்னையை சந்திக்கிறான். நாயகன் தன்னுடைய லட்சியத்தை அடைந்தானா... இல்லையா என்பது தான் கதை.

கருணாஸ் ஜோடியாக நவ்னீத்கவுர் நடிக்கிறார். காமெடியில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றி கண்ட கருணாஸ் இதில் கதையின் நாயகனாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்’ என்ற பாடலுக்கு ரகசியா நடனமாடியிருக்கிறார். படத்தின் எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். கே.வி.ஆனந்திடம் பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செல்லத்துரை புலித்தேவன் என்ற பெயர் மாற்றத்துடன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் இருந்தாலும் இன்றைய இளைஞர்களின் சிந்தனைக்கு ஊக்கம் தரும் வகையில் உற்சாகமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ராம்நாத்.
Read More

தீக்குளிக்கும் ராமர்


Ramar
ராவணா பட விளம்பரத்திற்கு பக்கத்திலேயே ராமர் என்ற புதிய படத்தின் விளம்பரமும் வர, ஒட்டுமொத்த அட்டன்ஷனும் இந்த விளம்பரத்தின் மீதும்தான்! ராவணனை போட்டு தள்ளிடுவாரா ராமர்? என்ற கேள்வியோடு படத்தின் இயக்குனர் ஆதிராஜாவை சந்தித்தால், கட்டுக்குலையாத கான்பிடன்ட்டும், கருத்தை சிதைக்காத யதார்த்தமும் இழையோட பேசுகிறார்.
"அது பெரிய படம் சார். அதுக்கு நம்ம போட்டிங்கறதெல்லாம் ரொம்ப ஓவர். ஆனா ஒண்ணு. ராமர் எதுக்காக பொறந்தாரு தெரியுமா? ராவணனை அழிக்கதான்". புள்ளைய கிள்ளி விட்டுட்டு புட்டிப்பாலை வாயில வச்சா மாதிரி பதில் சொல்கிறார் இந்த அறிமுக இயக்குனர். வி.இசட் துரையிடம் உதவி இயக்குனரா இருந்தேன். பத்து வருட போராட்டத்துக்கு இப்போதுதான் விடியல் என்றார். படத்தில் நடிக்கிற எல்லாரும் புதுமுகங்கள். தியேட்டருக்குள்ளே ஜனங்களை வரவழைக்க என்ன பண்ணியிருக்கீங்க என்றால், இந்த டைட்டில் ஒன்ணு போதாதா என்கிறார் ஆதிராஜா. படத்தின் கான்சப்ட்? சீதை கற்புள்ளவள்னு ஊருக்கு நிருபிக்க அவளை தீக்குளிக்க வச்சான் ராமன். இந்த படத்து ராமன் தன்னையே தீக்குளிச்சுப்பானாம்.
வினய் தத்தா என்பவர்தான் ஹீரோ. பார்ன் வித் சில்வர் ஸ்பூன். சட்டக்கல்லு£ரியில் படிச்சிட்டு இருந்தவர். எப்பவும் ஏசியிலேயே திரியுற பையனை வெயில் மழைன்னு வறுத்து எடுத்திட்டேன் என்று ஆதிராஜா அறிமுகம் கொடுக்க, வசீகர புன்னைகையோடு வணக்கம் சொல்கிறார் வினய் தத்தா. நமக்கும் சினிமாவுக்கும் ரொம்ப து£ரம். நடிக்க வர்றீயான்னு கூப்பிட்டதும் வந்திட்டேன். நல்லவேளை என்னை சரிபண்ணி நடிக்கவும் வச்சிட்டாரு டைரக்டர் என்றார் பார்டருக்குள் இருக்கும் இந்த இளம் வக்கீல்.
இந்த படத்திலும் ஒரு கேரளா குயின்தான் நாயகியாம். பெயர் அனுமோல். கண்ணுல காட்டுவாருன்னு பார்த்தா, நேரடியா ஸ்கிரீன்ல பார்த்துக்கோங்க என்றார் ஆதிராஜா. என்ன பிரச்சனையோ?
Read More

ஆர்யாவின் புது காமெடி அவதாரம்!




‘சிவா மனசுல சக்தி’ படத்துக்குப் பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. இந்தப் படத்தை ‘நான் கடவுள்’ படத்தை தயாரித்த வாசன் விஷுவல்ஸ் வென்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். “இது ஆர்யாவுக்கு முற்றிலும் புதுமையான படம் என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான ‘நான் கடவுள்’ உள்பட எல்லா படங்களிலும் ஆக்ஷன் ஹீரோ, மிரட்டலான அகோரி வேடம்னு நடித்திருக்கிறார். ஆனால், இதில் ஆர்யாவை புதுமையாக காண்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதுவரை ஆர்யா காமெடி ரோலில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் கதையை ஆர்யாவுடன் இணைத்துப் பார்த்தபோது மிகப்
பொருத்தமாக இருந்தார்.

கதையை கேட்ட பிறகு அதிக ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் ஆர்யா. படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா அதிகம் பேச மாட்டார். ஆனால் படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். அந்தளவுக்கு கேரக்டருக்கு அழகு சேர்த்திருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அதிக பங்கிருக்கிறது. பின்னணி இசையாகட்டும் , பாடல்களாகட்டும் மிரட்டியிருக்கிறார். யுவன் & நா.முத்துக்குமார் கூட்டணியில் எல்லா பாடல்களும் பெரியளவில் வெற்றியடையும். என்னுடைய முந்தைய படம் போல் இந்தப் படமும் ரசிகர்களின் மனதை லேசாக்கி மகிழவைக்கும்” என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.                             
Read More

கதாநாயகனாகும் மம்முட்டி மகன்

 
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவர் தமிழில் தளபதி, அழகன், கிளிப்பேச்சு கேட்கவா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது மகன் துல்கர் சல்மானை தமிழ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகபடுத்துகிறார். இந்த படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
 
மம்முட்டியும் லிங்குசாமியும் ஏற்கனவே நண்பர்கள். எனவே அவர் மூலம் தமிழில் மகனை அறிமுகப்படுத்துகிறார்.
 
இது பற்றி லிங்குசாமி கூறும் போது மம்முட்டி எனது சகோதாரர் எனது முதல் படமான ஆனந்தம் படத்தில் மம்முட்டி நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானது. எனவே அவர் தனது மகன் துல்கர் சல்மானை அறிமுகபடுத்தும்படி கேட்டதும் உடனே சம்மதித்தேன் என்றார்.
 
Read More

ரகசிய திருமணம் ஏன் என்று சிந்துமேனன்



sssரகசிய திருமணம் ஏன் என்று சிந்துமேனன் விளக்கம் அளித்தார்.
‘கடல்பூக்கள்’, ‘சமுத்திரம்’, ‘ஈரம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிந்துமேனன். பெங்களூரில் வசித்து வரும் இவர், லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இத் திருமணத்துக்கு, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சிந்துமேனன் கூறியதாவது:
என் அம்மா வழி உறவில் பிரபு பற்றி தெரியவந்தது. லண்டனின் பிசினஸ் செய்து வருகிறார். உடனடியாக பேசி முடித்துவிட்டார்கள். திருமண தேதியையும் குறித்துவிட்டார்கள். அதனால், அனைவரையும் அழைக்க முடியவில்லை. இப்போது பிரபு லண்டன் சென்று விட்டார். நான் ஷூட்டிங் வந்துவிட்டேன். நான் நடித்த படங்களில் பிரபுவுக்கு ‘ஈரம்’ மட்டும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நான் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில், பிரபுவுடன் லண்டனில் செட்டிலாகும் திட்டமிருக்கிறது. இவ்வாறு சிந்துமேனன் கூறினார்.


Read More

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!


வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத் .

இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென முட்டிக் கொண்டன. இன்னொரு கார் உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்ததால் தப்பித்தது.

இந்த விபத்தில் மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

நேற்றைய பயிற்சிப் பந்தயங்கள் இரண்டிலுமே 13 வது இடம் பிடித்தார் அஜீத்.
Read More