Pages

Wednesday, April 21, 2010

ஐஸ்வர்யாராய் சாதனை......



ஐஸ்வர்யாராய் நடிக்கும் படங்கள் கோடிக்கணக்கில் விலை போகின்றன. இதனால் அவரது படங்களை, பணத்தை தண்ணீராய் செலவிட்டு எடுக்கிறார்கள்.
அக்ஷய்குமார் ஜோடியாக “ஆக்ஷன் ரீப்ளே” என்ற இந்தி படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இந்த படத்தை பிரமாண்ட படங்கள் எடுக்கும் விபுல்ஷா தயாரிக்கிறார்.
இதில் ஒரு பாடல் காட்சியில் ஐஸ்வர்யாராய் 125 உடைகளை அணிந்து ஆடியுள்ளார். இந்த பாடல் காட்சியை பல நாட்கள் எடுத்துள்ளனர். இந்திய திரைப்பட வரலாற்றில் இது வரை எந்த நடிகையும் இவ்வளவு ஆடைகளை ஒரு பாடல் காட்சிக்கு அணியவில்லை. இது சாதனையாக கருதப்படுகிறது.
இது பற்றி விபுல்ஷா கூறும்போது, கதைக்கு தேவை என்பதால் ஒரு பாடலில் ஐஸ்வர்யாராய் 125 ஆடைகளை அணிந்து ஆடினார். இது சினிமா வரலாற்றில் ரிக்கார்டு என்றார்.
Read More

சிரஞ்சீவிக்கு விஜயசாந்தி சவால்....

தெலுங்கானா பகுதிக்குள் நுழைய தயாரா? என்று சிரஞ்சீவிக்கு விஜயசாந்தி சவால் விட்டுள்ளார்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் புதிதாக அரசியலுக்கு வந்த சிரஞ்சீவி ஆந்திராவை பிரிக்க விட மாட்டேன் என்கிறார். அவரது இந்த பேச்சு தெலுங்கானா மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிரஞ்சீவி நல்ல தைரிய சாலியாக இருந்தால் தெலுங்கானா பகுதிக்குள் நுழைய தயாரா? அவர் தெலுங்கானாவில் நுழைந்தால் அவரது கதி என்ன வாகும் என்பது அவருக்கே தெரியும். அதனால்தான் அவர் இங்கு வராமல் இருக்கிறார். சிரஞ்சீவி தெலுங்கானா மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்றார்.
Read More

நக்சலைட்டுகளுடன் போராடும் ஸ்ரீகாந்த்-பிருதிவிராஜ்...

 
ஸ்ரீகாந்த்-பிருதிவிராஜ் ஆகிய இருவரும் இணைந்து நடித்து, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள புதிய படம், `குற்றப்பிரிவு.'
 
ஆந்திராவின் அமைதிக்கு வேட்டு வைக்கும் சக்தியாக விளங்கும் நக்சலைட்டுகளை அடக்க, தமிழ்நாட்டில் இருந்து 2 திறமையான போலீஸ் அதிகாரிகள் ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆந்திராவில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்சினைகள்தான் `குற்றப்பிரிவு' படத்தின் கதை.
 
ஸ்ரீகாந்த் ஜோடிகளாக கமாலினி முகர்ஜியும், சஞ்சனாவும் நடித்து இருக்கிறார்கள்.
 
பிரபாகர் வசனம் எழுத, மன்மோகன் டைரக்டு செய்துள்ளார். கிரீன் ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இரண்டுவிதமான பார்வை கோணத்தில் கதை சொல்லப்படுவது போல், புதிய திரைக்கதை உத்தி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
 
Read More

இலங்கை வரும்படி அழைப்பு � புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!


 ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.
ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இந்த விழாவின் தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணிரத்னம்.
”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
Read More

நித்யானந்தாவின் திட்டம் முறியடிப்பு...


இமாசலப்பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நித்யானந்தா அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தார்.   ஆனால் அவரை போலீஸ் கைது செய்து திட்டத்தை முறியடித்துவிட்டது.
நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கைது செய்வதற்காக தேடிவருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும்,
நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் சாமியார் நித்தியானந்தா கைது செய்யப்பட்டார்.இமாச்சல பிரதேச போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர்.
Read More

சீமான் இயக்கத்தில் இளைய தளபதி!






இளைய தளபதி விஜய்யின் 53வது படத்தை சீமான் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தானு தயாரிக்க உள்ளதாகவும், படத்தில் பணிப்புரிய இதர டெக்னிஷியங்களை, தேர்வு செய்யும் பணி குறித்து சீமான் பேசி வரவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

மன்னிப்பு கேட்ட மணிரத்தினம்





தனது முன்னாள் தயாரிப்பு நிர்வாகி நஸீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் மணிரத்னம். மணிரத்னத்தின் முன்னாள் தயாரிப்பு நிர்வாகியும், மாதவன், த்ரிஷா ஆகியோரின் மேனேஜருமான நஸீர் முதல் முறையாக தயாரிப்பாளராகியுள்ளார். படத்தின் பெயர் களவாணி. பசங்க படத்தில் அறிமுகமான விமல்-கேரளாவைச் சேர்ந்த ஓவியா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். விழாவில் பேசிய மணிரத்னம், தன்னிடம் நஸீர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த காலத்தில், தனது இயக்கத்தில் ஏற்படும் தவறுகளுக்காகக் கூட நஸீரிடம் கோபித்துக் கொண்டதாகவும் அதற்காக இந்த மேடையில் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவிக்க, அதைக் கேட்டு கண் கலங்கினார் நஸீர்.
Read More

கணவன்-மனைவி மோதல் நல்லதே..!



எந்த ஒரு உறவிற்கும் அடிப்படைத் தேவை நேர்மை தான். அதற்கு உங்கள் துணையிடம், `எப்போதும் நான் எதையும் மறைக்காமல் நேர்மையுடன் தைரியமாக செயலாற்றுபவர்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போது தான் மனைவி, மக்களிடம் இருந்தும் நீங்கள், நம்பிக்கையை பெற முடியும்.உங்கள் துணை உங்களிடம் உள்ள சிறுசிறு குறைகளை வெளிபடுத்தும் போது, அதை மறுக்காமல் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபத்தை வெளிபடுத்தாதீர்கள். பதிலுக்கு அவர்களிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். உதாரணமாக, காலதாமதம், நேர்த்தியாக உடை அணியாதது போன்ற சிறு சிறு குறைபாடுகளைக் கூட, அவர் உங்கள் நடத்தைகளில் கண்டிருக்கலாம்.
சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்படும்போது இருதரப்பினருக்கும் பொதுவான வகையில் இருந்து நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள். தேவையில்லாமல் யாருடைய மனதைம் புண்படும் படியான வார்த்தைகளை பேச வேண்டாம்.
உங்கள் துணையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொள் ளுங்கள். அப்போது தான், `உங்கள் ஆழமான நம்பிக்கையை தன் மீது வைத்திருக்கிறீர்கள்’ என்று அவர் சந்தோஷபடுவார். இதன் முலம் உங்கள் துணைடன் நீண்ட நாட்களுக்கு புரிதலுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தலாம்.
எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள். சுதந்திரமாகவும், அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழிகாட்டுங்கள். இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும்.
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமானவை. அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிக கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போது தான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு அபிராயம் ஏற்படும்.
Read More

இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தா கைது

இமாச்சல பிரதேசத்தில்  நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இமாச்சல பிரதேச போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர். சோலன் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் ஆதார செய்திகள் நக்கீரனில் வெளியானதில் இருந்து 45 நாட்களாக தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா.

மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
Read More
Read More

200 பி‌ரிண்‌ட்டுகளை தாண்டும்அருண் விஜய்யின் படம்,,



அருண் விஜய்யின் படங்களுக்கு அறுபது பி‌ரிண்‌ட்டுகள் போட்டாலே அதிகம்.
அவரது மார்க்கெட் வேல்யூ நேற்று வரை அதலபாதாளத்தில்தான் இருந்தது. ஆனால் இன்று...?
மலை மலை சுமாராக போனது அருண் விஜய்யின் மார்ககெட்டை ‌ஜிவ்வென்று தூக்கிவிட்டிருக்கிறது. மலை மலையில் பணிபு‌ரிந்த அதே டீமுடன் மாஞ்சா வேலு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆ‌க்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.
மாஞ்சா வேலுக்கு மொத்தம் 215 பி‌ரிண்‌ட்டுகள் போட திட்டமிட்டுள்ளனர். அருண் விஜய் நடித்தப் படங்களில் அதிக பி‌ரிண்‌ட்டுகள் போடப்படும் படம் என்ற பெருமை மாஞ்சா வேலுக்கு கிடைத்திருக்கிறது. 200 பி‌ரிண்‌ட்டுகளை தாண்டும் முதல் அருண் விஜய்யின் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஞ்சா வேலுவில் அருண் விஜய்யுடன் பிரபு, கார்த்திக், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர். கனல் கண்ணனின் ஆ‌க்சன் காட்சிகள் படத்தின் பிளஸ் பாயிண்‌ட்டாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
Read More

ஏறி இறங்குச்சாம் இலவம் பஞ்சு.



ஏறி இறங்குச்சாம் இலவம் பஞ்சு. பதறி துடிச்சுதாம் பாவி நெஞ்சு. ராவணா படப்பிடிப்பில் ஐஸ்வர்யராயின் டெடிக்கேஷன் பற்றிதான் இப்படியொரு வர்ணனை.
படத்தை துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொணடிருக்கிறார் மணிரத்னம். எடுத்த காட்சிகளை கூட ரீடேக்கிக் கொண்டிருக்கிறாராம். இந்த ரீ டேக்கலுக்குள் சிக்குவாரா ரஞ்சிதா? என்ற கேள்வியும் அடிஷனலாக சுற்றி வருகிறது. அது போகட்டும்... ஐஸ்வர்யாராய் நடிக்கும் காட்சி ஒன்றை மலைப்பகுதியில் எடுத்துக் கொண்டிருந்தார் மணி. வேக வேகமாக மலையேறி வருவது போல காட்சி. ரிகர்சலுக்காக ஒருமுறை மலையேறினார் ஐஸ். டேக்குக்காக ஒருமுறை மலையேறினார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. தமிழ், இந்தி என்று இருமொழிகளில் எடுக்கப்படும் படமல்லவா? தமிழுக்காக ஒரு முறை மலையேறியவர், மீண்டும் இந்திக்காகவும் ஏறினாராம்.
நம்ம ஊர் நடிகைகள் என்றால் 'ம்க்கூம்' என்று அலுத்துக் கொள்வார்கள். அல்லது ஆறடி ஏறுவதற்குள் அரை டஜன் ஆப்பிள்களை ரசமாக்கி பிழிய வைத்திருப்பார்கள். ஆனால் சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாமல் ஓடி ஓடி ஒத்துழைத்தாராம் ஐஸ்.
உலக அழகியாகணும்னு ஆச இருந்தா மட்டும் போதாது. ஐஸ் மாதிரி நல்லதை பழகியாகணும் பொண்ணுங்களா....

Read More

மானிப்பாய் பகுதியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு

.srilankaflag151.jpg - 3.71 Kb
வன்னி முகாமிலிருந்து தனது உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மானிப்பாய்க்கு வந்த இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் தொடர்புபட்ட இருவரும் ஊர் இளைஞர்களால் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டு பலத்த அடி உதைகள் காரணமாக தற்பொழுது யாழ்.  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மேற்படி யுவதி வன்னி முகாமிலிருந்து மானிப்பாயிலுள்ள தனது மாமனார் வீட்டுக்கு பஸ்ஸில் வந்துள்ளார். குறித்த பஸ் நிலையத்தில் இறங்கி பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இவரை குடும்பஸ்தர்களான இருவர் பாதை காட்டுவதாகக் கூறி கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.
இரவு முழுவதும் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய நிலையில் யுவதி தப்பிச் சென்று அருகிலுள்ள பொது மக்களுக்கு வழங்கிய தகவல்களை அடுத்து ஊர் இளைஞர்கள் திரண்டு தேடி முதலாவது நபரைப் பிடித்தனர்.     இளைஞர்களின் அடி உதை காரணமாக மற்றையவரும் பிடிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் பொது மக்களால் மிக மோசமாக தாக்கப்பட்ட நிலையில் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்பொழுது குறித்த யுவதியும் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More