Pages

Sunday, May 16, 2010

“விக்ரம்- ஐஸ்வர்யாராய்க்கு தேசிய விருது கிடைக்கும்

விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிக்கும் ராவணன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ளார்.
 
இப்படத்தின் சில காட்சிகளும் பாடலும் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி ஆடிட்டோரியத்தில் நேற்று இரவு பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மேடையில் அடர்ந்த மரங்கள் அடங்கிய காடு போன்ற அரங்கு நிர்மாணித்து இருந்தனர். அதில் ஆட்டம் பாட்டமுமாய் நிகழ்ச்சிகள் நடந்தன. விக்ரம் ஒரு பாட்டுக்கு காட்டுவாசி வேடமிட்டு ஆடினார்.
 
இப்படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலை பாடினார். நிகழ்ச்சிகளை நடிகர் கார்த்திக், நடிகை பிரியாமணி தொகுத்து வழங்கினார்கள். இவ்விருவரும் ராவணன் படத்தில் நடித்துள்ளனர்.
 
இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள பிரபு, பிருதிவிராஜ் ஆகியோரும் பேசினார்கள்.
 
விக்ரம் பேசும் போது:-
 
ராவணன் படம் ராமாயண கதை என்று சொல்ல முடியாது. ராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம், உள்பட எல்லா புராண கதைகளும் இதில் அடங்கியுள்ளது. காடுகள், மலைகள் என அலைந்து கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ளோம். திரில்லிங் ஆக இருந்தது என்றார்.
 
கவிஞர் வைரமுத்து பேசும் போது இப்படத்துக்காக ஒரே இடத்தில் அமர்ந்து ஆறு பாடல்கள் எழுதினேன். மணிரத்னம் தவம் போல் இப்படத்தை எடுத்துள்ளார். ராவணன் படத்துக்காக மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யாராய் மூவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார். மணிரத்னம் விழாவில் கலந்து கொண்டார்.
ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.
Read More

நான்கு இந்தி படங்களுக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

இசையின் ராஜா இளையராஜா கடந்த வாரம் மும்பை போய்விட்டு வந்திருக்கிறார். அடிக்கடி போவதுதானே, இப்போதென்ன தனி ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு...
இந்த ட்ரிப், ராஜாவின் ராக ராஜாங்கத்திற்கு பாலிவுட் விரித்த சிவப்பு கம்பளம். ஏற்கனவே பாலிவுட்டின் பிரபல இயக்குனர் பால்கி இயக்கிய படங்களுக்கு இசையமைத்து இந்தியிலும் தனது இசையை 'கலக்க'விட்டவர் ராஜா. இந்த முறை இவரை அழைத்த பாலிவுட் ஒரேயடியாக நான்கு படங்களுக்கு இசையமைக்க சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறது.
அந்த நான்கு கதைகளையும் கேட்கதான் இந்த பயணமாம். இந்த நான்கில் ஒன்று அமிதாப் பச்சனின் சொந்தப்படம். மற்றொன்று பால்கி இயக்கப் போகிற படம். இந்த நேரத்தில் 67 வயதை தொடப்போகும் ராகதேவன் ராஜாவுக்கு, விமரிசையாக பிறந்தநாள் கொண்டாட தீர்மானித்திருக்கிறார்களாம் அவரது வாரிசுகளான கார்த்திக், யுவன், பவதாரிணி மூவரும். இதில் கலந்து கொள்ள அழைக்காமலே வந்துவிடுவார்கள் போலிருக்கிறது அமிதாப்பும் பால்கியும்.
ஆமாம், இசையை காதலிப்பவர்களுக்கு இளையராஜா வேறு, இசை வேறா என்ன?

Read More

Thursday, May 13, 2010

நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’


சென்னை விமான நிலைய பாதுகாப்பு சோதனையில், நடிகை நமீதாவுக்கு முன்னுரிமை அளித்த வீரர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.
பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சைகை மூலம் அருகில் அழைத்து, ‘நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர்.
இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேர மாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத் தில் விதி வகுக்கப்பட்டுள்ளது?’’ என்று வாக்குவாதம் செய்தனர்.
உடனே “இந்த பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பாதுகாப்பு வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Read More

சென்னை வந்தார் விஜய்

திடீர் பயணமா, திட்டமிட்ட பயணமா தெரியாது. ஆனால் விஜய்யின் வெளிநாட்டு பயணம், வெறும் வாயில் சூயிங்கமாகிப் போனது பலருக்கு! சுறா டென்ஷனிலிருந்து விடுபடதான் இந்த ட்ரிப் என்றார்கள். இல்லையில்லை, சித்திக்கின் மகள் திருமணத்தை தவிர்க்கும் பொருட்டுதான் இந்த பயணம் என்றார்கள் சிலர். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சுற ஆள் நானில்லை என்பது போலவே பயணத்தை ஃபாஸ்ட்டாக முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பிவிட்டார் விஜய்.
நேற்றிரவு சென்னை திரும்பிய விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதாவும், மகன் சஞ்சய்யும் வந்திருந்தார்களாம். ஆக இந்த பயணம் மாமனார் வீட்டிலிருந்துதான் என்பது உறுதியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, சித்திக்கின் மகள் திருமணத்திற்கு சென்னையில் இருந்து விஜய்யின் சார்பாக ஸ்பெஷல் பொக்கே ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல். பிறகென்ன செய்வது? இன்னும் முப்பது நாளைக்காவது டைரக்டர் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாகணுமே!

Read More

நடிப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்!

மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

கார் ரேஸில் பிஸியாக உள்ள அஜீத், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.

படங்கள் ஓடாததால்தான் ரேஸுக்குப் போய்விட்டீர்களா என்ற கேள்விக்கு அஜீத் பதிலளிக்கையில், "நான் இதுவரை நடிச்ச அத்தனை படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை.

அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!" என்றார்.

அஜீத் குமார் அரசியல் வாதி ஆவாரா என்ற கேள்விக்கு, "இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான்.

கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் சர்வைவ் பண்ணணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன் பாஸ்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?'' என்று கூறியுள்ளார் அஜீத்.
Read More

புதுமண தம்பதிபோல் நயன்தாராவும் பிரபுதேவாவும்

திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதிபோல் நயன்தாராவும் பிரபுதேவாவும் பங்கேற்றனர். பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
 
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கி கைகோர்த்தபடி வந்தார்கள். மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
 
இருவரையும் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர். குணசித்திரநடிகர் ஒருவர் கூறும் போது பிரபுதேவா, நயன்தாரா நடவடிக்கைகள் ஒரு புதுமண தம்பதியைபோல் இருந்தது என்றார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண கூட்டத்தினர். கிசுகிசுத்தனர். கேரளாவில் பொது நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கேற்பது இதுவே முதல்முறை.
 
ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர். நயன்தாராவை அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் மிரட்டி இருந்தார். அதனால் சில மாதங்கள் ரகசியமாக சந்தித்த அவர்கள் சென்னை விழாவில் ஒன்றாக ஆடியது பரபரப்பை எற்படுத்தியது.
 
பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அமெரிக்கா, பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றி பார்த்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். இரு வீட்டாரையும் சமரசப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
நயன்தாரா படிப்படியாக சினிமாவில் நடிப்பதை குறைக்கிறார். நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஒப்புக்கொள்ளவில்லை
 
தமிழில் நடித்த ஆதவன் படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் எலக்ட்ரா என்ற படத்தில் நடிக்கிறார். மனிஷா கொய்ராலாவும் பிரகாஷ்ராஜும் அவருக்கு தாய் தந்தையாக நடிக்கின்றனர். வேறு படங்கள் இல்லை. இவற்றை முடித்து விட்டு முழு நேர குடும்பவாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம். தனி குடித்தனம் நடத்த புதிதாக வீடு பார்க்கிறார்கள்.
 
Read More

பக்கத்துல வராம பார்த்துங்க.... -அலறும் ஐஸ்வர்யாராய்!



கன்னுக்குட்டிக்கு தெரியுமா, கவணையோட உயரம்ங்கிற மாதிரி கூட்டத்தில சிக்கிக்கிட்டு கொத்து பரோட்டாவானர் ஐஸ்வர்யாராய். அது நடந்து, அப்படி ஒன்ணும் நாளாயிருக்காது. ரெட்டச்சுழி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்தவரைதான் இப்படி ஓட ஓட படமெடுத்து ஒரேயடியா எரிச்சலு£ட்டினார்கள் செல்போன் ஒளிப்பதிவாளர்களும்(?) பத்திரிகை புகைப்படக்காரர்களும். உட்கார இடமில்லாமல் தவித்தவருக்கு சராசரி ரசிகனின் முன்வரிசை சீட் ஒதுக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இத்தனைக்கும் ஐஸ்சை சுற்றி 'பெரிய்ய்ய்ய சைஸ்' செக்யூரிடிகளும் இருந்தார்கள் அப்போது.
உலக அழகிக்கு இப்படி ஒரு உபத்திரவமா என்று கண்களில் உதிரம் வருகிற அளவுக்கு கவலைப்பட்டார்கள் ரசிகர்களும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் தனது அடுத்த நிகழ்ச்சிக்கு ஆயிரம் கட்டளைகள் போட்டிருக்கிறார் ஐஸ். "பிரஸ் போட்டோகிராபர்ஸ் மேலே விழுந்து நசுக்காத மாதிரி பார்த்துக்கோங்க ப்ளீஸ்" என்பது அதில் ரொம்ப முக்கியமான கட்டளை.
ராவணா பிரஸ்மீட்டுக்கு வரப்போகும் ஐஸ்சுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தில், பிரஸ் போட்டோகிராபர்களுக்கு 55 அடி து£ரம் தள்ளிதான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வரும்போதே அதற்கு தோதான லென்சோடு வாருங்கள் என்று குறிப்பு அனுப்பியிருக்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிகில் முருகன்.

Read More

Saturday, May 8, 2010

ஆளில்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவது?




சுறா 50 நாளை கடப்பானா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது விஜய் வட்டாரம். கரையோரத்தில் துடிக்கிற மீனை கட்டி இழுத்து வந்தாவது காப்பாற்றுவோம் என்று இமேஜுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிலையில் படம் ஓடும் திரையரங்கங்களை அப்படியே கைவசம் வைத்திருக்க இன்னொரு ஐடியா செய்திருக்கிறதாம் சன் நிறுவனம்.



50 வது நாள் போஸ்டருக்காக மட்டும் சில தியேட்டர்களை விட்டுவிட்டு சுறா ஓடும் மற்ற தியேட்டர்களில் சிங்கம் படத்தை திரையிட முடிவெடுத்திருக்கிறார்களாம். எல்லா தியேட்டர்களிலும் சுறாவை ஓட்ட ஆசைதான் தியேட்டர்காரர்களுக்கு. ஆனால் ஆளில்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவது? அதனால் படத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று சன்னிடம் சொல்லப் போக, அதற்கு பதிலாக சிங்கத்தை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்களாம்.



இம்மாதம் 28 ந் தேதி சிங்கம் திரைக்கு வருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் அவ்வளவு டிலே பண்றீங்க. 21 ந் தேதியே வாங்க என்று வற்புறுத்துகிறார்களாம் விநியோகஸ்தர்கள்.
Read More

சல்மான்கான், ஷாருக்கான்...

நின்னு காட்டணும் என்ற வெறியோடு படம் எடுக்க வருகிறவர்கள் கூட, முதல்ல நின்னாதானே காட்றதுக்கு என்கிற அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகி, வேறு தொழிலுக்கு இடம் மாறுகிற சூழ்நிலைதான் இப்போது. ஆனால் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களை எடுத்து இன்டஸ்ட்ரிக்கே இனிப்பை கொடுக்கிறார் கல்பாத்தி அகோரம். முதல் படமே வெற்றிப்படமான திருட்டுப்பயலே. அதன்பின் மாசிலாமணி, கந்தக்கோட்டை என்று ஆவரேஜ் தூரல்தான் அவரது காட்டில்!.



இப்போது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, மதராச பட்டினம், அவன் இவன் என்று வளர்ச்சி கிராப்ஃபில் கொஞ்சம் ஏற்றம். இந்த நம்பிக்கை நட்சத்திரம் இப்போது இந்திக்கும் நகரப் போகிறதாம்.



ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் துக்கமாகவும் தகவலை பரிமாறிக் கொள்கிறது கோடம்பாக்கம். சல்மான்கான், ஷாருக்கான் என்று பாலிவுட்டுக்கு போய் பணத்தை கொட்டினால், இங்கே இவரை நம்பியிருக்கிற இயக்குனர்களின் கதி என்னாவது என்ற கவலைதான் இந்த துக்கத்திற்கு காரணம். ஆனால், இந்திக்கு போனாலும் தமிழ் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்கிறது கல்பாத்தி வட்டாரம்.

Read More

ரெட்டச்சுழி இயக்குனருக்கு

தமிழ் ஊடகப்பேரவையும், சாப்ஃப்ட்வியூ நிறுவனமும் இணைந்து சென்னையில் நடத்திய புகைப்பட கண்காட்சியில் நக்கீரன் ஆசிரியர் கோபால், வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன், மற்றும் ரெட்டச்சுழி இயக்குனர் தாமிரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புகைப்பட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



விழாவில் பேசிய நக்கீரன் கோபால், "பாரதிராஜா, பாலசந்தர் என்ற இரண்டு சிங்கங்களை வைத்து படம் எடுத்தவர் தாமிரா" என்று கூறியதுடன், குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படம் எடுத்ததற்காக தாமிராவுக்கு தன்னுடைய பாராட்டுதல்களை சால்வை அணிவித்து தெரிவித்துக் கொண்டார். புகைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய கோபால், நாற்பது ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சந்தன வீரப்பனை முதன் முதலாக போட்டோ எடுத்து நக்கீரனில் வெளியிட்டது பற்றியும், தற்போது சிறையிலிருக்கும் நித்யானந்தா விவகாரத்தில் தாம் வெளியிட்ட புகைப்படங்களின் முக்கியத்துவம் பற்றி சுவையாகவும் மாணவர்கள் ஆர்வத்தோடு கவனிக்கும்படியும் பேசினார்.



வந்திருந்த அனைவருக்கும் சாப்ட்வியூ நிறுவனர் மா.ஆன்ட்டோ பீட்டர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Read More

Friday, May 7, 2010

என்னது நான் கருப்பா! எவன் சொன்னா?


தான் ஹீரோவாக நடித்து, தயாரிக்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் வியாபார விஷயமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டு பத்து நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தார் கருணாஸ். ஒரு ஹீரோ, டாப் காமெடியன் வீடு என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அண்ணா நகரில் நடுத்தர அப்பார்ட்மெண்ட்டில் அமைந்திருக்கிறது அந்த வீடு. (அதுவும் வாடகை வீடு என்பது வாட்ச்மேன் தகவல்) பத்து நாட்கள் கழித்து வந்திருக்கும் கணவனை அன்புடன் வரவேற்கிறார் கிரேஸ். டூயட் பேட்டியும் இங்கிருந்தே தொடங்குகிறது...
கிரேஸ்: என்னடா இப்படி இளைச்சு, கருத்தும் போயிட்ட?
கருணாஸ்: என்ன கிரேஸ் வந்ததும் வராததுமா ஓவரா பீலிங் காட்டுற? இளைச்சுப் போயிட்டேன்னு சொன்ன சரி, அதென்ன கருத்து போயிட்டேன். நான் என்னமோ முன்னாடி கமலஹாசன் ரேஞ்சுக்கு கலரா இருந்ததா பிலீம் காட்டற?
கிரேஸ்: என் கண்ணுக்கு நீ எப்பவும் சிவப்புதான் கருணா.
கருணாஸ்:  ஆ... முடியல... சரி அதவுடு. செலவுக்கு பணம் கொடுத்துட்டு போனேனே அதுக்கு கணக்கு சொல்லு முதல்ல...
கிரேஸ்: வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டியா..? எல்லாத்துக்கும் கணக்கு ரெடியா இருக்கு. அப்புறமா சொல்றேன். முதல்ல நேத்து முழுக்க நான் போன் பண்ணிக்கிட்டே இருந்தேனே... ஏன் அட்டன் பண்ணல? இதுக்கு பதில் சொல்லு.
kollywood special cover story, kollywood special story, kollywood special cinema, kollywood special news, kollywood movie cover story, kollywood movie, kollywood news, sepcial cover story, kollywood cover story, Kollywood special news, kollywood specialகருணாஸ்: சமயபுரம் கோயிலுக்கு போயிருந்தேன்டா... அதான் பேச முடியல. தெரியாமத்தான் கேக்குறேன்... வெளியூர் போனவனுக்கு பத்திரமா வரத் தெரியாதா? ஒரு நாளைக்கு எத்தனை போன்தான் பண்ணுவ? போன தடவ துபாய் போயிருந்தப்ப போன் பில் மட்டும் நாற்பதாயிரம் ரூபா வந்திச்சி.
கிரேஸ்: பணமா கருணா பெருசு, பாசந்தான பெருசு! அதென்னமோ தெரியல போன் பண்ணி உன் குரலை கேட்டா நீ பக்கத்துல இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங். ஆனாலும் நீ திரும்பி வந்த பிறகும் அங்க வேலை இருக்கு, அவர பாக்க போகணும்னு கிளம்பி போறப்பதான் கோபம் கோபமா வருது.
கருணாஸ்: நாங்கல்லாம் பிசியான பார்ட்டிங்க... அப்படி இப்படித்தான் இருப்போம். சரி வுடு, உன்ன குத்தம் சொல்ற நான் மட்டும் என்ன ஒழுங்கா? கச்சேரின்னு நீ வெளியூருக்கு கிளம்பினா நானும்தான உன்ன போன் பண்ணி தொல்லை பண்ணிட்டு இருக்கேன். சில சமயம் உன்னோட அசிஸ்டெண்டுங்க ‘மேடம் ரிகர்சல்ல இருக்காங்க’னு சொல்றப்போ பத்திக்கிட்டு வரும் தெரியுமா?
கிரேஸ்: இதுதான்டா காதல், அக்கறைங்கறது... சரி, சமயபுரம் கோயிலுக்கு போனியே... சாமிகிட்ட என்ன வேண்டிகிட்டே? அடுத்த படத்துக்காவது சீக்கிரமா ஹீரோயின் கிடைக்கணும்னுதானே?
கருணாஸ்: நோ... ‘அம்பாசமுத்திரம் 
அம்பானி’ ஹிட்டாகணும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். கிரேஸ்... ஆனாலும் ரொம்ப ஓவரா என்னோட ஹீரோயின் பத்தி கிண்டல் பண்ற. ஆக்ச்சுவலி... ஆரம்பத்துல நிறைய பேரு பிகு பண்ணிக்கிட்டாலும் அப்புறம் அம்சமா ஹீரோயினுங்க எனக்கு அமைஞ்சிருக்காங்கல்ல...
கிரேஸ்: ஆமா கருணா, எனக்கு அதுதான் ஆச்சர்யமா இருக்கு! உன் அழகுக்கு செக்க செவேல்னு ஹீரோயின்ங்க கிடைச்சிடுறாங்க. கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.
கருணாஸ்: ஓ... அதான் அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட் வந்திருந்தப்ப நவ்னீத் கவுர் கவர்ச்சி டிரஸ்ல எம்மேல விழுந்து புரண்டு நடிச்சதை முறைச்சு பாத்துக்கிட்டிருந்தியா?
கிரேஸ்: போதும்... நடிப்புக்கும், நிஜத்துக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியும் கண்ணு. ஆனா, கேமராவுக்கு பின்னாடி அப்படி எதுவும் நடந்தத பார்த்தேன் அப்படியே கழுத்தை பிடிச்சி நெரிச்சு....
கருணாஸ்: சேச்சே... அழகு தேவதையான நீ இருக்குறப்போ அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டேன்.
கிரேஸ்: இதோடா... அப்ப நான் இல்லாதப்போ பண்ணுவியா? கருணா வேண்டாம்... நான் பொல்லாதவ...
கருணாஸ்: சரி, சரி முறைக்காத... அதான் தெரியுமே? சில நேரம் நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனு வாதம் பண்ணறியே... பொதுவா எனக்கு யாரும் எதிர்த்து பேசினா பிடிக்காது. ஆனா, என்ன செய்ய... கடைசில நான்தான் விட்டுக் கொடுத்துப் போறேன்.
கிரேஸ்: ஹை... பேட்டினதும் இப்படி பேசறியா? உண்மைல நான்தான் விட்டுக் கொடுத்து போறேன். பையனுக்கு வித்தியாசமா இருக்கும்னு ‘கென்’ அப்படீன்னு பேர் வச்சியே... நான் விட்டுக் கொடுக்கலையா?
கருணாஸ்: நீ கூடத்தான் பொண்ணுக்கு ‘டயானா’னு பேரு வச்ச. நான் விட்டுக் 
கொடுக்கலையா?
கிரேஸ்: கருணா... வேண்டாம்...
கருணாஸ்: சரி... சரி...
கிரேஸ்: அது... ஓகே. இப்ப சினிமா பத்தி பேசுவோம். நீ நடிச்சதுலேயே எனக்கு பிடிச்சது லொடுக்கு பாண்டி கேரக்டர்தான். அதேமாதிரி ஒரு படத்துல நீ விக்ரமோட ‘பிதாமகன்’ கெட்அப் போட்டுட்டு பண்ணின காமெடி எனக்கு பிடிக்கல. நான் அவரோட ஃபேன் தெரியுமா?
கருணாஸ்: அதென்னவோ நான் மத்தவங்களை இமிடேட் பண்ணி நடிச்சா மட்டும் எல்லாரும் வருத்தப்படுறாங்க. உன்னை 
மாதிரிதான் விக்ரமுக்கும் என்மேல சின்ன கோபம் இருந்துச்சு. அதுக்குப் பிறகு அந்த மாதிரி இமிடேட் பண்ணி நடிக்கிறதில்லை. நீ பாடின அம்புட்டு பாட்டும் எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் நான் எதிர்பார்த்த சில பாட்டுங்க ஹிட்டாகாம போனப்ப  ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன்...
கிரேஸ்: ரொம்ப உருகாத... ஊருக்கு போட்டுக்கிட்டு போன நகையெல்லாத்தையும் பத்திரமா கொண்டு வந்திட்டியா?
கருணாஸ்: நகைன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. எல்லாரும் ‘என்ன சார் ஸ்டண்டு மாஸ்டருங்க மாதிரி நகை போட்டுருக்கீங்க’னு கேட்டாங்க. சும்மா அவசரத்துக்கு அடகு வைக்கத்தான்னு சொல்லி சமாளிச்சேன். எல்லாம் நீ போட்டு அழகு பாத்ததுன்னு சொல்ல 
வெட்கமா இருந்திச்சு.
கிரேஸ்: ஏன் கருணா வெட்கப்படணும்? உங்கள நான் காதலிச்சப்ப உங்ககிட்ட ஒரு கிராம் தங்கம் கூட கிடையாது. ஆனா, உள்ளூர உங்களுக்கு நகைங்க மேல ஆசை இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான் காதலிச்ச பிறகு வந்த முதல் பிறந்த நாள்ல உங்களுக்கு ரெண்டு கிராம்ல ஒரு மோதிரம் வாங்கி பிரசண்ட் பண்ணினேன். ஏதோ பெரிய தங்க சுரங்கத்தை எழுதிவச்ச மாதிரி சந்தோஷப்பட்டீங்க. கல்யாணத்துக்கு பிறகு ரெண்டு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கிக் கொடுத்தேன். ஒரு கிராம் தங்கத்துக்கு  கஷ்டப்பட்ட உங்கள தங்க நகையால அலங்கரிக்கணும்னு நினைச்சேன்... செஞ்சேன். ஆனா, நகைங்க மேல எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இந்த விஷயத்துல நான் புருஷன், நீங்க பொண்டாட்டி.
கருணாஸ்: ஆஹா லவ் பீலிங்க கொட்டிட்டியே கிரேஸ். ஐ லவ் யூ...
கிரேஸ்: ஐ டூ கருணா. உங்கிட்ட எல்லாமே புடிச்சிருக்கு. ஆனா, உன் வாய்தான் புடிக்கல. எங்க போனாலும் மனசுல இருக்குறத பட்டுன்னு போட்டு உடைச்சு வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்துடுவ. இந்த முறை டூர் போனப்ப அப்படி யார் கிட்டேயும் எதையும் சொல்லி வைக்கலியே...
கருணாஸ்: சாரி கிரேஸ் சொல்லிட்டேனே...
கிரேஸ்: (பதட்டமாக) என்ன சொன்ன கருணா?
கருணாஸ்: ...........
(கிரேஸ் நம் பக்கம் திரும்பி ‘அண்ணா இவர் இப்படித்தான்... நீங்க பாட்டுக்கு அதை எழுதி வம்புல மாட்டி விட்டுடாதீங்க’ 
Read More

பழம் பழுக்கலையேன்னா நான் என்ன பண்றது?


கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் கெடுக்கிற மாதிரியே முன்னாடி வந்து நிக்குது முசுடுத்தனம், என்ன பண்ணுறது... அது அவரோட சுபாவம் என்று மூக்கை துடைத்துக் கொள்கிறார் மேனேஜர். யாருடைய மேனேஜர்? எதுக்காக இந்த அழுகை? வேறொன்றுமில்லை, அலைந்து திரிந்து ஒரு வாய்ப்பை கொண்டு வந்தாராம் பாவனாவின் மேனேஜர். அதில் கேரக்டர் சின்னது என்று முகத்தை சுளித்துக் கொண்டாராம் பாவனா. இதுதான் பிரச்சனை.
பிரபுதேவா இயக்கும் க்ளின் இச் என்ற படத்தில் நடிக்கதான் பாவனாவை 'தள்ளிவிட்டார்' மேனேஜர். முதலில் சந்தோஷமாக தலையாட்டிய பாவ்ஸ், படத்தில் தன்னுடைய கேரக்டர் மூன்றாவது நாயகி என்றதும் அப்செட். இதுக்கா என்னை வரச்சொன்னீங்க என்று கோபித்துக் கொண்டு கேரளா போய்விட்டாராம்.
படம் கிடைக்கறதே பாலைவன சோலையா இருக்கு. இதில் பழம் பழுக்கலையேன்னா நான் என்ன பண்றது? இதுதான் மேனேஜரோட புலம்பலாம்!

Read More

Thursday, May 6, 2010

ஆறு படங்கள் கலகலக்கும் பூர்ணா

‘முனியாண்டி விலங்கியல்’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் பூர்ணா. அந்தப் படத்தின் அட்டர் பிளாப் ரிசல்ட்டின் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
ஆனால் அதில் நடித்த ஹீரோவும் ஹீரோயினும்... ஹீரோவை விடுங்க... இந்தப் படத்தில் நாயகியாக நடித்த பூர்ணா இப்போது உச்சத்திற்குப் போய்விட்டார்.
இவர் கையில் இப்போது ‘கும்பமேளா’, ‘துரோகி’, ‘அர்ஜூனன் காதலி’, ‘வித்தகன’, ‘வேலூர் மாவட்டம்’ என சுமார் ஆறுக்கு மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்களில் வித்தகன் தவிர மற்றவை படப்பிடிப்பில் உள்ளன. வித்தகன் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஸன் வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூர்ணா.
Read More

எனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது,

நான் நடித்து வெளியாகும் படங்களை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்ப்பதில்லை. அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். இதுதான் என் ஸ்டைல் என்கிறார் தமன்னா.

தில்லாலங்கிடி படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னா அளித்த பேட்டி:

சுறா படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். ஆனால் அந்தப் படம் எப்படிப் போகிறது என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. அதில் நான் என்ன செய்திருக்கிறேன் என்று கூட ஆராய விரும்பவில்லை. இதுபோன்ற போஸ்ட் மார்ட்டத்தை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. அந்தப் படம் முடிந்ததும் அடுத்த படம்... இதுதான் என் பாணி.

என்னைப் பற்றிய விமர்சனங்கள் நல்லதோ கெட்டதோ.. எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன்.

சுறாவில் காணாமல் போன நாய்க்காக தற்கொலை செய்து கொள்ளத் துணியும் பெண் வேடத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் நிஜத்தில் நான் அந்த அளவுக்கு முட்டாள்தனமான பெண் அல்ல. நான் மிகத் துணிச்சலானவள்.

இப்போது நான் பிஸியாக இருக்கிறேன். முன்னணியில் உள்ளேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இப்போது நான் செலக்டிவாக படங்களை ஒப்புக் கொள்ள முடியாது. வருகிற நல்ல வாய்ப்புகளை ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம். அது எப்படிப்பட்ட வேடம், எனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது," என்றார்.
Read More

அமிதாப், ஷாரூக் கானுக்கு தபால்தலை!- இலங்கை ஏற்பாடு


பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் தபால் தலைகள் இலங்கையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்திய நடிகர் நடிகைகளுக்காக இலங்கையில் தபால் தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

ஜூன் மாதம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

இந்த விழாவில் அமிதாப் கலந்து கொள்வது சந்தேகத்துக்கிடமாக உள்ள நிலையில், இந்த தபால் தலை வெளியீடு பற்றி தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌சே உத்தரவிட்டுள்ளார். அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளும் விழா, தமிழக சின்னத்திரை கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அடக்கம்.

இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று திருமாவளவன், வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து அமிதாப் மற்றும் தமிழக சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப் மற்றும் ஷாருக்கானுக்கு இலங்கையில் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

ரத்ததானம் செய்யும் போது...


 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும்.

* நம்முடைய உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது 300 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.

* ரத்ததானம் செய்பவர்களின் உடல் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும் இயல்பாக இருக்க வேண்டும்.

* ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

* ரத்த தானம் செய்ய இருபது நிமிடங்கள் போதும்.

* ரத்ததானம் செய்த பின்னரும், நாம் வழக்கமான பணிகளை செய்யலாம்.
Read More

அப்பாவுடன் இரண்டு மகன்மார் நடனம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம். இவர், ராஜூசுந்தரம்-பிரபுதேவாவின் அப்பா. இதுவரை திரைக்கு பின்னால் மட்டும் இயங்கி வந்த இவர், முதல்முறையாக ஒரு படத்தில், கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அந்த படத்தின் பெயர், `பா ர பழனிச்சாமி.' ஓய்வுபெற்ற ஒரு ராணுவ அதிகாரி, ரவுடிகளை களை எடுப்பதுதான் இந்த படத்தின் கதை. இதில், காதல் ஜோடிகளாக ஸ்ரீனிவாஸ்-மீனாட்சி கைலாஷ் நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்காக சமீபத்தில், ``நேற்று அது உனக்கு...இன்று அது எனக்கு...நாளை அது யாருக்கு தெரியுமா?'' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்துடன் அவரது மகன்கள் ராஜூசுந்தரமும், பிரபுதேவாவும் இணைந்து நடனம் ஆடினார்கள்.
படப்பிடிப்பு தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. தங்கம் ரியல் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து, டைரக்டு செய்கிறார் பி.தங்கவேல்.
Read More

ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆகும் நமீதா!

மடியிலே கனமில்லாத 'மச்சான்ஸ்' அது. நமீதா நேரடியாக கைகுலுக்கினால் கூட சிலிர்க்காது. ஆனால் இவர் மச்சான்ஸ் என்று சொல்லும் மனசு குலுங்கி போகிறது ஒவ்வொரு முறையும். ஆனால் இந்த மச்சான்ஸ்-ல் ஒரு லு வை சேர்த்து 'மச்சான்ஸ்லு' என்று ஆந்திராவுக்கும் ஏற்றுமதி செய்வார் போலிருக்கிறது நமீதா. ஏனென்றால் சமீபத்தில் அவருக்கு கிடைத்திருக்கிற ஹிட்டும், அதை தொடர்ந்த அழைப்பும்தான் காரணம்!
தமிழில் அநேகமாக தலைமுழுகப்பட்ட நமீதாவுக்கு ஆந்திர தேசம் கைகொடுத்திருக்கிறது. இவர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்த சிம்ஹா என்ற படம் செமத்தியான ஹிட். அதுவும் ஆந்திராவில் தனி தெலுங்கானா கலவரத்திற்கு பிறகு ஹிட் ஆகிற முதல் படம் என்பதால் இந்த ஹிட்டுக்கு பெரிய மரியாதை கிடைத்திருக்கிறதாம். போதும் தமிழ்நாட்டுக்கு உழைச்சது. நம்ம பக்கம் வாங்க என்று இருகை நீட்டி அழைக்கிறதாம் ஆந்திரா.
இதையடுத்து ஏராளமான படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருக்கிறாராம் நமீதா. தமிழில் சொந்தப்படம் எடுக்க நினைத்து கதை கேட்டு வைத்திருந்தார் சில உதவி இயக்குனர்களிடம். சிம்ஹாவின் இந்த திடீர் வெற்றி, இதுபோன்ற உ.இ க்களின் நம்பிக்கையில் பாம் போட்டிருப்பதுதான் பரிதாபம்! அவருக்கென்ன? 'மன்னிச்சுகோங்க மச்சான்ஸ்' என்று கூறிவிட்டால் போச்சு!
Read More

2 குழந்தைகளை திரிஷா தத்தெடுத்தார்;





நடிகை திரிஷாவுக்கு சமூக சேவைபணிகளில் ஈடுபாடு அதிகம். ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழைகளுக்கு ஓசையில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். புற்று நோய் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெறும் அடையாறு ஆஸ்பத்திரிக்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நேரில் சென்று துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் வழங்கி உணவும் பரிமாறுகிறார்.
நேற்று தனது பிறந்த நாளையொட்டி திருவேற் காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாய் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றனர். காலையில் இருந்து பல மணி நேரம் அந்த குழந்தைகளுடன் பேசி செலவிட்டார். 400 குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கினார்.
பின்னர் உதவும் கரங்கள் இல்லத்தில் இருந்து 2 ஆதரவற்ற குழந்தைகளைதத்து எடுத்தார். அதில் ஒன்று பெண் குழந்தை, மற்றொன்று ஆண் குழந்தை. பெண் குழந்தைக்கு லேசாக மனவளர்ச்சி குன்றி இருந்தது. பிறர் தத்து எடுக்க விரும்பாத குழந்தைகளை தத்து எடுக்க விரும்புகிறேன். அவர்களை காட்டுங்கள் என்று உதவும் கரங்கள் நிர் வாகிகளிடம் கூறி இவ்விரண்டு குழந்தைகளை தத்தெடுத்தார்.
திரிஷாவை பார்த்து அவருடன் சென்ற தோழியும் ஒரு குழந்தையை தத்தெடுத்தார்.
திரிஷா கடைசியாக நடித்து ரிலீசான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வெளியான நமோ வெங்கடேசா படமும் சூப்பர் ஹிட் தற்போது அக்ஷய் குமார் ஜோடியாக “காட்டா மீட்டா” இந்தி படத்தில் நடித்து வருகிறார். கமல் ஜோடியாக “யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
Read More

தமிழ் படத்துக்கு மும்பை நடிகைகள் ஏன்? : குஷ்பு!



ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் படம் ‘வெளுத்து கட்டு’. சேனாபதிமகன் இயக்குகிறார். பரணி இசை அமைக்கிறார். புதுமுகங்கள் கதிர், அருந்ததி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. முதல் சிடியை விஜய் வெளியிட குஷ்பு பெற்றார்.

பின் குஷ்பு பேசும்போது, ‘ஒருவர் படம் தயாரிக்க விரும்பினால் உடனே தெரிந்த வடநாட்டு நடிகை யாராவது இருக்கிறாரா, வேற்று மொழி நடிகை இருக்கிறாரா என்றுதான் தேடுகிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ் பேசும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தலாம். அப்படிப்பட்ட அருந்ததி என்ற பெண்ணைத்தான் இதில் நாயகியாக்கி இருக்கிறார் சந்திரசேகரன். ராதா, சரிதா என இருவரையும் ஒன்றாக பார்த்ததுபோல் இருக்கிறார் அருந்ததி’ என்றார்.

விஜய் பேசும்போது, ‘எப்போதுமே ஓடுகிற குதிரையில் ஏறி என்னுடைய அப்பா சவாரி செய்யமாட்டார். அவரே ஒரு குதிரையை தயார் செய்து அதில்தான் சவாரி செய்வார். விஜயகாந்த், ரகுமான், சிம்ரன் நான் என பல ஸ்டார்களை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போதுகூட புதுமுகத்தை வைத்துதான் படம் தயாரிக்கிறார். எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது அவர்தான். எனக்கு ஏதாவது பிரச்னை என்றால் அவர்தான் தீர்த்து வைப்பார்’ என்றார். விழாவில் ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன், அபிராமி ராமநாதன், கே.முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, காஜாமைதீன், வி.சி.குகநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More

இந்த வயதில் எதுக்கு ரிஸ்க்..விஜய்.


இந்த வயதில் எதுக்கு ரிஸ்க்... ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று என் தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்துகிறேன். ஆனால் சொன்னால் கேக்க மாட்டேங்குறார், என்றார் விஜய்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தயாரிப்பில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம், 'வெளுத்து கட்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில், கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். சேனாபதி மகன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக்கொண்டார்.

விழாவில், விஜய் பேசியதாவது:

"எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார்.

விஜயகாந்த், ரகுமான், நான் (விஜய்) போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட ஒன்ஸ்மோர் படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்துள்ளார்.

எங்க அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. எனக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், முதலில் எங்க அப்பாவிடம்தான் விவாதிப்பேன். என் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, ரசிகர்களுக்கு நல்வழி காட்டியதெல்லாம் அப்பாதான்.

அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி, நான் நீண்ட நாட்களாகக் கூறி வருகிறேன். 'சூரியன் ஓய்வா எடுக்கிறது? காற்று ஓய்வா எடுக்கிறது?' என்று என்னிடம் திருப்பிக் கேட்டு அமைதியாக்கி விடுகிறார். யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்குறார். இன்னும் தொடர்ந்து அவர் படம் எடுத்து வருகிறார்...'', என்றார்.

நடிகர்-டைரக்டர் பார்த்திபன் பேசுகையில், "குஷ்பு மேல்-சபை உறுப்பினர் ஆகப் போகிறார் என்று கூறுகிறார்கள். அவருக்கு என் வாழ்த்துக்கள். வரப்போகிற மேல்-சபையில் பெண்கள் 50 சதவீதம் இருந்தால் நல்லது.

சமீபத்தில், ஒரு வக்கீல் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

இதேபோல் ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தபின், அவனுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது. இப்படி ஒரு முடிவை இனிமேலாவது வக்கீல்கள் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...'', என்றார்.

மும்பை போக வேண்டாம்...

குஷ்பு பேசும்போது, "தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை தேடி கேரளாவுக்கும், மும்பை க்கும் போவதை நிறுத்த வேண்டும். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் பேசினர். படத்தின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
Read More

Wednesday, May 5, 2010

கருணாநிதியின் வீட்டில் பெண்சிங்கம்!


முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள பெண் சிங்கம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திருக்குவளையில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டில் நடந்தது.

உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் பெண் சிங்கம் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பாலிஸ்ரீரங்கம் இயக்கும் இப்படத்துக்கான இறுதி கட்டப் படப்பிடிப்பு முதல்வர் கருணாநிதி வாழ்ந்த திருக்குவளை வீட்டில் நடந்தது. அவர் படித்த பள்ளிக்கூடம் மற்றும் திருக்குவளை தெருக்களிலும் படப்பிடிப்பு நடந்தது. அவ்வூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிந்ததும் திருக்குவளையில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கபட்டன. நிகழ்ச்சியில் இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம், ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் ஜெயமுருகன், தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரைவில் திரைக்கு வருகிறது பெண் சிங்கம்.
Read More

மீண்டும் வருகிறார் சித்தார்த்


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news‘பாய்ஸ்’ சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார். ‘திரு திரு துறு துறு’ படத்தை அடுத்து சத்யம் சினிமாஸும், ரியல் இமேஜும் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. இதை விளம்பர பட இயக்குனர் ஜெயேந்திரா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
நானும் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமும் இணைந்து ஜேஎஸ் பிலிம்ஸ் என்ற விளம்பர பட நிறுவனத்தை ஆரம்பித்தோம். இதன் மூலம் 500க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியுள்ளோம். இதற்கிடையில் கர்நாடக இசையை மையபடுத்தி ‘மார்கழி ராகம்’ என்ற படத்தை சில வருடங்களுக்கு முன் இயக்கினேன். இது உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்போது இந்த படத்தை இயக்குகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘பாய்ஸ்’ சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயின். தமிழ், தெலுங்கில் எடுக்க முடிவு செய்துள்ளோம். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக, ரெட் ஒன் கேமரா நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ள ‘ரெட் எபிக்’ என்ற நவீன கேமராவை பயன்படுத்த உள்ளோம். யதார்த்தமான ரொமான்டிக் படமாக இது இருக்கும். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறு ஜெயேந்திரா கூறினார்.

Read More

ஹீரோயின் ஆனார் பார்வதி ஓமணக்குட்டன்



கடந்த 2008&ல் நடந்த உலக அழகி போட்டியில், இரண்டாவது இடம் பிடித்தவர் பார்வதி ஓமணக்குட்டன். அவர் ஹீரோயினாக தமிழில் நடிக்கும் படம், ‘உமா மகேஸ்வரம்’. பரத நாட்டியத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. ட்ரூ சோல் நிறுவனம் தயாரிக்கிறது. முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். வி.டி.விஜயன் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் இசையமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நிதின் ராமகிருஷ்ணா இயக்குகிறார். மலையாளத்தில் கலாபவன் மணி, விமலா ராமன் நடித்த ‘அபூர்வா’ என்ற படத்தை 17 வயதில் இயக்கியவர் நிதின் ராமகிருஷ்ணா. இந்த படத்தின் தொடக்க விழா, விரைவில் சென்னையில் நடைபெறுகிறது.

Read More

ரஞ்சிதாவை விசாரணைக்கு வரவழைக்க நடிகர் சங்க உதவியை நாடும் கர்நாடக போலீஸ்

பெங்களூர் : நடிகை ரஞ்சிதாவை விசாரணை க்கு வரவழைக்க கடுமையாக போராடி வரும் கர்நாடக சிஐடி போலீஸார், ரஞ்சிதாவை வரவழைக்க நடிகர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளதாம்.

நித்தியானந்தாவுடன் ஆபாச கோலத்தில் நடிகை ரஞ்சிதா இருந்த வீடியோ வெளியாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில்,கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை கர்நாடக போலீஸ் படை பிடித்து பெங்களூர் கொண்டு வந்தது.

ஆனால் ரஞ்சிதா மட்டும் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இடையில் நித்தியானந்தா மூலம் ரஞ்சிதாவின் தொலைபேசி எண்ணைப் பெற்ற கர்நாடக சிஐடி போலீஸார், அவரிடம் பேசினர்.

அதற்கு ரஞ்சிதா, விசாரணைக்கு தானே நேரில் வருவதாகவும், இரவில் மட்டும் விசாரணையை மேற்கொள்ளுமாறும், ரகசியமாக இதை வைத்துக் கொள்ளுமாறும் கூறியதாக செய்திகள் கூறின.

ஆனால் இதுவரை ரஞ்சிதா வரவில்லை. வாக்குமூலமும் தரவில்லை. தற்போது விசாரணைக்கு வருமாறு கூறி ரஞ்சிதாவுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளது கர்நாடக சிஐடி போலீஸ். இதற்காக சென்னையில் உள்ள அவரின் வழக்கறிஞர் ஒருவரையும், நடிகர் சங்க நிர்வாகிகளையும் சில நாட்களுக்கு முன் சந்தித்து கர்நாடக சிஐடி போலீசார் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சங்கத்தினரும் ரஞ்சிதாவை தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளனராம்.
Read More

அஜமல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை

கசாப்புக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்பது இன்னும் தெரியாத நிலையில் அவனை தூக்கில் போட்டு விட்டனர்-இந்திப் படம் ஒன்றில்.

மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய ஒரே தீவிரவாதி அஜமல் கசாப் மட்டுமே. அந்த வழக்கில் கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவனுக்கான தண்டனை குறித்து நாளை அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்,.கசாப் குறித்து இந்தியில் ஒரு படம் தயாராகி வருகிறது. அசோக் சக்ரா என்ற பெயரில் மும்பைதீவிரவாத தாக்குதல் சம்பவத்தை பின்னணியாகவைத்து ஒரு படம் தயாராகியுள்ளது. மே 28ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

ராஜன் வர்மா என்ற புதுமுக நடிகர் கசாப் வேடத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட கசாப் போலவே இவருக்கு முகவெட்டு இருப்பதால் இந்த ரோலுக்கு இவரை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுவதாக காட்சி இடம்பெற்றுள்ளதாம். மே 9ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
Read More

"மேடையில விஜய் சாரு இருக்காரு.உடம்பெல்லாம் வைப்ரேஷன்

வெளுத்துக்கட்டு பட விளம்பரங்களில் இடம்பெறும் *என் வாழ்க்கையில் சில நாட்கள்* என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் தவித்த விஜய் ரசிகர்களுக்கு அப்படத்தின் வெளியீட்டு விழா மேடையில் விளக்கம் கிடைத்தது. அதுவும் சந்திரசேகரின் வாயிலிருந்தே.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பக்கத்திலே இருக்கிற சின்ன கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்க அம்மா கூட என்னை உருப்பட மாட்டான் என்றுதான் திட்டுவாங்க. அந்தளவுக்கு நான் பொறுக்கியா அடங்காதவனா சுத்திகிட்டு இருந்தேன். அந்த வயசில நான் செஞ்ச குறும்புகளைதான் வெளுத்துக்கட்டுங்கிற படமா எடுத்திருக்கேன் என்றார் எஸ்.ஏ.சி.
முதல் ஆடியோவை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக் கொண்டார். படத்தின் ஹீரோ கதிர், ஹீரோயின் அருந்ததி இருவருக்குமே தமிழ் மண்தான். அதிலும் மதுரைக்கு பக்கத்திலிருக்கிற ஏதோ ஒரு பட்டிதான் அருந்ததிக்கு சொந்த ஊர். மனசெல்லாம் தந்தியடிக்க, நம்ம ஊரு தமிழில் அருந்ததி பேசியது அழகோ அழகு. (மும்பை சுந்தரிகளின் நுனி நாக்கு ஆங்கிலத்தை தொடர்ந்து கேட்டவர்களுக்கு புரியும் இந்த சுச்சுவேஷன்) "மேடையில விஜய் சாரு இருக்காரு. எனக்கு உடம்பெல்லாம் வைப்ரேஷன் ஓடுது. என்ன பேசுறதுண்ணே புரியல" என்று அவர் தவித்த தவிப்பை பார்க்கணுமே. அதுவே ஒரு வைப்ரேஷன்தான் போங்க....
விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கரண்ட் ஆஃப்! ஆனாலும் விடாமல் அவர் மைக்கில் பேசிக் கொண்டிருக்க அவரது முகம் இருட்டில் சரிவர தெரியாததால் கூச்சலிட்டார்கள் ரசிகர்கள். கரண்ட் இல்ல. அதுக்காக என்ன பண்றது என்றவர் தொடர்ந்து பேசி முடித்துவிட்டுதான் இருக்கையில் அமர்ந்தார்
Read More

புலிகள் பற்றிய பாடல்!


உணர்வோடு வைக்கப்பட்ட பாடலா, அல்லது விளம்பரத்துக்காகவா? தெரியவில்லை. தம்பி அர்ஜுனா படத்தில் ஒரு பாடல்! புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது நரிகள் ஆட்டம் போடுமே, நரிகள் வேஷம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே... யுகபாரதி எழுதியிருக்கும் வரிகள் ஒவ்வொன்றும் அக்னியாக ஜொலித்தது. படத்தின் இயக்குனர் விஜய் ஆர் ஆனந்திடமே இது பற்றி கேட்டோம்.
படத்தில வர்ற ஒரு சுச்சுவேஷனுக்கான பாடல்தான் இது. இப்படி ஒரு வரிகளை கேட்ட எவரும் சென்சார்ல எப்படிங்க அனுமதிப்பாங்க என்று கேட்கிறாங்க. நமது தேசிய விலங்கே புலிதானே? வீரத்தை பற்றி எழுதும்போது புலிகள் என்ற வார்த்தையில்லாமல் எப்படி எழுத முடியும் என்றார். ஆனால் ஒரு விஷயத்தை அவரால் மறைக்க முடியவில்லை. இந்த வரிகளை கேட்டுட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நிறைய பேர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாங்க. ஏராளமான பாராட்டுகளும் கிடைச்சுது. வரிகளுக்கு பொருத்தமா இசையமைச்ச தினாவையும் இந்த இடத்தில பாராட்டணும் என்றார்.
ஆபாவாணன், தினா, ஷங்கர் மகாதேவன் மூவரும் பாடியிருக்கும் இநத் பாடல் உலகம் முழுக்கவே ஒரு எழுச்சியை உருவாக்கும் போலதான் தெரிகிறது.

Read More

விஜய்யிடம் கதை சொன்ன பிரபல தயாரிப்பாளரின் வாரிசு

அல்வா கடை ஓனருக்கு சுகர் வந்த மாதிரிதான் இருக்கிறது அநேக வெற்றிப்பட தயாரிப்பாளர்களோட நிலை. ருசிக்காக கூட ஒரு கிள்ளு கிள்ளி வாயில் போட முடியாது. அந்தளவுக்கு ஆமை வேகம் இந்த வாரிசுகளின் முன்னேற்றத்தில். தமிழ்சினிமாவின் தலையெழுத்தையே மாற்றிய பாரதிராஜாவின் வாரிசுக்கு நடிப்பும் ஒடசல். அனுபவமும் அடைசல். ஜெயம் ரவி, ராஜா மாதிரி யாரோ ஒரு சிலருக்குதான் குலத் தொழிலை காப்பாற்றுகிற பெருமை வாய்க்கும். அப்படி ஒரு வாய்ப்பு வந்து விடாதா என்று போராடிக் கொண்டிருக்கிறாராம் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் வாரிசு கலாப்பிரபு.
சக்கரக்கட்டி படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. ஆனால் அப்படத்தில் வெற்றிக்கனியை கோட்டை விட்ட கலாப்பிரபு மீண்டும் தனக்காக ஒரு சில கோடிகளை இறைக்க முன் வர வேண்டும் என்றாராம் அப்பா தாணுவிடம். அவரோ, நீயே உன் முயற்சியில் முன்னணி ஹீரோக்கள் யாரிடமாவது கதை சொல்லி கால்ஷீட்டோடு வா. எத்தனை கோடி வேண்டுமானாலும் தர தயார் என்றாராம்.
உடனடியாக விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொன்னாராம் கலாப்பிரபு. அவருக்கும் கதை பிடித்துவிட, கொஞ்ச நாள் வெயிட் பண்ணு என்று கூறியிருக்கிறாராம் விஜய். இளைஞர்கள் போடும் புது ரூட் இந்த முறையாவது க்ளிக் ஆகட்டும்.
Read More