Pages

Sunday, May 16, 2010

“விக்ரம்- ஐஸ்வர்யாராய்க்கு தேசிய விருது கிடைக்கும்

விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிக்கும் ராவணன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ளார்.
 
இப்படத்தின் சில காட்சிகளும் பாடலும் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி ஆடிட்டோரியத்தில் நேற்று இரவு பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மேடையில் அடர்ந்த மரங்கள் அடங்கிய காடு போன்ற அரங்கு நிர்மாணித்து இருந்தனர். அதில் ஆட்டம் பாட்டமுமாய் நிகழ்ச்சிகள் நடந்தன. விக்ரம் ஒரு பாட்டுக்கு காட்டுவாசி வேடமிட்டு ஆடினார்.
 
இப்படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலை பாடினார். நிகழ்ச்சிகளை நடிகர் கார்த்திக், நடிகை பிரியாமணி தொகுத்து வழங்கினார்கள். இவ்விருவரும் ராவணன் படத்தில் நடித்துள்ளனர்.
 
இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள பிரபு, பிருதிவிராஜ் ஆகியோரும் பேசினார்கள்.
 
விக்ரம் பேசும் போது:-
 
ராவணன் படம் ராமாயண கதை என்று சொல்ல முடியாது. ராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம், உள்பட எல்லா புராண கதைகளும் இதில் அடங்கியுள்ளது. காடுகள், மலைகள் என அலைந்து கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ளோம். திரில்லிங் ஆக இருந்தது என்றார்.
 
கவிஞர் வைரமுத்து பேசும் போது இப்படத்துக்காக ஒரே இடத்தில் அமர்ந்து ஆறு பாடல்கள் எழுதினேன். மணிரத்னம் தவம் போல் இப்படத்தை எடுத்துள்ளார். ராவணன் படத்துக்காக மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யாராய் மூவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார். மணிரத்னம் விழாவில் கலந்து கொண்டார்.
ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.
Read More

நான்கு இந்தி படங்களுக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

இசையின் ராஜா இளையராஜா கடந்த வாரம் மும்பை போய்விட்டு வந்திருக்கிறார். அடிக்கடி போவதுதானே, இப்போதென்ன தனி ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு...
இந்த ட்ரிப், ராஜாவின் ராக ராஜாங்கத்திற்கு பாலிவுட் விரித்த சிவப்பு கம்பளம். ஏற்கனவே பாலிவுட்டின் பிரபல இயக்குனர் பால்கி இயக்கிய படங்களுக்கு இசையமைத்து இந்தியிலும் தனது இசையை 'கலக்க'விட்டவர் ராஜா. இந்த முறை இவரை அழைத்த பாலிவுட் ஒரேயடியாக நான்கு படங்களுக்கு இசையமைக்க சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறது.
அந்த நான்கு கதைகளையும் கேட்கதான் இந்த பயணமாம். இந்த நான்கில் ஒன்று அமிதாப் பச்சனின் சொந்தப்படம். மற்றொன்று பால்கி இயக்கப் போகிற படம். இந்த நேரத்தில் 67 வயதை தொடப்போகும் ராகதேவன் ராஜாவுக்கு, விமரிசையாக பிறந்தநாள் கொண்டாட தீர்மானித்திருக்கிறார்களாம் அவரது வாரிசுகளான கார்த்திக், யுவன், பவதாரிணி மூவரும். இதில் கலந்து கொள்ள அழைக்காமலே வந்துவிடுவார்கள் போலிருக்கிறது அமிதாப்பும் பால்கியும்.
ஆமாம், இசையை காதலிப்பவர்களுக்கு இளையராஜா வேறு, இசை வேறா என்ன?

Read More