Pages

Saturday, April 24, 2010

"பிரசாந்த்தை வேறு டைரக்டர்களுடன் வொர்க் பண்ண விடுங்களேன்"

'மம்பட்டியான்' படத்தின் பிரஸ்மீட். இதுவரைக்கும் நாலு முறை சந்திச்சிட்டோம். மீராஜாஸ்மினை கண்ணிலேயே காட்டலயே சார் என்று டைரக்டர் தியாகராஜனிடம் கேட்டோம். இவர் வேறு யாரோ தியாகராஜன் அல்ல. நம்ப பிரசாந்தின் அப்பாவேதான். குறுகுறு கேள்விதான். அதற்காக திருதிருவென்று முழிக்கிறவரா அவர்? "இது மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக்குங்கறதால படப்பிடிப்பை சென்னையில வைக்கல. வச்சிருந்தா அவங்கள பார்த்திருக்கலாம். இப்ப என்ன கெட்டு போச்சு. இன்னும் ஒரு வாரத்தில ஆடியோ ரிலீஸ். வருவாங்க. நல்லா பார்த்துக்கோங்க" என்றார்.
தியாகராஜன் சொன்ன ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இது. வேற்றுமைன்னு கூட எடுத்துக்கலாம். மலையூர் மம்பட்டியான் என்று அந்த படத்துக்கு பேரு வச்சிருந்தோம். (1983 களில் வந்த படம் அது. தியாகராஜன்தான் அதில் ஹீரோ) ஆனா, மலையூர்ல ஒரு ஷாட் கூட எடுக்கலே. இந்த படத்துக்கு மம்பட்டியான் என்று பேரு வச்சிருக்கோம். ஆனா, மலையூர்ல ஷ§ட்டிங் வச்சேன் என்றார். காதல் படங்களாக நடித்துக் கொண்டிருக்கும் பிரசாந்த், இந்த படத்தில் ஆக்ஷன் முகம் காட்டுகிறார்.
வின்னர் படத்திற்கு பிறகு பிரசாந்தும், வடிவேலுவும் கலந்து கலக்குற படம் இது. மறுபடியும் நினைச்சு நினைச்சு சிரிக்கிற காமெடியா இருக்கும் என்றார் தியாகராஜன். "பிரசாந்த்தை வேறு டைரக்டர்களுடன் வொர்க் பண்ண விடுங்களேன்" என்ற பத்திரிகையாளர்களின் விமர்சனத்திற்கு தியாகராஜன் சொன்ன பதில், மைல் கணக்கில் நீளும் என்பதால் சுருக் என்று சொல்லிவிடுகிறோம்.
படத்தை எடுக்கிறாங்க. கடைசியில் ரிலீசுக்கு வந்து எங்ககிட்டதான் நிக்கிறாங்க. வாங்குன சம்பளத்தையும் இழந்துதான் அந்த படத்தை நாங்க ரிலீஸ் பண்ணி கொடுக்க வேண்டியதா இருக்கு. தனியா நின்று தில்லா ரிலீஸ் பண்ற தயாரிப்பாளரும், டைரக்டரும் கொடுங்க. நடிச்சிட்டு போகட்டும்... என்றார் சற்றே கோபத்துடன்!
Read More

சேனல் ரைட்சும், கேப்டன் டி.வியும்!

Goripalayam
சின்ன கவுண்டரிடம் சின்ன சின்ன படங்கள் சரண்டர்! கோடம்பாக்கத்துக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது இந்த சரண்டர். எப்படி? சன், கலைஞர் தவிர தமிழ் சினிமாவில் 'சேனல் ரைட்ஸ்' வாங்குகிற டி.விக்கள் எதுவும் நமது அலை வரிசைக்கு எட்டிய தூரம் வரை இல்லை. அப்படியிருக்கிற ஒன்றிரண்டு சேனல்கள் படத்திற்கான தொகையை தவணை முறையில் தருவதுடன், கால் விரல் ரேகை தேய்கிற அளவுக்கு நடக்கவும் விடுகிறார்களாம். இந்த ஏமாற்றம் கேப்டன் டி.வி ஆரம்பிக்கிற வரைதான். இப்போதோ நிலைமை தலைகீழ் என்கிறார்கள்.
பெரிய படங்களை வளைத்து போடுவதில் வேண்டுமானால் சுணக்கம் காட்டும் கேப்டன் டி.வி சற்றே சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் அட்டென்ஷன் காட்டுகிறதாம். சமீபத்தில் கேப்டன் டி.வி பேசி முடித்திருக்கும் படங்களில் முக்கியமானவை மாயாண்டி குடும்பத்தார் மற்றும் கோரிப்பாளையம் ஆகிய படங்கள். இவ்விரண்டு படங்களுக்கும் ஒரே டைரக்டர் ராசு.மதுரவன்தான். அதுவும் கோரிப்பாளையம் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தே.மு.தி.கவின் முக்கிய பிரமுகர்.
படம் வாங்குகிறார் என்பது தெரிந்த பிறகும் சும்மாயிருப்பார்களா? பாடல் வெளியீட்டு விழா, படத்துவக்க விழா என்று விஜயகாந்துக்கு வெற்றிலை பாக்கு வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் கலந்து கொள்ளும் விழா தொடர்பான செய்திகள் மட்டுமல்ல, படமே கூட கேப்டன் டி.வி யில் ஒளிபரப்பாகலாம் என்கிற அளவுக்கு நிலைமையில் படு முன்னேற்றம்.
Read More

இதயம் எப்படி உருவாகிறது?

இதயம் எப்படி உருவாகிறது?

 தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு  உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.
தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இதயத்தின்  முன்னோடியான முதிரா அமைப்பானது ஒரு தீக்குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந்நிறமருந்தின் அளவில் இருக்கும். இதயமாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோன்றுகின்றன. பிறகு, இந்த  இரண்டு மெல்லிய குழல்களும் இணைந்து ஒரே குழலாக உருமாற்றம் பெறுகின்றன. அதன்பிறகு இந்தக் குழலானது நன்கு வளர்ச்சி பெறத்  தொடங்குகிறது.
நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இந்தக் குழல் போன்ற அமைப்பானது (S) என்ற ஆங்கில எழுத்து வடிவில் உருமாற்றம்  அடைகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதியின் உடல் பகுதியானது (Truncஉச்)  நன்கு வளரத் தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழுமையாக வளர்வதற்கு முன்னரே இதயத்தின் உள் அறைகளைப்  பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொடங்குகின்றன. முதிர்ச்சி அடையாத இதயக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து  மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியாகப் பிரிக்கின்றன.
இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது. கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதயத்தின் மின்  அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம்பிக்கின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இதயத்தின் மின் அமைப்புகள்  உருவாதற்கு முன்னரே இதயமாவது துடிக்க தொடங்கிவிடுகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்புசுவர்களும் நான்கு  வெளிப்புற சுவர்களும் முழுமையாக உருவாகின்றன. இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது  வாரம் தொடங்கி ஆறாவது வாரம் வரை நடைபெறுகிறது.
இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பலவகையான வால்வுகள் அனைத்தும் இதயத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும்  குழல் தோன்றுதல், குழல்கள் இணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப்புச்சுவர்கள் உருவாதல், ரத்தக்குழாய்கள் தோன்றுதல், ரத்தக் குழாய்கள்  சுருங்குதல் போன்றவை மிகவும் முக்கியமான கட்டங்களாகக் கருதப்படுகின்றன.
Read More

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றி

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக ஸ்பெய்ன் மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 30 சத்திர சிகிச்சை நிபுணர்களினால் இந்த விசேட சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழுவதுமாக சிதைவடைந்த முகமொன்றுக்கு பதிலாக மற்றுமொரு நபரின் முகமொன்றின் பாகங்கள் பொருத்தி இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் முழுவதுமாக குறித்த நபரின் முகம் சிதைவடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாடை, மூக்கு, முகத் தோல், உதடுகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட பூரண முகப் பகுதியும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகமாற்று அறுவைச் சிகிச்சை 22 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முன்னர் பத்து முகமாற்று அறுவைச் சிகிச்சைகள் உலகில் இடம்பெற்ற போதிலும், இந்த அளவிற்கு மிகவும் சிக்கல் மிகுந்த முழு முகமாற்று அறுவை சிகிச்சையொன்று இதுவரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டினால் குறித்த நபர் காயமடைந்ததாகவும் இதற்கு முன்னர் ஒன்பது தடவைகள் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
சுவாசித்தல், உணவு உண்ணல், பேசுதல் போன்ற பல்வேறு அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது குறித்த நபர் அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

‘பார்க்க ஹோம்லியா இருக்கே.சிம்ரன் அட்வைஸ்


ஜெய்குமார் இயக்கத்தில், ‘உனக்காக என் காதல்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரதா. நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மும்பையில் என் வீடு அருகில் சிம்ரன் வசிக்கிறார். இதனால் அவருடன் நட்பு ஏற்பட்டது. அவரது ஆலோசனைப்படி நடனம் கற்றேன். ‘பார்க்க ஹோம்லியா இருக்கே. தமிழில் நடிக்க முயற்சி செய்’ என்று அட்வைஸ் செய்தார். முயற்சி செய்தேன். ‘உனக்காக என் காதல்’ வாய்ப்பு வந்தது. கல்லூரி பின்னணியில் நடக்கும் முக்கோண காதல் கதை இது. சில வருடங்களுக்கு முன், இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இப்படம் கல்லூரி மாணவர்களுக்கு பிடித்த படமாக, அவர்களுக்கு மெசேஜ் சொல்கின்ற படமாக இருக்கும்.
Read More

சமந்தாவும் இல்லையாம்... -பாலா படத்தின் அடுத்த நாயகி?

சமந்தாவும் இல்லையாம்... அவன் இவன் படத்திற்காக இன்னொரு ஹீரோயின் தேடி பெரும் வேட்டை நடத்தி வருகிற பாலா, கடைசியாக தேர்வு செய்திருந்த இந்த பெண்ணையும் போயிட்டு வாம்மா... என்று கூறிவிட்டாராம். தனது ஒவ்வொரு படத்திற்கும் இவர் கதாநாயகி தேடுவதையே தனி எபிசோடாக எடுத்து ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பி காசு பார்க்கலாம். அப்படியொரு சுவாரஸ்யமான சிந்துபாத் கதை அது. முந்தைய படமான நான் கடவுளுக்கும் சரி, இப்போது எடுத்துவரும் அவன் இவனுக்கும் சரி. ஒரே ஃபார்முலாதான் கதாநாயகி தேடுகிற விஷயத்தில்.
லேட்டஸ்டாக பாலாவிடம் இன்டர்வியூக்கு போன நடிகை மது ஷாலினி இவர் 16 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தனது கதைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறாராம் பாலா.
ஆச்சர்யம் என்னவென்றால் பாலாவின் நீண்ட தேடலில் பூஜாவும் இடையே வந்து போனார் என்பதுதான். நான் கடவுள் படத்தில் பட்ட கஷ்டம் இன்னும் மறந்திருக்காது அல்லவா? இந்த அழைப்பை அன்போடு மறுத்தாராம் பூஜாவும்!

Read More

முதல்வரின் கதை, வசனத்தில் நடிக்கிறார் பா.விஜய்


முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதும் ‘இளைஞன்’ படத்தில், பா.விஜய் ஹீரோவாக நடிக்கிறார். மார்டின் புரொடக்ஷன் சார்பாக மார்டின் தயாரிக்கும் படம் ‘இளைஞன்’. சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். பா.விஜய் ஹீரோ. அவர் ஜோடியாக ரம்யா நம்பீசன், மீனாட்சி நடிக்கின்றனர். மேலும், வடிவேலு, சுமன், நாசர், குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். பி.சி ஸ்ரீராமின் உதவியாளர் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். இணை தயாரிப்பு பெஞ்சமின். சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் 50&வது படமான இதன் படப்பிடிப்பை, வரும் புதன்கிழமை, முதல்வர் கருணாநிதி துவக்கி
Read More

சுஷ்மிதா சென் தத்தெடுத்த பெண் குழந்தை


1994-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் சுஷ்மிதானசென். 1996-ல் “தஸ்தக்” படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அர்ஜூன் நடித்த “முதல்வன்” படத்தில் “சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்கு விட தோணலையா” என்ற ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜூன் ஜோடியாக “ரட்சகன்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். கமல் எடுக்கும் “மர்மயோகி” படத்தில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் குழந்தைகள் மீது பிரியம். இதையடுத்து “ரீனி” என்ற பெண் குழந்தையை தத்து எடுத்தார். அக்குழந்தையை தன்னை போல் அழகிப் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய பயிற்சிகள் அளித்து வருகிறார். தற்போது அலிஷா என்ற இன்னொரு மூன்று வயது பெண் குழந்தையையும் தத்து எடுத்துள்ளார். அக்குழந்தையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு அழைத்து வந்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார்.
 
மாணவ்மேனன் என்பவரை சுஷ்மிதா காதலித்தார். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தனிமையை குழந்தைகளுடன் கழிக்கிறார்.
Read More

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நடிகை தமன்னா

“கேடி” படம் மூலம் 2006-ல் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. பின்னர் “வியாபாரி” படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். இருபடங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பிறகு “கல்லூரி” படத்தில் நடித்தார். தனுசுடன் “படிக்காதவன்” படத்தில் ஜோடியான பிறகு அதிர்ஷ்ட காற்று வீசியது. “அயன்” படம் மூலம் சூர்யா ஜோடியானார். கார்த்தியுடன் நடித்த “பையா” படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
 
தற்போது தமன்னா மார்க்கெட் எகிறியுள்ளது. “சுறா” படத்தில் விஜய் ஜோடியாகி உள்ளார். “தில்லாலங்கடி” படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வருகிறார்.
 
மார்க்கெட் இல்லாதபோது ரூ.25 லட்சம் முதல் சம்பளம் வாங்கினார். முன்னணி நடிகர்கள் ஜோடியானதும் ரூ.75 லட்சமாக்கினார். இப்போது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளார். சம்பளம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். தியாகராய நகர், வடபழனி பகுதிகளில் தரகர்கள் மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தொடர்பு கொண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை பேசி வருகிறார். காலி நிலங்களையும் விலைக்கு வாங்குகிறார்.
Read More

சீடன் படத்துக்கு பழனி செட்

சீடன்’ படத்துக்காக பழனி மலை அடிவாரத்தில் வீடு இருப்பது போல செட் அமைத்து, ஷூட்டிங் நடத்தினர். தனுஷ், அனன்யா, புதுமுகம் கிருஷ்ணா நடிக்கும் படம் ‘சீடன்’. படம் பற்றி இயக்குனர் சுப்ரமணியம் சிவா கூறியதாவது: பட ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டது. தனுஷ் பங்குபெறும் ஒரு பாடலும் ஓரிரு காட்சிகளுமே பாக்கி. கதை முழுவதும் பழனியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. பட ஹீரோயின் அனன்யாவின் வீடு பழனி மலை அடிவாரத்தில் இருப்பது போல சென்னையில் செட் அமைத்தோம். பெரும்பாலான ஷூட்டிங் இங்குதான் நடந்தது. ரூ. 1 கோடியே 20 லட்சம் இதற்கு செலவானது. படத்தில் தனுஷுக்கு ஜோடியில்லை. அனன்யாவுக்கு ஜோடியாக கிருஷ்ணா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் செம்மீன் ஷீலா நடிக்கிறார். சுகாசினி, விவேக் உள்ளனர். தினா இசைமையத்துள்ளார். ஒளிப்பதிவு, சீனு. ஜூலையில் படம் வெளியாகும். இவ்வாறு சுப்ரமணியம் சிவா கூறினார்.
Read More

கமல் சாருடன் சோந்து நடிப்பது ஒரு புதிய அனுபவம் : த்ரிஷா!




பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய் குமார் ஜோடியாக ‘கட்டா மிட்டா’ இந்திப் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. தமிழில், ‘லேசா லேசா’ படத்தில் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால், பிரியதர்ஷன் எத்தனை நாட்கள் கால்ஷீட் கேட்டாரோ அத்தனை நாட்களும் கொடுத்து விட்டாராம். இதனாலேயே தெலுங்கு படங்களில் நடிக்கவில்லையாம். தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கிறார். ‘யாவரும் கேளீர்’ தலைப்பு மாறுகிறதாம். ‘‘பல படங்களில் கமல் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தும் முடியவில்லை. ‘மர்மயோகி’யில் அவருடன் ஒப்பந்தமானேன். தூய தமிழில் எப்படி வசனம் பேச வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். அப்படிப்பட்ட ஹீரோவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் த்ரிஷா.
Read More

நடிகர் ஸ்ரீநாத் தற்கொலை!


நடிகரும், நடிகை சாந்தி கிருஷ்ணாவின் முன்னாள் கணவருமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை செய்து கொண்டார். மலையாளத்தில் ‘நித்ரா’ என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீநாத் (50). இவர் தமிழில் ‘ரயில் பயணங்களில்’, ‘கள்வடியும் பூக்கள்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘ஷாலினி என்டே கூட்டுக்காரி’, ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ உட்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ‘ஷிகார்’ என்ற படத்தில் நடிக்க எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்திற்கு சென்று இருந்தார் ஸ்ரீநாத். அங்குள்ள மரியா இன்டர்நேசனல் ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை அவரது அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் போலீஸ் உதவியுடன் திறந்து பார்க்கப்பட்டது. அப்போது கையை அறுத்து தற்கொலை செய்து கிடந்தார் ஸ்ரீநாத். விசாரணையில் மோகன்லால் படத்திலிருந்து திடீரென அவர் நீக்கப்பட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநாத், தமிழில், ‘பன்னீர் புஷ்பங்கள்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More