Pages

Tuesday, May 4, 2010

ச‌ண்டை‌யி‌ல்லாத 'ஆ‌க்ஷ‌ன்' பட‌‌ம்


டா‌க்ட‌ரி‌ன் அ‌ட்வை‌ஸ்படி பட‌ங்க‌ளி‌ல் அ‌திக '‌ரி‌ஸ்‌க்' எடு‌க்க‌க் கூடாது எ‌ன முடிவு எடு‌த்து‌ள்ளா‌ர் நடிக‌ர் அ‌ஜி‌த்.
பலமுறை முது‌க்கு‌த் த‌ண்டி‌ல் ஆபரேஷ‌ன், கா‌‌ர் ரேஸூ‌க்கான ப‌‌யி‌ற்‌சி என உட‌ம்பை‌க் கெடு‌‌த்து கொ‌ண்டவ‌ர்.
இ‌னி அதுபோல இ‌ல்லாம‌‌ல், ச‌ண்டை கா‌ட்‌‌சிக‌ளி‌ன் குறைவான பட‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே நடி‌க்க இரு‌ப்பதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
அதை பு‌ரி‌ந்து கொ‌ண்ட இய‌க்குன‌ர் பூப‌திபா‌ண்டிய‌ன் அ‌‌திக‌ம் டா‌ன்‌‌ஸ் மூ‌வ்மெ‌ண்‌‌ட், ‌ரி‌ஸ்கான ச‌ண்டை கா‌‌ட்‌சிக‌ள் இ‌ல்லாம‌ல் ஒரு ஆ‌க் ஷ‌ன் கதையை சொ‌ல்ல, அ‌ஜி‌த் உடனே ஓகேவு‌ம் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ர்.
அதே நேர‌ம் அவ‌ரி‌ன் ர‌சிக‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பையு‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யு‌ம் ‌விதமாகவு‌ம் இரு‌க்குமெ‌ன்‌கிறா‌ர் பூப‌திபா‌ண்டிய‌ன். 'ச‌ண்டை‌ன்னா ச‌ட்டை ‌கி‌ழிய‌த்தா‌ய்யா செ‌ய்யு‌ம், ச‌ண்டைல ‌கி‌ழியாத ச‌ட்டை எ‌ங்க இரு‌க்குது' என ‌கி‌ண்ட‌ல் அடி‌க்‌கி‌ன்றன‌ர் ‌சில‌ர்.
Read More

லக்கேஜ் பகுதியில் நகை பை ஷாக் ஆனார் நவ்யா

விமானத்தின் லக்கேஜ் பகுதியில் கவனமின்றி நகை பையை வைத்த நவ்யா நாயர், அதிகாரிகள் உதவியுடன் அதை பெற்றார். சோதனைகள் முடிந்த பின் விமானத்தில் லக்கேஜ் பகுதியை திறப்பது விதிகளுக்கு புறம்பானது என்பதால் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
நவ்யாநாயருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் அவர், மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் கேரளா வந்த அவர், நேற்றுமுன்தினம் தனியார் விமானத்தில், கொச்சியில் இருந்து மும்பைக்கு செல்ல வந்தார். இவரது லக்கேஜ்கள் பாதுகாப்பு சோதனைக்குப்பின் விமானத்தில் ஏற்றப்பட்டன. விமானம் புறப்பட சிறிது நேரம் இருந்த போது தான், தனது நகைகளும், கேமராவும் விமானத்தில் ஏற்றப்பட்ட லக்கேஜில் இருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
இதையடுத்து விமான நிலைய மேலாளரை தொடர்பு கொண்ட நவ்யா, விமான லக்கேஜ்களில் இருக்கும் தனது நகை, கேமராக்களை எடுத்து தருமாறு கேட்டார். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் லக்கேஜ் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று நவ்யாவின் நகை, கேமரா இருந்த பையை எடுத்து வந்து கொடுத்தனர். விமான நிலைய விதிகளின் படி சோதனைக்குப்பின் விமானத்தில் ஏற்றப்பட்ட லக்கேஜ்களை திறக்க முடியாது. விமானம் புறப்பட்டு போன பின்னர் தான் இந்த விதிகுறித்து தொழில்பாதுகாப்பு படையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து கொச்சி ஏர்போர்ட் இயக்குனர் மற்றும் சிஐஎஸ்ப் கமாண்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர்.


Read More

இதில் ரகசியம் ஒன்றுமில்லை!

இதில் ரகசியம் ஒன்றுமில்லை!அனைவருக்குமே தாம் எப்போதும் இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும். சரி... இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்... ரொம்ப ஈஸி..!

தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பிறகு அரை மணி நேரம் யோகாசனம் செய்யுங்கள். மிகவும் எளிதான... உங்களுக்குத் தெரிந்த யோகாசனம் செய்தால் போதும். காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள். பின்னர் 11 மணிக்கு ஏதாவது ஒருவகை கீரை சூப் சாப்பிடுங்கள். மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள். கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி என்று சாப்பிட்டால் போதும். மாலை 5 மணிக்கு அரை மணி நேரம் உங்களுக்கு தெரிந்த யோகாசனம் செய்யுங்கள். அதன் பின்னர் 6 மணிக்கு கொஞ்சம் வேகவைத்த நிலக்கடலை சாப்பிடுங்கள். இரவு 8 மணிக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்கள். இதுவே உங்களுடைய இளமை மெனு!

தினமும் கண்களுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் அழகாக இருக்கும். இரவில் வெள்ளரிக்காயை எடுத்து, வட்டமாக நறுக்கி கண்களை மூடி இமைகளுக்கு மேல் வைத்து தூங்கவும். காலையில் எழுந்தவுடன், கண்களை நன்றாகத் திறந்து விழிகளை மேலும் கீழும், சுற்றிலும் உருட்டி பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர் கண்களைச் சுற்றி கொஞ்சம் விளக்கெண்ணையை தடவிவிடவும். இதை தினந்தோறும் செய்து வந்தால் கண்கள் பொலிவுடன் அழகாக இருக்கும். கரிசலாங்கண்ணி இலையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும்.

தினமும் தேங்காய் எண்ணையை விரல்களுக்கும், நகங்களுக்கும் வைத்து மசாஜ் செய்யவும். வாரத்திற்கு மூன்று முறை, வெந்நீரில் உடம்பிற்கு போடும் சோப்பை கொஞ்சம் கரைத்து, அதில் கை, கால் விரல்களை 15 நிமிடம் ஊற வைத்து சுத்தம் செய்யவும்.

தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடவும். குறிப்பாக மாதுளை, திராட்சை, சீத்தாப்பழம், ஆப்பிள், மங்கூஸ், ஆரஞ்சு ஆகியவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடவும்.

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்த முடியும். வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பொலிவு கூடும். தினமும் காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
Read More

விபத்தில் தப்பிய தல சென்னையில

மலேசியா, லண்டன், மொராக்கோ என தொடர்ந்து சர்வதேச பார்முலா பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத், ரேஸுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.

இரு தினங்கள் மட்டும் தங்கும் அஜீத், தனது அடுத்த புதுப்படங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்கிறார்.

தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத்குமார், இன்று சென்னை திரும்பியுள்ளார்.

இந்த முறை இரு படங்களில் நடிக்கப்போகிறாராம் அஜீத். ஒரு படத்தை இயக்கப் போகிறவர் கவுதம் மேனன். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இதன் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபடுகிறார். ரேஸ் முடித்துவிட்டு அஜீத் சென்னை வரும்போது, படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பார் கவுதம்.

இன்னொரு படத்தை பொல்லாதவன் படம் இயக்கிய வெற்றிமாறன் இயக்குவார் என்கிறது அஜீத் தரப்பு. ஆனால் வெற்றி மாறனா, வேறு இயக்குநரா என்பதில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். அஜீத்தை அவரும் இந்த முறை சந்தித்துப் பேச உள்ளாராம்.

எல்லாம் சரியாக வந்தால், இந்த இரு படங்களையும் சேர்த்தே அறிவித்துவிட்டு, மீண்டும் இத்தாலி ரேஸுக்கு செல்வார் அஜீத் என்கிறார்கள். மொத்தம் 15 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ள அஜீத், செப்டம்பரில்தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார்.
Read More

ரத்த சரித்திரம்... -கோடம்பாக்கத்தில் ஒரு கொலை வாடை



திரையிடப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு நீடித்திருந்தால் அந்த இடமே ரத்த வாடை அடித்திருக்கும். அந்தவுக்கு அரிவாளின் ஆதிக்கம் பலமாகவே இருந்தது ரத்த சரித்திரம் பட ட்ரெய்லரில்! விவேக் ஓபராய், சூர்யா நடித்திருக்கும் இப்படத்தை அடிதடிக்கு பேர்போன ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள சென்னை வந்திருந்தார் ஆர்ஜிபி. (இப்படிதான் அழைக்கிறார்கள் அவரை)
ஆந்திராவில் இரு ரவுடிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தைதான் ரத்தகளரியாக சொல்ல முற்பட்டிருக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்த காட்சிகளை சென்சார்ல விட்ருவாங்களா? என்று அத்தனை பேரும் முணுமுணுக்க, "அதுக்கான காரணத்தை முறையா சொல்லி அனுமதி வாங்குவேன்" என்றார் வர்மா நம்பிக்கையோடு!
ரவி என்கிற மனிதரின் வளர்ச்சி, அதிகாரம், அரசியல் பற்றி நான் தொடர்ந்து தெரிந்து வைத்திருந்தாலும், ஆந்திராவில் ராமா நாயுடு ஸ்டுடியோ அருகே ரவியை கொல்ல நடந்த வெடிகுண்டு சம்பவத்தில்தான் சூரி என்ற மனிதரை பற்றி அறிந்தேன். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் என்னை ஆச்சர்யப்படுத்தின. சூரியின் பழிவாங்கும் உணர்வு, தண்டனைக்காக அடைக்கப்பட்ட சிறையிலும் தணியாமல் இருந்தது. சிறையிலிருந்தபடியே ரவியை பழிவாங்கும் முயற்சியில் சூரி வெற்றி பெற்றார். இந்த படத்திறக்£க ரவி, சூரி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினேன். சூரியின் குடும்பத்தையும் சந்தித்து உணர்வுகளை பதிவு செய்தேன் என்கிற ராம்கோபால் வர்மா, அனந்தப்பூர் சிறையில் இருக்கும் சூரி என்கிற அந்த பிரபல ரவுடியையும் நேரில் சந்தித்து விஷயங்களை கறந்து அதை அப்படியே படத்தில் இணைத்திருக்கிறார்.
மே 4 ந் தேதி ரிலீஸ். எதுக்கும் ஆம்புலன்சுக்கு சொல்லி வைக்கலாம்... !

Read More

நான் ‘தம்’ அடிப்பதில்லை, குடிப்பதில்லை – ஆசின்

நான் சிகரெட் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.

தசாவதாரம் படத்துக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் ஆசின். மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக காவல்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் பெரும் புகழ் பெறலாம் என்ற கனவு, சல்மான் கானின் லண்டன் ட்ரீம்ஸுடன் புஸ்வானமாகிப் போனதால்தான் மீண்டும் தமிழுக்குத் திரும்பி விட்டார் ஆசின் என்கிறார்கள்.

மீண்டும் தமிழுக்குத் திரும்பி வருவது குறித்து ஆசின் அளித்துள்ள பேட்டியில், நான் முதலில் தமிழை விட்டு போவதாக கூறவே இல்லை. எனவே திரும்பி வந்துள்ளேன் என்று கூற முடியாது. நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன் என்றுதான் கூறியிருந்தேன்.

எந்த ஒரு தனிப்பட்ட மொழி படங்களுக்கும் நான் சொந்தக்காரி அல்ல. எல்லா மொழிப் படங்களிலும் நான் நடிப்பேன்.

தமிழில் கஜினி மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிறகு எனக்கு நிறையப் படங்கள் வந்தன. ஆனால் நல்ல படங்களாக பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடித்தேன்.

போக்கிரி, தசாவதாரம் படங்களுக்கு முன்பு என்னைத் தேடி வந்த பல படங்களை நான் நிராகரித்துள்ளேன் – கதை பிடிக்காததால் என்றார் ஆசின்.

மற்றவர்களைப் போல பார்ட்டிகளுக்குப் போவதில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்விக்கு, நான் அதிகம் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. நண்பர்களுடன் வீட்டிலேயே பார்ட்டி வைப்பதுதான் பிடிக்கும். நான் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. எனவே கிளப்களுக்குப் போய் பார்ட்டியைக் கொண்டாடுவதற்கான அவசியம் இல்லை.

இருப்பினும் நண்பர்கள் அல்லது திரைத்துறையினர் தொடர்பான பார்ட்டி என்றால் கலந்து கொள்வேன் என்றார் ஆசின்.

சரி இந்திய கேப்டன் டோணி உங்கள் வீட்டிற்கு வந்தாராமே என்ற கேள்விக்கு அது குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஏன் நட்பை களங்கமாக பார்க்கிறார்கள். நானும், டோணியும் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்தோம். அதில் ஏற்பட்டதுதான் இந்த நட்பு, அவ்வளவுதான் என்றார் ஆசின்.

பின்னர் கூலாகிய ஆசின், அடுத்து ஜான் ஆப்ரகாமுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளேன். இது தெலுங்கில் நான் நடித்த கர்சனா படத்தின் ரீமேக்தான். பின்னர் தெலுங்கு படமான ரெடியின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளேன் என்றார் ஆசின்.

கர்சனா, தமிழில் வெளியான காக்க காக்க படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

தமிழ்சினிமாவ தஞ்சாவூர் பஸ்ல ஏத்து...



தமிழ்சினிமாவின் பிள்ளையார் சுழி போலாகிவிட்டது மதுரை. கக்கூஸ் சந்தில் ஆரம்பித்து கள்ளழகர் ரவுண்ட்ஸ் வரைக்கும் மதுரையையே கொத்து பரோட்டாவாக்கிவிட்டார்கள் பல இயக்குனர்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு மதுர பக்கமே போக மாட்டேன் என்று டைரக்டர் அமீர் ஓப்பனாக புலம்புகிற அளவுக்கு இந்த பரோட்டாவின் நெடி ஓவராகதான் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் தமிழ்சினிமாவை தஞ்சாவூருக்கு தள்ளிக் கொண்டு போயிருக்கிறார் சற்குணம். ஒரத்தநாடு, மன்னார்குடி பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும் படமான களவாணியின் இயக்குனர்!
தஞ்சை மாவட்டத்து சொற்களை முழுமையா பயன்படுத்திய படம் தமிழ்ல இன்னும் வரல. அந்த குறையை என்னோட படம் போக்கும் என்று அவர் துவங்கியதுதான் தாமதம். பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள் நிருபர்கள். தமிழுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எதுவும் சேர்க்காம பேசுதறதே தஞ்சை மாவட்டத்து மக்கள்தான். அவங்களுக்குன்னு என்ன ஸ்லாங் இருக்கு?ன்னு ஆரம்பிக்க, விளக்குகிறேன் பேர்வழின்னு டைரக்டர் சொன்ன விளக்கம் இருக்கே, அது தஞ்சாவூர் விளைச்சலுக்கு சற்றும் குறையாதது.
ஒருவழியாக படத்தின் நாயகன் விமலையும், நாயகி ஓவியாவையும் பேச வைத்தார்கள். பசங்க படத்தில் வரும் 'இங்கிட்டு மீனாட்சி'தான் இந்த விமல். முதல் படம் ஹிட் ஆன பிறகு நிறைய கதைகள் வரும். ஆனால் அவசரப்பட்டு ஒப்புகிட்டா அம்புட்டுதான் வாழ்க்கைன்னு சசிக்குமார் கொடுத்த அட்வைஸ் விமலுக்கு ரொம்பவே யூஸ்புல்லா இருந்திருக்கு. இரண்டாவது படத்துக்காக நிறைய படங்களை வேண்டாம்னு ஒதுக்கிட்டு காத்திருந்த போதுதான் களவாணி கிடைச்சுதாம். "படத்துல செம ரவுசு பண்ணியிருக்கேன்" என்றார் விமல். ஹீரோயினுக்கு ஹெலன்ங்கிற ஒரிஜனல் பேரை ஓவியான்னு மாத்தினதோட இல்லாம நல்ல தமிழையும் கற்று கொடுத்திருக்கிறார் டைரக்டர் சற்குணம்.
இவங்க பேசுறதை பார்த்தா, தமிழ் சினிமாவை மதுரையிலேர்ந்து மீட்டெடுத்து தஞ்சாவூர் பஸ்ல ஏத்திவிட்ருவாங்க போலிருக்கு!

Read More

பயணங்களில் பிசி மனிஷா குஷி


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news‘இந்தியன்’, ‘பாபா’, ‘உயிரே’, ‘பம்பாய்’ போன்ற படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. இப்போது சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தாஹலுக்கும் ஜூன் மாதம் 19&ம் தேதி திருமணம் நடக்கிறது. இதுபற்றி மனிஷா கூறியதாவது:
‘திருமணத்துக்கு பிறகு நேபாளத்தில் குடியேறி விடுவீர்களா?’ என்கிறார்கள். நேபாளத்தில் எனக்கென வீடு அமைத்துக்கொள்வேன். மும்பையிலும் வீடு இருப்பதால் இந்தியா, நேபாள் என இரு நாடுகளுக்கிடையிலும் பறந்து கொண்டிருப்பேன். இனி ஷூட்டிங்கை குறைத்துக்கொண்டு, பயணங்களில் பிசியாக இருக்கிறேன். பல நாடுகளுக்கு செல்கிறேன். அங்குள்ள கலாசாரத்தை அறிந்துகொள்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இவ்வாறு மனிஷா கூறினார்.


Read More

கோடையில் 15 புதுப்படங்கள் ரிலீஸ்



கோடையில் 15 புதுப்படங்கள் ரிலீசாகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியால் பெரிய படங்களும், சிறு பட்ஜெட் படங்களும் கடந்த சில வாரங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கின. தற்போது கோடையையொட்டி நிறைய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன.
 
விஜய் நடித்த சுறா படம் கடந்த 30-ந்தேதி வெளியானது. வருகிற வெள்ளிக்கிழமை இரும்பு கோட்டை முரட்டுச்சிங்கம், கோரிப்பாளையம், குட்டிபிசாசு, குரு சிஷ்யன் படங்கள் ரிலீசாகின்றன. இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் கவ்பாய் சாயல் கதை, லாரன்ஸ், லட்சுமிராய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். குருசிஷ்யனில் சத்யராஜ், சுந்தர்.சி இணைந்து நடித்துள்ளனர்.
 
கோரிப்பாளையம் படத்தை ராசுமதுரவன் இயக்கியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். வருகிற 21-ந்தேதி அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு திரைக்கு வருகிறது. அதே நாளில் விவேக் கதாநாயகனாக நடித்த மகனே என் மருமகனே படமும் திரைக்கு வருகிறது. இப்படத்தை டி.பி.கஜேந்திரன் இயக்கியுள்ளார்.
 
தியேட்டர்கள் கிடைப்பதை வைத்து அம்பாசமுத்திரம் அம்பானி, மா, கனகவேல் காக்க, கற்றது களவு, ஐவர், 365 காதல் கடிதங்கள் போன்ற படங்களும் ரிலீசுக்கு வருகின்றன.
 
Read More