Pages

Wednesday, May 5, 2010

கருணாநிதியின் வீட்டில் பெண்சிங்கம்!


முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள பெண் சிங்கம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திருக்குவளையில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டில் நடந்தது.

உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் பெண் சிங்கம் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பாலிஸ்ரீரங்கம் இயக்கும் இப்படத்துக்கான இறுதி கட்டப் படப்பிடிப்பு முதல்வர் கருணாநிதி வாழ்ந்த திருக்குவளை வீட்டில் நடந்தது. அவர் படித்த பள்ளிக்கூடம் மற்றும் திருக்குவளை தெருக்களிலும் படப்பிடிப்பு நடந்தது. அவ்வூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிந்ததும் திருக்குவளையில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கபட்டன. நிகழ்ச்சியில் இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம், ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் ஜெயமுருகன், தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரைவில் திரைக்கு வருகிறது பெண் சிங்கம்.
Read More

மீண்டும் வருகிறார் சித்தார்த்


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news‘பாய்ஸ்’ சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார். ‘திரு திரு துறு துறு’ படத்தை அடுத்து சத்யம் சினிமாஸும், ரியல் இமேஜும் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. இதை விளம்பர பட இயக்குனர் ஜெயேந்திரா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
நானும் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமும் இணைந்து ஜேஎஸ் பிலிம்ஸ் என்ற விளம்பர பட நிறுவனத்தை ஆரம்பித்தோம். இதன் மூலம் 500க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியுள்ளோம். இதற்கிடையில் கர்நாடக இசையை மையபடுத்தி ‘மார்கழி ராகம்’ என்ற படத்தை சில வருடங்களுக்கு முன் இயக்கினேன். இது உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்போது இந்த படத்தை இயக்குகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘பாய்ஸ்’ சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயின். தமிழ், தெலுங்கில் எடுக்க முடிவு செய்துள்ளோம். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக, ரெட் ஒன் கேமரா நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ள ‘ரெட் எபிக்’ என்ற நவீன கேமராவை பயன்படுத்த உள்ளோம். யதார்த்தமான ரொமான்டிக் படமாக இது இருக்கும். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறு ஜெயேந்திரா கூறினார்.

Read More

ஹீரோயின் ஆனார் பார்வதி ஓமணக்குட்டன்



கடந்த 2008&ல் நடந்த உலக அழகி போட்டியில், இரண்டாவது இடம் பிடித்தவர் பார்வதி ஓமணக்குட்டன். அவர் ஹீரோயினாக தமிழில் நடிக்கும் படம், ‘உமா மகேஸ்வரம்’. பரத நாட்டியத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. ட்ரூ சோல் நிறுவனம் தயாரிக்கிறது. முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். வி.டி.விஜயன் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் இசையமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நிதின் ராமகிருஷ்ணா இயக்குகிறார். மலையாளத்தில் கலாபவன் மணி, விமலா ராமன் நடித்த ‘அபூர்வா’ என்ற படத்தை 17 வயதில் இயக்கியவர் நிதின் ராமகிருஷ்ணா. இந்த படத்தின் தொடக்க விழா, விரைவில் சென்னையில் நடைபெறுகிறது.

Read More

ரஞ்சிதாவை விசாரணைக்கு வரவழைக்க நடிகர் சங்க உதவியை நாடும் கர்நாடக போலீஸ்

பெங்களூர் : நடிகை ரஞ்சிதாவை விசாரணை க்கு வரவழைக்க கடுமையாக போராடி வரும் கர்நாடக சிஐடி போலீஸார், ரஞ்சிதாவை வரவழைக்க நடிகர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளதாம்.

நித்தியானந்தாவுடன் ஆபாச கோலத்தில் நடிகை ரஞ்சிதா இருந்த வீடியோ வெளியாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில்,கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை கர்நாடக போலீஸ் படை பிடித்து பெங்களூர் கொண்டு வந்தது.

ஆனால் ரஞ்சிதா மட்டும் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இடையில் நித்தியானந்தா மூலம் ரஞ்சிதாவின் தொலைபேசி எண்ணைப் பெற்ற கர்நாடக சிஐடி போலீஸார், அவரிடம் பேசினர்.

அதற்கு ரஞ்சிதா, விசாரணைக்கு தானே நேரில் வருவதாகவும், இரவில் மட்டும் விசாரணையை மேற்கொள்ளுமாறும், ரகசியமாக இதை வைத்துக் கொள்ளுமாறும் கூறியதாக செய்திகள் கூறின.

ஆனால் இதுவரை ரஞ்சிதா வரவில்லை. வாக்குமூலமும் தரவில்லை. தற்போது விசாரணைக்கு வருமாறு கூறி ரஞ்சிதாவுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளது கர்நாடக சிஐடி போலீஸ். இதற்காக சென்னையில் உள்ள அவரின் வழக்கறிஞர் ஒருவரையும், நடிகர் சங்க நிர்வாகிகளையும் சில நாட்களுக்கு முன் சந்தித்து கர்நாடக சிஐடி போலீசார் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சங்கத்தினரும் ரஞ்சிதாவை தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளனராம்.
Read More

அஜமல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை

கசாப்புக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்பது இன்னும் தெரியாத நிலையில் அவனை தூக்கில் போட்டு விட்டனர்-இந்திப் படம் ஒன்றில்.

மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய ஒரே தீவிரவாதி அஜமல் கசாப் மட்டுமே. அந்த வழக்கில் கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவனுக்கான தண்டனை குறித்து நாளை அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்,.கசாப் குறித்து இந்தியில் ஒரு படம் தயாராகி வருகிறது. அசோக் சக்ரா என்ற பெயரில் மும்பைதீவிரவாத தாக்குதல் சம்பவத்தை பின்னணியாகவைத்து ஒரு படம் தயாராகியுள்ளது. மே 28ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

ராஜன் வர்மா என்ற புதுமுக நடிகர் கசாப் வேடத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட கசாப் போலவே இவருக்கு முகவெட்டு இருப்பதால் இந்த ரோலுக்கு இவரை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுவதாக காட்சி இடம்பெற்றுள்ளதாம். மே 9ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
Read More

"மேடையில விஜய் சாரு இருக்காரு.உடம்பெல்லாம் வைப்ரேஷன்

வெளுத்துக்கட்டு பட விளம்பரங்களில் இடம்பெறும் *என் வாழ்க்கையில் சில நாட்கள்* என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் தவித்த விஜய் ரசிகர்களுக்கு அப்படத்தின் வெளியீட்டு விழா மேடையில் விளக்கம் கிடைத்தது. அதுவும் சந்திரசேகரின் வாயிலிருந்தே.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பக்கத்திலே இருக்கிற சின்ன கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்க அம்மா கூட என்னை உருப்பட மாட்டான் என்றுதான் திட்டுவாங்க. அந்தளவுக்கு நான் பொறுக்கியா அடங்காதவனா சுத்திகிட்டு இருந்தேன். அந்த வயசில நான் செஞ்ச குறும்புகளைதான் வெளுத்துக்கட்டுங்கிற படமா எடுத்திருக்கேன் என்றார் எஸ்.ஏ.சி.
முதல் ஆடியோவை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக் கொண்டார். படத்தின் ஹீரோ கதிர், ஹீரோயின் அருந்ததி இருவருக்குமே தமிழ் மண்தான். அதிலும் மதுரைக்கு பக்கத்திலிருக்கிற ஏதோ ஒரு பட்டிதான் அருந்ததிக்கு சொந்த ஊர். மனசெல்லாம் தந்தியடிக்க, நம்ம ஊரு தமிழில் அருந்ததி பேசியது அழகோ அழகு. (மும்பை சுந்தரிகளின் நுனி நாக்கு ஆங்கிலத்தை தொடர்ந்து கேட்டவர்களுக்கு புரியும் இந்த சுச்சுவேஷன்) "மேடையில விஜய் சாரு இருக்காரு. எனக்கு உடம்பெல்லாம் வைப்ரேஷன் ஓடுது. என்ன பேசுறதுண்ணே புரியல" என்று அவர் தவித்த தவிப்பை பார்க்கணுமே. அதுவே ஒரு வைப்ரேஷன்தான் போங்க....
விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கரண்ட் ஆஃப்! ஆனாலும் விடாமல் அவர் மைக்கில் பேசிக் கொண்டிருக்க அவரது முகம் இருட்டில் சரிவர தெரியாததால் கூச்சலிட்டார்கள் ரசிகர்கள். கரண்ட் இல்ல. அதுக்காக என்ன பண்றது என்றவர் தொடர்ந்து பேசி முடித்துவிட்டுதான் இருக்கையில் அமர்ந்தார்
Read More

புலிகள் பற்றிய பாடல்!


உணர்வோடு வைக்கப்பட்ட பாடலா, அல்லது விளம்பரத்துக்காகவா? தெரியவில்லை. தம்பி அர்ஜுனா படத்தில் ஒரு பாடல்! புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது நரிகள் ஆட்டம் போடுமே, நரிகள் வேஷம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே... யுகபாரதி எழுதியிருக்கும் வரிகள் ஒவ்வொன்றும் அக்னியாக ஜொலித்தது. படத்தின் இயக்குனர் விஜய் ஆர் ஆனந்திடமே இது பற்றி கேட்டோம்.
படத்தில வர்ற ஒரு சுச்சுவேஷனுக்கான பாடல்தான் இது. இப்படி ஒரு வரிகளை கேட்ட எவரும் சென்சார்ல எப்படிங்க அனுமதிப்பாங்க என்று கேட்கிறாங்க. நமது தேசிய விலங்கே புலிதானே? வீரத்தை பற்றி எழுதும்போது புலிகள் என்ற வார்த்தையில்லாமல் எப்படி எழுத முடியும் என்றார். ஆனால் ஒரு விஷயத்தை அவரால் மறைக்க முடியவில்லை. இந்த வரிகளை கேட்டுட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நிறைய பேர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாங்க. ஏராளமான பாராட்டுகளும் கிடைச்சுது. வரிகளுக்கு பொருத்தமா இசையமைச்ச தினாவையும் இந்த இடத்தில பாராட்டணும் என்றார்.
ஆபாவாணன், தினா, ஷங்கர் மகாதேவன் மூவரும் பாடியிருக்கும் இநத் பாடல் உலகம் முழுக்கவே ஒரு எழுச்சியை உருவாக்கும் போலதான் தெரிகிறது.

Read More

விஜய்யிடம் கதை சொன்ன பிரபல தயாரிப்பாளரின் வாரிசு

அல்வா கடை ஓனருக்கு சுகர் வந்த மாதிரிதான் இருக்கிறது அநேக வெற்றிப்பட தயாரிப்பாளர்களோட நிலை. ருசிக்காக கூட ஒரு கிள்ளு கிள்ளி வாயில் போட முடியாது. அந்தளவுக்கு ஆமை வேகம் இந்த வாரிசுகளின் முன்னேற்றத்தில். தமிழ்சினிமாவின் தலையெழுத்தையே மாற்றிய பாரதிராஜாவின் வாரிசுக்கு நடிப்பும் ஒடசல். அனுபவமும் அடைசல். ஜெயம் ரவி, ராஜா மாதிரி யாரோ ஒரு சிலருக்குதான் குலத் தொழிலை காப்பாற்றுகிற பெருமை வாய்க்கும். அப்படி ஒரு வாய்ப்பு வந்து விடாதா என்று போராடிக் கொண்டிருக்கிறாராம் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் வாரிசு கலாப்பிரபு.
சக்கரக்கட்டி படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. ஆனால் அப்படத்தில் வெற்றிக்கனியை கோட்டை விட்ட கலாப்பிரபு மீண்டும் தனக்காக ஒரு சில கோடிகளை இறைக்க முன் வர வேண்டும் என்றாராம் அப்பா தாணுவிடம். அவரோ, நீயே உன் முயற்சியில் முன்னணி ஹீரோக்கள் யாரிடமாவது கதை சொல்லி கால்ஷீட்டோடு வா. எத்தனை கோடி வேண்டுமானாலும் தர தயார் என்றாராம்.
உடனடியாக விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொன்னாராம் கலாப்பிரபு. அவருக்கும் கதை பிடித்துவிட, கொஞ்ச நாள் வெயிட் பண்ணு என்று கூறியிருக்கிறாராம் விஜய். இளைஞர்கள் போடும் புது ரூட் இந்த முறையாவது க்ளிக் ஆகட்டும்.
Read More