தளபதியின்
சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஷூட்டிங் ஹை ஸ்பீடில் பறந்துக்கொண்டிருக்கிறது. இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
என்ன சொல்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்?
‘‘வழக்கமான விஜய் படத்தோட பத்து மடங்கு பரபரன்னு போகிற திரைக்கதைதான் படத்துக்கு பலம். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், காதல்னு கலக்கலான விஷயங்கள் படத்துல நிறைய இருக்கு. அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும். இதுதான் கிளைமாக்ஸ்னு யாரும் யூகிக்க முடியாதபடி விர்ர்ர்ர்ருனு போகும். இதை நான் அதிகப்படியா சொல்றேன்னு நினைக்காதீங்க. இதுதான் நிஜம்!’’
‘சுறா’ என்ன கதை?
விஜய் மீனவர். தன்னோட தனிப்பட்ட நலன்களை மட்டுமே நினைக்காம அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளையும் போராடி வாங்கி தர்றார்... இப்படி கதையை சொன்னா, உங்களுக்கு ஏதோ தத்துவமா, கருத்து சொல்ற மாதிரி தோμம். ஆனா, அப்படி இல்லாம, பக்கா கமர்ஷியல் லைன்ல சுர்ர்ர்ருனு படம் பண்ணிட்டிருக்கோம்.
தமன்னா?
தமன்னா, இப்ப இருக்கிற டாப் ஹீரோயின். எப்பவும் சரியான நேரத்தை கடைப்பிடிக்கிற ஆர்டிஸ்ட். நடிப்புல பின்னியிருக்காங்க. படத்துல அவங்க குறும்புக்கார கல்லூரி மாணவி. பெரும் பணக்காரரின் மகள். ரொம்ப ஸ்டைலான கேரக்டர். அவங்க வர்ற சீனெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருக்கும். வடிவேலு காமெடி படத்துல மிரட்டும்.
விஜய் படத்துல பாடல்கள் ரசனையா இருக்குமே?
இந்தப் படத்துலயும்தான். மணிசர்மா இசைல எல்லா பாடலுமே ஹிட்டாகும். வெரைட்டியா ட்யூன் போட்டிருக்கார். ‘வெற்றிக்கொடி ஏத்து / வீசும் நம்ம காத்து’னு ஆரம்பிக்கிற பாட்டு சும்மா கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும். ‘வங்க கடல் எல்லை / நான் சிங்கம் பெத்த பிள்ளை’பரபரப்பான பாடலா விசிலடிச்சு துள்ளிக் குதிக்கும்படியா
இருக்கும்.
ஆக்ஷன் காட்சிகள் எப்படி?
கனல் கண்ணன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கார். இதுவரை வராத அளவு வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளா இருக்கும். விஜய் அதிகப்படியா ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருக்கார். பொதுவாவே எல்லா விஷயத்துக்கும் அவர் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். உதாரணத்துக்கு, கடல்லயிருந்து அரை மைல் தூரத்துக்கு நீச்சலடிச்சு கரைக்கு வரμம். நாங்க நீச்சல் தெரிஞ்ச சிலரை கரையில உட்கார வச்சிருந்தோம். ஆனா, விஜய் நானே பண்றேன்னார். அதே போல நீந்தியும் வந்தார். இது பெரிய ரிஸ்க். ஆத்துல நீச்சலடிக்கற மாதிரி இல்ல, கடல்ல நீச்சலடிக்கிறது. இது எவ்வளவு கஷ்டம்னு அனுபவப்பட்டவங்களுக்கு தெரியும்.
புது வில்லனை அறிமுகபடுத்துறீங்களாமே?
தேவ் கில் புது வில்லன் இல்ல. தமிழுக்கு புதுசு. தெலுங்கு ‘மகதீரா’ படத்துல மிரட்டலா நடிச்சிருப்பாரு. அந்தப் படத்துக்கு பிறகு அங்க அவருக்கு நிறைய வாய்ப்புகள். ஆனா, அந்தப் படங்கள்ல நடிக்காம, ‘சுறா’வுக்காக வந்தார். அவரோட கேரக்டர் என்னன்னு இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் போயிடும். அதனால பட ரிலீஸ் வரை அவர் பற்றி வேண்டாம்.
பஞ்ச் டயலாக்?
அது இல்லாம எப்படி? படத்துல விஜய், சூடாகிற காட்சிகள்ல எல்லாம் பஞ்ச் டயலாக் இருக்கும். சாம்பிளுக்கு ஒண்μ: ‘உனக்கு கோவம் வந்தா அடி விழும். எனக்கு கோவம் வந்தா இடி விழும்!’
நடிகைகள் போட்டியில் விருப்பமில்லை
மலையாளத்திலிருந்து வந்த உதயதாராவுக்கு ‘கண்ணும் கண்ணும்’ முதல்படம். ‘தீ நகர்’, ‘மலையனு’க்குப் பிறகு இப்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திருமணம் செய்யப்போவதாக பேச்சு இருக்கிறதே?
இப்போதைக்கு இல்லை. திருமண வயதை எட்டியிருந்தாலும், அதைத் தாண்டவில்லை. சினிமாவில் நான் நினைத்த இலக்கை இன்னும் அடையவில்லை. அடைந்த பிறகோ அல்லது பெற்றவர்கள் வற்புறுத்தும்போதோ திருமணம் செய்து கொள்வேன்.
நடிப்புக்கு இடையேயும் தொடர்ந்து படிக்கிறீர்களே?
தமிழ்நாட்டில் எப்படி என்று தெரியாது. கேரளாவில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகும்போது அவள் என்ன வேலை செய்கிறாள், என்ன சம்பாதிக்கிறாள், என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். என்ன படித்திருக்கிறாள் என்றுதான் பார்ப்பார்கள். அதற்காகவாவது படிக்க வேண்டுமே. வாழ்க்கைக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம்.
‘விலை’ படத்தில் பால¤யல் தொழிலாளி வேடம், ‘பயம் அறியான்’ படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பதாக தகவல்?
இரண்டுமே தவறானது. ‘விலை’ படத்தில் பெண்களை கடத்தும் கும்பலிடம் சிக்கும் இலங்கை பெண்ணாக நடிக்கிறேன். ‘பயம் அறியான்’ படத்தில் முத்தக் காட்சி சில நொடிகள் வந்து செல்லும். அந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி விட்டார்கள். மற்றபடி கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ நடிக்கவில்லை. ‘குலசேகரனும் கூலிப்படை’யும் படத்தில் டாக்டராக நடிக்கிறேன்.
தமிழில் இடைவெளி விட்டது ஏன்?
சில வருடங்கள் தொடர்ச்சியாக கன்னடப் படங்களில் நடித்ததால் தமிழில் இடைவெளி ஏற்பட்டது. மலையாளத்திலும் நடிக்கவில்லை. காரணம், அங்கு ஹீரோக்கள் குறைவு. ஹீரோயின்கள் அதிகம். அதில் போட்டி போட விரும்பவில்லை.
ஏன் காமெடி படம்?
‘‘இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளம். கதை, வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறேன். கார்த்திக், ஷிகா, ஜெயராம் என நிறைய நட்சத்திரங்கள். பிரபல நடிகர் ஒருவரும் நடிக்கிறார். அவர் யார் என்பது இப்போது சஸ்பென்ஸ். ஐபிஎல் கிரிக்கெட் முடிந்தபிறகு ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம்’’
என்ன தீடீர்னு காமெடி படம்?
சிங்கப்பூரில் ஃபேஷன் டிசைன் படித்தேன். பின்னர் அமெரிக்கா சென்றேன். அங்கு குறும்படங்கள் இயக்கினேன். விருது கிடைத்தது. இதையடுத்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இங்கு வந்தேன். முதல்படமாக ‘வல்லமை தாராயோ’ இயக்கினேன். கணவன், மனைவிக்குள்ளான பிரச்னையை பேசியது அப்படம். தமிழக அரசு விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. பெண் பிரச்னையை மையமாக வைத்துத்தான் படங்களை இயக்குவார் என்ற முத்திரை குத்திவிடக்கூடாது என்பதால் அடுத்ததாக காமெடி படம் இயக்குகிறேன்.
அடுத்து?
கிராமத்து பின்னணியில் இயக்கும்படி ஒரு தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறேன். ஆக்ஷன் கதை ஒன்றும் தயாராக உள்ளது. இதுதவிர தெலுங்கு படம் இயக்க கேட்டிருக்கிறார்கள். எந்த படமும் குடும்பத்தோடு பார்க்கும் படமாகவே இயக்குவேன்.
சினிமாவில் எதை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்?
இந்தோனேசியாவில்தான் நான் வளர்ந்தேன். அம் மொழியில் (பகாஷா இந்தோனேசியா) படம் எடுக்க ஆசை இருக்கிறது. அதன் ஞாபகமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை இந்தோனேசியாவில் நடத்தினேன். தமிழ் திரையுலகுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்த முதல் பெண் இயக்குனர் என்ற பெயர் எடுப்பதே எனது லட்சியம். அதை நோக்கி என் பயணம் இருக்கும்.