Pages

Friday, April 30, 2010

லட்சுமிராய்க்காக, வாலி எழுதிய பாடல்

முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி கதை-வசனத்தில் வளர்ந்து வரும் படம், `பெண் சிங்கம்.' இந்த படத்தில், உதயகிரண்-மீராஜாஸ்மின் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
 
படத்தில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் இணைந்து நடனம் ஆடும் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ``அடி, ஆடி அசையும் இடுப்பு-சோறு ஆக்கி வைக்கும் அடுப்பு...அட, ஏண்டி அதுக்கு உடுப்பு?-அதை எடுக்க சொல்லு விடுப்பு...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு, தேவா இசையமைத்து இருக்கிறார்.
 
இந்த பாடல் காட்சிக்காக, சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு பெரிய குடோனில் மூன்று பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் ஆடிப்பாடுவது போல் 4 நாட்கள் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.
 
`பெண் சிங்கம்' படத்தில் வேலு நாச்சியாரின் ஓரங்க நாடகமும் இடம்பெறுகிறது. வேலுநாச்சியாராக மீராஜாஸ்மின் நடித்த காட்சி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள கலையரங்கில் படமாக்கப்பட்டது.
 
கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பு வளையத்தில் உதயகிரணும், ராதாரவியும் மோதுகிற சண்டை காட்சி ஒன்றும் சமீபத்தில் படமானது.
 
இந்த படத்துக்காக கலைஞர் கருணாநிதி எழுதிய ``ஆகா! வீணையில் எழுவது வேணுகானமா? திருவாவடுதுறையின் தோடி ராகமா? திருவெண்காட்டு மகுடி நாதமா?'' என்ற பாடலும், கவிஞர் வைரமுத்து எழுதிய ``நீ சொன்னால் தேய் பிறை வளரும்...நீ தொட்டால் தீப்பொறி மலரும்'' என்ற பாடலும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படுகின்றன. அத்துடன், `பெண் சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
 
ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் என்.ஜெயமுருகன், ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் ஆகிய இருவரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் விவேக், ரிதீஷ் எம்.பி, சுதர்சனாசென், ரம்பா, ரோகிணி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மதன்பாப், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விஜய் ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், பார்த்திபனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவருமான பாலி ஸ்ரீரங்கம் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.
Read More

அமிதாப் ஜோடியாகிறார் குஷ்பு!

ஜூன் ஆர் தமிழ் படத்தை இயக்கியவர் ரேவதி வர்மா. இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

ஆப் கே லியே ஹம் என்ற இப்படத்தில் மாதவன், ஜெயாபச்சன், ரவீனா டன்டன், ஆயிஷா தாகியா நடிக்கின்றனர். இதையடுத்து மேட் டேட் என்ற படத்தை இந்தியில் இயக்குகிறார்.
இதில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இது பற்றி ரேவதி வர்மா கூறும்போது,
அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்க உள்ளேன். அப்பா வேடத்துக்கு அமிதாப் பச்சன்தான் பொருத்தமாக இருப்பார். அதனால் அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளேன். அவரது மனைவியாக குஷ்பு நடிப்பார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது என்றார்.
Read More

சுறா படம் பார்க்கப்போன விஜய் ரசிகர் தலை நசுங்கி பலி



நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்க்கப்போன ரசிகர் விபத்தில் தலை நசுங்கி மரணம் அடைந்துள்ளார்.

கோவை ஆர்.எஸ். புரம் சுக்கரவார் பேட்டை சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஈஸ்வரன்(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது தான் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார்.

ஈஸ்வரன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இன்று விஜய்யின் சுறா படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு தனது நண்பர்களோடு பூக்கடையில் உள்ள ஒரு தியேட்டரில் கட்அவுட்கள் கட்டியுள்ளார். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு சென்றார்.

இன்று அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்ட ரசிகர்கள் காட்சிக்காக டிக்கெட் வாங்கியிருந்தார். இதையடுத்து இன்று அதிகாலை படம் பார்க்க அதே பகுதியை சேர்ந்த நண்பர் குணசீலன அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பினார்.

சுக்ரவார் பேட்டை அருகே வரும் போது கரூரில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு மணல் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சைக்கிளில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி பைக் லாரிக்கு அடியில் சிக்கியது. லாரியின் பின் பக்க டயர் ஈஸ்வரன் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னால் இருந்த குண சீலன் கால் துண்டானது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விபத்தில் ஈஸ்வரன் இறந்த செய்தி கேட்டதும் தியேட்டரில் நின்ற நண்பர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரி வந்தனர். அவர்கள் ஈஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
Read More

'சுறா' படம் ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்


சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் நடிகர் விஜய் நடித்த சுறா படம் இன்று உலக முழுவதும் ரிலீஸ் ஆனது. நெல்லை ராம் தியேட்டரில் திரையிடப்பட்ட சுறா படத்தை காண ரசிகர் கள் தாரை தப்பட்டம் முழங்க பால்குடம் எடுத்து வந்தனர். சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் நடிகர் விஜய், நடிகை தமன்னா நடிக்கும் சுறா படம் இன்று உலக முழுவதும் வெளியானது. `சுறா' விஜய்க்கு 50வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காலையிலேயே திரையரங்குகளில் காத்திருந்தனர். படப்பெட்டி வந்ததும் அதற்கு மாலை அணிவித்து ஆட்டம் பாட்டத்துடன் அதை திரையரங்குக்குள் கொண்டு சென்றனர்.

ஒரு ரசிகர் பால்குடம் எடுத்து விஜயின் படத்திற்கு அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் பிரமாண்ட கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள், வாழை தோரணங்களால் அலங்கரிப்பட்டு இருந்தன. மேலும் தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.  திரையில் விஜய் தோன்றியதும் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும், விசில் அடித்தும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வடிவேலுவின் கலக்கல் காமெடியால் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர். படம் துவக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சிகளையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் கதை சென்றது. விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் வந்த தால் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் புல்லானது. டிக்கெட் கிடைக்காதவர்கள் நீண்ட வரிசையில் அடுத்த காட்சிக்காக காத்திருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்தனர்.
Read More

அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!




நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.
 
Read More

இந்தியாவிலேயே இவருதான்!

பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரிதான் பாடா படுத்துது ஆக்ஷன் படங்களோட நிலைமை! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளேதான்கிற மாதிரி வர்ற ஆக்ஷன் படங்களோட அந்தஸ்தை, கிரேன் வச்சு து£க்கும் போலிருக்கு கரண் நடிச்ச 'கனகவேல் காக்க' படம்!.
கதையின் தேவை கருதி கரண், தன்னையும் தன் இமேஜையும் அழித்துவிட்டு கதாபாத்திரத்தின் பலத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாகவோ, சாதாரண மனிதனாகவோ இல்லை. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியாக இருக்கிறார். இந்த துணிச்சல் அபூர்வமானது என்று பூடகமாக போட்டு தாக்கும் இயக்குனர் கவின் பாலா, படத்தில் துப்பாக்கி ஒன்றையும், பேனா ஒன்றையும் பாத்திரங்களாகவே உலவ விட்டிருக்கிறாராம். பொதுவாகவே தங்கள் பட ஹீரோவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் எந்த டைரக்டரும். ஆனால் கவின் பாலா கண்களில் தெரிகிற நம்பிக்கை, "இது நெசந்தான்யா" என்கிறது ஒவ்வொரு முறையும்! இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை இந்த படத்தில் கரண் செய்திருக்கிறார் என்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.
சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் பத்திரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் பா.ராகவன். "நான் இந்த படத்தின் வசனங்களில் வாழ தொடங்கி விட்டேன்" என்றாராம் படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். அப்படியரு விறுவிறுப்பான வசனங்களை எழுதியிருக்கிறாராம் பா.ராகவன்.
கவின்பாலா சொல்கிற விஷயங்களில் ஒரு அரிதாரமில்லாத உண்மை இருக்கிறது. எப்படி? இந்த படத்தின் ஒரு ஏரியாவை விலை பேசுவதற்காக ப்ரிவியூ பார்த்தாராம் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனின் சதீஷ்குமார். அப்புறம்? நானே எல்லா ஏரியா ரிலீசையும் பார்த்துக்கறேன் என்று மொத்தமாக அள்ளிக் கொண்டாராம்.
கவின்பாலாவின் வரவு, கலையுலகின் 'கும்ப மேளா'வாக இருக்கட்டும்
Read More

Thursday, April 29, 2010

குனிந்து பார்க்க முடியுமா அவரால்?

Actress Kushboo
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை ஆகிய இரண்டு படங்களை அடுத்து கண்ணன் இயக்கும் புதிய படம் 'வந்தான் வென்றான்'. இதிலும் பரத் நடிப்பதாக இருந்தது. கடைசிநேர சறுக்கலில் பரத் இடத்திற்கு வந்திருக்கிறார் ஜீவா.
ரேஸ் குதிரையில் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவா, மெள்ள மெள்ள ஒவ்வொரு குதிரையாக முந்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அதற்கும் விதியும் கொஞ்சம் கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோ படத்திலிருந்து சிம்பு விலகியதுதான் ஜீவாவின் பாய்ச்சலுக்கு இன்னொரு காரணம். கே.வி.ஆனந்த் படத்திலேயே நடிக்க வந்திட்டோம். ஜோடி விஷயத்தில் கொஞ்சம் எட்டித் தாவலாமே என்று நினைத்த ஜீவா, வந்தான் வென்றான் படத்திற்கு த்ரிஷாவை ஜோடியாக கேட்டாராம்.
தங்க விசிட்டிங் கார்டில் பெயர் பொறித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. குனிந்து பார்க்க முடியுமா அவரால்? "போயும் போயும் ஜீவாவுடன் ஜோடி சேர்வதா, ம்ஹ§ம்" என்று கூறிவிட்டாராம். மயிலு போனா என்ன, மரிக்கொழுந்து நான் இருக்கேன் என்று இப்போது கால்ஷீட் கொடுத்திருப்பவர்...? அழகு, மெழுகு அற்புத சிற்பம் தமன்னாவாம்!
மனுசனுக்கு மச்சமே குதிரையாயிருக்குப்பா...
Read More

குஷ்பு காங்கிரஸ் அணியில்


Actress Kushboo
இனி பயந்து பயந்து மியாவ்...னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை சுரீர்ன்னு சொல்ல ஒரு பேக் ரவுண்டை அமைத்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு. அநாதை குழந்தைக்குதான் அங்கங்கே அடிவிழும். அரசியலில் சேர்ந்திட்டா?
காங்கிரசில் சேரப்போகிறாராம்! தற்போது லண்டனில் இருக்கிற குஷ்பு அங்கிருந்தபடியே ஒரு அஸ்திரத்தை ஏவியிருக்கிறார். "எனக்கு காங்கிரஸ் கட்சி மேல பெரிய அபிமானம் உண்டு. அதனால் சென்னை வந்ததும் கலந்து பேசி காங்கிரஸ்ல சேரலாம்னு இருக்கேன்" இதுதான் குஷ்பு போட்ட புதுக்கோலம். குது£கலம்தான் தொண்டர்களுக்கு.
"அன்னை சோனியாவின் தலைமையை ஏற்க யார் முன்வந்தாலும் அவங்களை முழு மனசோடு வரவேற்போம்" என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும். தமிழகத்தில் மேல்சபை வருவததாக அறிவிப்பு வந்த நாளில் இருந்தே குஷ்புவுக்கும் அதில் இடம் உண்டு என்ற வதந்திகள் உலவ துவங்கின. இப்போது வதந்தி உண்மையாகும் நிலை வந்திருக்கிறது.
ஆக, சத்தியமூர்த்தி பவனுக்குள் மேலும் ஒரு கோஷ்டி!
Read More

அசின் கொடுத்த 'பூ பார்ட்டி'!


காவல்காரன் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார் அசின்.

விஜய்யின் காவல்காரன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அசின். இந்தியில் நடிக்கப் போன அவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் இது.

கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாததால் ரொம்பவே போரடித்ததாம் அசினுக்கு. எனவே பார்ட்டி வைப்போமா என்று நாயகன் விஜய்யிடம் கேட்க, அவரும் சம்மதித்ததால், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு பூ பார்ட்டி என்று பெயர் வைத்தாராம்.

அது என்ன பூ பார்ட்டி... ? விருந்துக்கு வரும் எல்லோரும்... அதாவது ஹீரோ விஜய், இயக்குநர் சித்திக் உள்பட, காதில் ஒரு வெள்ளைப் பூவை வைத்துக் கொண்டு வரவேண்டும். ஆண்கள் இடது காதிலும் பெண்கள் வலது காதிலும் பூவை சொருகிக் கொண்டு வரவேண்டும் என்பது பார்ட்டி விதி.

அசின் போட்ட கண்டிஷனாச்சே... மீற முடியுமா... அத்தனை பேரும் காதில் பூவோடு அசின் பங்களாவுக்குப் போனார்கள். விதவிதமான உணவுகள், உற்சாக சமாச்சாரங்கள் பரிமாறப்பட, இரவு முழுக்க நடந்ததாம் பார்ட்டி.

இரு தினங்களுக்குப் பிறகு, காவல்காரன் யூனிட் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இடம்பெயர்ந்தது. ஆனால் இன்னும் பூ பார்ட்டி பற்றி பேச்சு ஓயவில்லையாம் யூனிட்டில்!
Read More

ரஜினி விளக்கியதால் தான் அமிதாப் போகவில்லை !

Rajini and Amitabஇலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.

அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.

இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.

இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
Read More

கிளாமருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் : நயன்தாரா கவலை



ssஇந்தி சினிமாவுக்கு செல்லும் ஆசை இல்லை என்றார் நயன்தாரா. இது பற்றி அவர் கூறியதாவது: கிளாமர் வேடங்களில் அதிகம் நடித்துவிட்டேன். நடிப்பை வெளிப்படுத்தும் படத்துக்காக காத்திருந்தேன். அப்போதுதான் மலையாள படமான ‘எல்க்ட்ரா’வில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலான படங்களில் நடிக்கும்போது மரத்தை சுற்றி நடனம் ஆட மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. பட விளம்பரத்துக்கும் கிளாமருக்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய படங்களிலும் ஹீரோயின்களுக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நல்ல கேரக்டர் கொண்ட சிறு படங்களில் நடிக்கலாம்.

எந்த நடிகையுடனும் எனக்கு போட்டி இல்லை. அவரவருக்கு தகுந்த இடம் திரையுலகில் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது கன்னட படத்திலும் நடிக்கிறேன். ‘இந்தி படங்களில் நடிப்பீர்களா?’ என கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கிறேன். இந்தியில் புதுமுக நடிகையாக பணியாற்ற விரும்பவில்லை. பிரபு தேவாவுடன் தொடர்பு பற்றி கேட்கிறார்கள். வதந்திகள் இப்போது என்னை பாதிப்பதில்லை. அதை பற்றி கவலைப்படுவதும் இல்லை. பிரபலமாக இருப்பதற்காக கொடுக்கும் விலைதான் இது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Read More

Wednesday, April 28, 2010

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்…

பொதுவான ஆலோசனைகள் :

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
Read More

அழகில் புது விதம்...!


அழகில் புது விதம்...!``இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.
 
இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகி றார்கள். எனவே அதற் கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள் வது மிக முக்கியம். பணிபுரி வோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக் கும் தகுந்தாற் போல் கூந் தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்' சமூகத்தில் அவர் களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.'' என்கிறார், பிரபல அழகுக் கலை நிபுணர் மகாலெட்சுமி கமலக்கண்ணன்.
 
இவர் மறைந்த முன்னாள் தமிழக துணை அமைச்சர் ஐசரிவேலனின் மகள். கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி. மகாலெட்சுமி தமிழக அரசு மகளிர் அழகு கலைப்பிரிவின் தேர்வாளர். மைலாப்பூரில் இயங்கும் மகா அழகுக்கலை பயிற்சி அகாடமியின் முதல்வர். பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அழகுக் கலை தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர். மலேசிய அரசு அனுமதியுடன் அங்கும் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது வளர்ச்சியில் கணவருக்கு பெரும் பங்குண்டு.
 
``அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.'' என்கிறார், மகாலெட்சுமி.
 
தற்போதைய கூந்தல் கலாசாரத்தைப் பற்றி அவர் விளக்குகிறார்:
 
``கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்' மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை `ஸ்ட்ரைட்டனிங் தெரபி' என்பார்கள்.
 
சுருள் சுருளாகவும், அலை அலையாகவும் இருக்கும் முடியை நேராக்குவதே ஸ்ட்ரைட்டனிங் தெரபி ஆகும். இவ்வாறு ஸ்ட்ரைட்டனிங் செய்த கூந்தல் நவீனமாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்புடனும் தோற்றமளிக்கும். கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து கொள்ளும் கல்லூரி மாணவிகள் ரிவர்ஸ் லாங்ஸ் டெப் கட், கேஸ்கட் கட், காஸ்மோபாலிடன் கட், ரிவர்ஸ் க்ராஜீவேஜன் கட் ஆகிய முறைகளில் கூந்தலை வெட்டிக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பார்கள்.
 
முன்பெல்லாம் பிரபலங்களும், வசதி படைத்த வர்களும் தான் கூந்தலை கலரிங் செய் வார்கள். தற்போது இந்த மோகம் அனைவரிடமும் காணப் படுகிறது. தங்களை நாகரிக தோற்றம் கொண்டவர் களாகவும், அழகிய சாதாரண மற்றும் குடும்பப் பாங்கான தோற்ற முடையவர்களாகவும் தயாராக்கிக் கொள்வதற்கு இந்த ஹேர்கலரிங் முறையை பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
 
இதில் 3 விதம் உள்ளது. அவை:
 
கிரே ஹேர் கவரேஜ் அதாவது நரைமுடியை நிறம் மாற்றுதல். குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்து வண்ணங்கள் பூசுவது.
 
இதுபோன்ற முறைகளில் கூந்தலுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது. இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஒளி முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள் பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
 
வீட்டில் உள்ள பெண்மணிகள் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால், உடனடியாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரிஜி னல் அட்டாச்சுடு ஹேர் பீஸை நிமிடத்தில் கிளிப் மாதிரி பொருத்திக் கொள்ளலாம். இது அழகு நிலையங் களுக்குச் சென்று செய்து கொண்ட கூந்தல் அலங்காரத்துக்கு இணையாக இருக்கும். நிகழ்ச்சிக்கு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் போது, அது எந்த மாதிரியான நிகழ்ச்சி அது காலை நேரமா அல்லது மாலை நேரமா அவரவர் வயது மற்றும் உறவு முறை ஆகியவற்றிற்கு ஏற்ப விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்ளலாம்.
Read More

ஐஸ்வர்யாராய் படத்துக்கு சிக்கல்


இலங்கையில் வருகிற ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது.
 
இவ்விழாவை துவக்கி வைக்க இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அழைக்கப்பட்டு உள்ளார். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் போன்றோரும் பங்கேற்பதாக உள்ளது. தமிழ் நடிகர் நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.
 
இவ்விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டைரக்டர் சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அமிதாப்பச்சன் வீட்டையும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
தமிழ் நடிகர் நடிகைகள் இலங்கை பட விழாவை புறக்கணித்துவிட்டனர். அமிதாப்பச்சனோ ஐஸ்வர்யாராயோ இலங்கைக்கு சென்றால் ராவணன் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க சீமான் இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இப்படம் தமிழிலும் ரிலீசாகிறது. அந்த படத்தை புறக்கணிக்கவும், திரையிட விடாமல் தடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
 
இலங்கை சர்வதேச படவிழாவில் “ராவணன்” படத்தை திரையிடவும் திட்டமிடப்பட்டது. அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More

ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? - அபிஷேக் விளக்கம்

தனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி. இப்படத்தை தமிழில் ராவணன் என்ற பெயரில் அவர் வெளியிடவுள்ளார்.

தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ், பிரியா மணி, கார்த்திக், ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் தமிழிலும் அபிஷேக் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்கிறார்.

அபிஷேக் ஏன் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது:

மணிரத்தினம் ராவண் படத்தை இயக்க முடிவு செய்தபோது இந்தியில் மட்டுமே இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் தமிழிலும் இதைக் கொண்டுவர தீர்மைனித்தார். இந்தியில் நான் நடித்த பீரா கதாபாத்திரத்தை தமிழில் தேவ் என்ற பெயரில் செய்ய கேட்டுக் கொண்டார். நானும் ஏற்றுக் கொண்டேன்.

ஒத்துக் கொண்டாலும் கூட என்னால் தமிழில் அதைச் செய்ய முடியாது என்று இப்போது தோன்றியது. காரணம் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாத ஒரு மொழியில் நடிப்பது என்பது சரியாக இருக்காது.

எனவே தமிழில் நடிக்க விரும்பவில்லை என்று மணிரத்தினத்திடம் கூறிவிட்டேன். ஒரு நடிகருக்கு நடிக்கும் படத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதேசமயம், ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் நடிக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் அபிஷேக்.

அபிஷேக் மறுத்ததால்தான் பிருத்விராஜை நடிக்க வைத்தாராம் மணிரத்னம்.

இப்போது வேகமாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார் அபிஷேக் பச்சன் என்பது கூடுதல் தகவல்.
 
Read More

இளைஞன் படப்பிடிப்பை துவக்கி வைத்தார் கலைஞர்

முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகவிருக்கும் புதிய படமான இளைஞன் படத்தின் சூட்டிங் இன்று தொடங்கியது. முதல்வர் கருணாநிதி ஆக்ஷன் சொல்லி சூட்டிங்கை தொடங்கி வைத்தார்.

இதுவரை 74 படங்களுக்கு கதை  வசனம் எழுதியிருக்கும் முதல்வர் 75வதாக இளைஞன் படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார். பா.விஜய் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், மீனாட்சி நடிக்கின்றனர். மேலும், வடிவேலு, சுமன், நாசர், குஷ்பு, மணிவண்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பி.சி ஸ்ரீராமின் உதவியாளர் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். இணை தயாரிப்பு பெஞ்சமின்.
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் 50வது படமான இளைஞன் படப்பிடிப்பை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். உற்சாகத்துடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல்வர் கருணாநிதி மைக்கில் ஆக் ஷன் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். பா.விஜய், மணிவண்ணன், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்கள் முதல் காட்சியில் நடித்தனர்.
நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன், தயாரிப்பாளர் ராம.நாராயணன், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சூட்டிங்கை தொடங்கி வைத்த பின்னர் நடிகர் நடிகைககள் முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து நின்றபடி உற்சாகமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
Read More

ஐஸ்வர்யாராய் எதிர்ப்பு:மணிரத்னம் எச்சரிக்கை



 இதிகாச காவியமான ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களில் மாற்றம் செய்து இந்த நவீன காலத்திற்கேற்ற முறையில் படமாக எடுக்கிறார், பிரபல டைரக்டர் மணிரத்னம்.
தமிழ் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்திற்கு இந்தியில் ராவண் என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரும், துணை வேடங்களில் கோவிந்தா, ரவி கிஷண், நிகில் திவேதி, தேஜஸ்வினி கோல்காபூர், பிரியாமணி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படம் வரும் ஜுன் மாதம் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் டப்பிங் செய்யப்பட இருக்கிறது.
படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டது.
படத்தின் கதைப்படி, 90 அடி உயரத்தில் இருந்து கீழே சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றில் அபிஷேக்பச்சன் குதிப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சியில் அபிஷேக்பச்சனுக்கு பதில், `டூப்' நடிகரை வைத்து படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அந்த காட்சியில், நான்தான் நடிப்பேன் என்று அபிஷேக்பச்சன் பிடிவாதம் செய்தார். ஆற்றுக்குள் மிகப்பெரிய பாறைகள் இருக்கக்கூடும். அதில் மோதினால், உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மணிரத்னம் எச்சரித்தார். என்றாலும், அபிஷேக்பச்சன் பயப்படாமல், அந்த காட்சியில் தானே நடிப்பதாக கூறினார்.
படப்பிடிப்பில் உடன் இருந்த ஐஸ்வர்யாராயும், கணவர் அபிஷேக்பச்சனிடம் அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவரை அபிஷேக்பச்சன் சமாதானப்படுத்தினார்.
ஒகேனக்கல்லை சேர்ந்த குழந்தைகள் கூட இந்த உயரத்தில் இருந்து குதித்து விளையாடுகிறார்கள். அந்த குழந்தைகளுக்கு உள்ள துணிச்சல் என்னிடம் இல்லையா?என்று கேட்டு மனைவியை அடக்கினார். பின்னர், அந்த காட்சியில் நடிப்பதற்காக 90 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறினார்.
படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் `என்ன ஆகுமோ?'' என்று பயந்து கொண்டிருக்க, அபிஷேக்பச்சன் வெற்றிகரமாக அந்த காட்சியில் நடித்து முடித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.
Read More

வருவாரா, மாட்டாரா?

அண்டை வீட்டு நெய்யே, அத்தனையும் பொய்யேங்கிற மாதிரிதான் இருக்குதாம் அந்த விஷயம். ஒட்டுமொத்த யூனிட்டும், திட்டி தீர்க்குது. வருவாரா, மாட்டாரா?
உள்ளூர் மிக்சியிலே ஒரு பிளேடும் ஷார்ப் இல்லன்னு அண்டை மாநிலத்திலேர்ந்துதான் கதாநாயகிகளை கூட்டிட்டு வர்றாங்க. வளர்ற வரைக்கும் நல்லா ஒத்துழைப்பு கொடுக்கிற இந்த நடிகைங்க வளர்ந்த பிறகு செய்யறதென்ன? ஒரே கால்ஷீட் சொதப்பல். ஜீவா நடிக்கிற சிங்கம் புலி படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருத்தர் ஹனிரோஸ் என்கிற சவுந்தர்யா. மற்றொருவர் திவ்யா. அதாவது குத்து ரம்யா. இருவருக்குமே பூர்வாசிரமத்தில் வெவ்வேறு பெயர் என்ற ஒரு ஒற்றுமை தவிர வேறு எந்த விஷயத்திலேயும் ஒற்றுமை இல்லையாம்.
டாண் என்று வந்து நிற்கிறார் சவுந்தர்யா. ஆனால் திவ்யாதான் சொன்ன நேரத்தில் வருவதில்லை. சொன்ன தேதியையும் தருவதில்லை என்று புகார் வாசிக்கிறார்கள் யூனிட்டில். கடைசியாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார் திவ்யா. அதன்பின் சூர்யா மார்க்கெட்டும் டாப்பில் போய்விட்டது. திவ்யாவுக்கும் அப்படி தமிழில் பெயர் வாங்க வேண்டுமென்ற ஆசை. ஆனால் விஜய், அஜீத், விக்ரம் வகையறாக்களில் இவரது போட்டோவை காட்டினாலே முகம் சுளிக்கிறார்களாம். ஆஹா... என்று ஆனந்தப்பட்டவர் ஜீவா மட்டுமே. ரேஞ்ச் கொஞ்சம் கம்மி என்பதால்தான் இப்படி அலட்சியம் காட்டுகிறாராம் திவ்யா.
எலி வேறிடத்தில் இருந்தாலும் குழியில் புகை போட்டு பிடிக்கிற மாதிரி இங்குள்ள அவரது மேனஜருக்கு புகை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம் சிங்கம் புலி யூனிட்டில்!
Read More

நம்ம செல்லத்துக்கு கல்யாணமாம்


ssடான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். இந்தி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுபவர் போனி வர்மா. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்களில் இவர் பணியாற்றினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ் ராஜ்.
இதுபற்றி பிரகாஷ் ராஜ் கூறியதாவது:
சென்னை, ஐதராபாத்தில் நான் வீடு கட்டுவதாகவும் அதை பிரமாண்டமாக வடிவமைப்பதாகவும் சொல்கிறார்கள். நான் கட்டிடக் கலை படித்தவன். எனது வீடு எந்த விதத்தில் அலங்கரிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து, வடிவமைத்து வருகிறேன். கன்னடத்தில் நான் இயக்கியுள்ள ‘நானு நன்னா கனசு’ இரு வாரங்களில் திரைக்கு வரும். இது ‘அபியும் நானும்’ படத்தின் ரீமேக். தொடர்ந்து பல மொழிகளில் நடிக்கிறேன். எனது மகள்களுக்காக பல படங்களில் நடிக்கிறேன். அவர்களுக்கு தேவையான அளவுக்கு நான் சம்பாதிக்க விரும்புகிறேன். அதே நேரம், எனது வாழ்க்கை பற்றியும் நான் சில முடிவுகள் எடுக்கும் நேரம் வந்திருக்கிறது. நான் காதலிப்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன். இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.
Read More

'சுறாவின் காதலி நான்' : தமன்னா!

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’, 30&ம் தேதி ரிலீசாகிறது. யூனிட்டை போலவே பரபரப்பாக இருக்கிறார் தமன்னா. ‘ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கேன். தியேட்டர்ல ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்கணும். ‘நான் நடந்தால் அதிரடி’ பாட்டுக்கு தியேட்டர்ல டான்ஸ் ஆடணும் போலிருக்கு’
என குதூகலம் அடைகிறார்.

விஜய்யுடன் நடித்த அனுபவம்?

முதல் முறையா நாங்க ஜோடி சேர்ந்திருக்கோம். விளம்பரம் பார்த்தவங்க எங்க ஜோடி சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. குறிப்பா ‘நான் நடந்தால் அதிரடி’ பாடல்ல, ரெண்டு பேருமே ரொம்ப ஸ்டைலிஷா இருக்கோம்னு பாராட்டுறாங்க. இதுக்கு டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார், கேமராமேன் ஏகாம¢பரத்துக்குதான் நன்றி சொல்லணும். விஜய் ரொம்ப எளிமையான டைப். காட்சிகள்ல வசனத்தை புரிஞ்சிட்டு நடிக்க நான் நேரம் எடுத்துக்குவேன். அதுவரைக்கும் பொறுமையா இருந்து, அவர் ஒத்துழைப்பு கொடுப்பார்.

காமெடி?

அதை பத்தி சொல்லியே ஆகணும். விஜய் படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அவரே நல்லா காமெடி பண்ணுவார். கூட வடிவேலும் இருக்கார். சொல்லவா வேணும்? இவங்களுக்கு நடுவில நானும் காமெடி பண்ணணும்னு ராஜகுமார் சொன்னார். பயந்துபோனேன். காரணம், இவங்களுக்கு இணையா நான் காமெடி பண்ண முடியாதுன்னுதான். கடைசியா விஜய் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். அந்த காட்சிகள் ரொம்ப என்டர்டெயின்மென்டா வந்திருக்குன்னு டைரக்டர் பாராட்டினார்.

ஆக்ஷன் படமிது. உங்களுக்கு முக்கியத்துவம் எப்படி?

‘அயன்’, ‘படிக்காதவன்’கூட ஆக்ஷன் படங்கள்தானே. அதுல என்னோட பார்ட் ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. அதே மாதிரிதான் ‘சுறா’வும். மீனவ குடும்பங்களை சுத்தி நடக்கிற கதையிது. சுறாவின் காதலி நான். அந்த குப்பத்துக்கு நான் வர்றதும் விஜய்யை விரும்புறதும் அதுக்கு பிறகு நடக்கிற சம்பவங்களும் விறுவிறுப்பா இருக்கும்.

யூனிட் பற்றி?

தமிழ் படங்கள்ல எப்போவுமே எனக்கு பெஸ்ட் யூனிட்தான் கிடைச்சிருக்கு. அந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்வேன். வெளியில நமக்கு எத்தனையோ கவலைகள் இருக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, அதையெல்லாம் மறந்து கேரக்டரோடு ஒன்றிப்போகணும். அதுக்கு ரொம்பவே ஹெல்ப்பா இருக்கிறது பட யூனிட்தான். யூனிட்ல டைரக்டர்லேருந்து லைட்பாய் வரைக்கும் சுறுசுறுப்பா சிரிச்ச முகத்தோடு இருக்கும்போது, நம்ம வேலை ஈஸி ஆயிடும். ‘சுறா’ படத்தை நாம திட்டமிட்டபடி முடிக்க யூனிட் முக்கிய காரணம்.
Read More

தமன்னா டூர்

விஜய்யுடன் ‘சுறா’, ஜெயம் ரவியுடன் ‘தில்லாலங்கடி’ படங்களில் நடித்து முடித்த தமன்னா, அடுத்து கார்த்தி ஜோடியாக தெலுங்கு ‘விக்ரமார்குடு’ ரீமேக்கில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், 20 நாட்கள் ஹாலிடே கொண்டாட
அமெரிக்கா செல்கிறார். அங்கு அவரது உறவினர்கள் இருக்கிறார்களாம். மே 10ம் தேதி பயணமாகும் தமன்னா, மே இறுதியில் சென்னை திரும்புகிறார்.
Read More

நல்லாயிருக்கு விஜய் ஜாதகம்!

ரீமேக் உரிமைக்காக கோடம்பாக்கத்தில் வெட்டு குத்துகளும் ஆசிட் வீச்சுகளும்தான் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய அத்தனை ஸ்டண்ட் மீறல்களும் அங்கே நடந்து வந்திருக்கிறது. ஒரு படத்தை இயக்குகிற டைரக்டர் கதை என்று தனது பெயரை போட்டுக் கொள்ள தவியாக தவிப்பார். காரணம் அந்த படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும் போது, விற்றதில் 40 சதவீத பணம் அவருக்கு போய் சேர வேண்டும் என்பது டிரேட் விதி!
பாடிகாட் என்ற மலையாள படத்தின் ரிமேக் உரிமை அப்படத்தின் தயாரிப்பாளர் ஜானி சகாரியா வசம் இருந்ததாகவும், ரிலீஸ் நேரத்தில் அந்த உரிமையை கோகுலம் நிறுவனத்திற்கு அவர் எழுதி கொடுத்துவிட்டதாகவும் புலம்பல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய சித்திக், அதே படத்தை காவல்காரன் என்ற பெயரில் விஜய்யை வைத்து தமிழில் எடுத்து வருகிறார். ரீமேக் உரிமையே அவரிடம் இல்லை. பிறகெப்படி இப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சித்திக்கின் பதில்? அந்த உரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் ஜானி சொல்வதிலும் உண்மையில்லை என்கிறார். பொதுவா நிக்கும்போதும் பிரச்சனை. பிலிமா விக்கும்போதும் பிரச்சனை. நல்லாயிருக்கு விஜய் ஜாதகம்!

Read More

Tuesday, April 27, 2010

வில்லனை தேடி 100 கிலோ மீட்டர் ஓடிய கதாநாயகன்

 
திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி ஆகிய படங்களை தயாரித்த பட நிறுவனம், ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,' `மதராசப்பட்டணம்' ஆகிய இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
 
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், `பலே பாண்டியா' என்ற படம் வெளிவர இருக்கிறது.
 
இதில், `வெண்ணிலா கபடி குழு' படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணுவும், `பொய் சொல்ல போறோம்,' `கோவா' படங்களில் நடித்த பியாவும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அமர், ஜிப்ரான் என்ற இரண்டு வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
புக்கட் தீவு மற்றும் ஹாலிவுட் படங்களில் வந்த ஜேம்ஸ்பாண்டு தீவு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. புக்கட் தீவில், உச்சக்கட்ட சண்டை காட்சி 10 நாட்கள் படமாக்கப்பட்டது. கதாநாயகன் விஷ்ணுவும், வில்லன் ஜிப்ரனும் `டூப்' போடாமல் மோதினார்கள்.
 
படத்தின் இரண்டாம் பகுதியில் கதைப்படி விஷ்ணு, வில்லனை தேடி ஓடிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் படத்துக்காக, குறைந்தது 100 கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறார்.
 
இந்த படத்துக்காக கவிஞர் வாலி மூன்று பாடல்களையும், தாமரை இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். பின்னணி பாடகர் தேவன் ஏகாம்பரம், இசையமைத்து இருக்கிறார். பல படங்களுக்கு விளம்பர டிசைனராக இருந்த சித்தார்த் டைரக்டு செய்துள்ளார்.
 
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
 

Read More

பிரீத்தி ஜிந்தாவின் `திக்... திக்...' அனுபவம்!

ஐ.பி.எல். போட்டிகளில் தனது பஞ்சாப் அணி சொதப்பினாலும் தொடர்ந்து புன்னகை முகமாகவே வலம் வருகிறார் பிரீத்தி ஜிந்தா. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். போட்டிகளின் போது இவரை `பிரெட்டி... பிரெட்டி' என்று அழைத்தார்களாம் அந்நாட்டு ரசிகர்கள்.
 
சினிமா, கிரிக்கெட் தவிர இந்த அழகு நட்சத்திரத்துக்குப் பிடித்த இன்னொரு விஷயம், சுற்றுலா. தனது மனதுக்குப் பிடித்த இடங்கள் குறித்து மனம் திறக்கிறார் பிரீத்தி...

செல்ல விரும்பும் இடம்
 
``பிடல் காஸ்ட்ரோ இறக்கும் முன் கிïபாவுக்குச் செல்ல விரும்புகிறேன். அதேபோல நான் இறப்பதற்கு முன் காண விரும்பும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. எனது கடைசிக் காலத்துக்கு முன் உலகின் அழகான அத்தனை இடங்களையும் பார்த்து விடத் துடிக்கிறேன். எங்கப்பா ராணுவத்தில் இருந்ததால் நாங்கள் ஒரே இடத்தில் வசித்ததே இல்லை. காஷ்மீர் முதல் கேரளா, மிசோரம் வரை நாங்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தோம். நமது மிக அழகான நாட்டை முழுமையாகத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது.''
 
தென் ஆப்பிரிக்க அனுபவம்
 
``கடந்த முறை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டி அதற்கே உரிய `த்ரில்'லை அளித்தது. உள்ளூர் மைதானம் என்ற வசதி இல்லாததால் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்க மக்கள் மிகவும் இதமாக நடந்து கொண்டார்கள். நான் மைதானத்தை நெருங்கும்போதே `பிரெட்டி... பிரெட்டி...' என்ற உற்சாகக் கோஷம் கேட்கும். ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு வருத்தம். அது, அங்கு காட்டுக்குள் சுற்றிப் பார்க்க (சபாரி) முடியவில்லை என்பதுதான். எனது மெய்க்காவலர், `சபாரி' போனார். அவரை ஒரு சிங்கக் குட்டி கடித்துவிட்டது. ஆனால் அவர் தன்னை ஒரு `சிங்கம்' கடித்துவிட்டது என்பதைப் போல கூறி என்னையும் கதிகலங்க வைத்துவிட்டார்!''
 
லண்டனில் `திக்... திக்...'
 
``தனியாகப் பயணம் செய்வது சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் சமயங்களில் அது வேறு மாதிரியாகவும் போய்விடும். பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒருமுறை லண்டனில் ஒரு குறுகலான சந்தில் மாட்டிக் கொண்டேன். அப்போது ஒரு திருடன் எனது நகைகள், பர்ஸ் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். நான் ஆசை ஆசையாய் வாங்கிய இனிப்புகளைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அதிலிருந்து நான் எங்கு சென்றாலும் கார், டிரைவர், மெய்க்காவலர் இல்லாமல் செல்வதில்லை!''
 
மனங்கவர்ந்த பாரீஸ்
 
``லண்டன், சுவிட்சர்லாநëதுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நகரம் பாரீஸ். கடந்த ஜுலையில் நானும் எனது பேஷன் டிசைனர் தோழி சுரிலி கோயலும் ஒரு திடீர்ப் பயணமாக லண்டனிலிருந்து பாரீஸுக்குப் புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஜாலியாகப் பொழுதைக் கழித்த நாங்கள், மிகவும் ஆடம்பரமான ஓட்டலான `ஐந்தாம் ஜார்ஜ்'-ல் தங்கினோம். நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். பகல் வேளையில் அவள் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, மாலை வேளையில் நான் விரும்பும் இடங்களுக்குச் செல்வது. அவள் என்னைக் கடை கடையாக இழுத்துச் சென்றாள். மாலையில் எனது விருப்பப்படி புதிய புதிய உணவு வகைகளை ருசி பார்த்தோம். காரணம், நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை!''
 
Read More

மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்




நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள்.அதில் உள்ள மீடியா பிளேயரில் உங்கள் சிடி மற்றும் டிவிடியில் டேட்டாவினை எழுதலாம். வீடியோ பைல்கள் மற்றும் படங்களையும் இதில் பதியலாம். எப்படி என்று பார்க்கலாமா!
ஆடியோ சிடியாக மாற்றுகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட் மாற்றப்படுவதில்லை. தரமும் குறைவதில்லை.
முதலில் Start>All Programs>Windows Media Player எனச் செல்லவும். அதன் பின் பிளேயர் லைப்ரேரியில் Burn என்னும் டேப்பை கிளிக் செய்து பின் Date DVD அல்லது CD என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி காலியாக உள்ள சிடியை உங்கள் கம்ப்யூட்டரின் சிடி ட்ரேயில் போடவும். Auto Play டயலாக் பாக்ஸ் வந்தால் அதனை குளோஸ் செய்திடவும். சிலரின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருக்கலாம். இதில் எந்த டிரைவ் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து எந்த பாடல் பைல்களைப் பதிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். எழுதப்பட வேண்டிய பாடல்களை Player Library ல் உள்ள Details pane லிருந்து வலது பக்கம் உள்ள List Pane ல் போடவும். இங்கே நீங்கள் விரும்பும் வகையில் பாடல்களின் வரிசையை மாற்றலாம்.
இந்த லிஸ்ட்டிலிருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றால், இதில் ரைட் கிளிக் செய்து Remove என்பதில் கிளிக் செய்திடவும். லிஸ்ட் அமைப்பது முடிந்த பின் Burn கிளிக் செய்து சிடியில் பதிவதைத் தொடங்கி முடிக்கவும்.
Read More

சென்னை அணி வெற்றியால் சந்தோஷப்பட்டேன் -திரிஷா

ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையுலக வட்டாரத்திலும் இந்த சந்தோஷம் பரவியுள்ளது. தமிழ் நடிகர்-நடிகைகள் பலர் சூட்டிங்கை முடித்து டி.வி. முன்னால் முடங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதும் துள்ளி குதித்தனர். இதுபற்றி நடிகை திரிஷா கூறியதாவது:-
 
ஐ.பி.எல். இறுதி போட்டி நடந்த போது நான் ஐதராபாத்தில் இருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்த செய்தி சாதாரணமானது அல்ல. குறிப்பிடத்தக்க பெரிய சாதனை.
 
சென்னை அணி ஜெயிக்கும் என்று எனக்கு தெரியும். டோனி, ரெய்னா ஆட்டம் சிறப்பாக இருந்தது. சென்னையில் வசிக்கும் நம் எல்லோருக்கும் இந்த வெற்றி பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது.
 
இவ்வாறு திரிஷா கூறினார்.
 
Read More

நடிகை சிந்து மேனன் ரகசிய திருமணம்

நடிகை சிந்து மேனன், பிரபு திருமணம் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடந்தது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாளகுடாவை சேர்ந்தவர் சிந்து மேனன். பெங்களூரில் படிப்பை முடித்து, அங்கேயே செட்டில் ஆனார். பின் மலையாளத்தில் 'உத்தமன்' படத்தில் ஜெயராமுடன் நடித்தார். தொடர்ந்து 'வாஸ்தவம்', 'ராஜமாணிக்கம்', 'ட்வென்ட்டி ட்வென்ட்டி' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் பாரதிராஜா இயக்கிய 'கடல் பூக்கள்' மூலம் அறிமுகம் ஆனார். 'சமுத்திரம்' படத்திலும் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு 'ஈரம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 'சந்தமாமா'வில் நடித்தார். இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வந்தார்.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபு என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர், கம்ப்யூட்டர் இன்ஜினீயராக உள்ளார். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பெங்களூர் எம்.ஜி. சாலையிலுள்ள பவுரிங் கிளப்பில் நேற்றிரவு நடந்தது. இதில் 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், நடிகர் நந்தா உள்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
Read More

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஐஸ்வர்யா!

புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட பட வரிசையில் 23 வது படம் தயாராகி வருகிறது. இதில் நாயகி தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. முதலில் ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் பரீதா பிண்டோவை அணுகினர். பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இப்போது ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளார்களாம் ஜேம்ஸ்பாண்ட் தயாரிப்பாளர்கள்.
Read More