
ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் மற்றும் அவரது செல்போனை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சோயிப் மாலிக் - சானியா மிர்சா திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் ஆயிஷாவின் தந்தை சித்திக் வெளியிட்டார். மேலும், மாலிக்கின் குழந்தையை வயிற்றில் தான் சுமந்ததாகவும், ஆனால் அது இயற்கையாகவே கலைந்து போனதாகவும் அதிர்ச்சி தகவலை ஆயிஷா தெரிவித்துள்ளார். தனக்கு சிகிச்சை செய்த மருத்துவமனையையும் அவர் அடையாளம் காட்டியுள்ளார். இதனிடையே, திடீரென ஐதராபாத் வந்த மாலிக், ஏற்கெனவே திருமணம் ஆன புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி தனக்கு 5 கோடி ரூபாய் தர முன்வந்ததாக சித்திக் நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசில் அவர் அளித்த புகார் குறித்து ஐதராபாத்தில் சானியா மிர்சா வீட்டில் தங்கியுள்ள சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து அவரது பாஸ்போர்ட் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி மாலிக்-ஆயிஷா சர்ச்சையில் யார் மீது தவறு என்று கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. மாலிக் மீதுதான் தவறு என்று 62 சதவிகிதம் பேரும், ஆயிஷா மீது தவறு என்று 38 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.