
சானியாமிர்சா- சோயிக் மாலிக் திருமணம் ஐதராபாத் தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இரு குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சானியாமிர்சா- சோயிக் மாலிக் திருமணம் ஐதராபாத் தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இரு குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் மூன்றாவது பன்னாட்டு பாலியல் கருத்தரங்கை நடத்துகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இத்துறை மருத்துவர், தொடர்ந்து புகைப் பிடிப்பவர்களுக்கு தாம்பத்திய உறவு கொள்ளும் போது செயல்படாத் தன்மை உள்ளிட்ட பாலியல் குறைபாடுகள் அதிக அளவில் ஏற்படும் என்று தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேர்ந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார். புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார். பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார். இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார். உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது. தற்போதைய வேலை கலாச்சாரம் பாலியல் தொடர்பான மனிதர்களின் எண்ணத்தை மாற்றுவதுடன் தரம் தாழ்ந்து செல்லவும், பாலியல் சீர்குலைவுக்கும் காரணியாக அமைந்து உள்ளது எனவும் மருத்துவர் காமராஜ் தெரிவித்து உள்ளார். துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர். இந்த வகையானவர்கள் 20 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 15 விழுக்காட்டினர் விவாகரத்து பெற்றதால் என்று மருத்துவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனைகளில் உள்ள உண்மை நிலைத் தொடர்பாகவும், சமுதாயத்தில் உள்ள தவறான எண்ணத்தையும், நம்பிக்கைகள் தொடர்பாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் இரண்டு நாட்கள் விரிவான அளவில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். |
இரண்டு மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தில் ஆப்பிரிக்க நிலப்பகுதியில் தோன்றிய ஆதிமனிதனை ஒத்த உயிரினம் என அறியப்படுகிறது. படிப்படியான இன்றைய நாகரீக மனிதனின் வளர்ச்சியின் தொடர்பை இட்டு நிரப்பக்கூடிய கண்டுபிடிப்பாக இது இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1.9 மில்லியன் வருடத்துக்கு முற்பட்ட இரண்டு எலும்பு படிமங்கள் (ஆஸ்ட்ரோப்லிதெக்ஸ் செடிபா )ஒரே இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவை ஒரு தாய் (20 அல்லது 30 வயது) மற்றும் ஒரு மகனுடையதாக (8) இருக்கலாம் என அறிவியலார்கள் தெரிவிக்கிறார்கள். தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திச் சென்ற லீ பெர்கர் , 2008 லிருந்து கூகிள் எர்த்தை மிக்கேல் ஜோன்ஸ் , கூகிள் எர்த்தின் தொழில்நுட்பத் தொடர்பாளர் , தங்கள் கூகிள் எர்த்தின் மிகச்சீரிய தேடுதல் முறையாலும் சிறந்த வழிகாட்டுதல் முறையாலும் பெர்க்கர் இதற்கு முன்பே அறியப்படாத கிட்டத்தட்ட 500 குகைப் பிரதேசங்களை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார் |
தம்பி அர்ஜூனா என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நாவலூர் கிராமத்தில் நடந்தது.
ரமணா, பெரோஸ்கான், பிரவின்ராஜ் ஆகிய மூன்று பேரும் கதாநாயகர்களாகவும், ஆஷிமா கதாநாயகியாகவும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியில், ஆஷிமா எரியும் நெருப்புக்குள் சிக்கிக்கொள்வது போலவும், அதில் இருந்து அவரை ரமணா காப்பாற்றுவது போலவும் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இதற்காக ஆஷிமாவை சுற்றி மண் எண்ணையை ஊற்றி தீவைத்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஆஷிமாவின் உடையில் தீப்பற்றிக்கொண்டது. அவர் சத்தம்போட்டு கதறி அழ ஆரம்பித்தார்.
நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்ட கதாநாயகன் ரமணா, டைரக்டர் விஜய் ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல் மிராக்கிள் ஆகியோர் பாய்ந்து சென்று ஆஷிமாவை சாக்குப்பையினால் போர்த்தி வெளியே இழுத்து வந்தார்கள். என்றாலும் ஆஷிமாவின் இரண்டு கால்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
உடனடியாக ஆஷிமா அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்ட நல்லூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி அன்புக்கரசி. பாக்கியராஜ் பல்லடம் அருகே உள்ள கொசவம் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கிறார்.
இவருக்கு ஏற்கனவே 2 மகன், 2 மகள் உள்ளனர். இந்த நிலையில் அன்புக்கரசிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறக்கும் போது உடல் ஊனத்துடன் பிறந்தது.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது.
குழந்தையின் உடல் பல்லடம் மயானத்தில் புதைக்கப்பட்டது. மயான தொழிலாளி செல்வன் குழந்தையின் உடலை குழிதோண்டி புதைத்தார்.அதன் பிறகு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் முதியவர் ஒருவர் பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அதே மயானத்துக்கு பாக்கியராஜ் கொண்டு வந்தார்.
அப்போது தனது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மயான தொழிலாளி குழி வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக மயான தொழிலாளி செல்வமணி கேட்டார். அதற்கு அவர் குழந்தையின் பிணத்தை வேறு இடத்தில் புதைத்தோம் என்றார். ஆனால் பாக்கியராஜ் தொடர்ந்து கேட்டுப் பார்த்தார். சரியான பதில் வரவில்லை. ஆழமாக வெட்டிய குழியில் இறங்கி பார்த்தார். குழந்தையின் பிணத்தை காணவில்லை.
இதனை தொடர்ந்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் இன்று குழந்தையின் பிணத்தை தேடும் பணி நடக்கிறது.
நடிச்சு மூணே படம்தான் வந்திருக்கு. இந்த மூணாவது படத்திலேயே ஐம்பது பேரை அடிச்சு துவைக்கிறீங்க. அந்தளவுக்கு வளர்ந்திட்டதா நினைக்கிறீங்களா? இந்த கேள்வி யாரை நோக்கி கேட்கப்பட்டது என்று புரியாத சின்ன 'பையா'வாக வாசகர்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நேரடியாக மேட்டருக்கு போய் விடலாம்.
அட நீங்க வேற சார். இது ஒரு பொழுதுபோக்கு படம். யதார்த்த படத்திலே இப்படி ஒரு ஃபைட் இருந்தா கேளுங்க. பதில் சொல்றேன். அடுத்து நான் நடிச்சு வெளிவரப்போற நான் மகான் அல்ல படம் ஒரு யதார்த்தமான படம். அதில ஃபைட் இல்ல. அந்த படத்துக்கு அப்புறம் ஒரு படம் பண்றேன். தெலுங்குல வந்த விக்ரமார்க்குடு படத்தோட தமிழ் ரீமேக். அதுல வில்லன்களை அடிச்சு துவைச்சு போடுவேன். இப்பவே சொல்லிட்டேன். அதையெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் என்றார் கார்த்தி.
ரசிகர் மன்ற விஷயத்தில் ரொம்பவே தாராளம் காட்டுகிற கார்த்தி, பட்டமெல்லாம் கொடுத்திராதீங்க ஃபிரண்ட்ஸ் என்கிறார்களாம் அவர்களிடம். ஆனால், புரட்சி, போர் என்று என்னென்னவோ அடைமொழிகளுடன் அங்கங்கே போஸ்டர்கள் தென்படதான் செய்கிறது.
நதி அதுவழியே போனாலும், பூவை து£வி புகழ் பாடாம விடமாட்டாங்க போலிருக்கு!
இதயத்துக்கு நல்லது இல்லங்கறதால சைலண்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாங்களாம் அவரது குடும்பத்தினர்.
நம்ம பாலிஸிக்கு இதெல்லாம் ஒத்து வராது. விட்ருங்க என்று போனை வைத்தாராம். அதன்பின் முக்கிய தலைகள் தலையிட்டும் கவுண்டர் பிடிவாதம் கடுகளவு கூட சிறுக்கவில்லையாம்! மாடு இளைச்சாலும் மடி பலம்தான்! |
அதற்கு முன் அவருக்கு சொல்லப்பட்டிருக்கும் ஒரு அட்வைஸ் ரொம்பவே மரியாதைக்குரியது! மக்கள் மன்றத்தில் பேசும்போதும், எழுதும்போதும், (உடன்பிறப்புக்கு கடிதமெல்லாம் எழுதுவாரோ) 'என் உயிரினும் மேலான தமிழ் மக்களே' என்ற வார்த்தையை பயன்படுத்த சொல்லியிருக்கிறாராம் அவரது அப்பா. இந்த வார்த்தை விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் கர்னல் பிரபாகரன் பயன்படுத்தி வந்த மந்திர வார்த்தை. இனிமேல் எங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தாலும், இந்த வார்த்தை ஞாபகம் இருக்கட்டும். பெரும் போராளி ஒருவர் உபயோகப்படுத்திய இந்த வார்த்தைக்கே ஒரு ஈர்ப்பு உள்ளது என்றெல்லாம் லெக்சர் எடுத்தாராம் அப்பா. இதையடுத்து எல்லா மேடைகளிலும் இதை பயன்படுத்த துவங்கியிருக்கிறார் விஜய். |
சென்னை, ஏப்.9, 2010 : உயிர் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசு, அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக மலையாளிகள் சங்கமும், சென்னை மருத்துவ கழகமும் இணைந்து, 'ஹிருதயராகம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் நல்லெண்ண தூதராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
இந்த இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டில் 60 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 2008-ம் ஆண்டில் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சென்னையில் விடுதி கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கு நிதி திரட்டுவதற்காக, தமிழ் - மலையாள நடிகர் - நடிகைகளுக்கு விருது வழங்குவது உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி, வருகிற 18 ஆம் தேதி மாலை 5-30 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில், தமிழ் - மலையாள படவுலகை சேர்ந்த நடிகர் - நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த அமைப்பு சார்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், " இதுபோன்ற நற்காரியங்களை மக்களுக்கு முன்னெடுத்துச் செல்வதில் மீடியாக்களின் பங்குதான் அதிகம். அமெரிக்காவில் உயிர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர பல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அதுபோன்ற நல்லதொரு உயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி அமெரிக்காவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்பவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி மனதாராப் பாராட்ட வேண்டும். நமக்காகப் பணி செய்ய, நாம் நியமித்தவர்கள், அந்தப் பணியை நல்ல முறையில் செய்கிறார்கள் எனில் அதைப் பாராட்டுவதில் தவறில்லை. யாருக்கும் வியாதி இல்லை என்றால் டாக்டர்களுக்கு வேலையே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சூழல் வருவதைத்தான் உண்மையான டாக்டர்கள் விரும்புவார்கள்.
இந்த நற்காரியத்துக்காக நடத்தப்படும் கலை விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் மட்டும்தான் கலைஞர்களுக்கு. ஆனால் அதன் மூலம் பயன் அடையப்போவது எண்ணற்ற எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளே," என்றார் நடிகர் கமல்ஹாசன்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் ஐதராபாத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
சோயிப் மாலிக் சில நாட்களுக்கு முன்பே ஐதராபாத் வந்து சானியா வீட்டில் தங்கி இருக்கிறார். அவர் ஐதராபாத் வந்தது முத லில் ரகசியமாக இருந்தது. ஆயிஷா விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டி இருந்ததால் சோயிப் மாலிக் வெளியே வந்தார். நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பகலில் சோயிப் மாலிக், சானியா வீட்டில் பொழுது போக்குவதற்காக மாமியாருடன் செஸ் விளையாடுகிறார்.
இரவில் சானியாவுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார். இரவு 11 மணிக்கு சானியாவும், சோயிப் மாலிக்கும் காரில் வெளியில் கிளம்புகிறார்கள். விடிய விடிய ஐதராபாத் நகரை சுற்றி வந்து ஜாலியாக பொழுது போக்குகிறார்கள்.
ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களை தனது வருங்கால கணவருக்கு சானியா சுற்றிக் காண்பிக்கிறார்.
ஐதராபாத்தில் இருக்கும் சானியாவின் வீட்டு வாசலில் திடீரென கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருமண சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப், ஐதராபாத் இளம் பெண் ஆயிஷாவை விவகாரத்து செய்த பின்னரும் கூட சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.
இன்று நாளை என தள்ளிக் கொண்டு போகும் திருமணம், 15ம் தேதி உறுதியாக நடக்கும் என சானியா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
. இந்நிலையில் , ஆயிஷா விவகாரத்துக்குப் பிறகு வெளியில் வராத சானியா - சோயப் ஜோடியை போட்டோ எடுக்கவும், அவர்களிடம் பேட்டி காணவும் பத்திரிகையாளர்கள் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அவர்களை கண்காணிக்க சானியா வீட்டு வாசலில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அப்படி அனுமதி ஏதும் பெறப்படாமலேயே கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சானியா வீட்டாரிடம் விசாரணை நடத்தப்படும் என ஐதராபாத் துணை கமிஷனர் தெரிவித்தார்.