Pages

Monday, April 5, 2010

பிரபுதேவா தவிர யாரையும் மணக்க மாட்டேன்..


நயன்தாரா, பிரபுதேவா காதல் வலுத்துள்ளது. திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது நட்சத்திர ஓட்டல்களில் சேர்ந்தே தங்குகின்றனர்.

வெளிநாடுகளுக்கும் ஒன்றாக சென்று வருகிறார்கள். பொதுநிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்கிறார்கள்.

ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் அருகருகே அமர்ந்து இருந்தனர். சென்னையில் சேர்ந்து நடனம் ஆடினார்கள். பிரபுதேவா மனைவி ரம்லத் எதிர்ப்பால் காதலை ரகசியமாக வைத்திருந்த அவர்கள் இப்போது துணிச்சலாக பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.

இந்த காதலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். ஒரு நடிகர் தனது பண்ணை வீட்டில் இருவரும் தங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இரண்டாவது திருமணம் சட்டப்படி குற்றம் என்பதால் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையுலகின் மூத்த நடிகர்-நடிகைகளும், அவரது நலம் விரும்பிகளும் பிரபுதேவா காதலை முறிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். நயன்தாராவின் பெற்றோர் வேறு ஒருவரை திருமணம் செய்யும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர், டாக்டர் என்றெல்லாம் மாப்பிள்ளை பார்த்து வைத்துள்ளனர். பிரபுதேவா தவிர யாரையும் மணக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

பழைய கதாநாயகி சரோஜாதேவியும் காதலை கைவிடும்படி கூறினாராம். இருவரும் “ஆதவன்” படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த பழக்கத்தில் எதிர்காலம் பாதிக்காமல் நடந்துகொள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் அதை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். பிரபுதேவாவுடனான தொடர்பு என்னைப் பொறுத்தவரை தவறானது அல்ல என்று உறுதியாக சொன்னாராம்.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.