திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது கொட்டாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைக் கண்மூடித்தனமாக அடித்து உதைத்தாகத் தெரிகிறது. அவரை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக அழைத்துச் செல்லும்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதாகவும், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் வடமதுரை காவல்நிலையத்தை அடித்து நொறுக்கி, சூறையாடினர். இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.