உள்ளே நடிகை கதறல்: வெளியே இயக்குநர் புலம்பல்
இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல்முறையாக சின்னத்திரையில் தெற்கத்திபொண்ணு நெடுந்தொடர் இயக்கிவருகிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் பா.ரா.வால் பெரிய திரையில் அறிமுகமான ரஞ்சிதா நடித்து வந்தார்.
பா.ராவுக்கும் ரஞ்சிதாவுக்கும் சின்ன சண்டை. ஈகோவினால் இது பெரிசாக தொடரில் இருந்து விலகிக்கொண்டார் ரஞ்சிதா. நீ போனா போ...என்று சவால்விட்டு புவனேஸ்வரியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இடையில் கொஞ்சம் ஆள் இருக்குற இடமே தெரியாமல் இருந்த புவனேஸ்வரி இந்த தொடருக்கு பின் மீண்டும் பளிச்சிட்டார். அதுவே அவருக்கு ஆபத்தாகிவிட்டது. பா.ராவுக்கும்தான்.
விபச்சார வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
‘ப்ச்’என்று கையை பிசைந்துகொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறார் பா.ரா. அந்த கேரக்டருக்கு அடுத்த ஆளை தேட வேண்டியதானா என்று வெளிப்படையாகவே எல்லோரிடமும் நொந்துகொண்டிருக்கிறாராம்.
புவனேஸ்வரியோ புழல் சிறையில் கதறிக்கொண்டிருக்கிறார்.
புவனேஸ்வரி ரிமாண்ட் கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முதல் வகுப்பு கிடைக்கவில்லை. இதனால் மின் விசிறி, கட்டில் வசதி போன்றவை இல்லை. அவரோடு கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வழக்கில் கைதான 7 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரவு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டபோது, மற்ற பெண் கைதிகளுக்கு இவர் நடிகை என்று தெரியவில்லை. காலையில் ஜெயிலில் வழங்கப்படும் பத்திரிகையை பார்த்தபோது தான் நடிகை புவனேஸ்வரி என்று அடையாளம் தெரிந்து கொண்டனர்.
மற்ற கைதிகளிடம், `நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன், ஏன் இப்படி வாழ்கிறேன்' என்று புவனேஸ்வரி அழுதபடி கூறினாராம். மற்ற கைதிகள் அவருக்கு ஆறுதல் கூறினார்களாம்.
அதற்காகத்தான் பணம் கொடுத்தார்கள். நடன நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கொண்டு பணம் வாங்கினேன். உடனே என்னை விபசார வழக்கில் கைது செய்துவிட்டனர். போலீசார் என்னை ஏமாற்றி வலையில் சிக்க வைத்துவிட்டனர் என்று புவனேஸ்வரி அழுதுகொண்டே சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மற்ற கைதிகளோடு உட்கார்ந்து ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டார். எனக்கு யாரும் விரோதிகள் இல்லை. ஏன் என்னை இப்படி மாட்டிவிட்டார்கள் என்பது தெரியவில்லை என்று அழுதபடியே புவனேஸ்வரி உள்ளார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.
அவனுக்காகவே நான் வாழ்கிறேன் என்றும் அவர் கூறினாராம்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.