எழத்தாளர் சுஜாதா எழுதிய இரண்டு நாவல்கள் மற்றும் பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ரோபோ.
ரஜினி இப்படத்தில் அரசியல் கவிதை படித்துக்காட்டுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். அதாவது விஞ்ஞானி ரஜினியிடம் ரோபோ ரஜினி அக்கவிதையை படித்துக்காட்டுவது போல் காட்சியாம்.
அந்தக்கவிதையில் காரசாரமாக அரசியலை சாடுகிறாராம். இந்தக்கவிதை உபயம்: நா.முத்துக்குமார்.
வைரமுத்துவிடம் தான் முதலில் இந்தக்கவிதை எழுதித்தர சொல்லி கேட்கப்பட்டதாம். அரசியல் விவகாரமா? ஆளை விடுங்கப்பா என்று சொல்லிவிட்டாராம்.
கலைஞருடன் மனக்கசப்பு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார் என்று நினைத்த ரஜினி, இது பொதுவான அரசியல் விமர்சனக்கவிதைதான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவான விமர்சனம், தனிப்பட்ட விமர்சனம் என்பது முக்கியமல்ல. அரசியல் விமர்சனம் என்பதுதான் முக்கியம். அதில் ஏழரை இருப்பதாக தெரிகிறது. என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டாராம் வைரமுத்து.
சரி, ரஜினி ஏன் அரசியல் விமர்சனத்தில் இத்தனை ஆர்வமாக இருக்கிறார்?என்று கேட்டால், அவரின் வெற்றிக்கான பார்ஃமுலாவாச்சே அதை எப்படி விடுவார் என்கிறார்கள்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.