Pages

Friday, April 23, 2010

டி.ராஜேந்தரால் ரயில் பயணங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தற்கொலை



டி.ராஜேந்தர் இயக்கிய ரயில் பயணங்களில் அறிமுகமானவர்கள் ஸ்ரீநாத் -ஜோதி.    இந்த படத்தின் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்...,  அமைதிக்கு பெயர்தான் சாந்தி...,  நூலுமில்லை வாலுமில்லை....,  யாரோ பின் பாட்டு பாட...போன்ற பாடல்கள் இப்போதும் ஒலிக்காத இடமில்லை.
ரஜினியுடன் புதுக்கவிதை படத்திலும் நடித்த ஜோதி திருமணம் செய்து செட்டில் ஆனார். கல்யாண வாழ்க்கையில் கசப்பு ஏற்படவே கணவரை விவாகரத்து செய்தார். மகளுடன் சென்னை நீலாங்கரை ராஜா நகரில் வசித்து வந்தார். கடந்த 2004 ம் ஆண்டு 44 வயதில் மார்பக புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

நடிகர் ஸ்ரீநாத் (50)  ரயில் பயணங்கள் படத்தின் ஹிட்டிற்கு பிறகு மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

 மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் சிகார் என்ற பட ஷீட்டிங் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலத்தில் நடந்து வருகிறது. இதில் நடிகர் ஸ்ரீநாத்தும் நடிக்கிறார். இதற்காக அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் அவர் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு அவர் கைமணிக்கட்டின் நரம்பை கத்தியால் வெட்டி தற்கொலை செய்தபடி பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து அவ ரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோதமங்கலத்தில் உள்ள பேசெல்லியாஸ் மிஷன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீநாத் கடந்த 1980-ம் ஆண்டில் சினிமாவுக்குள் நுழைந்தார். டி.ராஜேந்தர் டைரக்ஷனில் தயாரிக்கப்பட்ட ரெயில் பயணங்களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

பின்னர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். ஷாலினி என்டே கூட்டுக்காரி, ஏது நிஜங்களுடே கதா, ஒரு சி.பி.ஐ. டைரிக்குறிப்பு”, கிரீடம் போன்ற படங்கள் இவர் நடித்த மலையாள படங்களில் ஹிட் ஆனவை.

மலையாளத்தில் கடைசியாக இவர் கேரள கேப் என்ற படத்தில் நடித்தார். சினிமா படங்களுடன் மலையாள டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். தமிழில் விஜய்டி.வி.யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராணி மகாராணி என்ற தொட ரிலும் நடித்து வந்தார்.

நடிகை சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்டிங்கள் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சிறந்த டி.வி. நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளார்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து கோதமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.