பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை திருமணம் செய்யப்போவதாக வெளியான செய்தியை நடிகை சுஷ்மிதா சென் மறுத்துள்ளார்.
வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா கடந்த அக்டோபர் மாதம் இறந்து விட்டார். அக்ரம் தற்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
இரண்டு ஆண்டு களுக்கு முன்பு அக்ரமும் நடிகை சுஷ்மிதா சென்னும் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினர்.
அதில் இருந்து இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. மும்பை புறநகரில் உள்ள பிரபல மான இரவு நேர விடுதியில் அக்ரம்& சுஷ்மிதா இருவரும் சமீபத்தில் இணைந்து காணப்பட்டதாக செய்தி வெளியானது.
மும்பையில் உள்ள பிரபலமான ரெஸ் டாரண்டுகளில் இருவரும் மாலை நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசியதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி யுள்ளது ஆனால் சுஷ்மிதா சென் இதை மறுத்துள் ளார். அவர் இது பற்றி நேற்று கூறு கையில், “இந்த தகவல் உண்மையா னது அல்ல. வாசிம் அக்ரம் ஒரு நல்ல மனி தர். அவரை நான் திரு மணம் செய்ய வில் லை” என்றார்.
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.