நடிகை குறித்து நாளிதழில் வெளியான செய்திக்கு அப்படி எல்லாம் எழுதக்கூடாது என்று நடிகர்,நடிகைகள் போட்ட கண்டனக்கூட்டத்தில் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் விவேக்.
விவேக்கின் இந்த ஆபாசமான பேச்சுக்கு திரையுலகத்தினரே கண்டனம் தெரிவித்தனர்.
பத்திரிக்கை உலகம் விவேக்கையும், அவர் சம்பந்தப்பட்ட செய்திகளையும்,விழாக்களையும் புறக்கணித்தது. இதையடுத்து சக திரையுலகினர் மூலமாகவும், தனது சாதி சங்கத்தினர் மூலமாகவும் சமாதான தூது விட்டு பார்த்தார்.
இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிந்துகொண்ட அவர் நேரிடையாக தானே பத்திரிக்கையாளர்களிடம் பேசி, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு சமாதானமாகிவிட்டார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக், ‘’ 6 மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில், நான் குறிப்பிட்ட ஒரு செய்தி குறித்தான கண்டனத்தை தெரிவித்தபோது, அது சிதறி எல்லோர் மீதும் தெளித்துவிட்டதை சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.
என் நலம் விரும்பிகள் பலர் என்னிடம் இதை தெரிவித்தபோது மிகுந்த வருத்தமடைந்தேன். அதன்பின்னரே என் தன்னிலை விளக்கத்தையும், வருத்தத்தையும், மன்னிப்பு கோரலையும் தெரிவித்தேன்.
சமீபத்தில் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில்(விஜய் டிவி காபி வித் அனு) கூட நான் பேட்டி அளித்தபோது, நான் நன்றி சொல்ல விரும்புவதும், வருத்தத்தை தெரிவிக்க விரும்புவதும் பத்திரிகையாளர்களுக்குத்தான் என்று கூறினேன்.
இனி எக்காரணம் கொண்டும் யார் மனதும் புண்படும்படி பேசவோ, எழுதவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.