Pages

Tuesday, April 13, 2010

பேரவையில் தரையில் உட்கார்ந்த எம்.எல்.ஏ.

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் முன்பு தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பை ஏற்படுத்தினார்.

சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பாண்டுரங்கன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டு பேச அனுமதி கேட்டார்.

அமைச்சர் பேசிய பிறகு வாய்ப்பு அளிப்பதாக சபாநாயகர் கூறினார். அமைச்சர் பேசி முடித்த பிறகும் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாண்டுரங்கன் சபாநயாகர் முன்பு வந்து தரையில் உட்கார்ந்தார்.

சபாநாயகர், நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்ததால் அங்கிருந்து எழுந்து சென்றார். ஓ.பன்னீர் செல்வமும் அவரை சமாதானப்படுத்தினார்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.