
எனக்கும் சினேகாவுக்கும் திருமணம் நடக்கப்போகுதா?மறுக்கிறார் நடிகர் பிரசன்னா
சினேகாவும், பிரசன்னாவும் `அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் அமெரிக்காவில் நடந்தது. அப்போது இருவரும் நெருங்கிப் பழகியதாகவும், அதைத்தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே காதல் முளைத்ததாகவும் தகவல் பரவியது.
இந்த தகவலை இரண்டு பேருமே மறுத்தார்கள். ``எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. அது, காதல் அல்ல'' என்று கூறினார்கள். `கிசுகிசு'க்களுக்கு பயப்படும் மற்ற ஜோடிகளைப்போல் இல்லாமல், சினேகாவும், பிரசன்னாவும் இன்று வரை நெருக்கமான நட்புடன் இருந்து வருகிறார்கள்.
இரண்டு பேரும் ஒரே காரில் சுற்றுவதாகவும், ஜோடியாக தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
சினேகாவின் அக்கா பிறந்தநாள் `பார்ட்டி'க்கு வந்தவர்களை சினேகாவும், பிரசன்னாவும் ஜோடியாக வரவேற்றதாகவும், இதன் மூலம் பிரசன்னாவுடனான நட்பை சினேகா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் திருமணம் வரை நெருங்கிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.
இது குறித்து பிரசன்னா, ’’எனக்கு திருமணம் நிச்சயமானால், அதை ஒளித்து மறைக்காமல் திறந்த மனதுடன் வெளியில் சொல்வேன். என்னையும், சினேகாவையும் இணைத்து சமீபகாலமாக கிசுகிசுக்கள் பரவுவது எனக்கு தெரியும். சினேகாவுக்கும் இது தெரியும்.
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்க போய் இருக்கிறோம். நாங்கள் இருவர் மட்டுமல்ல. மற்ற நண்பர்களும் எங்களுடன் வந்து இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் டைரக்டர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஜெய் ஆகியோரும் உண்டு. இந்த மூன்று பேருடனும் அமர்ந்து நானும், சினேகாவும் `கோவா' படம் பார்த்தது உண்மை.
மற்றபடி, நாங்கள் இருவரும் ஒரே காரில் சுற்றவில்லை. அப்படி சுற்றினால், எங்களை விட்டுவிடுவீர்களா என்ன?
`அச்சமுண்டு அச்சமுண்டு' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதுமே எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இல்லை என்று சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். எங்களுக்குள் காதல் இல்லை.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.