யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்; கட்சியின் சார்பில் போட்டியிடும் ராமநாதன் அங்கயன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இன்று அதிகாலை இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அவரது வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ் நகரப்பகுதியில் ஆயர் சந்திக்கும் ஆரியகுளச் சந்திக்கும் இடையில் அமைந்துள்ள இந்து மதகுருமார் ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் பருத்தித்துறை வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த அங்கயனினதும் ஆதரவாளர்களினதும் வாகனங்களை சுற்றி வளைத்த ஆயுதந் தாங்கிய கும்பல் அங்கயனின் வாகனத்திற்கு தீ வைத்ததுடன் ஏனைய ஆதரவாளர்களின் வாகனங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை ஓட்டி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக சென்று கொண்டிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது ஆதரவாளர்கள் மூவரும் குறித்த ஆயததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். ஆயததாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அங்கயன் தப்பி ஓடிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அது குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் 4 தமிழ் வேட்பாளர்களும் 1 முஸ்லிம் வேட்பாளரும் 8 ஈபிடிபி. வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். குறித்த 4 தமிழ் வேட்பாளர்களில் அங்கயனும் ஒருவர் ஆவார். யாழ் மாவட்டத்தில் முன்பின் அறிமுகமில்லாத அங்கயன் பெரும் பணத்தை செலவளித்து தேர்தலில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.