
கொழும்பு : இலங்கை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை, மனிதக்கழிவுகளை அகற்றச் செய்து இலங்கை ராணுவம் கொடுமைப்படுத்துவதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிர்வு இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. கீரிமலை என்னும் இடத்திற்கு ஏராளமான சிங்கள இனத்தவர் சுற்றுலா வந்து செல்வதாகவும், அவர்களது அறைகளில் மனித கழிவுகளை அகற்றுமாறு விடுதலைப்புலிகளை ராணுவம் நிர்ப்பந்தம் செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள மக்களிடம் காண்பித்து ராணுவத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதாகவும், புலிகளைப் பார்த்து கேலி செய்து எள்ளிநகையாடுவதாகவும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியே இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடச் செய்யும் இலங்கை ராணுவத்தினர், முகாம்களுக்குள் என்னவிதமான சித்ரவதைகளில் ஈடுபடக்கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.