Pages

Sunday, April 11, 2010

மயானத்தில் புதைக்கப்பட்ட குழந்தை மாயம்


தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்ட நல்லூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி அன்புக்கரசி. பாக்கியராஜ் பல்லடம் அருகே உள்ள கொசவம் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கிறார்.

இவருக்கு ஏற்கனவே 2 மகன், 2 மகள் உள்ளனர். இந்த நிலையில் அன்புக்கரசிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறக்கும் போது உடல் ஊனத்துடன் பிறந்தது.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது.

குழந்தையின் உடல் பல்லடம் மயானத்தில் புதைக்கப்பட்டது. மயான தொழிலாளி செல்வன் குழந்தையின் உடலை குழிதோண்டி புதைத்தார்.அதன் பிறகு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் முதியவர் ஒருவர் பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அதே மயானத்துக்கு பாக்கியராஜ் கொண்டு வந்தார்.

அப்போது தனது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மயான தொழிலாளி குழி வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக மயான தொழிலாளி செல்வமணி கேட்டார். அதற்கு அவர் குழந்தையின் பிணத்தை வேறு இடத்தில் புதைத்தோம் என்றார். ஆனால் பாக்கியராஜ் தொடர்ந்து கேட்டுப் பார்த்தார். சரியான பதில் வரவில்லை. ஆழமாக வெட்டிய குழியில் இறங்கி பார்த்தார். குழந்தையின் பிணத்தை காணவில்லை.

இதனை தொடர்ந்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் இன்று குழந்தையின் பிணத்தை தேடும் பணி நடக்கிறது.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.