காமெடி நடிகர்கள் வடிவேலு- சிங்கமுத்து இடையே நில மோசடி தொடர்பாக ஏற்கனவே மோதல் ஏற்பட்டது. போலீஸ் வழக்குகள், கோர்ட்டு என ஏறினர். தற்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டுள்ளது. வழக்கை வாபஸ் வாங்கும் படி சிங்கமுத்து ஆட்களை ஏவி என்னை மிரட்டுகிறார் என்று வடிவேலு கூறியுள் ளார். இதற்கு பதில் அளித்து சிங்கமுத்து இன்று மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-
தயாரிப்பாளர் கண்ணன் நாங்க புதுசா” என்ற படம் எடுக்கிறார். அதில் நான் நடிக்கிறேன். காமெடி வசனமும் எழுதுகிறேன். அவர் வீடு வடிவேலு அலுவலகத்துக்கு எதிரில் உள்ளது. குழந்தைக்கு பிறந்தநாள் என்று அழைத் தார். நானும் என் மனைவியும் போனோம். 10 நிமிடம் தான் அங்கு இருந்தேன்.
ஆனந்தராஜ் உள்ளிட்ட மேலும் பல நடிகர்கள் வந்த னர். அவர்களை வரவேற்க பட்டாசு வெடித்தார்கள். எனக்கும், பட்டாசு வெடிப் புக்கும் சம்பந்தம் இல்லை. வடிவேலு அலுவலகத்தில் இருந்து புகார் செய்து போலீசை வரவழைத்தனர்.
நான் அவர் அலுவலகத் துக்குள் ஆட்களை ஏவி விட்ட தாக கூறியுள்ளார். அவர் அலுவலகம் எதிரில் இன்ஸ்பெக்டர், போலீசார் நிற்கிறார்கள். எப்படி ஆட்களை அனுப்ப முடியும். அவர் இருப்பதால், அந்த தெருவில் துக்கமோ, சந்தோஷமோ எதுவும் நடக்கக்கூடாது என்று நினைக்கிறார்.
விஜயகாந்த் உறவினர் இல்ல துக்கத்துக்கு வந்தவர் களிடமும் இப்படித்தான் தகராறு செய்தார். வடிவேலுவை ஆட்களை வைத்து மிரட்டுவதா என் வேலை? வழக்கை வாபஸ் பெறும்படி கட்டாயப்படுத்து கிறேனா? அவர் வாபஸ் வாங்கினாலும் நான் வாபஸ் பெறமாட்டேன்.
நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்று நிரூபிப் பேன். வடிவேலு பொய் சொல்கிறார். அவருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் அதற்கு நான்தான் காரணம் என்கிறார். கொசு கடித்தாலும் சிங்கமுத்து காரணம். தண்ணீர் வரவில்லை என்றாலும் சிங்கமுத்து காரணம் என்ற மனநிலைக்கு மாறி விட்டார்.
வாராவாரம் யாரையாவது ஒருவரை வம்புக்கு இழுக்க வேண்டும். இதற்கு முன் இருந்த எந்த நடிகரும் இவரைப்போல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டது இல்லை. எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. போனில் மிரட்டுகிறார்கள். முகம் தெரியாத நபர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். என் உயிருக்கு ஏதேனும்
நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை என் டைரியில் எழுதி வைத்துள்ளேன்.
நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை என் டைரியில் எழுதி வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.