Pages

Sunday, April 11, 2010

நடிகை ஆஷிமா உயிர் தப்பினார்


தம்பி அர்ஜூனா என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நாவலூர் கிராமத்தில் நடந்தது.

ரமணா, பெரோஸ்கான், பிரவின்ராஜ் ஆகிய மூன்று பேரும் கதாநாயகர்களாகவும், ஆஷிமா கதாநாயகியாகவும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

படத்தின் உச்சக்கட்ட காட்சியில், ஆஷிமா எரியும் நெருப்புக்குள் சிக்கிக்கொள்வது போலவும், அதில் இருந்து அவரை ரமணா காப்பாற்றுவது போலவும் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதற்காக ஆஷிமாவை சுற்றி மண் எண்ணையை ஊற்றி தீவைத்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஆஷிமாவின் உடையில் தீப்பற்றிக்கொண்டது. அவர் சத்தம்போட்டு கதறி அழ ஆரம்பித்தார்.

நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்ட கதாநாயகன் ரமணா, டைரக்டர் விஜய் ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல் மிராக்கிள் ஆகியோர் பாய்ந்து சென்று ஆஷிமாவை சாக்குப்பையினால் போர்த்தி வெளியே இழுத்து வந்தார்கள். என்றாலும் ஆஷிமாவின் இரண்டு கால்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

உடனடியாக ஆஷிமா அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.