Pages

Sunday, April 11, 2010

காதலித்த போது சோயிப் மாலிக்குக்கு ரூ.10 கோடி கொடுத்தேன்; முதல் மனைவி ஆயிஷா பேட்டி



நகரி, ஏப். 11-
சானியாவை திருமணம் செய்ய இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்து இருந்தார். சானியாவை மணப்பதற்காக சமீபத்தில் ஆயிஷாவை விவாகரத்து செய்தார். அவரை விவாகரத்து செய்ய பல கோடி பேரம் நடந்ததாக பரவலாக பேசப்பட்டது. இதை ஆயிஷா மறுத்தார். அவர் கூறியதாவது:-
ஜெட்டாவில் நான் ஹலா இன்டர் நேஷனல் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த போது முதல் முறையாக சோயிப் மாலிக்கை பார்த்தேன்.
அவரை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் கொண்டேன். அப்போது அவர் பிரபலம் அடையவில்லை. சாதாரண வீரராக இருந்தார். அவர் பணத்துக்கு கஷ்டப்பட்டார். இதனால் அவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்தேன். நான் கொடுத்தது ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும்.
அவரும் என்னை காதலித்தார். என் சுபாவத்தை பார்த்து காதலிப்பதாக கூறினார். திருமணம் நடந்த பிறகு எல்லாம் நன்றாகத் தான் நடந்தது. அதன் பிறகு சோயிப் மாலிக் ஸ்டார் கிரிக்கெட்டராக மாறினார். உடனே என்னை கை கழுவ ஆரம்பித்தார். நான் குண்டாக இருப்பதாக சொல்லி என்னை நிராகரித்தார்.
எனக்கு கருச்சிதைவு ஏற்பட்ட போது கூட அவர் கண்டு கொள்ளவில்லை. அந்த அளவுக்கு மோசமானவராக மாறி விட்டார்.
திருமணத்தின் போது நன்றாக இருந்தவர் கிரிக்கெட்டில் பெயரும் புகழும் கிடைத்ததும் என்னை ஒதுக்கி விட்டார். இப்போது விவகாரத்துக்கு பணம் வாங்கியதாக கூறுகிறார்கள்.
இவ்வாறு ஆயிஷா கூறினார்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.