ஐதராபாத்தில் இருக்கும் சானியாவின் வீட்டு வாசலில் திடீரென கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருமண சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப், ஐதராபாத் இளம் பெண் ஆயிஷாவை விவகாரத்து செய்த பின்னரும் கூட சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.
இன்று நாளை என தள்ளிக் கொண்டு போகும் திருமணம், 15ம் தேதி உறுதியாக நடக்கும் என சானியா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
. இந்நிலையில் , ஆயிஷா விவகாரத்துக்குப் பிறகு வெளியில் வராத சானியா - சோயப் ஜோடியை போட்டோ எடுக்கவும், அவர்களிடம் பேட்டி காணவும் பத்திரிகையாளர்கள் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அவர்களை கண்காணிக்க சானியா வீட்டு வாசலில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அப்படி அனுமதி ஏதும் பெறப்படாமலேயே கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சானியா வீட்டாரிடம் விசாரணை நடத்தப்படும் என ஐதராபாத் துணை கமிஷனர் தெரிவித்தார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.