Pages

Wednesday, April 21, 2010

மானிப்பாய் பகுதியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு

.srilankaflag151.jpg - 3.71 Kb
வன்னி முகாமிலிருந்து தனது உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மானிப்பாய்க்கு வந்த இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் தொடர்புபட்ட இருவரும் ஊர் இளைஞர்களால் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டு பலத்த அடி உதைகள் காரணமாக தற்பொழுது யாழ்.  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மேற்படி யுவதி வன்னி முகாமிலிருந்து மானிப்பாயிலுள்ள தனது மாமனார் வீட்டுக்கு பஸ்ஸில் வந்துள்ளார். குறித்த பஸ் நிலையத்தில் இறங்கி பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இவரை குடும்பஸ்தர்களான இருவர் பாதை காட்டுவதாகக் கூறி கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.
இரவு முழுவதும் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய நிலையில் யுவதி தப்பிச் சென்று அருகிலுள்ள பொது மக்களுக்கு வழங்கிய தகவல்களை அடுத்து ஊர் இளைஞர்கள் திரண்டு தேடி முதலாவது நபரைப் பிடித்தனர்.     இளைஞர்களின் அடி உதை காரணமாக மற்றையவரும் பிடிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் பொது மக்களால் மிக மோசமாக தாக்கப்பட்ட நிலையில் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்பொழுது குறித்த யுவதியும் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.