Pages

Wednesday, April 21, 2010

சிரஞ்சீவிக்கு விஜயசாந்தி சவால்....

தெலுங்கானா பகுதிக்குள் நுழைய தயாரா? என்று சிரஞ்சீவிக்கு விஜயசாந்தி சவால் விட்டுள்ளார்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் புதிதாக அரசியலுக்கு வந்த சிரஞ்சீவி ஆந்திராவை பிரிக்க விட மாட்டேன் என்கிறார். அவரது இந்த பேச்சு தெலுங்கானா மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிரஞ்சீவி நல்ல தைரிய சாலியாக இருந்தால் தெலுங்கானா பகுதிக்குள் நுழைய தயாரா? அவர் தெலுங்கானாவில் நுழைந்தால் அவரது கதி என்ன வாகும் என்பது அவருக்கே தெரியும். அதனால்தான் அவர் இங்கு வராமல் இருக்கிறார். சிரஞ்சீவி தெலுங்கானா மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்றார்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.