பிட் நோட்டீஸ் போல மலிவானதல்ல விஜய் கால்ஷீட். ஆனால் அதை பாதி பேர் தன் கையில் வைத்திருப்பது மாதிரி பாவ்லா காட்டுவதுதான் பரிதாபமாக இருக்கிறது. காஸ்ட்யூமையும், கதாநாயகியையும் மாற்றினாலே போதும் என்று புதுப்படத்திற்கு ஒரு லாஜிக் வைத்திருக்கும் விஜய். "கதை கேட்டிருக்கேன். பிடிச்சிருந்தாதான் கால்ஷீட்" என்று அடிக்கடி ஜோக் அடிக்கிற சம்பவங்களும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது இதே கோடம்பாக்கத்தில். இந்த நிலையில் "நானும் ஒரு கதை சொல்லி விஜய் சாரை இம்ப்ரஸ் பண்ணியிருக்கேன்" என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பேரரசு. ஏற்கனவே ஜெயம் ராஜா, சீமான், என்று இருவரையும் வரிசையில் நிற்க வைத்திருக்கும் விஜய், பேரரசுவை எப்போது இந்த க்யூவின் நடுவே நுழைத்தார் என்பதுதான் பெரும் குழப்பமாக இருக்கிறது. விசாரித்தால், இவர்கள் இருவருக்கும் முன்பே பேரரசு ஒரு கதை சொல்லியிருந்தாராம் விஜய்யிடம். ஆனால், அப்பா 'எஸ்' சொல்லணும். அப்புறம்தான் நான் என்று ஒதுங்கிக் கொண்டார் விஜய். எஸ் சொல்ல வேண்டிய அப்பா '....ஸ்' என்று மூச்சுகூட விடுவதில்லை பேரரசுவை பார்த்தால். இந்த பெரும் போராட்டத்திற்கு இப்போதுதான் ஒரு முடிவு கட்டியிருக்கிறாராம் விஜய், தன் அப்பா சம்மதம் இல்லாமலே! "காவல்காரன் ஷ§ட்டிங் முடிந்ததும், கோதாவில் இறங்க தயாரா இருங்க" என்று பேரரசுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். இதை சொல்லிதான் பதை பதைக்க வைக்கிறார் பேரரசுவும். |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.