Pages

Wednesday, April 21, 2010

நித்யானந்தாவின் திட்டம் முறியடிப்பு...


இமாசலப்பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நித்யானந்தா அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தார்.   ஆனால் அவரை போலீஸ் கைது செய்து திட்டத்தை முறியடித்துவிட்டது.
நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கைது செய்வதற்காக தேடிவருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும்,
நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் சாமியார் நித்தியானந்தா கைது செய்யப்பட்டார்.இமாச்சல பிரதேச போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.