சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் தங்கராஜு கூறுகையில், நாட்டிலேயே முதல்முறையாக அதி நவீனமான நாய்களுக்கான ரத்த வங்கியைத் தொடங்கியுள்ளோம்.
இந்த ரத்த வங்கியில் 28 நன்கொடையாளர்களை பதிவு செய்துள்ளோம். ரத்த வங்கி தொடங்கி ஒரு வாரத்தில் 10 நாய்களுக்கு ரத்த மாற்ற சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை வழங்கியுள்ளோம்.
எர்லிசியா கேனிஸ் என்ற நோய்த் தொற்று நாய்களுக்கு வரும்போது அவற்றின் ரத்த சிவப்பணுக்குள் அழிந்து போய் விடும். இதனால் கருதிமாற்று சிகிச்சை தரப்பட வேண்டியது அவசியம்.
நாய்களுக்கு மொத்தம் எட்டுவகை ரத்தங்கள் உள்ளன. இதில், டிஇஏ1.1 நெகட்டிவ்என்கற ரத்தம்தான் மிக முக்கியமானது. இந்த ரத்த்த்தை எந்த நாய்க்கு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்றார் தங்கராஜு.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.