‘கடல்பூக்கள்’, ‘சமுத்திரம்’, ‘ஈரம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிந்துமேனன். பெங்களூரில் வசித்து வரும் இவர், லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இத் திருமணத்துக்கு, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சிந்துமேனன் கூறியதாவது: என் அம்மா வழி உறவில் பிரபு பற்றி தெரியவந்தது. லண்டனின் பிசினஸ் செய்து வருகிறார். உடனடியாக பேசி முடித்துவிட்டார்கள். திருமண தேதியையும் குறித்துவிட்டார்கள். அதனால், அனைவரையும் அழைக்க முடியவில்லை. இப்போது பிரபு லண்டன் சென்று விட்டார். நான் ஷூட்டிங் வந்துவிட்டேன். நான் நடித்த படங்களில் பிரபுவுக்கு ‘ஈரம்’ மட்டும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நான் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில், பிரபுவுடன் லண்டனில் செட்டிலாகும் திட்டமிருக்கிறது. இவ்வாறு சிந்துமேனன் கூறினார். |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.