புது தில்லி, ஏப். 2: இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்று வந்த தகவல்களால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் யுவராஜ் சிங் கோபம் அடைந்துள்ளார்.
÷பஞ்சாப் லெவன் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தினால்தான், இந்தியன் பிரீமியர் போட்டிகளில் யுவராஜ் வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை என்று புகார் எழுந்தது. மேலும் பஞ்சாப் அணியில் ஆட விரும்பம் இல்லாததால் வேறு அணிக்கு மாற - மும்பை இண்டியன்ஸ் - விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
÷இவ்வாறு செய்தி வெளியானது குறித்து கோபம் அடைந்த யுவராஜ், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இரண்டு பக்க அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: பத்திரிகைகளில் வந்த செய்திகள் ஒருபக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவை எனது மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. திட்டமிட்டு என்னை குறிவைத்து வீணாக பரப்பப்படும் செய்திகள்.
அண்மைக்காலங்களில் போட்டிகளில் ஏற்பட்ட காயங்களால் நான் மிகவும் அவதியுற்று வந்துள்ளேன். சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாகும். வேண்டுமென்றே திட்டமிட்டு நான் சரியாக விளையாடவில்லை என்று கூறுவது அபத்தமானது.
÷காயங்களிலிருந்து முழு உடற்தகுதி அடைந்து அதன்பிறகு வந்து விளையாடுவது அவ்வளவு எளிதானதல்ல. எனக்கு மட்டுமல்ல. எல்லா வீரர்களுக்கும் இதே நிலைதான். எனினும் எனது ஆக்ரோஷமான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவேன் என்றார்.
÷யுவராஜ் குறித்து எந்த புகாரும் வரவில்லை - பிசிசிஐ: பஞ்சாப் அணியிலிருந்து யுவராஜ் சிங் வெளியேறப் போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) எந்த புகாரும் வரவில்லை என்று பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
÷யுவராஜ் விலகுவது தொடர்பாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. யுவராஜ் சிறந்த ஆல்-ரவுண்டர். காயம் காரணமாக அவர் முழு உடற்தகுதி இன்னும் பெறவில்லை. இது எல்லா வீரர்களுக்கும் ஏற்படுவதுதான். அதற்காக யுவராஜ் விஷயத்தை இவ்வளவு பெரிதாக ஆக்க வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை என்றார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.