Pages

Saturday, April 3, 2010

ஆக்ஷன் ஹீரோயி​னாக....நமீதா


தமிழ் சினிமாவில் "கவர்ச்சிகன்னி'யாக தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் நமீதா. தற்போது வித்தியாசமான வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். நமீயிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அவர் கொஞ்சம் இளைத்து, இன்னும் கூடுதல் அழகாயிருப்பது! தட்டுத்தடுமாறி நமீ பேசும் தமிழை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.வெயில் தலைக்காட்டத் தொடங்காத ஒரு காலை வேளையில் நமீயை ஒரு காபி ஷாப்பில் சந்தித்து உரையாட காத்திருந்தோம். "வாங்க மச்சான்' என்று கூறியபடியே நமீ, கண்களில் காந்தப்பார்வையும், இதழில் புன்னகையுமாக நம் முன்னே வந்து அமர்ந்தார். இரண்டு கோல்டு காபிகளுக்கு ஆர்டர் செய்து விட்டு, நம்மிடம் உரையாடினார்.நீங்கள் நடித்து வெளியான ஒரு படம் சம்பந்தமாக உங்களைப் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளதே?இனிமேல் அந்தப் படத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு. என்னைப் பொருத்தவரைக்கு நாலு பேர் திட்டினாக்கூட அது ஒரு செய்திதான். ஆனால், எந்தத் திட்டுக்கும் நான் பொறுப்பானவள் இல்லை.அந்தப் படத்தை பொருத்தவரை நான் நேர்மையாகவும், சரியாகவும், மரியாதையாகவும் நடந்திருக்கிறேன். தவறுகள் யார் தரப்பில் என்பதை நான் உணர்த்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பேச்சில் உண்மையில்லை என்பது என்னை அறிந்த எல்லோருக்கும் தெரியும். ஏன்? சொன்னவருக்கும் கூட இது தெரியும்! அப்படியிருக்கும்போது நான் எதைச் சொல்லுவது? நடந்தது நடந்ததாக இருக்கட்டும். என்னை பழிப்பவர்களுக்கு கடவுள் பதில் அளிப்பார். தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?தெலுங்கில் "சிம்ஹா' என்னும் பெயர் கொண்ட படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக, போயபட்டி சீனு இயக்கத்தில் நடிக்கிறேன்.இதில் எனக்கு கிளாமர் கேர்ள் வேடம் (உங்களுக்கு வேறெந்த வேடமும் கொடுக்கமாட்டாங்களா? நமீ!) இதில் பாலகிருஷ்ணா ஸôர் பொதுவுடைமை பேசுகிற வேடத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த பேச்சினால் அவர் மேல் எனக்கு காதல் பிறக்கிறது. அதன்பின் எங்கள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அசோக் இயக்கத்தில் "தேசத்துரோகி' என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும் மலையாள இயக்குநரான பிரமோத் பப்பன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. இது தவிர வேறெந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.தொடர்ந்து தெலுங்கிலும் நடிப்பீர்களா?இயக்குநர் சரண் ஸôர்தான் தெலுங்கு "ஜெமினி' படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகுதானே தெலுங்கிலிருந்து நான் தமிழுக்கு நடிக்க வந்தேன். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஒன்றும் தவறில்லையே? தமிழ், தெலுங்கு, மலையாளரம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்தாகிவிட்டது. எல்லா மொழியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். "கோ' படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே?"கோ' படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க அழைத்தார்கள். ஆகவேதான் நடிக்க மறுத்தேன். இப்போதுமட்டு ​மில்லை,எப்போ​துமே ""ஒரு பாட​லுக்​காக நான் நடிக்க மாட்​டேன்'' என்று சொல்​லித்​தான் வந்​தி​ருக்கி​றேன்.அது மிகப்பெ​ரிய பட​மாக இருந்​தா​லும் கூட நான் நடிக்க மாட்​டேன்.ஏனென்​றால், நான் ஒரு பாட​லுக்கு மட்​டும் போய் அந்​தப் படங்க​ளில் ஆடி, நடித்​தால் பிறகு அதையே நமது பாணி​யாக்கி நம்மை ஒரு பாட​லுக்கு மட்​டும் ஆடும் நடி​கை​யாக்கி விடு​வார்கள். எனக்​கென்று ரசிகர்களிடத்​தில் ஒரு இமேஜ் இருக்கிறது. ஆகவே​தான் "கோ' படத்​தில் நடிக்க மறுத்​தேன்.மற்றபடி அதில் வேறெந்த உள்​நோக்க​மும் இல்லை!உங்க​ளுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் கிடைக்கிறதா?என்னை நம்பி எடுக்கப்படு​கிற படங்க​ளுக்கு ரசிகர்க​ளின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அத​னால் என்​னு​டைய ரசிகர்கள் எதை விரும்பு​வார்கள்?என்று யோசித்து,அதற்​கேற்ற​வாறு கதைக​ளைத் தேர்ந்தெ​டுக்கி​றேன்.தயா​ரிப்பாளர்க​ளும் இந்த விஷயத்​தைப் புரிந்து வைத்தி​ருப்ப​தால்​தான் எனக்​கேற்ற கதைக​ளைத் தேர்வு செய்து​கொண்டு வந்து என்னை அணுகுகி​றார்கள்.அப்ப​டித்​தான் "நில் கவனி என்​னைக் காதலி',"இந்திர​விழா' போன்ற படங்க​ளில் நடித்​தேன்.ரசிகர்க​ளும் இப்படங்க​ளுக்கு பெரிய ஆதரவு அளித்​தார்கள்.இது போன்ற கதைகள் எனக்கு அமைந்​தால் தொடர்ந்து நடிப்​பேன்.ஏனெ​னில்,என்னை வைத்து படமெ​டுக்​கும் தயா​ரிப்பாளர்கள் என்​னால் நஷ்டமடையக்கூ​டாது!"மானாட மயி​லாட' குறித்து?இன்று எனக்கு கிடைத்தி​ருக்​கும் ரசிகர் பட்டாளத்​தில் பெரும்பாலானவர்கள் சின்னத்​திரை மூலம் கிடைத்தவர்கள்​தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரு​கிற சாதன​மாக இன்று சின்னத்​திரை இருக்கிறது. ரசிகர்க​ளின் இடத்​திற்கே சென்று, அவர்க​ளைச் சந்​திப்பது என்பது சின்னத்​திரை மூலம்​தான் முடி​யும்."மானாட மயி​லாட' என்பது ஒரு வெற்றிகர​மான நிகழ்ச்சி.அதுக்கு மக்கள் மத்தி​யில் கிடைத்தி​ருக்​கும் வர​வேற்பு எத்​தகையது? என்பது உங்க​ளுக்​கேத் தெரி​யும்!இந்நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன்.இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்க​ளுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்​கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.அந்த உற்சாகப்ப​டுத்​தும் வேலையை நான் மானாக​வும்,மயிலாக​வும் இருந்து செய்து வருகி​றேன். அதுமட்டு​மில்லை, இந்த நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது. வட இந்​திய நடிகர்கள்​தான் இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் கலந்து​கொண்டு போட்டியாளர்களை​யும்,ரசிகர்களை​யும் உற்சாகப்ப​டுத்து​வார்கள்.தென் ​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக "மானாட மயி​லாட' மூலம் கிடைக்கிறது. தற்​போது என்​னைத் தொடர்ந்து இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் பூஜா,ரம்பா ஆகி​யோர்க​ளும் கலந்து​கொண்டு வருகி​றார்கள். சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைக​ளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன்.ஆக்ஷன் ஹீரோயி​னாக நடிப்​பீர்களா?இந்தக் கேள்​வியை நீங்கள் இயக்குநரிடம்​தான் கேட்டி​ருக்க வேண்​டும்.எந்த இயக்குநர் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிக்கக் கேட்டா​லும் என்னு​டைய கால்​ஷீட் ரெடி!தற்​போது நடிக்க இருக்​கும் "தேசது​ரோகி' படத்​தில் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிப்பதற்​கான வாய்ப்புகள் இருக்கு.படம் தயா​ரிக்​கும் எண்ண​முண்டா?ஒரு நல்ல கதை கேட்டு வைத்தி​ருக்கி​றேன்.இதை கொஞ்ச காலத்​திற்​குப் பிறகு தயா​ரிக்க​லாம் என்று திட்ட​மிட்டி​ருக்கி​றேன்.அவசரப்பட்டு தற்​போது படம் தயா​ரிக்​கும் திட்ட​மில்லை.ஆனால் தயா​ரிக்​கும்​போது கண்​டிப்​பாக தமி​ழில்​தான் அந்தப் படத்தை எடுப்​பேன்.சாமி​யார்க​ளைச் சந்​தித்து இருக்கி​றீர்களா?எனக்கு கட​வுள் நம்​பிக்கை உண்டு!​​ நெருக்க​மான தோழிகள் யார்? யார்?சினேகா​வும், பூஜா​வும்​தான்! GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.