
செல்வராகவன் - சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்!
சென்னை, மார்ச் 12,2010 : திரைப்பட இயக்குனர் செல்வராகவன் - நடிகை சோனியா அகர்வால் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை சோனியா அகர்வால். அப்போது, அந்தப் படத்தை இயக்கிய செல்வராகவனுக்கும் சோனியாவுக்கும் இடையே நட்பு வலுவானது.
பின்னர், சோனியா அகர்வாலுக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின்னர் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ்ந்தனர்.
பிரிந்து வாழ முடிவு செய்த அவர்கள் பரஸ்பரம் புரிதலின் அடிப்படையில் விவாகரத்து கோர முடிவு செய்து, 6 மாதங்களுக்கு முன்பு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.