
கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் டைர்ஸ் அணி நேற்று 4-வது வெற்றியை பெற்றது. அந்த அணி 24 ரன்னில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. முன்னாள் கேப்டனான கங்குலி நேற்று அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். அவர் 54 பந்தில் 88 ரன் குவித்தார். இதில் 5 சிக்சர்களும், 9 பவுண்டரியும் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருதை பெற்ற கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது ஆட்டம் பற்றி எழுப்பப்படும் விமர்சனம் பற்றி நான் எப்போதும் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் என்னால் அதிரடியாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நெருக்கடி என்பது எல்லா வீரர்களுக்கும் ஏற்படக்கூடியது தான். ஆட்டத்திறன் தொடர்பாக தெண்டுல்கருக்கு கூட நெருக்கடி ஏற்பட்டு இருந்தது.
இதனால் வெளியில் இருந்து வரும் விமர்சனம் பற்றி கவலைப்படக் கூடாது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் அதிரடியாக விளையாடி ரன் குவித்ததை விட அணியின் வெற்றியே முக்கியம். கடைசி நேரத்தில் ஹஸ்சி ரன்களை சேர்த்ததும் முக்கியமானதாகும்.
கொல்கத்தா அணியின் வெற்றி தொடரும். தொடர்ந்து வெற்றிகளை பெறுவது முக்கியம். அரை இறுதிக்கு முன்னேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கங்குலி கூறி யுள்ளார்.
ஆடு களத்தில் கங்குலியும், டெக்கான் வீரர் சைமண்ட்சும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இது குறித்து கங்குலி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வருகிற 4-ந் தேதி எதிர் கொள்கிறது.
டெக்கான் சார்ஜர்ஸ் 8-வது ஆட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை (3-ந் தேதி) எதிர் கொள்கிறது
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.